Aakash tablet, The Global indian tablet Aakash (Ubislate)

2 comments
Aakash tablet, the well proclaimed low-cost Aakash tablet from india to the world is now open for prebooking,Aakash tablet which will be manufactured in india by datawind will be prebooked and availabile from january 2012.

Aakash tablet features Android 2.2 where as advanced version of Aakash tablet features Android 2.3

Complete Aakash tablet PC specifcation

SpecificationsAakash (Ubislate7)Ubislate7+ (The upgraded version of Aakash)
AvailabilitySold OutLate January
PricingRs.2,500Rs.2,999
MicroprocessorArm11 – 366MhzCortex A8 – 700 Mhz
Battery2100 mAh3200 mAh
Operating SystemAndroid 2.2Android 2.3
NetworkWiFiWiFi & GPRS (SIM & Phone functionality)

Availability of Aakash tablet pc.



SpecificationsAakash (Ubislate7)Ubislate7+ (The upgraded version of Aakash)
AvailabilitySold OutLate January
Prebook nowAakash tablet Pre booking link



Offical details of Aakash tablet

Hardware in Aakash tablet:

Processor: Connexant with Graphics accelerator & HD Video processor

Memory : 256MB RAM / Storage (Internal): 2GB Flash

Storage (External): 2GB to 32GB Supported

Peripherals: 2 Standard USB port

Display and Resolution: 7 display with 800x480 pixel resolution

Software in Aakash tablet

OS: Android 2.2

Document Rendering

Supported Document formats: DOC, DOCX, PPT, PPTX, XLS, XLSX, ODT, ODP

PDF viewer, Text editor

Multimedia and Image Display

Image viewer supported formats: PNG, JPG, BMP and GIF

Supported audio formats: MP3, AAC, AC3, WAV, WMA

Supported video formats: MPEG2, MPEG4, AVI, FLV

Communication and Internet in Aakash tablet

Web browser - Standards Compliance: xHTML 1.1 compliant, JavaScript 1.8 compliant

Separate application for online YouTube video

Safety and other standards compliance

CE certification / RoHS certification



Watch about Aakash tablet

Here is the Aakash tablet support toll free no 1800-180-2180. and offical Aakash tablet page is http://www.aakashtablet.com/.

Computers, Internet and 2012: 2012ல் கம்ப்யூட்டரும் இணையமும்

0 comments
எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், வரும் புத்தாண்டில், 2012ல், பல புதிய சாதனங்கள் தகவல் தொழில் நுட்ப சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை இந்த ஆண்டில் அறிமுகமான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங் களை ஏற்படுத்தப்போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம்.

1. விண்டோஸ் 8: 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாத பல புதுமை களைக் கொண்டு வர இருக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினை உறுதியிட்டுக் கூற முடியாத வகையில், இரண்டையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வர உள்ளது. இதனால் பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையின் இயக்கம் குறைந்து நோட்புக் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கும் உள்ள வேறுபாடு மறைய உள்ளது. குறிப்பாக தொடுதிரை பயன்பாடு இரண்டிலும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட இருக்கிறது.

2. குரல் வழி கட்டளை: 

தற்போது ஐ-போன் 4 எஸ், ஸ்மார்ட் போன்களில் இணைந்து கிடைக்கும் சிரி (Siri) இயக்க தொழில் நுட்பத்தின் வெற்றி, இன்று பலரை குரல் வழி கட்டளைக்கு தயார் படுத்தியுள்ளது. இந்த சாப்ட்வேர் தொழில் நுட்பத்தின் மூலம் குரல்வழி கட்டளைகளைக் கொடுத்து மெசேஜ் அனுப்பலாம்; அழைப்புகளை வரிசைப்படுத்தி ஏற்படுத்தலாம்; சந்திப்புகளை அமைக்கலாம். நீங்கள் சாதாரணமாகப் பேசி இதனைப் பக்குவப்படுத்தி, பின்னர் கட்டளைகளை போகிறபோக்கில் அளிக்கலாம். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். போனில் மைக் ஐகான் ஒன்றைத் தட்டி, செய்தியை குரல் வழிச் செய்தியாகத் தரலாம். அனைத்தும் தந்து முடித்தவுடன், உங்கள் செய்தி டெக்ஸ்ட்டாக மாற்றப்பட்டு, பின்னர் உங்கள் அனுமதி பெற்று அனுப்பப்படும்.
பெர்சனல் கம்ப்யூட்டரில் இது பயன்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். இந்த தொழில் நுட்பம் எங்கு இயங்காது என்று தற்போது எண்ணப்படுகிறதோ, அங்கு இது சோதனை செய்து பார்க்கப்பட்டு நிச்சயம் கம்ப்யூட்டரிலும் பிற சாதனங்களிலும் கிடைக்கும். இணைய தளங்களிலும் சிரி இயக்க இன்டர்பேஸ் போல அமைக்கப்படலாம். இதன் மூலம் நாம் அதில் சென்று வருவது எளிதாக்கப்படலாம். பெரும்பாலும் இது போன்ற சோதனைகள் சீனாவில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3.குறையும் மின் அஞ்சல் பயன்பாடு:

இது பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. இனி இமெயில் புரோகிராம்கள் தேவைப்படாது. 1992 ஆண்டுக்குப் பின் ஹாட்மெயில் அல்லது இமெயில் சேவை தரத் தொடங்கிய நிறுவனங்களில், இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு, அதனைப் பெருமையாகப் பேசுவது ஒரு டிஜிட்டல் ஸ்டேட்டஸ் அடையாளமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது வளர்ந்து வரும் சிறுவர்கள், இமெயில் அக்கவுண்ட் எல்லாம் வைத்துக் கொள்வது இல்லை. சமுதாய இணைய தளங்களில் தங்களைப் பதிவு செய்து கொண்டு செயல்படுகின்றனர். தங்கள் குழுக்களோடு பதிவுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.

4. தொலைக்காட்சிகளில் மாற்றம்:

தொலைக்காட்சி பெட்டிகள் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை மேற்கொள்ளும் காலம் வந்துவிட்டது. இணைய பயன்பாடு கொண்ட டிவிக்கள் வரத் தொடங்கி விட்டன. திரைப்படங்களையும், தேவைப் படும் காட்சிகளையும், கேம்ஸ்களையும், விளையாட்டுப் போட்டிகளையும் கேட்டு வாங்கிப் பார்ப்பது, இந்த டிவிக்கள் மூலம் வளர்ச்சி அடையும். இத்தகைய சாதனங்கள், இனி கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டினையே முதன்மையாகக் கொண்டு இயங்கும். அவற்றுடன் டிவி சேனல்களையும் காட்டும்.

5. டிஜிட்டல் ஸ்டோர்கள்:

இனி அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையோ, வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையோ நாம் வெளியே வாங்க வேண்டியதிருக்காது. அந்த அந்த நிறுவனங்களின் அப்ளிகேஷன் ஸ்டோர் களிலிருந்து இணையம வழியாக நம்பிக்கையுடன் வாங்கிக் கொள்ளலாம். ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இந்த வழியில் நிலையான தங்கள் வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றன.

6. தடிமன் குறையும்:

டிஜிட்டல் சாதனங்களின் தடிமனைக் குறைத்து பாக்கெட்களில் வைத்து இயக்கும் அளவிற்கு, ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சாதனங்களின் தடிமனைக் குறைத்து வருகின்றன. இதற்கு முதலில் வழி வகுத்தது ஐ-பேட் மற்றும் அல்ட்ரா புக் கம்ப்யூட்டர்களே. கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்ளட் பிசிக்கள், டிவிக்களும் தங்கள் தடிமன் குறைந்த பதிப்புகளை வெளியிட்டு வருகின்றன. வரும் 2012ல் இவை மட்டுமே விற்பனையாகும்.

7. அனைத்திலும் டேப்ளட் பிசி:

சாம்சங் நிறுவனம் டேப்ளட் பிசி இணைந்த ரெப்ரிஜிரேட்டர் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதனை மற்ற சாதனங்கள் வடிவமைக்கும் நிறுவனங்களும், ரெப்ரிஜிரேட்டர் தயாரிக்கும் நிறுவனங்களும் பின்பற்றலாம். கார்களின் டேஷ் போர்டில், டேப்ளட் பிசிக்கள் இணைந்து கிடைப்பது இனி கார் ஒன்றின் அம்சமாகக் கருதப்படும்.

8. ஒருவரோடு ஒருவர்:

இனி ஆன்லைன் கேம்ஸ் எல்லாம் தேவைப்படாது. ஸ்மார்ட் போன்கள் வழியாக இருவர் தனி நபர் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடலாம். இதற்கு நெட்வொர்க் தேவைப்படாது. இரண்டு போன்கள் தங்களுக்குள் நெட்வொர்க் உதவியின்றி பேசிக் கொள்ள முடியும். இந்த வசதி வலுப்படுத்தப்பட்டு, பல வகையான தொடர்புகளை ஏற்படுத்தித் தரும்.
எனவே வரும் ஆண்டில் டிஜிட்டல் சாதனங்களின் தடிமன் மிக மிகக் குறைவாக இருக்கும்; சமுதாய இணைப்பு தருவதாக இயங்கும்;ஒருவருக்கொருவர் இணைப்பு கொள்வது, பேசுவதும், விளையாடுவதும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் மிக மிக எளிதாக அமையும்.

Blood Creating Leaves: ரத்தம் உற்பத்தி செய்யும் கொடிபசலை, சிறுபசலை கீரைகள்

0 comments
எண்ணற்ற சத்துக்களும் சுவையும் நிறைந்த கொடி பசலை தரையோடு கொத்து கொத்தாக சிறு செடி போல வளரும் இதுவும் பசலை வகையைச் சேர்ந்த்துதான். இலங்கையில் அதிகம் பயிரிடப்பட்ட இந்த கீரை தற்போது இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த இலையுடன் தண்டையும் சமைத்து சாப்பிடலாம். இரண்டிலும் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது.

கொடி பசலைக்கீரையில் வைட்டமின் ஏ,பி, போன்ற உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்பு, இரும்புச்சத்துக்களும், காணப்படுகின்றன. இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள ரத்தம் சுத்தமாகும். புதிய ரத்தம் விருத்தியாகும். மலச்சிக்கல் நீங்கும்.

சிறுபசலைக்கீரை

பசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட இந்த பசலைக்கொடி படர்ந்திருக்கும். இதன் இலை எள்ளின் உருவத்தில் உருண்டு,திரண்டு, வெந்தயம் அளவில் பருமனாக இருக்கும். இலையும், கொடியும் சிவந்த நிறத்துடன் இருக்கும்.

சிறுபசலைக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து உண்ணலாம். இது தேகத்துக்கு நல்ல பலத்தை தரக்கூடியது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பசலைக்கீரையை சாப்பிட இளகி குணமாகும். பாலுணர்வை தூண்டக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு.

நீர்கடுப்பு குணமாகும்

உஷ்ணம் காரணமாக சிறுநீர் சிவந்து அடிக்கடி இறங்குவது உண்டு. இந்த சமயம் சிறுநீர் துவாரத்தில் எரிச்சல் ஏற்படும். இதை நிறுத்த தரைப்பசலைக்கீரையை மூன்று வேளை சமைத்து சாப்பிட நீர்சுருக்கு குணமடையும்.

உஷ்ணம் காரணமாக வெட்டை, வெள்ளை ஒழுக்கு ஏற்பட்டு சிறுநீர் துவாரத்தில் சதா வெண்ணிறமான நீர் கசிந்து கொண்டிருக்கும். இந்த குறைபாடு உள்ளவர்கள் தரைப்பசலைக்கீரையை மூன்று நாட்கள் சமைத்து சாப்பிட குணமாகும். இது அதிக குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் சீதாள தேகம் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. சளி, கபம் இருக்கும் போது கீரையை சாப்பிட்டால் அதிகமாகும்

Tamil Nadu government proposed to bring out a new IT and ITeS policy

0 comments
Tamil Nadu government proposed to bring out a new Information Technology and IT enabled Services (ITeS) policy that it said would give rise to many avant garde features.

"The new policy would catapult the state to the numero uno position," Chief Minister J Jayalalithaa said at the 'Connect 2011,' a conference of top professionals from information and communication technology, organised by the Confederation of Indian Industry.

Noting that Tamil Nadu has emerged as a destination of choice for investors, she said the state remained one of the top three destinations in attracting Foreign Direct Investments (FDI) in the country.

Jayalalithaa said software exports from Software Technology Parks of India (STPI) units in the state have touched Rs 42,100 crore. "If we include exports from IT-SEZ units, it is estimated to be above Rs 50,000 crore", she said, adding it would be her government's endeavour to sustain and stabilise this environment of optimism.

The Chief Minister said Tamil Nadu at present has more than 1,800 software and ITeS exporters, including 210 foreign wholly owned subsidiaries and MNCs in software development.

Observing that the Indian information technology sector continued to be one of the sunshine sectors of the country's economy, showing rapid growth and promise, she said Tamil Nadu had carved out a pride of place in it.

Where to get Scholarship to study in College: கல்லூரியில் படிக்க உதவித்தொகை எங்கு கிடைக்கும்?

0 comments
கல்லூரியில் படிக்க உதவித்தொகை எங்கு கிடைக்கும்?

தினசரி வாழ்க்கையில் இயற்பியல் எப்படி பயன்படுத்தப்படுகிறது, இயற்பியலை மாணவர்களுக்கு புரியும் வகையில் எப்படிக் கற்றுத்தரலாம் என்பதிலிருந்து, பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் கல்வி உதவித்தொகை குறித்த தகவல்களை வழங்கி வருகிறார் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி இயற்பியல் துறை தலைவர் டி.உத்ரா.

இந்த யோசனை எப்படி வந்தது என்று பேராசிரியை உத்ராவிடம் கேட்டபோது, என் மகளுக்கு கதை சொல்ல ஆரம்பித்தபோது, என் பெற்றோர்  எனக்குச் சொன்ன கதை, புத்தகத்தில் நான் படித்த கதைகள் இவற்றை தவிர அவளுக்கு புதிதாக பல விஷயங்கள் கற்றுக்கொடுக்கத் தீர்மானித்தேன். அதன் அடிப்படையில் தினசரி வாழ்க்கையில் அறிவியலை நாம் எந்தெந்த வகையில் பயன்படுத்துகிறோம் என்பதை அவளுக்கு சின்னச் சின்னக் கதைகள் மூலம் சொல்ல ஆரம்பித்தேன். விளையாட்டாக கேட்க ஆரம்பித்த அவள், பிறகு ஒவ்வொரு விஷயத்திலும் உள்ள அறிவியலை அவளாக கேட்டுத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அதற்குப் பிறகு என் மகள் தெரிந்துகொண்ட அறிவியலை மற்ற குழந்தைகளும் தெரிந்துகொள்வதற்காக  கை கழுவுதல் ஆரம்பித்து, சமையல் செய்தல் உள்பட எல்லாவற்றிலும் இயற்பியல் விதிகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை இதழ்களில் எழுத ஆரம்பித்தேன்.

இதுதவிர பள்ளி ஆரம்பித்து கல்லூரி வரை படிக்கவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், பல மாணவர்கள் தங்கள் கல்வியை பின் தொடர முடியாத நிலை இருக்கிறது. இம்மாதிரியான  மாணவர்களுக்கு  பல்வேறு தனியார்  நிறுவனங்கள், அரசு  அமைப்புகள், சமூகத் தொண்டு நிறுவனங்கள் கல்வி உதவித்தொகைகள், பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சீருடைகள், வழங்கி வருகின்றன. இம்மாதிரியான விஷயங்களை அனைத்து மாணவர்களும் தெரிந்துகொண்டால், இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு உதவித்தொகையை வைத்துக்கொண்டே படித்து முடித்துவிடலாம் என்று கூறும் உத்ரா, இதுவரை 96 அறிவியல் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு  சர்வதேச அறிவியல் மாநாட்டில், நிறமாலைமானியியல் குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்.

கலை அறிவியல் கல்லூரி , பொறியியல் கல்லூரி, முதுநிலைப் பட்டப் படிப்பு மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகைகள் குறித்து உத்ரா தொகுத்துத் தந்த தகவல்கள் இதோ:

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன்

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் என்ற அமைப்பு பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மூன்று ஆண்டுகாலம் படிப்புக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கான உதவித்தொகை அளிக்கிறது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும். சாதி, பாலினம் போன்ற எந்த விதிவிலக்கும் இந்த உதவித்தொகைக்கு கிடையாது.

விவரங்களுக்கு: www.ryabookbank.com

ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட்

படிக்கும் ஆர்வமும் அதேநேரம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட். இந்த தனியார் நிறுவனம் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களும் சிறந்த கல்வியை பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் இந்த உதவித்தொகையை அளித்து வருகிறது. இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு, தொழிற்கல்வி பயின்றுகொண்டிருக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், Jaigopal Garodia Scholarships Centre, Jaigopal Garodia Vivekananda Vidyalaya Trust, U – 6, Seventh Street, Anna Nagar, Chennai. தொலைபேசி எண் : 26206261 என்ற  முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

கௌரவ் ஃபவுண்டேஷன்

சென்னையில் இயங்கி வரும் கௌரவ் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம், இந்திய மாணவர்களுக்கு ஆய்வு மற்றும்  உயர்கல்வி மேற்கொள்வதற்கு உதவித்தொகை அளித்து வருகிறது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்தியராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 4 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். 10 வயது முதல் 50 வயது வரை உள்ள படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே உதவித்தொகைக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு, எம்.பி.பி.எஸ். பி.இ., பி.டெக். படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள், சி.ஏ., சி.எஸ்., இன்டீரியர் டெக்கரேஷன், ஃபேஷன்/டிசைன் சம்பந்தமான படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களும் இந்த கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: http://gauravfoundation.org/scholarship.html

எஸ்.கே.டி.பி. தொண்டு நிறுவனம்

சென்னை  தி.நகரில் உள்ள எஸ்.கே.டி.பி. எனும் சமூக தொண்டு நிறுவனம் படிக்க வசதியில்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை உதவித்தொகையுடன் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.  சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்த நிறுவனம் இந்த ஆண்டில் சென்னையைச் சேர்ந்த 64 மாணவர்களுக்கும் மற்றும் பிற பகுதியைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையை வழங்கியுள்ளது.

விவரங்களுக்கு : www.skdbassociation.com/scholarships.html

ஸ்ரீ வித்யாசாகர் எஜுக்கேஷனல் டிரஸ்ட்

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வித்யாசாகர் எஜுக்கேஷனல் டிரஸ்ட் அமைப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ஆண்டுதோறும் அளித்து வருகிறது. உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது
பிளஸ் டூ வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இளநிலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. அதேபோல எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் தற்போது ஐ.டி.ஐ. கல்வி நிலையத்தில் முதல் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு : B-1, Narumukai apartment, Brindavan Nagar Extension, Adambakkam, Chennai – 88 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

சோபியா நிறுவனம்

சென்னையில் உள்ள சோபியா என்ற தனியார் நிறுவனம், கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி பயில விரும்பும் மாணவர்களும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் முதல் ஆண்டு பயிலும்போதே இந்த உதவித்தொகைப்பெற விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாம் ஆண்டு அல்லது மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது, கல்வி உதவித்தொகை கேட்டு புதிதாக விண்ணப்பிக்க முடியாது.

விவரங்களுக்கு : www.sophiascholarship.org

சாகு ஜெயின் டிரஸ்ட்

சாகு ஜெயின் டிரஸ்ட் என்ற அமைப்பு தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்காக மாதம்தோறும் ரூ.150லிருந்து ரூ.1000 வரை உதவித்தொகை அளித்து வருகிறது. பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள்  பெற்ற அதிகபட்ச மதிப்பெண்களைப் பொருத்து இந்த உதவித்தொகை பெறுவதற்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விவரங்களுக்கு : http://sahujaintrust.timesofindia.com

ஃபவுண்டேஷன் ஃபார் அகாதெமிக்  எக்ஸலன்ஸ் அண்ட் ஆக்சஸ் நிறுவனம்

புதுதில்லியில் உள்ள பவுண்டேஷன் ஃபார் அகாதெமிக்  எக்ஸலன்ஸ் அண்ட் ஆக்சஸ் நிறுவனம் கலை, வணிகம், அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்படிப்பு, இளநிலைப் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. பயணச்செலவாக ஆண்டுக்கு ரூ.1,000, கல்லூரியில் தங்கியிருந்து படிக்க ஆண்டுக்கு ரூ.9,000, ஆடைகள் வாங்க ஆண்டுக்கு ரூ.1000, புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.  மாணவர்களின் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இந்த உதவித்தொகைக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விவரங்களுக்கு: www.faeaindia.org/index.asp

சத்தியகாமா சாரிடபிள் டிரஸ்ட்

பெங்களூருவில் உள்ள சத்தியகாமா சாரிடபிள் டிரஸ்ட் என்ற சமூகத் தொண்டு நிறுவனம் பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கு கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் ஏழை எளிய மாணவிகள் மற்றும் பிளஸ் டூ வகுப்பு முடித்துவிட்டு பட்டப் படிப்பு மேற்கொள்ளவிருக்கும் பிராமண சமுதாய மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கிறது. பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் பெற்ற அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த உதவித்தொகை பெற மாணவிகள் இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விவரங்களுக்கு : www.tamilbrahmins.com

டி.வி.எஸ். சோல்ட்ரி டிரஸ்ட் நிறுவனம்

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த டி.வி.எஸ். சோல்ட்ரி டிரஸ்ட் நிறுவனம் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. பிளஸ் டூ முடித்துவிட்டு உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: www.nellorebrahmins.com

ஸ்ரீபிரகாத் பாரதீய சமாஜ்

மும்பையைச் சேர்ந்த  ஸ்ரீபிரகாத் பாரதீய சமாஜ் என்ற அமைப்பு ஆண்டுதோறும், பிளஸ் டூ முடித்துவிட்டு முழுநேர இளநிலைப் பட்டப் படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதம், ஹோமியோபதி, என்ஜினீயரிங், பார்மஸி, கம்ப்யூட்டர் சயின்ஸ், வேளாண்மை, கால்நடை அறிவியல், நர்ஸிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் குறைந்தபட்சம் பிளஸ் டூ வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்களும், இந்திய மாணவர்களாக இருப்பின் 60  சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி மற்றும் நர்சிங் படிப்பில் சேரும் மாணவிகள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால், இந்த இலவச கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு : shri brihad Bharatiya samaj, 178 NK Mehta International House, behind LIC Yogakshema, Babubhai chinai Marg, Backbay Reclamation, Mumbai – 400020.

இன்போசிஸ் அறக்கட்டளை

இன்போசிஸ் தொழில்நுட்ப நிறுவனம், இன்போசிஸ்  அறக்கட்டளையின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகம் பெற்ற மாணவர்கள் தங்கள் மேல்நிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விவரங்களுக்கு : www.infosys.com/infosys_foundation/about.htm

தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு சமுதாயத்தில்  பொருளாதார அளவில் பின்தங்கிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பள்ளி சீருடை மற்றும் கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறது தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு.

விவரங்களுக்கு: womens voluntary service of tamilnadu, old no.19, New no.6, Near presidency school, mayor VR Ramanathan Road, chetpet, chennai. Phone: 044 – 28361434 , 28361825.

பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட்

சென்னையைச் சேர்ந்த பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட் என்ற சமூகத் தொண்டு நிறுவனம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பார்வைத்திறன் அற்ற மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிப்பவராக இருக்கவேண்டும் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணம், புத்தகச் செலவு மற்றும் சீருடைகளுக்காக இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

விவரங்களுக்கு : www.brightfutureforblind.com

Lotus Kasayam: உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த வெண் தாமரை கஷாயம்

0 comments
தாமரை மலர்களை இறைவனுக்குரிய ஆசனமாக புராணங்கள் சித்தரிக்கின்றன. கல்வியின் நாயகி சரஸ்வதி வெண்தாமரை மலரிலும், செல்வத்தின் நாயகி செந்தாமரை மலரிலும் வீற்றிருப்பதாக கூறப்படுகிறது. தாமரை மலர்கள் தன்னிகரற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தாமரை மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தாமரை மலர்களில் லினோலிக் அமிலம், புரோட்டீன், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகின்றன.

செந்தாமரை, வெண்தாமரை என இருவகை தாமரை மலர்கள் இருந்தாலும் வெண்தாமரையே அதிக அளவில் மருத்துவத்திற்குப் பயன் படுத்தப்படுகிறது.

மூளை வளர்ச்சி

உடல் ஆரோக்கியத்திற்கு வெண்தாமரைக்குடிநீர் மிகவும் ஏற்றது. மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து வெண்தாமரைப் பூ கஷாயம் குடித்து வர மூளை வளர்ச்சியடையும். இதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க வெண்தாமரைப் பூ கஷாயம் ஏற்றது. தினம் மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட ஜன்னி நோய் குணமாகும்.

கண்பார்வை தெளிவு

வெண்தாமரைப்பூ,இலை,தண்டு, கிழங்கு ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து எடுத்து அதனை நன்றாக சாறுபிழிந்து முக்கால்கிலோ நல்லெண்ணையில் கலந்து அடுப்பில் கொதிக்கவைக்கவும். நன்றாக கொதித்த உடன் அதனை இறக்கி ஆறவைத்து காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் இதனை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்துவர மங்கிய கண்பார்வை தெளிவுறும்.

உயர் ரத்த அழுத்தம்

வெண்தாமரைப்பூக்களைப் காயப்போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவேண்டும். அதனை வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு தடவை சாப்பிட உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

கூந்தல் தைலம்

தாமரைப்பூ ,அதிமதுரம்,நெல்லிக்காய், மருதாணிஇலை ஆகியவற்றை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து உருட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு இந்த உருண்டையை அதில் போட்டு காய்ச்சி வடித்து எடுக்கவும். இந்த தைலத்தை தினமும் தலையில் பூசி வர இளநரை மறையும், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.

இருதயநோய் போக்கும்

செந்தாமரை இதழ்களை எடுத்து வெயிலில் உலர்த்தி 300 கிராம் எடை எடுத்து ஒரு சட்டியில் போட்டு அதில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மூடிவைத்து விடவும். இந்த கஷாயத்தை தினமும் அரை டம்ளர் அளவு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவு தேன்விட்டு 21 குடித்து வர இருதய நோய் குணமடையும்.

இருமல் போக்கும் நீர்

தினமும் செந்தாமரை இதழை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதனை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு அதனை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் குடித்து வர வறட்டு இருமல் குணமடையும்.

Jasmine Flowers Medicinal Effect: மலரும் மருத்துவமும் மல்லிகை

0 comments
மலர்களில் மணம் மட்டும்தான் உண்டு என்று நினைப்பவர்களா நீங்கள். அப்படியென்றால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.  மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் மல்லிகை மலர்கள்.

இதனால்தான் நம் முன்னோர்கள் இறைவனை பூஜிக்கும் பொருளாக மலர்களை பயன்படுத்தினர்.
மலர்கள் மனதிற்கு அமைதியையும், சாந்தத்தையும்  கொடுக்கிறது.  அதுபோல் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது.  இதை மலர் மருத்துவம் என்கின்றனர்.  தற்போது உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப்பெற்று வருகிறது.

இங்கிலாந்தில் டாக்டர் எட்வர்டு பாட்ச் என்பவர் M.ஆ.ஆ.கு. ஐ.கீ.இ.க, M.கீ.இ.கு படிப்புகளைப் படித்துவிட்டு சில காலம் ஆங்கில மருத்துவராக பணிபுரிந்தார்.  அப்போது ஆங்கில மருந்துகளால் சில நோய்கள் குணப்படாமலும், பக்க விளைவுகளை உண்டுபண்ணியும் வந்ததால் ஹோமியோபதி மருத்துவம் பயின்றார்.  பெரும்பாலான நோய்களுக்கு முக்கியக் காரணம் மனமே என்பதை உணர்ந்து அதற்கு மருந்து கண்டு பிடித்தால் நோய்களைக் குணப் படுத்தலாம் என்று முடிவு செய்து இதற்காக மரப் பட்டை, இலைகள், கனிகள், விதைகள், காய்கள், பூக்கள் என பல வகைகளைச் சேகரித்து பரிசோதனை செய்தார்.  அப்போது பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய நூல்களில் மனதை செம்மைப்படுத்த மலர்களின் பங்கு பற்றி இருப்பதை அறிந்த அவர் 38 வகையான மலர்களைத் தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்ததில், அவை பல வகைகளில் மனிதனின் மனதை மாற்றி உள்ளத்திற்கு புத்துணர்வு கொடுக்கின்றன  என்பதை உணர்ந்தார்.  அதனால் நோய்கள் குணம் ஆவதையும் உணர்ந்தார்.  இப்படி உருவானதுதான் மலர் மருத்துவம்.  ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் மலர்களின் மருத்துவப் பயன்களை கண்டறிந்துள்ளனர் என்பதைப் பார்க்கும்போது உலகின் ஆதி மருத்துவம்தான் நம் இந்திய மருத்துவம் என்பது நமக்கு புரிய வரும்.

இந்த வகையில் மல்லிகை மலரின் மருத்துவக் குணங்கள் பற்றி  சித்தர்கள் கூறுவது என்ன என்று பார்ப்போம்.

மல்லிகையை புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும்.  அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.  மல்லிகை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  வாசனை திரவியங்களுக்கு அதிகம் பயன்படுத்துவதால் மிகுந்த பொருளாதாரத்தை ஈட்டித் தருகிறது.

மல்லிகைப் பூவை நம் இந்தியப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள்.  காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது.

மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.   சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.

கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.  கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும்.  கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும்.

தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது.
ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.

மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.

உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள்.  இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.

உலர்ந்த மல்லிகைப்பூ - 5 கிராம்

கறிவேப்பிலை -10 இலை

எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்.

Remedies by Neem Flowers: பித்தம், வாதம், கபம் நீக்கும் வேப்பம் பூக்கள் - காது வலிக்கும் அரு மருந்து!

0 comments
கண்ணுக்கு எதிரே கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கும் மூலிகை வேம்பு. காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம். வேப்பமரத்தின் இலைகளும், பூக்களும், கனிகளும் மருத்துவகுணம் மிக்கவையே. வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும். அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும். கிருமியும் அண்டாது.

தென்னிந்திய சமையலில் வேப்பம்பூக்களுக்கு முக்கிய பங்குண்டு. தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம்பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட்கொள்கின்றனர். மலர்கள் கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை.

மூன்று நோய்களுக்கு மருந்து

பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமன்படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு வேப்பம்பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து கால் டம்ளர் நீரில் சிறிது தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமனப்படும்.

வேப்பம்பூவை நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வற்றல்குழம்பு, மிளகுரசம் தயார் செய்யும்போது சிறிது வேப்பம்பூவைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிறு உப்பிசம்,பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். கல்லீசரல் பாதுகாக்கப்படும்.

வேப்பம்பூ பொடியில் தேன் கலந்து தினம் 2 வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் பித்தம் காரணமாக எற்படும் வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம், போன்ற தொல்லைகள் நீங்கும். உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும்.

உடல் பருமன் குறையும்

வேப்பம்பூவை தண்ணீரில் ஊறவைத்து அதனை குடித்து வர உடல் பருமன் குறையும். இது அல்சரையும் குணமாக்கும். உடலை வலுவாக்குவதில் வேப்பம்பூக்களின் பங்கு முக்கியமானது. தினம் இருவேளை வேப்பம்பூ பொடியை சாப்பிட முறைக்காய்ச்சல் நீங்கும்.

வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால் தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு முதலியவை தீரும். இதை தலையின் உச்சியில் வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கி சுகமாக இருப்பதோடு கூந்தலும் செழித்து வளரும்.

சருமநோய்கள் நீங்கும்

வேப்பம்பூவைக் காய்ச்சி, இந்த கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் நீங்கும். வேப்பம் பூவையும், எள்ளையும் அரைத்துக் கட்டினால் கொடிய கட்டிகளும் உடனே உடைந்துவிடும். வேப்பம்பூ கஷாயத்தை சிறிதளவு காலையிலும், மாலையிலும் குடிக்கச் செய்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் அகன்று வயிறு சுத்தப்படும்.

காதுகோளாறுகளுக்கு மருந்து

வேப்பம்பூவை பறித்து வந்து அதை கொதிக்கும் நீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை காது வலியாக உட்செல்லும்படி தலையை வைத்திருந்தால் காதுவலி, காது இரைச்சல், சீழ் வடிதல், யாவும் நீங்கி காது நன்கு கேட்கும்.

Color Says Your Love Nature: காதலை சொல்லும் `கலர்’

0 comments
`கலர் சைக்காலஜி`, இப்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலம். பல்வேறு நிறங்களை பெண் அல்லது ஆணிடம் காட்டி, `அவைகளில் எந்த நிறம் பிடிக்கிறது?` என்று கேட்கிறார்கள். அவர் தனது விருப்பமான நிறத்தை சொன்னதும், அவருடைய காதல் மற்றும் தாம்பத்ய ஆர்வத்தை அதிரடியாகக் கூறி அசத்துகிறார்கள்.



உங்களுக்கு எந்த நிறம் பிடிக்கும், அதற்கேற்றபடி உங்கள் காதல் உணர்வு எப்படி இருக்கும் இங்கே பாருங்கள்.

சிவப்பு:

இவர்கள் காதல் உணர்வில் புலி. கற்பனையில் நினைப்பதை எல்லாம் காதலில் நிறைவேற்ற துடிப்பார்கள். இவர்கள் ஆசைப்பட்ட பெண்ணை (அல்லது ஆணை) அடையாமல் விடமாட்டார்கள். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும்.

மஞ்சள்:

இவர்களது காதல் ஆசைகள் அளவுக்கு மீறியதாக இருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. சில நேரங்களில் `இப்படியுமா ஆசைப்படுவீர்கள் சே..` என்று சொல்லும்படி ஆகிவிடும். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப் பார்கள். அதனால் இந்த நிற மனிதர்களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். ஆனால் இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்துவிட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள்.

பிங்க்:

கணக்கற்ற காதல் கனவுகள் கொண்டவர்களாக இருப்பார்கள். தினமும் இரண்டு மூன்று பேரையாவது காதல் பார்வை பார்த்து ரசிப்பார்கள். காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக் கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்பவும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற்சிப்பார்கள். இவர்களை அவ்வளவு எளிதாக நம்பிவிடக்கூடாது. ஏன்என்றால் கொள்கை, கோட்பாடு, நம்பிக்கை இவர்களிடம் குறைவாக இருக்கும். பிங்க் நிறத்தை விரும்பும் பெண்கள் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆண்களை எளிதில் நம்பி ஏமாந்துவிடமாட்டார்கள்.

பர்பிள்:

சுயநலவாதிகள். காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடுவார்கள். அதனால் இவர்கள் எளிதாக காதல் வலையில் விழமாட்டார்கள். கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனி யாகப் பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் `டன்` கணக்கில் கொட்டுவார்கள். அதைக் கேட்டு அதிர்ந்துபோகும் பெண், `அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது` என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும்.



ஆரஞ்ச்:

காதல் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. அதற்கு போய் யாராவது நேரத்தை செலவிடுவார்களா என்று தத்துவம் பேசுவார்கள். கடவுள் நம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருப்பதால், யாராவது காதல் தூதுவிட்டாலும் தத்துவம் பேசி விரட்டிவிடுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் ஆண்களை, பெண்கள் சாமியார் என்பார்கள்.

கறுப்பு:

இவர்கள் இறுக்கமான மனிதர்களாக இருப்பார்கள். மனம்விட்டுப்பேச மாட்டார்கள். அதனால் இவர் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. அதை தீர்க்க சரியான மருந்து தாம்பத்ய உறவு கொள்வதுதான் என்று நம்புவதால் விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது.

பச்சை:

பச்சையை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வு அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டிவிடுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள்.

நீலம்:

இந்த நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிக மிருக்கும். பெண் என்றால் நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். `தாம்பத்ய' விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும்.

வெள்ளை:

இதனை விரும்பும் ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். `காதலாவது கத்தரிக்காயாவது..' என்று எப்போதும் காதலுக்கு எதிராகவே பேசுவார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

Herbal Medicine to Stop Blood Vomiting: ரத்த வாந்தியை கட்டுப்படுத்தும் அருமருந்து – துத்திப்பூ!

0 comments
பட்டாம்பூச்சிகள் பறந்து அமரும் துத்திப்பூக்கள் காணும் இடமெங்கும் கண்ணுக்கு இதமாய் மலர்ந்து சிரிக்கும். குப்பை மேடுகள், சாலையோரங்கள் என பல இடங்களிலும் வளர்ந்துள்ள துத்திச் செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணமுடையவை. ரத்தம் தொடர்புடைய நோய்களை போக்கி நெஞ்சுக்கு இதம் தரும்.

ஆண்மை பெருகும்

துத்திப்பூக்களைச் சேகரித்து துவரம்பருப்புடன் கூட்டாகச் சமைத்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ரத்தவாந்தி, ரத்தபேதி, சளியில் ரத்தம், சிறுநீரில் ரத்தம் எதுவாயினும் குணமாகும். ஆண்மை பெருகும்.

இரைப்பு நோய்

துத்திப்பூக்களைச் சேகரித்து, காம்பு நீக்கி நிழலில் காயவைத்து சூரணம் தயார் செய்து சமஅளவு சர்க்கரை கலந்து அரை தேக்கரண்டியளவு சூரணத்தை காலை, மாலை பாலில் பருக இரைப்பு மறையும். காசம் என்ற எலும்புருக்கி நோய் நீங்கும்.

மூலநோய் கட்டுப்படும்

ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பறித்து பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வர மூலநோய் கட்டுப்படும்.

ரத்தவாத்தி நீங்கும்

அரைக் கைப்பிடியளவு துத்திப் பூக்களை சேகரித்து ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி 4 மணிக்கொரு முறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.

Heart Attack-Stroke without Pain: வலியின்றி வரும் மாரடைப்பு

0 comments
வயது அதிகரிக்க அதிகரிக்க மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. நம் நாட்டில் பிறந்ததினாலேயே ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு, மரபு முறை, மாவுச் சத்து அதிகமுள்ள அரிசி போன்ற உணவு மற்றும் தேவையான உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை காரணங்களாக இருக்கலாம். ஆனால் இன்னமும் இவை ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்படவில்லை.

மாரடைப்பு ஏற்படுவதை எவ்வாறு கண்டறிவது?
மூன்று இரத்தக் குழாய்கள் வழியாக இதயத்திற்கு இரத்தம் செல்கிறது. வயது ஆக ஆக இரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன. அக்குழாய்களுள் கொழுப்பு சேர்வதால் இரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
நடுத்தர வயதில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் நெஞ்சில் கடுமையான வலி ஏற்படும். அது பரவலாக இருக்கும். இடது தோள்பட்டை மற்றும் இடது கை உள்புறம் பரவும். பின்பு வலதுகை மற்றும் முதுகிற்கும் வலி பரவிச் செல்லும். நெஞ்சில் ஏற்பட்ட வலி கழுத்து பக்கவாட்டிலும், தாடைக்கும் செல்லும். இத்தோடு உடம்பு சில்லென்று வியர்த்துக் கொட்டும். மயக்கமும், வாந்தியும் ஏற்படலாம். இத்தகைய அறிகுறிகள், முதுமைக்காலத்தில், ஒருசிலருக்கு மட்டுமே இப்படி இருக்கும். பலருக்கோ, நோயின் அறிகுறிகள் மாறுபட்டுக் காணப்படும். அதாவது நெஞ்சில் வலி ஏதுமின்றி உடல் சோர்வு, களைப்பு, மூச்சு வாங்குதல், மயக்கம், கீழே விழுதல், பக்கவாதம் போன்றவையே மாரடைப்பின் அறிகுறிகளாய்த் தோன்றும்.
மேலும் சிலருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் ஏதுமின்றி மறைந்திருக்கும். இவர்களுக்கு நெஞ்சு வலியோ அல்லது மாரடைப்பைச் சார்ந்த எந்தவிதத் தொல்லைகளுமே இருக்காது. ஆனால், ஈ.ஸி.ஜி.யில் மாரடைப்பு ஏற்பட்டது தெரியவரும். இதை சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று கூறுவோம். முக்கியமாக நீண்ட காலம் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அறிவுத்திறன் வீழ்ச்சியினால் மூளை பாதிக்கப்பட்டவர்களுக்கு சைலன்ட் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு மிக அதிகம்.

மாரடைப்பினால் ஏற்படும் தொல்லைகள் என்ன?
வயதான காலத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டால் அது வாயுத் தொல்லை என்று அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். அதனால் சிகிச்சையில் காலதாமதம் ஏற்பட்டு மரணம் அடைய வாய்ப்புள்ளது. இதைத் தவிர இதயம் வலிமையிழத்தல், இதய ஓட்டம் மாறுபடுதல், நுரையீரலில் நீர்க்கோத்தல் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புண்டு. இரத்த ஓட்டம் திடீரென்று மற்ற உறுப்புகளுக்குக் குறைந்தால் பக்கவாதம் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்றவையும் அதிகம் வரும். நெஞ்சுப் பகுதியில் இனம்புரியாத ஒரு வேதனை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாது டாக்டரிடம் சென்று இ.ஸி.ஜி. இரத்தப் பரிசோதனை மற்றும் தேவைப்பட்டால் எக்கோ போன்ற பரிசோதனைகள் செய்து கொண்டு தேவையான சிகிச்சை பெற வேண்டும்.

என்ன சிகிச்சை?: மருந்தா? ஆஞ்சியோ பிளாஸ்டியா? பைபாஸ் சர்ஜரியா?
சுமார் 70 - 80 வயது தாண்டிய முதியவர்களுக்கு மாரடைப்பிற்குப் பின்பு நெஞ்சு வலியோ மூச்சு வாங்குவதோ இல்லையென்றால் மருந்துகள் மூலமாகவே நல்ல பலன் கிடைக்கும்.
சுமார் 60-70 வயதுள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் பி.பி., கொழுப்புச்சத்து போன்றவற்றோடு அடிக்கடி நெஞ்சில் வலியும் ஏற்படுமேயானால் அவர்களுக்கு ஆஞ்சியா பிளாஸ்டி சிகிச்சை முறை தேவைப்படும். ஆஞ்சியோகிராம் என்பது கை அல்லது காலில் உள்ள ஒரு இரத்தக் குழாயின் வழியாக மருந்ததைச் செலுத்தி, இருதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாயின் ஏற்பட்டுள்ள அடைப்புகள் பற்றி அறியும் ஒரு பரிசோதனை.
இந்தப் பரிசோதனை மூலம் இரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தால் அதை ஆஞ்சியோகிராம் செய்யும் முறை போலவே அடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஒரு பலூனை விரிவடையச் செய்து அடைப்பு நீக்கப்படும். மறுபடியும் அடைப்பு வராமல் இருக்க, அந்த இடத்தில் ஊதுகுழல் போன்ற ஒரு சிறு குழாயைப் பொருத்தி விடுவார்கள். இரத்தக் குழாயிலுள்ள அடைப்பு விரிவு செய்யப்பட்டு இரத்தம் ஒரே சீராக ஓட வழி செய்யப்படுகிறது. ஒரே சீராக ஓட வழி செய்யப்படுகிறது. ஆஞ்சியோ பிளாஸ்டி முறையில் மயக்கமோ, தையலோ கிடையாது. இச்சிகிச்சையின் மூலம் மாரடைப்பின் தொல்லையின்றி பல ஆண்டுகள் நலமாக வாழ முடியும். ஆனால் டாக்டரின் ஆலோசனைப்படி 6-12 மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரிடம் சென்று மறுபரி சோதனை செய்து அதற்குத் தக்கவாறு மருந்துகளைச் சாப்பிடுவது அவசியம்.

பைபாஸ் சர்ஜரி:
இருதய பைபாஸ் சர்ஜரி என்பது நவீன அறுவை சிகிச்சை முறை. ஆஞ்சியோ கிராம் பரிசோதனை மூலம் ஒருவருக்கு இருதய இரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால், இருதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படும். இதற்கு காலிலுள்ள இரத்தக் குழாயை எடுத்து இருதய இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட இடத்தில் பொருத்தி, இரத்த ஓட்டம் மாற்று வழியில் சீராகச் செல்ல அறுவை சிகிச்சை செய்யப்படும். முதுமைக் காலத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வயது ஒரு தடை இல்லை. எப்பொழுதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும், சுமார் 60 வயதுள்ள ஒரு பெண்மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவர் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து இரண்டு இரத்தக் குழாய்களுக்கு மேல் அடைப்பு இபுருந்தால் பைபாஸ் சர்ஜரி செய்து கொள்வது அவசியம். ஏனென்றால் நேரமின்மை மற்றும் வேலை பளுவினால் ஒழுங்கான உணவுக் கட்டுப்பாடு முறையோ அல்லது தவறாமல் உடற்பயிற்சியோ அவரால் செய்ய முடியாது. இவர் அறுவை சிகிச்சையின் மூலம் சுமார் 10-15 ஆண்டுகள் வரை முன்பு இருந்ததைப் போலவே ஆரோக்கியமாக வாழ முடியும்.
ஆகையால் வயதான காலத்தில் மாரடைப்புக்கு மருந்தா? ஆஞ்சியோ பிளாஸ்டியா அல்லது பைபாஸ் சர்ஜரியா என்பதை அந்தந்த நோயாளியின் நோயின் தன்மை, வயது, அவருக்கு இருக்கும் பிற நோய்கள், அவரது வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொறுத்தே முடிவெடுக்க முடியும்.

மாரடைப்பு யாருக்கெல்லாம் வரும்?
மாரடைப்பு எல்லோருக்கும் வருவதில்லை. குடும்பத்தில் (இரத்த சம்பந்தப்பட்ட உறவு) யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், நீரிழிவு நோய், பி.பி., இரத்தத்தில் கொழுப்புச் சத்து மற்றும் எடை அதிகம் உள்ளவர்களுக்கும், மது அருந்துபவர்களுக்கும், உடல் உழைப்பு இல்லாதவர்கள், பதற்ற ஆசாமிகள், புகைபிடிப்பவர்கள் போன்றோருக்கு மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. மேற்கண்ட தொல்லைகளுக்கு தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வதுடன் தினமும் செய்யும் உடற்பயிற்சி, நார்ச்சத்து அதிகம் உள்ள ஆரோக்கியமான உணவு மற்றும் தியானம் போன்றவை மூலம் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும்.

டாக்டர். வி.எஸ். நடராஜன், மூப்பியல் மருத்துவர்.
டாக்டர் பி.ஸி.ராய் தேசிய விருது பெற்ற இவர், முதியோர்களின் மறதிக்கு சிறப்பு சிகிச்சையளிக்க நினைவாற்றல் மையம் அமைத்து அதற்கு தக்க சிகிச்சை அளித்து வருகிறார்.

Andhra Chicken Fry: ஆந்திரா கோழிக்கறி வறுவல்

0 comments
ஆந்திரா கோழிக்கறி வறுவல் தேவையானவை:

கோழிக்கறி - 1/2 கிலோ (சுத்தம் செய்து நறுக்கவும்)
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 1 கையளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

ஆந்திரா கோழிக்கறி வறுவல் செய்முறை:

ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

பின் வெங்காயத்தை வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

சிக்கனைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத் தூள், மஞ்சள்தூள், போதுமான உப்பு, நீர் சேர்க்கவும்.

சிக்கன், மசாலாவுடன் சேர்ந்து வெந்து கெட்டியானதும் குறைந்த தீயில் சிறிது நேரம் வைக்கவும்.

சிக்கன் நன்கு டிரை ஆனதும், பொட்டுக்கடலை மாவைப் போட்டுப் புரட்டவும், பொட்டுக்கடலைத் தூளில் பச்சை வாசனை போனதும் இறக்கிவிடவும்.

செப்' தாமு

Jayalalitha Calls for calm among Keralites in Mulla Periyar Issue | அற்ப நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு, அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது - முதல்வர் ஜெயலலிதா

0 comments
Jayalalitha Calls for calm among Keralites
கேரளாவில் தமிழர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அதை விட அதிகமான, மலையாளிகள் தமிழகத்தில் இருக்கின்றனர். அற்ப நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு, அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா அறிக்கை:

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்கள், அவர்களது கேரள சகோதரர்களால் தாக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்படுகின்றன. அங்குள்ள தமிழ் நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் கூட அச்சுறுத்தலில் உள்ளனர். முல்லைப் பெரியாறு விவகாரம் தான் இத்தனைக்கும் காரணம் என தெரியவருகிறது. குறுகிய மனப்பான்மை கொண்ட, சமூக விரோத கும்பல்களின் சூழ்ச்சிக்கு இரையாகி விட வேண்டாம் என, கடவுளின் சொந்த தேசத்தின் படித்த, புத்திசாலி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்னை, அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தூண்டிவிடப்பட்ட அச்சத்தின் காரணமாக எழுந்துள்ளது. சிக்கலான தருணங்களில், மக்களின் உணர்ச்சிகள் உச்சத்தை அடைவது இயல்பே. அதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்களுக்கு உண்மையை உணர்த்தி, அவர்களை அமைதிப்படுத்துவது, பொறுப்புள்ளவர்களின் கடமை. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்று, உடைந்து, இடுக்கி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என சந்தேகிப்பதற்கு, எந்த முகாந்திரமும் இல்லை. அணை மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு, அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. அணையின் பாதுகாப்பு, சுப்ரீம் கோர்ட் நியமித்த நிபுணர் குழு உள்ளிட்ட அத்தனை தொழில்நுட்ப வல்லுனர்களாலும், மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

Jaya Tells Keralites/a>

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு, 116 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காகவே, அதன் பாதுகாப்பை சந்தேகிக்க வேண்டியதில்லை. காவிரியில், கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, 1900 ஆண்டுகளாக திடமாக உள்ளது. அதே சுண்ணாம்புச் சாந்து மூலம் தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கேரளாவும், நிலநடுக்க மண்டலத்தின் மூன்றாவது பிரிவில் தான் இருக்கிறது என்பதால், நிலநடுக்கத்தால் அணை பாதிக்கப்படும் என்பதற்கும், எந்தவிதமான அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை. இந்த விவரங்கள் எல்லாம், கேரளாவில் உள்ள, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். இருந்தும், சில அற்ப காரணங்களுக்காக, பெரியாறு அணை தொடர்பான பீதியைக் கிளப்பத் துணிந்துள்ளனர்.

கேரளா, தமிழகத்தின் அண்டை மாநிலம். இன்னும் சொல்லப் போனால், 1950 வரை இரண்டும் ஒரே மாநிலமாக இருந்தவை. மலையாளிகளும், தமிழர்களும் பொதுவான மொழி, கலாசாரப் பின்னணியைக் கொண்டவர்கள். கேரளாவில் ஏராளமான தமிழர்கள் இருக்கின்றனர். அதை விட அதிகமான எண்ணிக்கையில், தமிழகத்தில் மலையாளிகள் இருக்கின்றனர். இதுவரை இவர்கள் அனைவரும், மெச்சத்தகுந்த சகோதரத்துவத்தோடும், ஒத்துழைப்போடும் தான் வாழ்ந்திருக்கின்றனர். கேரள சகோதர, சகோதரிகளின் அழிவை தமிழக அரசோ, மக்களோ ஒருபோதும் விரும்ப மாட்டர். நூறு சதவீதம் உறுதியாகத் தெரிவதால் தான், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக சொல்லி வருகிறோம். பல நூறாண்டுகளாக, இரு மாநில மக்களுக்கு இடையில் நிலவி வரும் பரஸ்பர நம்பிக்கை, மதிப்பு, நல்லெண்ணத்தைச் சீர்குலைத்துவிடாதீர்கள் என, கேரள மக்களை வேண்டிக் கொள்கிறேன். எந்த மக்களின் கூர்மை, கல்வி, பகுத்தறிவு மற்றும் கடும் உழைப்பின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேனோ, அந்த கேரள மக்களுக்கு என்னுடைய வேண்டுகோள் இது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Vijaykhant Requests keralites to stop Racism: கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை, அம்மாநில அரசும், மத்திய அரசும் தடுத்து நிறுத்த வேண்டும்

0 comments
Vijaykhant Requests keralites
கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை, அம்மாநில அரசும், மத்திய அரசும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை கேரள சமூக விரோதிகள் அடித்து துன்புறுத்துகிறார்கள் என்றும், அதனால் அய்யப்ப பக்தர்கள் பாதிப்புக்கும், தவிப்புக்கும் உள்ளாகி உள்ளனர்.

அதோடு பஸ் பயணிகளும் தாக்கப்படுகிறார்கள் என்றும் அறிய வருகிறேன். இது மிகுந்த வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. இது தமிழ்நாடு, கேரளாவுக்கும் இடையே நிலவி வரும் உறவுக்கு நல்லதல்ல.

மக்களுடைய உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசின் கடமையாகும். பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்தாலும் கேரளாவைச் சேர்ந்த காவல்துறையினர் கண்டு கொள்ளாமல், அங்குள்ள சமூக விரோதிகளுக்கு அவர்கள் உடந்தையாகவும் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பதாகும். இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசோ மௌனம் காக்கிறது. பிரச்னை இந்த அளவுக்கு வளர மத்திய அரசுதான் காரணம். 2006 ஆம் ஆண்டே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்திய அரசு நிறைவேற்றி இருந்தால் இன்று இந்த கலவரம் ஏற்பட்டு இருக்காது.

இந்திய அரசும் காங்கிரஸ் கட்சியின் கையில் தான் உள்ளது. கேரளாவிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கின்றன. இருப்பினும் அப்பாவித் தமிழ் மக்கள் கேரளாவில் தாக்கப்படுவதை இந்திய, கேரள அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கேரளாவைச் சேர்ந்த சமூக விரோதிகள் மீதும், இப்பிரச்னைக்கு காரணமானவர்கள் மீதும் இந்திய அரசும், கேரள அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழக மக்கள் தாக்கப்படுவதை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பலவீனம் அணையில் இல்லை, கேரள அரசியல்வாதிகளிடம்தான் உள்ளதோ என்று சந்தேகம் எனக்கு வருகிறது," என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

Seeman Warns Kerala: கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது நீடித்தால், எதிர்விளைவுகள் ஏற்படும்: சீமான்

0 comments
Seeman Warns Kerala
கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது நீடித்தால், எதிர்விளைவுகள் ஏற்படும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழன் இல்லாத நாடில்லை என்பது மட்டு மல்ல. அவன் இழக்காத உரிமையும் இல்லை. பாலக்காடு, தேவிகுளம், திருவனந்தபுரம், இடுக்கி, பீர்மேடு, வெங்காலூரு, காவிரி என நீண்ட பட்டியலில் முக்கியமானது முல்லை பெரியாறு. தமிழனுக்கு சொந்தமான நிலத்தில், அவனுடைய பணத்தில் அவனது உழைப்பில் கட்டப்பட்ட அணை இன்று மலையாளிகளின் ஆதிக்கத்தில் சிக்கி தவிக்கிறது.

கேரளத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்தத் தீர்வும் கிட்டவில்லை என்று தான் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. உச்ச நீதிமன்றமும் 7 பேர் கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து அவர்களது அறிக்கையின் அடிப்படையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணிரைத் தேக்கலாம் என்று தீர்ப்பளித்து விட்டது.

ஆனால், கேரள அரசு அணை உடையப்போவதாக திட்டமிட்டு பீதியை ஏற்படுத்தி வருகிறது. தமிழர்கள் அங்கு தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்துதான் விளை பொருட்களும் மின்சாரமும் கேரளாவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழர்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால் எதிர்விளைவுகள் ஏற்படும். தமிழகத்தில் வாழும் 40 லட்சம் மலையாளிகள் பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதே சகிப்பு தன்மை தொடரும் என எதிர்பார்க்க முடியாது.

முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை நிலை நாட்ட வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நடை பயணம் மேற்கொள்ள உள்ளோம். 17-ம் தேதி பங்களாமேடுவில் தொடங்கும் நடை பயணம் சின்னமனூரில் முடிகிறது. 18-ம் தேதி சின்னமனூரில் தொடங்கும் நடை பயணம் கூடலூரில் முடிகிறது. 2 இடங்களிலும் நடைபெறுகிறது. 17-ம் தேதி நடைபயணத்தை பழ.நெடுமாறன் தொடங்கி வைக்கிறார்," என்று சீமான் கூறியுள்ளார்.

Thanks: Vikatan

Don't be size Zero!: ஆபத்தாகும் `சைஸ் ஜீரோ’ உடல்வாகு

0 comments
எல்லாப் பெண்களுக்குமே எப்போதும் ஸ்லிம் சைஸ் ஜீரோ ஆக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், சிலநேரங்களில் எக்குதப்பாக எடை கூடிவிடுவார்கள்.இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே கூடாது. அவர்களது உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும். இப்படி உடல் எடை குறைவாக இருக்கும் பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அதிர வைக்கிறார்கள் மருத்துவர்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்...

இன்றைய பெண்கள், `சைஸ் ஜீரோ' என்கிற குறைவான எடை அளவில் தங்களது உடலை வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அப்போதுதான், தாங்கள் `ஸ்லிம்' ஆக இருக்க முடியும் என்று நினைக்கிறார்கள். இதற்காக கடுமையான டயட்டில் இருக்கிறார்கள். நான் `டயட்'டில் இருக்கிறேன்... என்று சொல்வதைக்கூட இன்றைய பெண்கள் பேஷனாக கருதுகிறார்கள்.

பெரும்பாலும், இன்றைய தலைமுறை இளம்பெண்கள் பேஷன் ஷோக்களில் `கேட் வாக்' வரும் மாடல் அழகிகளைப் பார்த்துதான் `சைஸ் ஜீரோ' உடல் எடையைப் பெற முயற்சி செய்கிறார்கள்.

இப்படி ஸ்லிம் உடல்வாகுக்கு ஆசைப்பட்டு கண்டபடி `டயட்'டில் இருக்கப்போய் சில பெண்கள் எலும்பும் தோலுமாக மாறிப்போய் விடுகிறார்கள். இந்த திடீர் உடல் எடை குறைப்பு அவர்களை உடல் ரீதியான பல தொந்தரவுகளுக்கு ஆளாக்குவதுடன் அவர்களது அழகையும் பாழாக்கிவிடுகிறது.

இது ஒருபுறம் என்றால், திருமணத்திற்குப் பிறகு இப்படி எலும்பும் தோலுமாக காட்சி தரும் மெலிந்த பெண்கள் கருத்தரிப்பதிலும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. காரணம், மெலிந்த உடல் வாகுடன் கூடிய பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சரியாக சுரப்பதில்லை என்பதுதான். இதனால் அவர்கள் கருத்தரிப்பதும் சிரமமாகிவிடுகிறது.

அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் ரிச்சர்ட் ஷெர்பான் இதுபற்றி கூறும்போது, "நான் இதுவரையில் சுமார் 2,500 பேருக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சையை செய்துள்ளேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள். என்னுடைய அனுபவத்தில் `சைஸ் ஜீரோ' உடல்வாகு பெண்கள்தான் கருத்தரிப்பதில் நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அதேசமயம், குண்டாக இருப்பவர்கள், அதிலும் அளவுக்கு அதிகமான உடல் எடையில் இருப்பவர்களுக்கு கூட பெரும்பாலும் இந்தப் பிரச்சினை வருவதில்லை'' என்றார் அவர்.

நீங்களும் சைஸ் ஜீரோ உடல்வாகை பெற முயற்சிக்கும் பெண் என்றால், இப்போதே உஷாராகிவிடுங்கள்...!

வைராக்கியம் உள்ளவரா நீங்கள்?

0 comments
மனிதர்களுக்கு மிகவும் துன்பமானது எது என்று கேட்டால், பிறப்பும், இறப்பும் தான்.பல பிறவிகள் எடுப்பதால், பல முறை இந்தத் துன்பங்களை ஜீவன் அனுபவிக்கிறது; அதே போல், இறக்கும் போதும் துன்பம் தான். நோய்வாய் பட்டு படுத்து விடுகிறான். அப்போது அவனுக்கு, "நோயும், பாயும்'தான் துணை.

"பாயும்தான் துணை' என்பதன் பொருள் என்னவெனில், வயதான காலத்தில், பிழைக்க மாட்டான் என்ற நிலை வரும் போது, இவனை மெத்தையிலா படுக்க வைப்பர்? ஒரு பாயை விரித்து - அதுவும் கூட பழைய பாயாக இருக்கும் - அதில், படுக்க வைத்து விடுவர். அந்த பாய் தான் இவருக்குத் துணை.அந்த நேரம் கண் பஞ்சடைத்து விடும்; காது கேட்காது; உடலில் வலிமை இராது. கஞ்சி குடித்தால் கூட ஜீரணமாவது கஷ்டம். வைத்தியர் வந்து கையை பிடித்துப் பார்த்து, "அக்னி மந்தம்' என்பார். அதாவது, வயிற்றில் ஜட ராக்னியின் உஷ்ணம் குறைந்து விட்டது என்று பொருள்.

இப்படி அக்னி மந்தம் ஏற்பட்டு விட்டால், எதை சாப்பிட்டாலும், ஜீரணமாகாது.அந்த நேரம் தான் பல வித எண்ணங்கள் தோன்றும். "அடடா... வீட்டை யாருக்கு எழுதி வைப்பது, நிலம் யாருக்கு, நகை, பணத்தை யாருக்குக் கொடுப்பது...' என்றெல்லாம் எண்ணம் வரும்.கடைசியில் எதையும் சரிவர செய்யாமல், போய் விடுகிறான்.இந்த பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய்கள் எல்லாமே மனிதனின் பாவங்களின் பலன் தான்.

ஒரு வீடு கட்டப்படு கிறது. அதுதான் பிறப்பு. அந்த வீடு பிறகு பழுதடைந்து விடுகிறது; அதுதான் நோய். உடனே, பழுது பார்க்கப்படுகிறது; இதுதான் சிகிச்சை. அப்படியும் அது நாளடைவில் ஒவ்வொரு இடமாக இடிந்து விழுகிறது. இதுதான் அதன் மூப்பு. பிறகு, பழுது பார்த்தும் பயனில்லாமல் இடிந்து விழுந்து விடுகிறது; இதுதான் அதன் இறப்பு.

எந்தப் பொருளுக்கும், எந்த மனிதனுக்கும் இது போன்ற பிறப்பு, நோய்கள், மூப்பு, இறப்பு என்பவை உண்டு. ஆகவே, கடைசியில் இறப்பு என்பது நிச்சயமானது. அப்படி இறந்த பின், மீண்டும் பிறக்காமலிருந்தால் மேலும், மேலும் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிராது.

பிறவி ஏன் ஏற்படுகிறது... பாவ, புண்ணியங்களின் பலன்களை அனுபவிக்க வேண்டி தான் பிறவி ஏற்படுகிறது. சரி... முன் ஜென்ம பாவங்களின் பலன்களை அனுபவித்து விட்டால் மட்டும் போதுமா... இந்த ஜென்மாவில் எந்த பாவமும் செய்யாமலிருக்க வேண்டுமே. அது முடியுமா? முடியும்.

அகிம்சாவாதியாக இருந்து, தர்ம சாஸ்திரப்படி வாழ்க்கை நடத்தி, பகவானையே வழிபட்டு, பந்த பாசங்களை விட்டொழித்து மரணமடைந்தால், மறு பிறவி இருக்காது. எதை விட்டாலும், பந்த பாசங்களை விட முடியுமா? அது இருந்தால் மறு பிறவி தான். பந்த பாசங்களை விட வேண்டுமானால், அதற்கு வைராக்கியம் வேண்டும். அது எங்கே கிடைக்கும் என்று தேட வேண்டாம்; மனதிலேயே தான் இருக்கிறது!

Herbal Medicine: மூலிகை மருத்துவம்: தலையே சுமையானால் என்ன செய்வது?

0 comments

தலைமுடி நமக்கு எவ்வளவு அழகைத் தருகிறதோ அவ்வளவு அழுக்கையும் தருகிறது. கேசப்பராமரிப்பு மிகவும் முக்கியமாகும். கேசத்தின் கதகதப்பும் நெருக்கமும் கூடுதலான ரத்த ஓட்டமும் ரோமக்கால்களுக்கு பலத்தை தருகிறதோ இல்லையோ, பேன்களுக்கு தலையில் வசிக்க போதுமான இடத்தையும் வளத்தையும் தருகிறது. கேசத்தின் அருமை இளமையில் தெரியாது.

வயது அதிகரிக்கும்போது கேசத்தின் இழப்பு பெரும் கவலையாகிவிடும். முடியை இழப்பது என்பது தங்களின் அழகை அல்லது மதிப்பை குறைத்துக் கொள்வதற்கு சமமாக கருதப்படுவதால், முடி உதிர்தல் பெரும்பாலானவர்களுக்கு கவலையை ஏற்படுத்திவிடுகிறது. முடியை சுத்தமாக பராமரிக்காவிட்டால், அழகும் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. படுக்கையில் பேன் 10 பாய் தாண்டும் என குறிப்பிடப்படும். இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவி, பல்கி பெருகி, கேசத்தின் ஆரோக்கியத்தை கெடுப்பதுடன் பல்வேறு தொற்று நோய்களையும் ஏற்படுத்திவிடுகின்றன. பேன் தொல்லை உள்ளவர்கள் தங்கள் முடியை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் விரல் நகங்களையும் வெட்டிவிட வேண்டும்.

இல்லாவிட்டால் பேனின் ஒவ்வாமையால் ஏற்படும் அரிப்பினால் தலையில் தோன்றும ரத்தக்கசிவில் பேன்கள் முட்டையிட்டு, பல்கி பெருகுகின்றன ஆகவே அடிக்கடி சொறிவதை தடுக்க வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது சிகைக்காய் தூள், கஞ்சி, செம்பரத்தைப்பூ மற்றும் இலை, வெந்தயம், வேப்பிலை, மலைவேம்பு இலை ஆகியவற்றை அரைத்து தலையில் தேய்து குளித்துவர வேண்டும். இதனால் தலை சுத்தமாக இருப்பதுடன் ரோமக்கால்களும் வலுவடைகின்றன. ஷாம்பு, சோப்பு போன்றவற்றை உபயோகிப்பதால் தலையில் வறட்சி ஏற்பட்டு, சிறிய வெடிப்புகள் தோன்றி, அவற்றில் பேன்கள் எளிதில் வளர ஆரம்பிக்கின்றன. பேன்தொல்லை உள்ளவர்களுக்கு தலையில் ஏதோ குறுகுறுவென்று ஓடுவது போன்ற உணர்வு, திடீரென்ற அரிப்பு, தலையில் புல்லரித்தல் போன்ற உணர்வு ஆகியன ஏற்படும். தலையின் பின்புறம், காதின் பின்புறம், வகிடு உள்ள பகுதிகள் ஆகியவற்றில் அரிப்பும், திடீர் வியர்வையும் தோன்றும். பேன்களை நீக்க நெருக்கமான சீப்புகளால் தலை சீவும்பொழுது ரோமக்கால்கள் அவற்றில் சிக்கி, சிதைந்துவிடுகின்றன.

இதனால் முடி உதிரத் தொடங்குகின்றது. நரைமுடிகள் சீப்புகளில் சிக்கும்பொழுது அழுத்தி சீவி பிடுங்குவதால் அருகிலுள்ள முடிகளும் விரைவில் நரைக்கின்றன. இது மட்டுமின்றி, தலையில் நுண்கிருமிகள் வளருவதுடன் தலையை சொறியும்பொழுது பேனுடன் முட்டைகளும் நக இடுக்கின்வழியாக நீர் மற்றும் உணவுடன் கலந்து வயிற்றுக்குள் சென்ற�¯ உபாதைகளை ஏற்படுத்துகின்றன. பேன்தொல்லை உள்ளவர்களுக்கு காதின் கீழே, கழுத்தின் கீழே நெறிக்கட்டிகளும் உண்டாகின்றன. பெரும்பாலானோர் பேனின் கொடுமையால் மொட்டையடித்து, ரோமத்தை இழந்து வேதனைப்படுவதும் உண்டு. தலையில் தோன்றும் பேன்களை எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி நீக்கும் அற்புத மூலிகை பேன்கொட்டை என்ற காக்கைக்கொல்லி விதை.

அனமிர்டா காக்குலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மினிஸ்பெர்மேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பழங்களே காக்கைகொல்லி விதை என்றும், பேன்கொட்டை என்றம் அழைக்கப்படுகிறது. இதன் கொட்டையிலுள்ள பிக்ரோடாக்சின் என்ற நச்சுப்பொருள் பேன்களை கொல்வதுடன், பேன்களினால் தலையில் தோன்றும் புண்களையும் குணப்படுத்துகின்றன. 10 பேன்கொட்டை விதைகளை ஒன்றிரண்டாக இடித்து, 200 மிலி தேங்காய் எண்ணெயில் கலந்து லேசாக கொதிக்கவைத்து, பதத்தில் வடிகட்டி, 10 நாட்கள் கழித்து தலையில் தேய்த்துவர பேன்கள் கொஞ்சங், கொஞ்சமாக மடியும். மலைவேம்பு இலை, வேப்பிலை , வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் பேன்கொட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, வெந்நீர் விட்டு மைய அரைத்து, தலையில் பூசி 30 நிமிடங்கள் வைத்திருந்து , தலையை அலசிவர பேன்கள் செத்து வெளியேறும். இந்த விதைகளை உள்ளே சாப்பிட்டு விடக்கூடாது.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,

Meal Maker Cola: மீல் மேக்கர் கோலா

0 comments
மீல் மேக்கர் கோலா தேவையானவை:

மீல் மேக்கர் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 10
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
பட்டை, சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைக் கொத்துமல்லி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ரிபைண்ட் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

மீல் மேக்கர் கோலா செய்முறை:

2 கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அதில் மீல் மேக்கரைப் போட்டு ஊற வைக்கவும். அரை மணி நேரம் கழித்து தண்ணீரைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொட்டுக் கடலையை மிக்சியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கவும். வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.

வெங்காயம்- தேங்காய் வதக்கல் ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும். தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். அடுத்து தனியாக மீல் மேக்கரை நறுக்கி மிக்சியில் போட்டு அரைக்கவும்.

அரைத்த மீல் மேக்கர், அரைத்த தேங்காய் விழுது, சோம்புப்பொடி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பொட்டுக்கடலை மாவு சேர்த்து, கொத்தமல்லி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

மாவை சிறு சிறு கோலா உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கோலா உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு

பொரிக்கும்போது அதிக தீயில் பொரிக்க வேண்டாம். மேல்பாகம் சிவந்து விடும். ஆனால் உள்வரை வேகாது.

மீல்மேக்கர் கோலா, சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

கீதா தெய்வசிகாமணி

Tamil Herbal Medicines & Plants: Kandangathiri: கண்டங்கத்திரி:

0 comments
மனிதன் உட்பட உலகின் அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக வாழ இயற்கையால் படைக்கப்பட்டவை தான் செடிகள், கொடிகள், மரங்கள்.  இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பயன்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இவற்றில் மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவைதான் கற்ப மூலிகைகள்.

கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைப்பது.  இதில் மூலிகைகள் பல உள்ளன.  ஒவ்வொரு மூலிகைகளுக்கும் அதனதன் தன்மைப்படி தனித்தனி மருத்துவக் குணங்கள் உண்டு. இதில் கண்டங்கத்திரி ஒரு கற்ப மூலிகை. இதனுடைய மருத்துவப் பயன்கள் ஏராளம்.

கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார்ந்தது.  இது எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண்டவை.

இதன் இலை, பூ, காய் பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.  கார்ப்புச் சுவை கொண்ட இது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

காச சுவாசங் கதித்தஷய மந்தமனல்
வீசுசுரஞ் சன்னி விளைதோடம்-ஆசுறுங்கால்
இத்தரையு னிற்கா, எரிகாரஞ் சேர்க்கண்டங்
கத்திரியுண் டாமாகிற் காண்
-அகத்தியர் குணவாகடம்

பொருள் - கண்டங்கத்திரிக்கு காசம், சுவாசம், ஷயம், அக்கினி மந்தம், சன்னி, வாதம், தோஷ நோய்கள், தீச்சுரம், வாதநோய், ரத்தசுத்தி போன்றவற்றைத் தடுக்கும் குணமுண்டு.

கண்டங்கத்திரியின் மருத்துவப் பயன்கள் சுவாச நோய்களுக்கு

இன்றைய புறச்சூழ்நிலை மாறுபாட்டால் உண்டான அசுத்தக் காற்றை சுவாசிக்கும்போது அவை உடலில் ஒவ்வாமையை உண்டுபண்ணி நுரையீரலைப் பாதிக்கிறது.  மேலும் உடலுக்குத் தேவையான பிராண வாயுவை தடைசெய்கிறது.  இதனால் மூச்சுக் குழல் தொண்டைப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.  சளிபிடித்துக்கொள்ளுதல், மூக்கில் நீர் வடிதல், அதிகளவு தும்மல் மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது.

சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கண்டங்கத்திரிக்கு உண்டு.

கண்டங்கத்திரியின் தன்மை பற்றி அகத்தியர் கூறும் கருத்து இதோ..

மாறியதோர் மண்டைச்சூலை
கூறியதோர் தொண்டைப்புண்
தீராத நாசிபீடம்

தலையில் நீர் கோர்த்தல், சூலை நீர் எனப்படும் கப நீர், பித்த நீர் இவற்றை சீராக்கி செயல்படுத்தி மாற்றவும், தொண்டையில் நீர்க்கட்டு, தொண்டை அடைப்புகள், மூக்கில் நீர் வடிதல், சளி உண்டாதல் போன்றவற்றிற்கும், மூச்சுத் திணறல், இருமல், ஈழை, இழுப்பு இவற்றிற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது கண்டங்கத்திரி என அகத்தியர் பெருமான் கூறுகிறார்.

இன்றைய சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் முதல் பெரிய அளவில் வியாபார நோக்கோடு சித்த, ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் மருந்துசெய் நிறுவனங்கள் வரை சித்த, ஆயுர்வேத மருந்துகளில் கண்டங்கத்திரியை உபயோகிக்கின்றனர்.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் குணமுள்ளவை.  அந்த வகையில் ஒத்த குணமுடைய மூலிகைகளான கண்டங்கத்திரி, இண்டு, இசங்கு, தூதுவளை சம அளவு எடுத்து அதனுடன் ஆடாதோடை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவைத்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் மேற்கண்ட சுவாசம் சம்பந்தப்பட ்ட நோய்கள் எளிதில் குணமாகும்

மாற்றுமுறை

கண்டங்கத்திரி இலை, இண்டு இலை, இசங்கு இலை, தூதுவளை இலை, ஆடாதோடை இலை இவற்றை நிழலில் காயவைத்து சம அளவு எடுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரலாம்.

கண்டங்கத்திரி கஷாயம்

இண்டு, இசங்கு, கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, துளசி இலை, வால்மிளகு, சுக்கு, திப்பிலி  இவற்றில் தலா 5 கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து இரண்டாகப் பிரித்து காலையில் 1 பங்கை 2 கப் நீரில் கொதிக்க வைத்து 1 கப்பாக வற்ற காய்ச்சி வடிகட்டி அருந்தவேண்டும்.  அவ்வாறே மற்றொரு பங்கை மாலையில் செய்து அருந்தவேண்டும்.  இது தீராà �¤ ஆஸ்துமா, வலிப்பு நோய் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.

கண்டங்கத்திரி காது, மூக்கு, தொண்டை, வயிற்றுப்பகுதி மூதலிய இடங்களில் உள்ள தேவையற்ற சளியைப் போக்குகிறது.

கண்டங்கத்திரிக்கு ரத்தத்தில் சளியையும்,  ரத்தக் குழாய்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்புகளையும் நீக்கும் தன்மை உண்டு.  அதேபோல் மார்புச் சளியை நீக்கி குரல்வளையில் தேங்கிநிற்கும் சளியை நீக்கி சுவாசத்தை சீராக்கும்.

கண்டங்கத்திரி இலையின் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.  தலைவலி, சரும பாதிப்பு இவைகளுக்கு மேல்பூச்சாகப் பூசினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

கண்டங்கத்திரி எல்லா பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது.  இதனை முறைப்படி பயன்படுத்தி நாமும் நோயின்றி வாழ்வோம்.

நன்றி-ஹெல்த் சாய்ஸ்

Common Management Admission Test Online Application

0 comments
Online Application for Common Management Admission Test will be open from 09.12.2011 to 09.01.2012, students who wish to apply online application for Common Management Admission Test can do that in the official Common Management Admission Test website at http://www.aicte-cmat.in/

How to apply for Common Management Admission Test Online Application


Students those who are interested in Online application for Common Management Admission Test Online Application are requested to follow the below guidelines as mentioned.

1) Visit the website http://www.aicte-cmat.in
2) Enter as a new user
3) Do the self Registration, upon the completion of the Self Registration on http://www.aicte-cmat.in you can pay in two methods.
4) Common Management Admission Test Online Application form can be submitted with online or offline payments.
5) Credit/Debit.Net banking online methods or Generate the online challan and pay the feed in your nearest SBI Center. Go here to find the nearest SBI https://www.sbi.co.in/?action=branchlocator

For more details on Common Management Admission Test and Common Management Admission Test Question Pattern please visit our links below,

Common Management Admission Test details
Common Management Admission Test Question Pattern

Common Management Aptitude Test (CMAT) Questions Pattern

0 comments
Here is the Question Pattern for Common Management Aptitude Test (CMAT) exams, these Common Management Aptitude Test (CMAT) question patterns are subject to change as per the exam committee.

Questions Pattern for Common Management Aptitude Test (CMAT)



Section No.Section NameNo.of QuestionsMarks per Section
1Quantitative Techniques and Data Interpretation25100
2Logical reasoning25100
3Language comprehension25100
4General Awareness25100
Total10040

Important dates to remember for Common Management Aptitude Test (CMAT)


Registration from : 9.12.2011

Last Date for Online Registration : 9.01.2012

Print out of Hall ticket From 30.01.2012

Computer based test dates: 20.02.2012 to 28.02.2012

Test Timings: 9.30 am - 12.30 pm; 2.30 pm - 5.30 pm

Source for this is http://www.imsindia.com/study-in-india/graduate/cmat/nav/65/1/other/cmat.html

Declaration of result: 11.03.2012

Print out of Score Cards From 11.03.2012 to 11.04.2012

Do browse the complete Common Management Aptitude Test (CMAT) details, official links, how to prepare for Common Management Aptitude Test (CMAT) in our other threads.

CMAT: Common Management Admission Test from Febraury 2012, Details

1 comments
Common Management Admission Test (CMAT) from APTECH, Common Management Admission Test will be an online test to be open to the examiners twice daily for around nine days. Students can appear for the Common Management Admission Test exam on any day from February 20-28 of 2012.



Common Management Admission Test (CMAT) Details

Registration for Common Management Admission:

Online from 9th December 2011 to 9th January 2012 on website www.aicte-cmat.in

Selection up-to 3 cities giving order of preference.

The first come first served; actual allotment subject to availability of the slots in a particular city.

Common Management Admission Test (CMAT) Test Fee:


General/OBC: Rs.1200 + Bank charges as applicable

SC/ST/PD: Rs.600 + Bank charges as applicable

Note: Fee once remitted shall not be refunded under any circumstance.

Mode of Payment for Common Management Admission Test :

Net Banking / Credit / Debit Card : Online through www.aicte-cmat.in

Cash : Payment Through challan generated online and Cash deposited in any branch of State Bank of India.

Important Dates for the Common Management Admission Test for 2012:

Registration window opens on : 9.12.2011

Last Date for Online Registration : 9.01.2012

Print out of Hall ticket From 30.01.2012

Computer based test dates: 20.02.2012 to 28.02.2012

Test Timings: 9.30 am - 12.30 pm; 2.30 pm - 5.30 pm

Declaration of result: 11.03.2012

Print out of Score Cards From 11.03.2012 to 11.04.2012

More details about Common Management Admission Test can be found in the official link given above. and here is the link for the Question pattern of Common Management Admission Test Question Pattern from our other post.

Diseases on Rainy Season: மழைக்காலத்தில் பரவும் நோய்கள்

0 comments
மலேரியா கிருமி

பாரசைட் என்ற கிருமிகள், மலேரியா ஏற்படுத்தும். அவை

*பிளாஸ்மோடியம் (P Plasmodium)
*பால்ஸிபாரம் (P falciparum)
*வைவாக்ஸ் (P.vivax)
*ஓவலே(P. ovale)
*மலேரியே (P.malariae)
*நோலெசி (P.knowlesi)
பரவும் முறை: பெண் கொசுவால் பரவும் (Female Anophels mosquitoes)

அறிகுறிகள்: ரத்த சோகை, மலத்தில் ரத்தம், நடுக்கம், காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி வருவது போன்ற உணர்வு, வியர்த்தல், கோமா.

உறுதிப்படுத்தும் அறிகுறிகள்: மேற்சொன்னவை சுழற்சி முறையில் உருவாதல், திடீர் சளியும் தொடர்ந்து ஏற்படும் நடுக்கம், காய்ச்சல், வேர்த்தல் இரு நாட்களுக்கு ஒரு முறை, 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும்.

விளைவுகள்: ரத்த சோகை, மூளை தொற்றுநோய், ஈரல் பாதிப்பு, மூளைக்காய்ச்சல், நுரையீரலில் நீர்த்தேக்கத்தால் மூச்சிரைப்பு, சுவாசத் தடை, மண்ணீரலீல் சிதைவு ஏற்பட்டு ரத்தக் கசிவு ஏற்படும்.

தடுப்பு முறைகள்: உடல் முழுவதும் மூடும்படியான உடைகளை அணியவும். இந்நோய் பரவிய பகுதியில், நீங்கள் பயணிக்க நேரிட்டால், கொசு துரப்பான் களைப் பயன்படுத்தவும்.

டெங்கு காய்ச்சல்: கிருமி ஏடிஸ் எஜிப்டி (அஞுஞீஞுண் அஞுஞ்தூணீtடி)

பரவும் முறை : கொசுக்களால் மட்டும் பரவும்

அறிகுறிகள்: திடீரென்று அதிக காய்ச்சல் (104 - 105) / கடுமையான காய்ச்சல் நோய் தொற்றிய 4 முதல் 7 நாள் பிறகு தெரியும். 2 முதல் 5 நாளில், காய்ச்சல் கண்டவுடன் சிவப்புப் புள்ளிகள் உடம்பெல்லாம் தெரியும். தோலரிப்பு, மயக்கம், தலைவலி, மூட்டுவலி, தசைவலி, வாந்தி, டூதூட்ணீடணணிஞீஞு வீக்கம்.

விளைவுகள்: வலிப்பு, உடலில் நீர் வற்றிவிடுதல்

தடுப்பு முறைகள்:

*முழுமையாக உடை அணிதல்
* கொசு ஒழிப்பான்களையும், கொசு வலைகளைப் பயன்படுத்தி கொசுக்களை வரவிடாமல் தடுக்கவேண்டும்

மஞ்சள் காய்ச்சல்:

கிருமி ப்ளாவி வைரஸ் (ஊடூச்திடி திடிணூதண்)

பரவும் முறை : தொற்று நோய்க் கொசுக்களால் மட்டும் பரவும். இதில், மூன்று நிலைகள் உள்ளன.

ஆரம்ப நிலை : தலைவலி, உடல்தசை மட்டும் மூட்டுகளில் வலி, காய்ச்சல், முகத்தில் சிவப்புத்தன்மை, பசியின்மை, வாந்தி, மஞ்சள் காமாலை பொதுவானது. இந்த அறிகுறிகள் உடனே மறைந்து விடும் வாய்ப்பு உண்டு.

ஆற்றல் குறையான கால அளவு நிலை : 3 - 4 நாட்களில் காய்ச்சலும் மற்ற அறிகுறிகளும் மறைந்து போகும். இதனால், மக்கள் பலர் சுகமாகிவிடுவர். ஆனால் சிலர், அபாயமான மூன்றாம் நிலையை, 24 மணி நேரத்தில் மயக்க நிலையை அடைவர்.
அதி மயக்க நிலையின் கால நிலை பல உறுப்புகளின் செயலிழப்பு, இதயம், ஈரல், சிறுநீரகம், ரத்தக்கசிவு, மூளையில் ரத்தக்கசிவு, மூளை செயலிழத்தல் ஏற்படலாம்.

அறிகுறிகள்: தாறுமாறான இதய துடிப்பு (அணூணூடதூtடட்டிச்ணூ) ரத்தக் கசிவு, சிறுநீர் கழித்தல் குறைந்து விடும், மனப்பதற்றம், வாந்தி, உடல்தசை வலி, காய்ச்சல், தலைவலி, மஞ்சள் காமாலை, தசைவலி, கண்கள் சிவத்தல், மற்றும் கோமா நிலையை கூட அடையலாம்.

விளைவுகள்: கோமா, இறப்பு

தடுப்பு முறைகள்:

* மஞ்சள் காய்ச்சல் பரவியுள்ள பகுதியில் நீங்கள் பயணிக்க நேரிட்டால், கொசு துரப்பான்களைப் (Mணிண்ணுதடிtணி ணூஞுணீஞுடூடூச்ணtண்) பயன்படுத்தவும்.
*உடல் முழுவதும் மூடும்படியான உடைகளை அணியவும்.
* தடுப்பு ஊசி - தோலுக்கடியில் (குஇ) ஃடிதிஞு ச்ttஞுணதிச்tஞுஞீ திடிணூதண் (17 ஈ குtணூச்டிண)
சிகிச்சை முறை நோய்க்கேற்ற சிகிச்சையை, உரிய மருத்துவரை ஆலோசித்து, உடனே சிகிச்சை மேற்கொள்ளுதல் நலம் பயக்கும்.

குறுகிய கால தடுப்பு முறைகள்

* குளோரின் கலந்த நீர், காய்ச்சிக் குடித்தல்.
* ஹெப்படைடிஸ் அ வைரஸ் (ஏஅங) தடுப்பு ஊசி
* மலேரியா தடுப்பு முறை
* காய்ச்சலின் அறிகுறி கண்டவுடன், உங்கள் மருத்துவர். மூலம்கண்டறிந்து, உடன் சிகிச்சை மேற்கொள்ளுதல்.

முக்கிய குறிப்புகள்
* இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது.
* சாலைகளில், வீடுகளின் வெளிப் புறத் தில், எச்சில் துப்புவதைத் தவிர்க்கவும்.
* வீட்டிற்குள் வந்தவுடன், கை, கால்களைச் சுத்தமாகக் கழுவவும்.
* பழைய, மீதமான உணவை குளிர் பெட்டியில் வைத்து, மீண்டும் சூடு படுத்தி உண்ணக் கூடாது.
* வீட்டிற்கு அருகில் உள்ள, நீர்த் தேக்கங் களை அப்புறப்படுத்தவும்.

- டாக்டர். அர்த்தநாரி பிரபுராஜ்

Palak Pakkoda Recipe: `பாலக்’ பக்கோடா

0 comments
பாலக் பக்கோடா தேவையானவை:

நறுக்கிய பசலைக்கீரை - 1 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
கடலை மாவு - 3 கப்
அரிசி மாவு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 2
கறி மசாலாதூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

பாலக் பக்கோடா செய்முறை:

கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும். பசலைக் கீரையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கடலை மாவுடன் அரிசி மாவு, நறுக்கிய பசலைக்கீரை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், கடலைப் பருப்பு, கறி மசாலா தூள், எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து காய்ந்த எண்ணெயில் 2 டீஸ்பூன் விட்டு சிறிது தண்ணீர் தெளித்து பிசிறினாற்போல பக்கோடா மாவு கலவை தயாரித்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாக உதிர்த்தாற்போல போட்டு, வேகவிட்டு முறுகியதும் எடுக்கவும்.

இதை சாப்பாட்டிற்கும் தொட்டுக்கொள்ளலாம். மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். மொறுமொறுவென சாப்பிட சுவையாக இருக்கும்.

கீதா தெய்வசிகாமணி

Dev Anand, Bollywood Veteran Dev Anand Dies

0 comments
Dev Anand Dies
Dev Anand, Died today of cardiac arrest, Dev Anand aged 88 has died today at london, Dev Anand famous for his romantic movies is a veteran actor from Bollywood. Dev Anand is an winner of padmabushan and dadasagep palge awards.

Dev Anand became famous with his films dere gar samney and manzil, Dev Anand encountered romantic relationship with suraiya in the late 40's anf Dev Anand came to the silver screen with ziddi.

sexiest man alive 2011, Bradley Cooper named sexiest man alive 2011 by people magazine

0 comments
sexiest man alive 2011 finally awarded to Bradley Cooper, awarded with the sexiest man alive 2011 bradley said his best friend goslin is eligible for sexiest man alive 2011 award. People Magazine has awarded sexiest man alive 2011 to bradle cooper for the year 2011.

Bradley awarded with sexiest man alive 2011 has acted in the film hangover, and joining the sexiest man alive list with brad pitt, tom cruise and othes.

sexiest man alive 2011
Here is the Direct link for the sexiest man alive 2011 edition from people magazine.

Tamilnadu Gov't will not participate in the speak: முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை

0 comments
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெறவிருந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறையின் செயலாளர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்தியில்,'
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் டெல்லியில் 5-ம் தேதி நடத்தப்பட உள்ள அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கனவே எடுத்துள்ள முடிவின்படி தமிழக அரசு கலந்துகொள்ளாது என்று தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார்,' என்று கூறப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டதாகக் கூறி, அங்கு புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயங்கள் மூலம் வந்தத் தீர்ப்புகளை கேரள அரசு செயல்படுத்துவதுமில்லை.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தற்போது வலுத்துள்ளது. அணைக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது.

இதனிடையே, அணையின் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என்று கடிதம் மூலம் கேரள முதல்வர் உம்மன்சாண்டி வைத்த கோரிக்கையை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டார்.

அணை அதிக பலத்துடன் இருப்பதாகவும், கேரளா அரசு கூறும் அளவுக்கு நில அதிர்வுகள் இருந்ததில்லை என்றும் ஜெயலலிதா தனது பதில் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தப் பிரச்னையில் இரு மாநிலங்களுக்கு இடையிலான மோதல் வலுத்ததை அடுத்து, பிரதமரிடம் இரு தரப்பில் இருந்தும் முறையிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் தலையிட்ட பிரதமர் மன்மோகன் சிங், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவையும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தபடி, இரு மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையை டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், இந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்து கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Think Before Invest: முதலீட்டுக்கு முன் யோசிக்க வேண்டியவை

0 comments
எதிர்காலத்தேவைக்காக முதலீடு செய்ய வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. பல்வேறு தரப்புகளில் முதலீடு செய்யும் வசதி இருந்தாலும் அந்த முதலீட்டுக்கு முன்பு நாம் செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள் சில உள்ளன. அவை பற்றிய விவரங்களை இந்த வாரம் காண்போம்.

கடன்களை திரும்ப செலுத்துங்கள்

உங்களுக்கு கடன் இருந்தால் முதலில் கடனை அடைத்து விட்டு முதலீட்டை தொடங்குங்கள். மேலும் அந்த கடனுக்கு நீங்கள் எவ்வளவு வட்டி செலுத்துகிறீர்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வட்டி விகிதம் அதிகம் இருந்தால் முதலில் அதை தீர்க்க வழிகாணுங்கள்.

அடுத்து உங்களிடம் ஏதேனும் சேமிப்பு இருக்கிறதா? சேமிக்க விரும்புகிறீர்களா? முதலில் யோசியுங்கள்! பின் சேமியுங்கள். என்னென்ன கடன்கள் இருக்கிறது; அவற்றை நீங்கள் எவ்வாறு கையாள போகிறீர்கள்? கடன்களை முதலில் திரும்ப செலுத்துங்கள். வட்டி சுமை குறையும். வட்டி வருமானம் தரும் மகிழ்ச்சியை விட வட்டி செலவு தரும் சுமை கடினமானது.

கிரிடிட் கார்டு கடனில் சிக்கிக்கொள்ளாதீர்கள்

இருக்கிற கடன்களை திரும்ப செலுத்துவதை விட புதிய கடன்களுக்குள், குறிப்பாக கிரிடிட் கார்டு கடன்களுக்குள், சிக்கிக்கொள்ளாமலிருப்பது புத்திசாலித்தனம். தேவையில்லாதவற்றைக்கூட வாங்கிக்குவிக்கும் போதையை தருவது இந்த கிரிடிட் கார்டு. அதிக விலையுள்ள பொருட்களை கிரிடிட் கார்டு மூலம் வாங்காமலிருப்பது நல்லது. கிரிட�® �ட் கார்டு மூலம் எந்த ஒருபொருளும் வாங்கும் முன்பு அந்த பொருள் உங்களுக்கு மிகவும் அவசியம் தானா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். தேவை இல்லாத பொருட்களை கிரிடிட் கார்டு மூலம் வாங்கிவிட்டு பின்னர் கடனில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

ஒருவேளை கிரிடிட் கார்டில் பொருள் வாங்குவதாக இருந்தால் அதற்குரிய தொகையை மாதம் தோறும் தவறாமல் செலுத்துங்கள். இதற்காக எளிய மாத தவணை முறைகளை பல கிரிடிட் கார்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. அதற்கு பதிலாக கிரிடிட் கார்டில் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்த பட்ச தொகையை மட்டும் செலுத்தாதீர்கள். ஏனென்றால் கிரிடிட் கார்டு வட்டி பல குட்டிகள் போட்டு கழுத்தை இறுக்கும் அளவுக்கு வளர்ந்து விடும், ஜாக்கிரதை.

பாதுகாப்பு

ஒரு முதலீட்டை செய்கிறவர்கள் அது ஈட்டித்தரும் வருவாய் குறித்து சிந்திக்கிற அளவுக்கு பாதுகாப்பு குறித்து யோசிப்பதில்லை. நமது முதலீடு பாதுகாப்பாக இருக்குமா என்பது பற்றி சிந்தித்துப்பாருங்கள்; அது மிக முக்கியம். ஆபத்துக்களை எதிர் கொள்ளும் திறன் ஆளுக்கு ஆள் வேறுபடும். அதே போல் ஒவ்வொரு சேமிப்பு திட்டத்துக்குà ��் ஒவ்வொரு விதமான பாதுகாப்பு அம்சம் இருக்கும். உதாரணமாக, பங்கு முதலீட்டைக்காட்டிலும், வங்கி நிரந்தர வைப்பு நிதி அதிக பாதுகாப்பானது. எந்த அளவிலான இழப்பை உங்களால் சகித்துக்கொள்ள முடியும் என்பதைப்பொறுத்தே எந்த ஒரு முதலீட்டு திட்டத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.

வரிச்சலுகை தரும் முதலீட்டுத்திட்டங்கள்

வரிச்சலுகை பெற வேண்டிய நிலையிலிருக்கும் ஒருவர் அதற்கேற்ற திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நல்லது. அதை விடுத்து வரிச்சலுகையில்லாத திட்டங்களில் சேமிக்க தொடங்கினால், செலுத்த வேண்டிய வருமான வரி அதிகரித்து கிடைக்கும் வருவாயை வரியாக செலுத்த வேண்டியது வரும்.

அன்றாட பங்கு வர்த்தகத்தை தவிர்க்கப்பாருங்கள்

பங்கு சந்தை வர்த்தகத்தில் தேர்ந்த நிபுணராக இல்லாத பட்சத்தில் அன்றாட பங்கு வர்த்தகத்தில் ஈடுபடாதீர்கள். உங்கள் முதலீடு ஆபத்தில் முடியலாம். எனவே, உங்களது ஆபத்தை எதிர் கொள்ளும் திறனுக்கு பொருத்தமான வகையிலான அளவுக்கே பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுங்கள்.

மொத்தத்தில், முதலீடு என்பது சேமிப்பை ஏதோ திட்டத்தில் முதலீடு செய்வதென்பதல்ல. மேற்கண்ட் பலவேறு அம்சங்களையும் சீர் தூக்கிப்பார்த்த பின்னரே செய்ய வேண்டியது.

Chicken Garlic Manjoorian: கோழிக்கறி பூண்டு மஞ்சூரியன்

0 comments
கோழிக்கறி - 1/2 கிலோ
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 4 டீஸ்பூன்
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - சிறிதளவு
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
முட்டை - 1
சோயாசாஸ் - 2 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு எண்ணெய் - தேவைக்கேற்ப

கோழிக்கறி பூண்டு மஞ்சூரியன் செய்முறை

மைதா, சோளமாவு, அடித்த முட்டை, மிளகாய்த் தூள், மிளகுத்தூள், அஜினோமோட்டோ, சோயா சாஸ், சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, போதுமான உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் திக்காக கரைக்கவும்.

கோழிக்கறி துண்டுகளை இந்த மாவுக் கலவையில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து தனியே வைக்கவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி இவை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

 பொரித்த சிக்கனையும் இதில் சேர்த்துக் கிளறி, குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து கோழிக்கறி டிரை ஆனதும் கோழிக்கறி பூண்டு மஞ்சூரியன் இறக்கி விடவும்.

`செப்' தாமு

Renault Small Pulse 2012: ரெனோ பல்ஸ்

0 comments
ரெனோ கார் நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் சின்ன கார் இதுதான். 'பல்ஸ்’ எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த காரில், நிஸான் மைக்ராவில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த காரின் விலை, 5 லட்சத்தில் இருந்தும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம்!

Read More about Honda New city for the year 2012. watch the renault pulse video below.

Honda City 2011 Price Will Drop: விலை குறைந்த புதிய ஹோண்டா சிட்டி கார்

0 comments

ஹோண்டா விலை குறைந்த புதிய சிட்டி காரை அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹோண்டா சிட்டியின் விலையில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டது. இப்போது சிட்டி கார் தயாரிப்புக்கான உதிரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால், மேலும் விலையைக் குறைக்க இருக்கிறது ஹோண்டா. விலை குறைவதோடு, காரில் புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. புது ஹோண்டா சிட்டி, டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கிறது!

New Swift will Bring more Sales: புதிய ஸ்விப்ட்டுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு

0 comments
புதிய ஸ்விப்ட் காரை வைத்து மிகப்பெரிய மனக்கோட்டை கட்டியுள்ளது மாருதி. கடந்த சில மாதங்களாக விற்பனை படுத்துவிட்டபோதிலும், புக்கிங்கில் ஸ்விப்ட் இமாலய எண்ணிக்கையை தொட்டுள்ளதால், அதிக எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு ஸ்விப்ட் விற்பனையை கவனிக்க துவங்கியுள்ளது மாருதி.

மேலும், ஸ்விப்ட் காருக்கு இந்தியாவிலேயே தமிழகம் மிக முக்கியமான மார்க்கெட்டாக இருக்கிறது. மொத்தத்தில் மாதத்திற்கு 12,000 ஸ்விப்ட் கார்கள் விற்பனையாகி வந்தன. இதில், 1,000 தமிழகத்தில் விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பழைய ஸ்விப்ட்டைவிட புதிய ஸ்விப்ட்டுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், தமிழகத்தில் புதிய ஸ்விப்ட் வரவால் விற்பனை கணிசமாக உயரும் என மாருதி நிறுவனம் கருதுகிறது.

கடந்த 18ந் தேதி புதிய ஸ்விப்ட் கார் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. விழாவில் கலந்து கொண்டு காரை அறிமுகப்படு்ததிய மாருதி தென் மண்டல பொது மேலாளர் பங்கஜ் பிரபாரகர் கூறியதாவது:

"தமிழக கார் மார்க்கெட்டில் ஸ்விப்ட் முக்கிய இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. மேலும், அதிக மைலேஜ், புது்ப்பொலிவுடன் வந்துள்ள புதிய ஸ்விப்ட் வாடிக்கையாளர் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும். மேலும், புதிய ஸ்விப்ட் வரவால் மொத்த கார் விற்பனை 40 சதவீதம் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்விப்ட் கார் சென்னையில் ரூ.4.36 லட்சம் முதல் ரூ.5.26 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என்று மாருதி தெரிவித்துள்ளது.

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf