Kerala Recipes: மலபார் மீன் குழம்பு

மலபார் மீன் குழம்பு தேவையானவை:

கடல் மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

அரைக்க

தேங்காய் - 1 மூடி
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2

தாளிக்க

சீரகம், கறிவேப்பிலை - சிறிதளவு

மலபார் மீன் குழம்பு செய்முறை:

மீனைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

ஒரு சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

தொடர்ந்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த் தூள், அரைத்த மசாலா, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கொதிக்கும்போது மீனை ஒவ்வொன்றாக எடுத்துப் போடவும். மீன் வெந்த பிறகு குழம்பை இறக்கிவிடவும்.

குறிப்பு

இந்த கேரள மீன் குழம்பிற்கு தேங்காய் எண்ணெய், தேங்காய் மசாலா சேர்ப்பதால் தனி ருசி உண்டு.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf