தேமுதிக: தேர்தலில் மக்கள் ஆதரவு கூடுகிறது | Our Stonghold is Growing- D.M.D.K

ஒவ்வொரு தேர்தலிலும் தமது கட்சிக்கு வாக்குகள் கூடிக்கொண்டே வருவதாக தேமுதிக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தியில், 'தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு 863 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இது கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை விட 248 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்று 40 சதவீதம் இடங்களை அதிகம் பெற்றுள்ளது.

தேமுதிக தனித்துப் போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழக மக்களின் ஆதரவு பெருகியுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சுமார் 28 லட்சம் வாக்குகளும், 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சுமார் 31 லட்சம் வாக்குகளும், 2011-ம் ஆண்டு உள்ளாட்சி மன்ற தேர்தலில் 35 லட்சத்து 64 ஆயிரத்து 74 வாக்குகளும் பெற்றுள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்களின் ஆதரவு தேமுதிகவுக்கு கூடிக் கொண்டே வருகிறது என்பது உண்மையாகும்,' என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf