பாகிஸ்தானை திரும்பித் தாக்குதல் என்னும் மன எண்ணம்:An mind thought named attack against

0 comments

இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் உடல்கள் அழுத்தமான காற்றில் தூக்கி வீசப்பட்டதைப் போல நாலாபுறங்களிலும் சிதறின. ரசாயனமும் இரும்புத் துண்டுகளும், கண்ணாடித் தூளும் அனைவருடைய உடல்களிலும் பாய்ந்து, ஊடுருவி, குத்திக்கிழித்து சதைகளைத் துளைத்து, ரத்த நாளங்களை அறுத்து, எலும்புகளை நொறுக்கி கோரதாண்டவம் ஆடிவிட்டன. 

அது ஒரு கோடைக்காலம். இளங்காலைப் பொழுது. ஆப்கானிஸ்தானத்தின் தலைநகரம் காபூலில் இந்தியத் தூதரகம் இருக்கும் கட்டிடத்துக்குப் பக்கத்தில், பழைய டொயோட்டா கார் ஒன்று வந்து நிற்கிறது.

பாகிஸ்தானை திரும்பித் தாக்குதல் என்னும் மன எண்ணம்
பாகிஸ்தானை திரும்பித் தாக்குதல் என்னும் மன எண்ணம்
அதிலிருந்து யாரோ இறங்கப்போகிறார்கள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், திடீரென மின்னல் வெட்டியதைப் போலப் பளிச்சென்று ஒரு ஒளியும் டமாரென்று ஓசையும் ஒரே சமயத்தில் வெளிப்பட்டது. அதையடுத்து 58 பேர் உயிரிழந்தனர், 141 பேர் காயம் அடைந்தனர்.


எரிச்சல், வலி, வேதனையுடன் நினைவிழந்தவர்கள் ஒருபக்கம், நிலைகுலைந்தவர்கள் மறுபக்கம் என்று அந்த இடமே குருக்ஷேத்திரம்போலத் தலையற்ற உடல்கள், பிய்த்து எறியப்பட்ட அங்கங்கள், ரத்தச் சேறு, சதைக்குப்பை என்று பயங்கரவாதத்தின் கோரமுகத்தைத் தோலுரித்துக் காட்டியது.

இந்தப் படுபாதகச் செயல்களைச் செய்தவர்களை, தாக்குதல் நடந்த சில விநாடிகளுக்கெல்லாம் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ-யின் அதிகாரிகள் தொலைபேசிகளில் அழைத்துப் பாராட்டி, குலாவியதை மேற்கத்திய நாடுகளின் உளவுப்பிரிவு அதிகாரிகள் ஒட்டுக்கேட்டுப் பதிவுசெய்தனர்.

இந்த நாசவேலைகுறித்த தகவல் டெல்லியை எட்டியதும், அப்போது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவிவகித்த எம்.கே. நாராயணன் கோபத்தில் கொதித்தார். “சண்டை வேண்டாம், பேசியே தீர்த்துக்கொள்ளலாம் என்ற பேச்செல்லாம் இனி எடுபடாது, அவர்களுக்குப் புரிகிற விதத்தில் இதற்குப் பதிலடி கொடுத்தே தீர வேண்டும்” என்று முழங்கினார்.

இந்தியத் தூதரகத்துக்குப் பெருஞ்சேதம் விளைவித்தவர் களையும் இதே முறையிலேயே தண்டித்துவிட வேண்டும் என்று ‘ரா’ (ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் விங்) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆப்கானிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு இயக்குநரகத் தலைமை அதிகாரி அம்ருல்லா சாலேவுடன் இது தொடர்பாகப் பேசியபோது, அவரும் உதவுவதாக ஒப்புக்கொண்டார்.

பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான ஜிஹாதி குழுக்களைக் கொண்டு லஷ்கர்-இ-தொய்பா தலைவன் ஹஃபீஸ் முகம்மது சய்யீதின் தலைக்குக்கூட குறி வைக்கப்பட்டது. இவ்வளவு விரைவாக இந்திய உளவுப்பிரிவுத் தலைவர் போட்ட திட்டம் நடக்கவில்லை.

நாராயணன் விரும்பியபடிச் செயல்பட இந்தியாவின் ‘அரசியல் தலைமை’ அனுமதிக்கவில்லை. “குண்டுக்குக் குண்டு என்ற ரீதியில் நாம் பதிலடி கொடுத்தால் வன்முறைதான் அதிகமாகும். எனவே, நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறிவிட்டார்.

2010-ன் தொடக்கத்தில் நாராயணனின் பதவிக்கு வெளியுறவுத் துறை அதிகாரி சிவசங்கர் மேனன் நியமிக்கப் பட்டார். கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்தில் ‘சமாதானப் புறா’க்கள் அமர்த்தப்பட்டன.

மோடியின் வழிமுறையே வேறு

“பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட, பயங்கரவாதிகளுக்குப் புரிகிற மொழியில் பேச வேண்டும்” என்று பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடி கடந்த வாரம் பேசியிருக்கிறார்.

அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு இந்த விவகாரத்துக்கு முடிவுகட்டத் துணிச்சலான முடிவுகளை எடுத்தாக வேண்டும். கராச்சியில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்படும் தாவூத் இப்ராஹிமைப் பிடிக்க முயற்சிக்காமல் இன்னமும் தயங்கிக்கொண்டிருப்பது ஏன் என்று மோடி கேட்டது அர்த்தம் பொதிந்தது.

பயங்கரவாதத்தை ஒடுக்கு வதில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேற்று மையை அவர் பட்டவர்த்தனமாகத் தோலுரித்துக் காட்டினார். பயங்கரவாதிகளைப் பிடிக்க அமெரிக்காவுடன் இந்தியா கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறிய உள்துறை அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டேவை அவர் கடுமையாகச் சாடினார்.

“பயங்கரவாதிகளை என்ன செய்யப்போகிறோம் என்று எந்த நாடாவது முன்கூட்டியே தெரிவிக்குமா?” என்று கேட்டார்.

“சர்வதேசப் பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்கிறார் என்று திட்டவட்ட மாகத் தெரிந்த பிறகு, பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கேட்டுக்கொண்டா அமெரிக்கா அந்த நாட்டுக்குள் நுழைந்து அவரைச் சுட்டுக்கொன்றது?

பின் லேடனைக் கொல் வதற்கு முன்னால் அமெரிக்கா எல்லாப் பத்திரிகை நிறுவனங் களுக்கும் செய்திக்குறிப்பு அனுப்பியா தமுக்கடித்தது? பத்திரிகைகளுக்குச் சொல்லிவிட்டா பயங்கரவாதிகள்மீது நடவடிக்கை எடுப்பார்கள்?” என்று மோடி அடுக்கடுக்காகக் கேட்டிருக்கிறார்.

மக்களவைப் பொதுத்தேர்தலில் வாக்காளர்களைக் கவர்வதற்காகத்தான் மோடி அப்படிப் பேசினார் என்று கூறிவிட முடியாது. மோடிக்கு ஆலோசகர்களாக இருப்பவர்கள் சொல் லித்தான் அவர் அப்படிப் பேசினார் என்றாலும்கூட, அடுத்து ஆட்சிக்கு வருகிறவர்கள் இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்களாக இருப்பது அவசியம்.

பயங்கரவாதிகள் விஷயத்தில் இந்தியாவின் மொழி, இனியும் ‘மென்மொழியாக’ இருக்காமல், ‘வன்மொழியாக’ மாற வேண்டும் என்றே பாது காப்புத் துறை வட்டாரங்களும் உளவு அமைப்புகளும் விரும்புகின்றன.

அமெரிக்க ஆதரவு?

1999 கார்கில் போருக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிராக யார் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடுத்தாலும், அமெரிக்கா நமக்குச் சாதகமாகவே இருக்கும் என்ற அனுமானத்திலேயே பாதுகாப்புகுறித்த நிலைப்பாட்டை அரசு வகுக்கிறது. இந்த நம்பிக்கை சரியானதே என்று நிரூபிக்கும் வகையில் சில புள்ளிவிவரங்களும் இருக்கின்றன.

2002 முதல் 2013 வரையிலான காலத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வன்செயல்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்திருக்கிறது. மும்பை மீது நடந்த பயங்கரவாதிகளின் தாக்கு தலுக்குப் பின்னணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-தான் இருந்தது என்பது சர்வதேசச் சமூகத்துக்கே சந்தேகமறத் தெரிந்து விட்டதால், ஜிகாதிகளை இந்தியாவுக்கு எதிராக ஏவிவிடுவதை அது குறைத்துக்கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலைமை மாறிவிட்டது. இந்தியா மீது தாக்குதல்கள் மீண்டும் தொடங்கிவிட்டன. ஜிகாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளும் தோற்றுவருகின்றன.

ஜிகாதிகளில் ஒரு பிரிவினரிடம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இருந்த செல்வாக்கு சரிந்துவிட்டது. ஜிகாதிகளின் எண்ணிக்கை பெருகிவருவதால், பாகிஸ்தானின் அரசியல் கட்சிகள் அவர்களைத் திருப்திப்படுத்த நினைக்கின்றன.

பாகிஸ்தான் அரசு ஆதரிக்கும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளில் உள்ள பஞ்சாபிய முஸ்லிம்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க தலிபான்கள் முயற்சி செய்துவருகின்றனர்.

“பாகிஸ்தானில் ஷாரியா அமைப்பு முறையை ஏற்படுத்த நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நாளை காஷ்மீரத்துக்கு விரிவுபடுத்துவோம். பிறகு, இந்தியாவுக்கும் கொண்டுசெல்வோம்” என்று தேரிக்-இ-தலிபான் தலைவர் வாலி-உர்-ரெஹ்மான் எச்சரித்திருக்கிறார்.

இனி என்ன நடக்கும்? திரும்பித் தாக்குதல் என்னும் மன எண்ணம்:An mind thought named attack against

இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதியில் இனி என்ன நடக்கும் என்று ஊகிக்க பெரிய புத்திசாலியாகத்தான் இருந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அணுகுண்டைத் தயாரித் துக் கையில் வைத்துள்ளது பாகிஸ்தான் அரசு;

அந்த அரசின் செல்வாக்கு சரிந்துவருகிறது. போட்டிபோடும் மதத் தீவிரவாதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் அரசு இருக்கிறது.

“(இந்தியாவுக்கு எதிராக) தண்ணீர் எப்போதும் உலையில் சரியான சூட்டில் கொதித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்று பாகிஸ்தானின் ராணுவ ஆட்சி யாளர் ஜெனரல் முகம்மது ஜியா-உல்-ஹக் தன்னுடைய உளவுத் துறை தலைமை அதிகாரி ஜெனரல் அக்தர் மாலிக் குக்கு 1979 டிசம்பரில் கட்டளையிட்டார் இப்போது ‘அந்தத் தண்ணீர்’ அதிகபட்சக் கொதிநிலையை எட்டிக் கொதித்துக்கொண்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானும் இந்தியாவுக்குள்ள அதே பிரச்சினைகளைத்தான் சந்தித்துவருகிறது. எனவே, அதன் தேசியப் பாதுகாப்பு இயக்குநரகம் தனக்குச் சரியான வழி எது என்று தேர்ந்தெடுத்துவிட்டது.

பாகிஸ்தானின் தலிபான் தளபதி லத்தீஃப் மெசூதை, ஆப்கானிஸ்தான் உளவுப்படைப் பிரிவின் காவலிலிருந்து அமெரிக்க ராணுவம் எடுத்துக்கொள்ள அனுமதித்துவிட்டது.

ஆப்கானிஸ்தானத்து தலிபான் தலைவர் சிராஜுதீன் ஹக்கானிக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆதரவு தெரிவித்துவருவதால், அதற்குப் பதிலடி யாகத்தான் லத்தீஃப் மெசூதை அமெரிக்க ராணுவத்திடம் பிடித்துக் கொடுத்தது ஆப்கானிஸ்தான்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தங்கள் நாட்டில் நடத்தும் தாக்குதல்களுக்கெல்லாம் அவ்வப்போது பதிலடி கொடுத்துவிடுவதாக தேசியப் பாது காப்பு இயக்குநரக அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பேசும்போது தெரிவித்தனர்.

ஒரே கேள்வி

இப்போதைய எளிய கேள்வி இதுதான்: பாகிஸ்தான் ஜிகாதிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கெல்லாம் இந்தி யாவும் இனி இதே போலப் பதிலடி தருமா?

1980-களின் தொடக்கத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இயக்குநரகம் ஆயுதங் களையும் தளவாடங்களையும் அளித்தது. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உடனே பதிலடி தருமாறு உத்தர விட்டார்.

இந்த வேலைக்காக ‘டீம்-எக்ஸ்’, ‘டீம்-ஜே’ என்ற இரண்டு குழுக்களை ‘ரா’ ஏற்படுத்தியது. முதல் குழு பாகிஸ்தானைக் குறிவைத்தும், இரண்டாவது காலிஸ் தானிகளைக் குறிவைத்தும் செயல்பட்டன.

இந்திய நகரங் களைக் குறிவைத்து காலிஸ்தானிகள் நடத்திய ஒவ்வொரு தாக்குதலுக்கும் லாகூரிலும் கராச்சியிலும் பதிலடி தரப்பட்டது.

 “இப்படிப் பதிலடி தர நாம் நிறைய விலைகொடுக்க வேண்டியிருந்தது” என்று ‘ரா’ அமைப்பின் முன்னாள் அதிகாரி பி. ராமன் 2002-ல் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி உளவு அமைப்புகளின் வேலைகளுக்கு எதிர்வேலை பார்க்கும் வழிமுறையில் இந்தியா மிகத் தாமதமாகத்தான் இறங்கியது.

1947-ல் இந்தியாவை விட்டு வெளியேறிய பிரிட்டன், எதிர் உளவு வேலையில் புதிய அரசு ஈடுபடாதவாறு தடுக்க, முக்கியமான ஆவணங்களையெல்லாம் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டது.

எந்தவிதத் தடயமும் இல்லாமல் அழித்துவிட்டது. இந்திய அரசு உதித்தபோது, அதன் உளவுப்பிரிவுக்குக் கிடைத்ததெல்லாம் காலி மர பீரோக்களும், வெற்று ரேக்குகளும்தான்!

உளவுப்பிரிவில் பிரிட்டிஷ்-இந்திய அதிகாரியாகப் பணி யாற்றிய குர்பான் அலி கான், பாகிஸ்தானில் உளவுப்பிரிவு அதிகாரியாகப் பணிசெய்யப் போனபோது, பிரிட்டிஷ் அதிகாரிகள் அழிக்கத் தவறிய மிச்சமிருந்த ரகசிய ஆவணங் களையும் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டார்.

“காலி பீரோக்களையும் வெற்று ரேக்குகளையும் வைத்துக்கொண்டு இந்திய உளவுத் துறை செயல்படத் தொடங்கியது ஒரு வகையில் சோகமாகவும் ஒரு வகையில் நகைச்சுவையாகவும் இருந்தது” என்று உளவுப்பிரிவுத் தலைவராக இருந்த லெப்டினென்ட் ஜெனரல் எல்.பி. சிங் பதிவுசெய்திருக்கிறார்.

டெல்லியில் இருந்த ராணுவ உளவுப்பிரிவு இயக்குநரகத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைக் காட்டும் ஒரு வரைபடம்கூட மிச்சம் இல்லாமல் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. 1947-48-ல் பாகிஸ்தான் படைகள் ஊடுருவுவதை அவர்களுடைய வானொலித் தகவல்களை இடைமறித்துக் கேட்டபோது உறுதிசெய்துகொள்ளவும், இந்தியத் துருப்புகளை எங்கிருந்து எங்கே அனுப்ப வேண்டும் என்று தீர்மானிக்கவும் கைவசம் வரைபடம்கூட இல்லாமல் திண்டாட நேர்ந்தது!

பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது நாசவேலைகளை ரகசியமாகச் செய்து முடிப்பதே அதன் போர்த் தந்திரமாக இருந்துவருகிறது. உளவுத் துறை மூலம் சேதத்தை ஏற்படுத்துவதை அது பலமான ஆயுதமாகவே இன்னமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஆயுதங்களிலும் ஆள்பலத்திலும் தன்னைவிடப் பெரிதான இந்திய ராணுவத்தைக் களத்தில் எதிர்கொண்டு வெற்றிபெற முடியாது என்பதால், அவ்வப்போது திடீர்த் தாக்குதல்களை நடத்தி, கடும்சேதத்தை விளைவிப்பதையே சிறந்த தற்காப்பு உத்தியாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. இந்தத் தாக்கு தல்களை ‘வழக்கமற்ற போர்’ என்று பிரதமர் நேரு வர்ணித்தார்.

சீனாவுடன் மோதல் ஏற்பட்ட 1962-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்தியாவும் ‘இப்படி எதிர்த் தாக்குதல்’ நடத்தும் உத்தியில் திறனை வளர்த்துக்கொண்டது. அமெரிக்கா அதற்குப் பயிற்சி தந்தது. சீனத்தின் உள்ளே வெகுதூரம் ஊடுருவிச் சென்று உளவு பார்க்க ‘ரா’ அப்போதுதான் ஏற்படுத்தப்பட்டது.

எஸ்டாப்ளிஷ்மெண்ட்-22 - திரும்பித் தாக்குதல் என்னும் மன எண்ணம்:An mind thought named attack against

1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த உத்தியை இந்தியா கையாண்டது. மேஜர் ஜெனரல் சுர்ஜீத் சிங் ஊபன் தலை மையில் ஏற்படுத்தப்பட்ட ‘எஸ்டாப்ளிஷ்மெண்ட்-22′ என்று சங்கேதப் பெயரிடப்பட்ட படைப்பிரிவு, வங்கதேசம் என்று இப்போது அழைக்கப்படும் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் வெற்றிகரமாகச் செயல்பட்டது.

இந்திய யூனியனில் சிக்கிம் சேர அப்பிரிவு காரணமாக இருந்தது. இலங்கையைச் சேர்ந்த சில தமிழ் குழுக்களுக்குப் பயிற்சி அளித்தது. மியான்மரில் சீன ஆதரவு அரசுக்கு எதிராகப் போரிட்ட சில ஆயுதக் குழுக்களுக்கும் பயிற்சியளித்தது.

குஜ்ரால், ராவ் காலத்தில் திரும்பித் தாக்குதல் என்னும் மன எண்ணம்:An mind thought named attack against

‘ரா’ அமைப்பு இதுபோலப் பதில் தாக்குதல் நடவடிக் கைகளில் இனி ஈடுபடக் கூடாது என்று கூறி பிரதமர் ஐ.கே. குஜ்ரால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, “நாட்டின் கிழக்குப் பகுதியில் இனி ‘ரா’ செயல்பட வேண்டாம்” என்று உத்தரவிட்டார்.

1999 கார்கில் போருக்குப் பிறகு உளவுத் துறை அதிகாரிகள் அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம், “உளவுப்பிரிவின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளன, அதை அவிழ்த்துவிட வேண்டும்” என்று மன்றாடினர்.

வாஜ்பாய், வேண்டாம் என்றும் மறுக்கவில்லை, சரி என்றும் அனுமதிக்கவில்லை. மூன்றாண்டுகளுக்குப் பிறகு, இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்களுக்குப் பாடம்புகட்ட இந்தியாவிடம் எந்த ஆயுதமும் இல்லை.

“போர் தொடுக்க நேரும்” என்று பாகிஸ்தானை வெட்டியாக மிரட்டினார் வாஜ்பாய். போர் என்பது செலவு அதிகம் பிடிக்கும், உயிர்ச்சேதம் அதிகம் ஏற்படும் பெரிய நடவடிக்கை. உளவுப்பிரிவின் பதிலடி அப்படிப்பட்டதல்ல.

உளவுப்பிரிவு பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட வாஜ்பாய் அனுமதிக்காததற்குக் காரணம் கோழைத்தனம் என்றும் கூறிவிட முடியாது. அப்படித் தாக்குதல் நடத்தினால், அது சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும்,

இந்தியாவும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறது என்று பாகிஸ்தான் புகார் சொல்ல ஏதுவாகும் என்பதாகவும் இருக்கலாம். ஆனால், இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தங்களுடைய நாட்டுக்கு எதிராகப் பயங்கரவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தினால், ராணுவத்தைக் கொண்டு போர் நடத்தாமல், உளவுப்பிரிவைக் கொண்டு உடனடியாக -ஆனால் வலுவாக – பதில் தாக்குதலைத் தொடுக்கின்றன.

இதனால், எதிரிகள் அஞ்சி தங்களுடைய செயல்களைக் கைவிட்டுவிடுவதில்லை என்றாலும், வாங்கிய அறை உறைத்துக்கொண்டிருக்கும் வரையில் சீண்டாமல் இருக்கிறார்கள்.

உளவுப் பிரிவைக் கொண்டு பதிலடி கொடுத்தாலும் ராணுவத்தைத் திரட்டிப் போரிட்டாலும் உயிரிழப்புகள் நேரத்தான் செய்யும். ஆனால், அந்தந்த நேரத்துக்கு வம்புக்கு வருபவர்களுக்குப் பலமான அடி கொடுத்துக் கொண்டிருந்தால்தான் வாலாட்ட யோசிப்பார்கள்.

அடுத்து ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களும் உளவுப்பிரிவுத் தலை வர்களும் உட்கார்ந்து பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது.



Thanks: © ‘தி இந்து’, தமிழில்: சாரி.

Subscribe to our mail letter for more articles like பாகிஸ்தானை திரும்பித் தாக்குதல் என்னும் மன எண்ணம்.

பள்ளி துவங்குவதற்க்கு முன் கொஞ்சம் இதை முடித்து விடுங்களேன்

0 comments
கோடை விடுமுறை என்றாலே அது பள்ளி விடுமுறைதான்; அதனால், விடுமுறை நாட்களில் உங்கள் செல்லங்கள் அடிக்கும் லூட்டி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதற்காக, அவர்களை, அதட்டிக் கொண்டிருக்காமல், முடிந்தவரை அவர்களை விடுமுறையை கொண்டாட அனுமதியுங்கள்.

இந்த விடுமுறை காலம் தரும் உற்சாக அனுபவம்தான், அடுத்த கல்வி ஆண்டுக்குள் அவர்களை உற்சாகமாக அடியெடுத்து வைக்க உதவும்.
அதனால், உங்கள் பொருளாதார சூழலுக்கு ஏற்ப, சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்;

உங்களுடைய சொந்த ஊருக்கு, குழந்தைகளை அழைத்துச் சென்று, உறவுகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். இது, குடும்ப உறவுகள் மேம்பட அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.

குழந்தைக்கு ஏதாவது மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டியிருந்தால், அதை, விடுமுறை நாட்களுக்குள், முடித்து விடுவது நல்லது. பள்ளி திறந்தபின், ஒவ்வொன்றுக்கும் அனுமதி கேட்டு, விடுமுறை எடுத்தால், பிள்ளைகளுக்கு படிப்பின் மீது, ஒருவித அலட்சியத்தை ஏற்படுத்தி விடும்.

தேர்வு நேரத்தில், விடிய விடிய படித்தார்களே என்ற எண்ணத்தில் விடுமுறை நாட்களில், கொஞ்சம் ப்ரீயாக தூங்கட்டும் என, சில பெற்றோர் விட்டுப் பிடிப்பர். இதனால், பள்ளி திறந்து பிள்ளைகள் மறுபடி பிசியாகும் போது, இந்த அதிகபட்ச காலை தூக்கம் பெற்றோருக்கு டென்ஷனை ஏற்படுத்தும்.

அதனால், பள்ளி துவங்க சில நாட்கள் இருக்கும் போதே, குழந்தைகளின் காலை தூக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, கட்டுக்குள் கொண்டு வந்து விடுங்கள்.

அதேபோல், பள்ளிக் கட்டணம்; முன்கூட்டியே, இதற்கான தொகையை தயார் செய்து விடுங்கள். கடைசி நேரத்தில் பீஸ் கட்ட தடுமாறும் நிலைக்கு ஆளாக வேண்டாம். இதனால், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவர்.

சிலர், வீடு மாறும் கட்டாயத்தில் இருப்பர். இப்படிப்பட்டவர்கள் எடுத்த எடுப்பில், பள்ளியை மாற்றி விட முடியாது. அதனால், புது வீட்டில் இருந்து பள்ளி தொலைவு என்றால், குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஏற்பாட்டை முதலிலேயே கவனியுங்கள்.

சில பள்ளிகளில், ‘சீருடைகளை நாங்களே தருவோம்; தைக்கவும் ஏற்பாடு செய்து விடுவோம்…’ என்பர். தைப்பதற்கும் ஒரு கணிசமான தொகையை கறந்து விடுவர்.

சில பள்ளிகளில் சீருடை விஷயத்தை பெற்றோரிடம் விட்டு விடுவர். இப்படிப்பட்ட பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர், பள்ளிச் சீருடைகளை ஒரு மாதத்துக்கு முன்பே வாங்கி, தைக்க கொடுத்து விடலாம். இதில், தாமதித்தால் பள்ளி துவங்கிய பிறகும், தையல் கடையில் தவம் கிடக்க வேண்டியிருக்கும்.

நாளை பள்ளி என்றால், முன்தினம் தான், சில பெற்றோர் உஷாராவர். ஸ்கூல்பேக், ஷூ, லஞ்ச் பாக்ஸ் என்று, அரக்கப் பறக்க வாங்குவர். இதனால், பிள்ளைகள், ‘எனக்கு இந்த டிபன் பிடிக்கலை… இந்த லஞ்ச் பாக்சையா நான் கேட்டேன்…’ என்கிற மாதிரி எதிர்ப்புக் குரல் கொடுக்கத் துவங்கி விடுவர்.

அதனால், ஒரு வாரத்துக்கு முன்பே, உங்கள் பிள்ளைகளையும் கடைக்கு அழைத்து சென்று, வாங்கிக் கொடுங்கள்.

பெரும்பாலான பள்ளிகளில் இப்போதே புத்தகங்களை கொடுக்கத் துவங்கியிருப்பர். வாங்கி வந்ததோடு கடமை முடிந்தது என்று இருந்து விடாதீர். பைண்ட் செய்யக் கொடுத்த புத்தகங்களை, பள்ளி திறப்பதற்கு முன், வாங்கி விடுங்கள். அது மாதிரி பிரவுன்ஷீட் அட்டை போடும் வேலையையும் முன்னதாகவே முடித்து விடுவது நல்லது.

பிள்ளைகளை புதிய பள்ளியில் சேர்க்க நினைக்கும் பெற்றோர், அந்தப் பள்ளியில் கல்வி சம்பந்தமான எல்லா தகவல்களையும் முன்னதாகவே தெரிந்து கொள்வது நல்லது.

பள்ளியின் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், உங்கள் பிள்ளைக்கும் கிடைக்கும் என்று நம்பிவிட வேண்டாம். குறிப்பாக, ‘கணினி லேப் வசதி’ உண்டு என்று, கையேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தால், பயிற்சிக்கு தேவையான, கணினிகள் உள்ளனவா, பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் உள்ளனரா என்பதை, சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

பணி நிமித்தமாகவோ, தொழிலுக்காகவோ ஊர் மாறுவோரின் பிள்ளைகள், புதிய பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிஇருந்தால், தரமான பள்ளியை தேர்வு செய்வது முக்கியம்.

சில பள்ளிகளில் பெயருக்கு ஒரே ஒரு முறை பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடக்கும்; அதோடு சரி. அடிக்கடி பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடக்கிற பள்ளியை தேர்வு செய்யுங்கள்.

அப்போது தான் பள்ளி நிலவரம், பிள்ளைகளின் படிப்பு, இதெல்லாம் தெரியவரும். வீட்டில் பிள்ளைகளின் அணுகுமுறைக்கும், பள்ளியில் அவர்களின் செயல்பாட்டுக்கும் ஏதாவது வித்தியாசம் இருந்தால், ஆசிரியர் பெற்றோர் சந்திப்பில் தெரிய வரும்.

பெரிய பள்ளிகள் என்று, கட்டணம் அதிகமாக வாங்கும் பள்ளிகளில் கூட, கழிப்பறை பக்கம் போனாலே குமட்டிக் கொண்டு வரும். இதற்குப் பயந்தே பல பிள்ளைகள் பள்ளிக்குப் போன பின், மறந்தும் கழிப்பறை பக்கம் எட்டிக்கூட பார்ப்பது இல்லை.

சிறுநீரை அடக்கி வைப்பதால், பல்வேறு நோய்கள் ஏற்படுவதுடன், கிட்னி பாதிப்பும் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் கருதி, பள்ளியில் சேர்ப்பதற்கு முன், கழிப்பறை எப்படி இருக்கிறது என்பதை, கட்டாயம் பார்க்க வேண்டும்.

பார்த்ததுமே குடலைப் புரட்டிக் கொண்டு வந்தால், சொல்லாமல் கொள்ளாமல், ‘எஸ்கேப்’ ஆகி விடுங்கள். நல்ல கல்வி முக்கியம்; நல்ல ஆரோக்கியமும் அவசியம்.

Daily Sex will increase life term: தினமும் உடலுறவு வாழ்நாள் அதிகரிக்கும்

0 comments
உடலுறவு என்ற வார்த்தையை கேட்டாலே சீச்சீ... அசிங்கம்... என்றுதான் இன்றும் கூறுகின்றனர் மக்கள்.

ஆனால், தினந்தோறும் செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும் என்றும் ஆண்களின் விந்தணு உற்பத்தி பெருக்கும் என்றும் ஆஸ்திரேலியா டாக்டர் ஒருவர் ஆய்வு நடத்தியுள்ளார்.

புதுமணத் தம்பதிகள் செக்ஸ் ஆர்வத்தால் தினசரி உறவில் ஈடுபடுகின்றனர். இந்த ஆர்வம் சில ஆண்டுகள் வரைதான் நீடிக்கிறது.

குழந்தை பிறந்தவுடன் கணவன்- மனைவிக்கு இடையே இடைவெளி ஏற்படுவதுடன் உடலுறவு உறவும் பாதிக்கப்படுகிறது. இந்த உறவு கூட சில நேரங்களில் சம்பிரதாயமாக மாறிவிடுகிறது.

மேலும், தம்பதிகளிடையே நோய், சண்டை, அலுப்பு உள்ளிட்ட காரணங்களால் செக்ஸ் உறவு பாதிக்கப்படுவதும், வேறு சில காரணங்களால் வேண்டுமென்றே சிலர் உடலுறவு உறவை தள்ளியும் போடுகின்றனர்.

இன்றைய வாழ்க்கையில் தினந்தோறும் செக்ஸ் உறவு கொள்ளும் கணவன்- மனைவிகளை பார்ப்பது அரிதாகிவிட்டது.

வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை மட்டுமே செக்ஸ் உறவை வைத்து கொள்வதை தம்பதிகள் வழக்கமாக வைத்துள்ளனர்.

தினந்தோறும் உடலுறவு கொண்டால், உடல்நலம் பாதிக்கப்படும், ஆண்மைக் குறைந்துவிடும் என்பதே இந்த இடைவெளிக்கு  தம்பதிகள் சொல்லும் காரணமாகும்.

ஆனால், இது ஒரு தவறான கருத்து என நிரூபித்துள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாக்டர் ஒருவர்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் அண்மையில் நடந்த இனப்பெருக்க மருத்துவ இயல் மாநாட்டில் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஆஸ்திரேலியா டாக்டர் டேவிட் கிரீனிங் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.

அதில், இடைவெளி விட்டு செக்ஸ் உறவு வைத்தால், ஆண்மை அதிகரிக்கும் என தம்பதியர் நினைப்பது தவறான கருத்து என்றும் தினமும் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால் ஆண்களின் உடலில் உள்ள செக்ஸ் உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு, வளமான விந்து உருவாக உதவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் உடலுறவு உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கிறது என்றும் வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது என்றும் அந்த ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


 தினமும் செக்ஸ் உறவு கொள்வதன் மூலம் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிப்பதோடு, உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது என்கிறது ஆய்வு.

தினமும் உறவு கொண்டு விந்துகளை வெளியேற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாகிறது என்றும் ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர்களின் விந்துகளில் உள்ள டி.என்.ஏ.க்கள் அதிகளவில் சேதமடைகின்றன என்றும் இதனால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்துகள் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளது ஆய்வு கட்டுரை.

Suibcripe to get more updates and blog posts when ever we puplish more articles related to sexual life and உடலுறவு

Top 100 Stories in Tamil: Part 1 | தமிழ் மொழியின் நூறு சிறந்த சிறுகதைகள் -

0 comments

Samuthirakani and குருசாமி: மூத்த புள்ளைய நம்பித்தானடா ஒவ்வொரு குடும்பமும் இருக்கு. பொறுப்பு இல்லாம நீங்க செத்துப்போயிடுறீங்க

0 comments
Samuthirakani narrating his experience about gurusaami who is a friend one time for Samuthirakani

Samuthirakani
Samuthirakani and குருசாமி
'சேரன் அண்ணனோட 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ பட ஸ்பெஷல் ஷோ போயிருந்தேன். அதுல ஒரு சீன். கூடவே இருந்த நண்பன் ஒருத்தன் இறந்துபோயிடுவான். அப்ப, 'மூத்த புள்ளைய நம்பித்தானடா ஒவ்வொரு குடும்பமும் இருக்கு. பொறுப்பு இல்லாம நீங்க செத்துப்போயிடுறீங்க. இங்க மொத்தக் குடும்பமும் ஆடிப்போய்க்கிடக்கே’னு அவனோட அப்பா கதறுவார். அந்தக் காட்சியிலேயே மனசு நின்னுடுச்சு. வீட்டுக்கு வந்தா, ஒரு வேலையும் ஓடலை. ஏதோ உறுத்துது. அந்தக் குடைச்சலுக்குக் காரணம், கால ஓட்டத்தில் நான் மறந்த, இழந்த என் நண்பன் குருசாமி!'' - பேச்சில் வழக்கமான உற்சாகம் சமுத்திரக்கனியிடம் அன்று மிஸ்ஸிங்.

''92-ல் நான் சென்னைக்கு வந்தேன். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மெயின்ரோடில் சின்ன அறையில் தங்கியிருந்தப்ப, குருசாமி என் பக்கத்து அறை நண்பர். 'நண்பர்’ காலப்போக்கில் 'நண்பன்’ ஆனான். பாக்யராஜ் சார்கிட்ட உதவியாளரா இருந்துட்டு வெளியே வந்து, தனியா சினிமா பண்ணும் முயற்சியில் இருந்தான். சென்னையையும் சினிமாவையும் எனக்கு அணுஅணுவா அனுபவிக்கக் கத்துக்கொடுத்தவன். இன்னைக்கு நான் ஆறேழு படங்கள் பண்ணி, ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கேன். ஆனா, இப்போ அவன் இல்லை. ஆமா, குருசாமி இறந்து 11 வருஷம் ஆகுது!'' என்றவர் சின்ன இடைவெளி விட்டுத் தொடர்கிறார்.

''பல நாள் காலைல அஞ்சு மணிக்கு எல்லாம் எழுப்பிவிட்ருவான். கோடம்பாக்கம் டு சேப்பாக்கம் தூர்தர்ஷன் ஆபீஸ் வரை நடந்தே போவோம். சாப்பாட்டுக்கு எல்லாம் வழி இருக்காது. ரெண்டு மணி நேரம் நடந்து ஏழு மணிக்குப் போய்ச் சேருவோம். தூர்தர்ஷன் அதிகாரிகள் வர்ற வரை காத்திருந்து, 'ஏதாவது நிகழ்ச்சி இருந்தா குடுங்க... பண்றோம்’னு கேட்போம். அவங்க பெரும்பாலும் எங்களை நிராகரிச்சிருவாங்க. திரும்பி ரூமுக்கு நடக்க ஆரம்பிப்போம். இப்படி, சென்னையில் எங்க கால் படாத இடங்களே இல்லை.

போன இடங்களில் எல்லாம் தோல்வி... தோல்வி. ஒருகட்டத்துல குரு துவண்டுட்டான். 'என்னால இனி முடியாதுனு நினைக்கிறேன்டா... நீ ஜெயிச்சு வந்துடுவ. அப்ப நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்’னு சொல்வான்.  தன்னைத் தோக்கடிச்ச, தான் தொலைச்ச சினிமாவை என் மூலமா மீட்டு எடுக்கணும்னு நினைச்சான். 'கனி, இன்னைக்கு வேணும்னா நம்ம கையில அஞ்சு பைசா இல்லாம இருக்கலாம். ஆனா, உன் ஒவ்வொரு கதையிலும் பல கோடிகள் இருக்குடா. நம்பிக்கையை மட்டும் விட்டுராதடா’னு, நான் தளர்ந்து போகாமப் பார்த்துக்கிட்டான்'' என்று நன்றாகப் பேசிக்கொண்டு இருந்த சமுத்திரக்கனியின் குரல் திடீரென உடைகிறது.

''தொண்ணூறுகளின் கடைசினு நினைக்கிறேன். ஒருநாள் டீ குடிச்சிட்டு இருந்தப்ப, குரு தன்னை மறந்து திடீர்னு பயங்கரமாக் கத்த ஆரம்பிச்சான். எங்களால அவனைக் கட்டுப்படுத்த முடியலை. நடுரோட்டுக்கு ஓடி, பல்லவன் பேருந்தை மறிச்சு, ரெண்டு கைகளாலும் ஆங்கிள் பார்த்து ஷாட் வெச்சான். அன்னைக்கு அவன் பேசினது இப்பவும் ஞாபகம் இருக்கு. 'எல்லாம் முடிஞ்சிருச்சுல்ல... இனிமே பிரச்னை இல்லை. அப்படியே ஏத்து. என் மேல ஏத்திட்டுப் போயிட்டே இரு’ன்னான். சினிமா கொடுத்த ஏமாற்றங்களும் வலிகளும் அவனை என்னமோ பண்ணிருச்சு. ஒரு மணி நேரம் போராடி, இழுத்து உக்கார வெச்சோம்.

எங்களுக்கு என்ன பண்றதுனு தெரியலை. 'குரு, உனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லைபோல. எல்லாரும் திசைக்கு ஒருத்தரா ஓடிட்டு இருக்கோம். எப்படியாச்சும் கொஞ்சம் பணம் புரட்டித் தர்றோம். தயவுசெஞ்சு சொந்த ஊருக்குப் போயிடு. கொஞ்ச நாள் கழிச்சு நானே உன்னைக் கூப்பிட்டுக்கிறேன்’னு சொல்லி, அன்னிக்கு முடிஞ்சது 200 ரூபாய் புரட்டிக்கொடுத்தோம்.

'ஊருக்குப் பத்திரமா போயிடுவதானே?’னு கேட்டதுக்கு, 'என்னைப் பைத்தியக்காரன்னு நினைச்சுட்டீங்களாடா?’னு கோபமாத் திட்டிட்டே போனான். அவனை, அன்னைக்குத்தான் கடைசியாப் பார்த்தேன்!
டி.வி சீரியல் பண்ண எனக்கு வாய்ப்பு கிடைச்சப்போ அவனைக் கூப்பிட்டுக்கலாம்னு விசாரிச்சா, மனநோயாளி ஆகிட்டான்னு தகவல். மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு. பிறகு, 'நிறைஞ்ச மனசு’ பட வாய்ப்பு கிடைச்சது. அப்பவும் அவனைத் தேடினேன். 'செத்துப்போயிட்டான்’னு சொன்னாங்க... அதிர்ந்துட்டேன். 'நிறைஞ்ச மனசு’ படம் எடுத்து நான் தோத்துப்போயிட்டேன். கிட்டத்தட்ட அப்ப எனக்கும் அவனோட கடைசிக் கால மனநிலைதான். 'இப்படித்தானே அவனுக்கும் வலிச்சிருக்கும்’னு தோத்தவனோட வலியை அனுபவபூர்வமா உணர்ந்தேன்.
அப்புறம் எல்லாத்தையும் முதல்ல இருந்து ஆரம்பிக்க வேண்டிய சூழல்; நிரூபிக்கவேண்டிய போராட்டம்.

'சுப்ரமணியபுரம்’ எடுத்து 'நாடோடிகள்’ல மீண்டோம். இந்தக் காலகட்டங்கள்ல குருசாமியை மொத்தமாவே மறந்துட்டேன். 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ எனக்குள் குருசாமி ஞாபகத்தைத் திரும்பத் தூண்டிருச்சு. அதான் அவனைப் பெத்தவங்களைப் பார்க்கலாமேனு போயிட்டு இருக்கேன்!'' என்று சமுத்திரக்கனி சொல்லும்போது, 'சார்... இதுதான் பத்ரகாளிபுரம்’ என்று குருசாமியின் ஊர் வந்துவிட்டதைச் சொல்கிறார்கள்.

தேனியில் இருந்து குச்சனூர் போகும் வழியில் உள்ள சின்ன கிராமம் பத்ரகாளிபுரம். உழைத்துக் களைத்த கிராமத்து முகங்கள். விசாரிப்புகளுக்குப் பிறகு, மிகச் சிறிய ஓட்டு வீட்டுக்குள் நுழைகிறார் சமுத்திரக்கனி. வீட்டின் உள்ளே ஒரு கட்டிலில் படுத்திருந்தார் பெரியவர் கணபதி. அவரிடம், ''குருவோட அப்பாங்களா? நான் அவனோட சென்னையில ஒண்ணா இருந்தவன். என் பேரு சமுத்திரக்கனி'' என்று அறிமுகப்படுத்திக்கொண்டதும், எழுந்து உட்கார்ந்தவர், ஒன்றும் பேசவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து, ''நல்லா இருக்கீங்களாய்யா?'' என்றவர், ''குழந்தைங்க?'' என்று விசாரிக்கிறார். ''ரெண்டு புள்ளைங்க'' என்ற சமுத்திரக்கனியிடம், ''நல்லா இருப்பய்யா, வா... உட்காரு!'' என்று பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டார். குருசாமியுடனான நட்பை கனி விவரிக்க, கைகளைப் பற்றிக்கொண்டவர், ''நீ ஜெயிச்சவன் இந்த வீட்டுக்குள்ள வந்து நின்னுட்டல்ல... இனிமே என் புள்ளையை இந்த ஊர்ல ஒரு பய தப்பாப் பேச முடியாது. குருசாமி வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிருக்கு. நீ இவ்ளோ வருஷம் கழிச்சு வந்ததுல ரொம்ப சந்தோ ஷம்யா'' என்றவரின் விழிகளில் கடகடவென கண்ணீர் வழிகிறது.

''மனநிலை தடுமாறி எங்களை அவன் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டான்ப்பா. இதே சந்துல, நானும் அவனும் எத்தனைவாட்டி அடிச்சு விழுந்து உருண்டு இருக்கோம் தெரியுமா? ரொம்பச் சிரமப்படுத்திட்டான். என் எதிரிக்குக்கூட அந்த நிலைமை வரக் கூடாது. டிகிரி முடிச்ச கையோட சினிமாக்குப் போறேன்னுட்டுக் கிளம்புனான். வெடிவெச்சு, கிணறு வெட்டி சம்பாதிச்ச காசுலதான் அவனை பி.ஏ படிக்கவெச்சேன். குடும்பத்தைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். கடைசில சித்தம் கலங்கித்தான் வந்து நின்னான்!'' எனக் குமுறி அழுகிறார்.

''குரு மட்டுமில்லப்பா, நான் உட்பட பல சினிமாக்காரங்க அந்த நிலைமைக்குப் போயிட்டுத்தான் திரும்பி வந்திருக்கோம். ஒவ்வொரு நிமிஷமும் போராட்டம்தான். நாங்க தட்டுத்தடுமாறி கோட்டுக்கு இந்தப் பக்கம் விழுந்துட்டோம். அவன் அந்தப் பக்கம் விழுந்துட்டான். அவ்வளவுதாம்பா. ஆனா, அவன் திறமைக்காரன்ப்பா...'' - வெவ்வேறு வார்த்தைகளில் அந்தப் பெரியவரின் மனதைத் தேற்றினார் சமுத்திரக்கனி Samuthirakani  .

''எதுக்கும் கவலைப்படாதீங்க. குருசாமி இருந்திருந்தா உங்களுக்கு என்னல்லாம் செஞ்சிருப்பானோ, அதையெல்லாம் இனி நான் செய்றேன். கடைசிக் காலத்துல ஏன் இன்னும் காட்டு வேலைக்குப் போறீங்க. ஆடு-மாடுக கொஞ்சம் வாங்கித் தர்றேன்... பார்த்துக்கங்க'' என்ற சமுத்திரக்கனியின் வார்த்தைகளை அமைதியாகக் கேட்டவர், ''எனக்கு நீ வந்ததே போதும்பா. அதெல்லாம் ஒண்ணும் வேணாம்'' என்று கைகளைப் பிடித்துக்கொண்டார்.
''அம்மா எங்க?'' என்ற கனியிடம், ''அது சோளக் கருது வெட்டப் போயிருக்கு.  அவளையும் ஒரு எட்டு பார்த்தீங்கனா சந்தோஷப்படுவா'' என்றார்.

சோளக்காட்டில் காய்ந்த கரும்புத் தட்டை போல ஒடிசலான ஓர் அம்மா ஓட்டமும் நடையுமாக வந்தார். குருவின் அம்மா காளியம்மா. கனியின் கைகளைப் பற்றிக்கொண்ட அவர் கேட்ட முதல் கேள்வி, ''எம் புள்ளைக்கு மெட்ராஸ்ல என்னய்யா ஆச்சு?'' 15 வருடங்களாக அவருக்குள் தொக்கி நின்ற கேள்வி. சமுத்திரக்கனி உடைந்த குரலில் ''என்னைப் பெத்தவளே...'' என்றதும், வெடித்து அழுகிறார் அந்த அப்பாவித் தாய்.

கையெடுத்துக் கும்பிட்ட அந்த அம்மாவிடம், ''மகனைப் பார்த்து யாராவது கும்பிடுவாங்களாத்தா?'' என்றார் சமுத்திரக்கனி. ''இல்லப்பா... இவ்வளவு காலத்துல அவனை விசாரிச்சு வந்த ஒரே ஆளு நீதான்யா. அங்கே அவன் அநாதையாத் திரிஞ்சிட்டு இருந்தானோனு நினைப்பேன். அவனுக்கும் ஆதரவா ரெண்டு மூணு பேரு இருந்திருக்காங்கனு இப்பத்தான் தெரியுது. அது போதும்யா!''
''ஆத்தா, குரு திரும்ப வந்துட்டான்னு நினைச்சுக்க. மூணு புள்ளைகளைப் பெத்துட்டு இந்த வயசுல ஏன் வயக்காட்டுல கிடந்து கஷ்டப்படுற? உனக்கு வேணுங்கிறதை எல்லாம் இனி நான் செய்றேன். மத்த ரெண்டு பசங்களும் என்ன பண்றாங்க?'' என்று கேட்டுத் தெரிந்துகொண்டார் கனி.
இரண்டாவது மகனிடம் நலம் விசாரித்தவர், எம்.ஏ படித்த அவரின் மகள் ஆசைப்படி, சென்னையில் உள்ள பிரபல ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் சேர்த்துவிடுவதாகவும், மூன்றாவது மகனின் +2 முடித்த மகளின் கல்லூரிப் படிப்புக்கான பொறுப்பை  ஏற்றுக்கொள்வதாகவும் சொன்னார்.
''ஆத்தா, நான் இப்ப கிளம்புறேன். எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டு மறுபடியும் வந்து உங்களைப் பார்க்கிறேன்'' என்று கிளம்பிய கனியின் கார் கண்களைவிட்டு விலகும் வரை, கலங்கியபடியே நின்றிருந்தார் அந்தத் தாய்.
திரும்பும் வழியில் வெகுநேரம் மௌனமாக இருந்த சமுத்திரக்கனி, ''சினிமாவுக்காக வர்ற நம்மக் கிராமத்துப் பசங்களுக்கு, குருவை மையமா வெச்சு ஒரு விஷயத்தைச் சொல்லணும். குரு, ரொம்ப உண்மையானவன்; திறமைக்குக் குறைவில்லாதவன்; அதே சமயம் கொஞ்சம் பயந்தவன். நேர்மையும் பயமும் ஒண்ணா இருந்தா, கோடம்பாக்கத்துல ஜெயிக்கிறது கஷ்டம். இது எவ்வளவு பெரிய திறமைசாலிக்கும் பொருந்தும்.

ரூம்ல எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடுவோம். 'வாடா... நாலு பேரும் சேர்ந்து சாப்பிட்டா வேலை முடிஞ்சிடும். நீயும் ஒரு தட்டை எடுத்துட்டு வந்து உட்காரு’ம்பேன். 'நீங்க ரெண்டு பேரும்தானே அரிசி வாங்கிட்டு வந்தீங்க. என் பங்கு அதுல இல்லை. அதனால முதல்ல நீங்க சாப்பிடுங்க. மிச்சம் ஏதாச்சும் இருந்தா, நான் சாப்பிட்டுக்கிறேன்’னு சின்னச் சிரிப்போட பம்மிக்குவான். எதுலயும் கொஞ்சம் தாழ்வுமனப்பான்மை.

'பயப்படாத... 100 பேர் நின்னா, முன்னாடி போய் முதல் ஆளா நில்லு. அப்பத்தான் அவங்க பார்வை உன் மேல விழும்’னு சொல்வேன். 'என்னமோடா... அது எனக்கு வரவே மாட்டேங்குது’ம்பான். அது அவனோட மிகப் பெரிய மைனஸ். ஆனா, அவனை எனக்கு ரொம்பப் பிடிச்சதுக்கு அந்த உண்மையும் நேர்மையும்தான் காரணம்.


ஆனா, இங்கே அந்த உண்மையை, திறமையை யார் மதிக்கிறா? ஜெயிக்கணும்கிற வெறியில மத்தவங்களை ஏறி மிதிச்சுட்டுப் போயிட்டே இருக்காங்க. குருவோட வீட்டு நிலைமையைப் பார்த்தீங்கள்ல. சினிமாவுல ஜெயிக்கணும்னு கிளம்பி வர்ற ஒவ்வொருத்தரும், இந்த மாதிரி வலியுள்ள குடும்பத்துல இருந்துதான் வர்றாங்க. அவங்க உணர்வுகளையும் திறமைகளையும் நாம் இன்னும் சரியா அங்கீகரிக்கணும்!'' - தன் நண்பனைப் பற்றியே பேசிக்கொண்டு இருந்தார் சமுத்திரக்கனி.!

இரண்டு நாட்களுக்குப் பிறகு அலைபேசி அழைப்பு. ''குரு வீட்டுக்கு ஒரு டஜன் ஆடு, ஒரு மாடு போய்ச் சேர்ந்திடுச்சுண்ணே. செலவுக்கும் சேமிப்புக்கும் கொஞ்சம் பணம் குடுக்கச் சொல்லியிருக்கேன். அவன் தம்பி பசங்க படிப்புக்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு!'' என்று சுருக்கமாகத் தகவல் சொன்னார் சமுத்திரக்கனி (எ) குருசாமி! .

Subscribe to our blog to read more articles related to director Samuthirakani

Senior Accountant - KERALITES ONLY, Office Administrator, Architect Required

0 comments
Senior Accountant - KERALITES ONLY, Office Administrator, Architect Required

KERALITE SENIOR ACCOUNTANT required.

Experience:

Should have 10+ Years in Accounts field. Experience in trading division will be an added advantage.

Language Fluency in English is must.

Age below 35

Computer Proficiency:- MS Office, Tally, MS Outlook

Scope of Work: Receivables & Payables, Sales & Purchase accounting and its report,
Stock management, Preparing MIS Reports, Account finalization.

Branch accounting & branch consolidation.

Education : Minimum B.Com graduate.

Contact - 0557218005, Send your resumes to enquiry@alzaabigroup.com



Office Administrator

ARCADE
Mussafah, Abu Dhabi, United Arab Emirates

Accounting

Office administrator with accounting background, age 30 to 40, required for a construction company for their Abu Dhabi office. 
Apply through 2014jobsinuae@gmail.com  

KLICK ENGINEERING CONSULTANTS in Al Qusais, Dubai, United Arab Emirates needs an Architect

A consultant in Dubai required an Architect with 2 years Dubai experience. Kindly send your CV at cv.klickengg@gmail.com  

Subscripe for more Senior Accountant - KERALITES ONLY, Office Administrator, Architect Required from our blog

Kamasutra Sexual Positions: காம சூத்திரா: காம சூத்திரம் எனும் காதல் வேதம் - பகுதி 2 - கலவி நிலைகள்

0 comments

கலவி நிலைகள் , செக்சில், ஆண் கீழும், பெண் மேலுமாக ஈடுபடும் மாறுபட்ட கலவி நிலைகளில் ஈடுபடுவதால் சில பெண்களுக்கு கூச்சமின்றி ஈடுபடத் தோன்றலாம். 

Kamasutra Sexual Positions: காம சூத்திரா: காம சூத்திரம் எனும் காதல் வேதம் - பகுதி 2 - கலவி நிலைகள்


இப்படி மாறுபட்ட கலவி நிலைகள் ஈடுபடக்கூடாத சில சூழ்நிலைகளும் உண்டு. அவை என்னென்னவென்று தெரியுமா?


Sexual Positions
கலவி நிலைகள்
மாதவிடாய் வெளிப்படும் காலம்

சமீபத்தில் குழந்தை பெற்றவள்

பிறப்புறுப்பு மிக இறுக்கமாக அமைந்த பெண்

பருத்த உடல் கொண்டவள்


கலவியில் ஈடுபடும் ஆணும், பெண்ணும் புதுப்புது விதங்களில் இன்பம் அனுபவிக்க விழைவார்கள்.

அத்தகைய அத்தகைய நிலைகளை சித்ரரத அசாதாரணமான நிலைகள் என்பார்கள். ஆனால் தீவிர காம இச்சை கொண்ட ஆணும், பெண்ணும் பயிற்சிக்கு பிறகே இது போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.

இந்த நிலைகள் பல வகைப்படும், அவை

ஸ்திர ரத (நின்ற நிலை) பெண், சுவர் மீதோ, தூண் மீதோ சாய்ந்த படி நின்றிருக்க ஆண் அவளை நின்ற நிலையிலேயே இறுகத் தழுவி அணைத்துக் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை

நின்ற கலவி நிலை மேலும் 3 வகைப்படும்.

முன் நீட்டிய நிலை

நின்று கொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஆண் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை

இரண்டு அடுக்கு நிலை

நின்றிருக்கும் பெண்ணின் கால்கள் துவளும் படி பிடித்துக்கொண்டு கலவியில் ஈடுபடுவது இரண்டு அடுக்கு நிலை

முழங்கால், முழங்கை நிலை

ஆண் நின்ற நிலையில் பெண்ணைத் தூக்கி அவன் தன் இடுப்பில் இரண்டு கால்களையும் இடுப்பைக் பின்னிக்கொள்ளும் வகையில் போட்டுக் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை

தொங்குநிலை

ஆண், சுவர் அல்லது தூணில் சாய்ந்து நிற்க, பெண் அவன் மீது ஏறி, கால்களைப் பின்னிக் கொண்டு கலவியில் ஈடுபடுவது இந்த நிலை. இதில் ஆண், பெண்ணின் கழுத்தைக் கட்டிக் கொள்வான்.

மிருகங்களின் நிலை

இந்த நிலையில், பெண் படுக்கையில் முழங்கால் போட்டு மண்டியிட்டுக் கொள்ள ஆண், பின்புறமாகப் புணர்ச்சியில் ஈடுபடுவான்.

Read more in Kamasutra from our blog from the below links,

காம சூத்திரா: காம சூத்திரம் எனும் காதல் வேதம் - பகுதி 1 - வாத்ஸ்யாயனா்

Subscribe to our mailing list for more Kamasutra Sexual Positions:காம சூத்திரா: காம சூத்திரம் எனும் காதல் வேதம் - பகுதி 2 - கலவி நிலைகள் articles.

காம சூத்திரா: காம சூத்திரம் எனும் காதல் வேதம் - பகுதி 1 - வாத்ஸ்யாயனா்

0 comments
காம சூத்திரா: காம சூத்திரம் எனும் காதல் வேதம் - பகுதி 1

காம சூத்திரா என்ற இந்த நுாலை வத்ஸயனாா்  எழுதியுள்ளாா் பலாின் தொகுப்பக்களும்  இதில் அடங்கியுள்ளது.

Vatsayana
Vatsyayana
இவை சைவ சமய மரபுகளையும் தனி மனித உணா்வகளையும் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையும்  நெறி கெட்டு அலைகின்ற மனிதா்களை நெறிப்படுத்தவும் உதவும் அதே வேளை சில மூட நம்பிக்கைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த காம சூத்திரா: காம சூத்திரம் எனும் காதல் வேதம் நுால் தொடராக இங்கே வருகிறது, உங்கள் கருத்துக்களை நீங்கள் தொிவிக்கலாம்.

தா்மமே அணைத்துக்கும் மூலம். தா்மத்திலிருந்து அா்த்தம் வளா்ச்சியுற்றது. காமம் மலா்ச்சி கண்டது. ஒா் இந்துவின் வாழ்க்கை இம் மூன்றையும் குறிக்கோள்களாய்க் கொண்டு இயங்கும்.

தா்ம் என்பது ஆன்மிக மற்றும் நெறி சாா்ந்த கடமைகள். அா்த்த் என்பது இக வாழ்விற்காண பொருள்களும். அறிவும் பெறுதல். காமம் என்பது புலன்களின் இன்பம்.

இந்த உலகத்தை படைத்தவா் முதலில் பிரஜாபதி என்றும் பிற்பாடு அவரே பிரும்மா என்றும் அறியப்பட்டாா். மக்கள் தங்கள் வாழ்ககையை எப்படி தா்மம் அா்த்தம் காமத்தை கொண்டு புனிதப்படுத்தி கொள்வது என்பதை அவா் இலட்சம் பாடல்களில் விவாித்திருக்கிறாா்.

நம்முடைய மூதாதையான மனுவாகப்பட்டவா் தா்ம உபதேசங்களைச்
செய்தாா். அதுவே மனநீதி என்பது. அா்த்தம் பற்றி பிருகஸ்பதி எழுதினாா். நந்தி பகவான் காமசாஸ்திரத்தை ஆயிரம் அத்தியாயங்களில் வடிவமைத்தாா்.

உத்தகலாின் மகனான ஸ்வேதகேத காமசூத்திரத்தை ஜநாறு அத்தியாயங்களில் உரைத்தாா். பாப்ரவ்யா் அந்த ஞானத்தை நுாற்று
ஜம்பது அத்தியாயங்களில் சுருக்கித் தந்தாா்.

அவை எழு தனித்தனி தலைப்புக்களில் வகைப் படுத்தப்பட்டன
தியானம் உடலுறவு.காதல்.திருமணம்.கள்ளஉறவு.விலைமகளிா்.
மற்றும் மோக உக்கிகள் ஆகியவை அந்த ஏழும் ஆகும்.

பாப்ரவ்யாின் படைப்ப மிகவும் கடினமான நடையில் எழுதப்பட்டிருந்தது. வாத்ஸ்யாயனா் அதனை எளிய நடையில் காமசூத்திராவாகத் தந்தாா்.

தனக்கு முன் பொியொா்கள் சொல்லிச் சென்ற காதல் சம்பந்தப்பட்ட எந்தவிசயத்தையும் அவா் விடவில்லை. அவற்றின் சாரத்தை அப்படியே தனது நுாலில் இடம் பெறச் செய்தாா்.

மனிதன் நுாறு ஆண்டுகள் உயிா் வாழ்வதாக வைத்துக் கொண்டால் அதில் தா்மத்தை ஒா் கட்டத்திலும் அா்த்தத்தை ஒரு கடடத்திலும். காமத்தை ஒரு கட்டத்திலம் அவன் கடைபிடிக்க வேண்டும்.

ஒரு நேரத்தக்கு ஒன்று என வைத்துக் கொண்டால்தானே எதையும்
உருப்படியாகச் செய்ய முடியும். அவன் தன்னுடைய சிறு வயதில் அாத்த பாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

இளமையில் காமத்தையும் முதுமையில் தா்மத்தையும் அனுசாிக்க வேண்டும்
.இந்த அமைப்பை அல்லது ஒழுங்கை வாத்யாயனா் மாற்றினாா்.

தா்மம் .அா்த்தம்.காமம் இவற்றை நீங்கள் உங்களால் முடிந்த போதெல்லாம் முடிந்த விதத்தில் எல்லாம் செய்யலாம் என்கிறாா் அவா்.

தா்மம் என்பத வேதத்தில் விதித்தபடி நடப்பத உதாரணமாக புலால் மறுப்ப. யக்ஞம். பயாகசாஸ்திரம். பயிலல்.மகிச் சிறந்த குருமாா்களை அண்டியிருத்தல்.

காமம் என்பது உடல். மனம் .அன்மா அனுபவிக்கிற மகிழ்ச்சி.
இது ஒரு நுட்பமான உணா்வு.கண்கள்.நாசி.நாக்கு.செவிகள். சமைம்இவற்றை விழிப்படையச் செய்யும். உணா்வதற்கும்.உணரப்படவதற்கும் இடையில் காமம் முகிழ்கிறது.

உதடுகளின் சோ்க்கையில். மாா்புகள் பொருந்துவதில் இடுப்புக்கள் இணைவதில் ஓா் அழகான உறவு உண்டாகிறது. அதன் விளைவாக ஒரு குழந்தை உருவாகிறது.

கலவி முதல் படைப்பு வரை காம சூத்திரம் சொல்கிறது.

தா்மமே அனைத்துக்கும் மூலம் என்று முன்பே குறிப்பிட்டோம். அதனால் தா்மத்தை முதலிலும் தா்மத்துக்குப் பின் அா்த்தத்தையும்  அா்த்தத்துக்குப் பின் காமத்தையும் அமைத்து கொள்ள வேண்டும்.

அா்த்தம்- புற வாழ்க்கை

காமம்- அகவாழ்க்கை சம்பந்தப்பட்டது.

காதல் செய்வது உயிர் இயற்கை என்கிறபோது அதைச் சொல்வதற்கு
ஒரு நுாலும் தேவையா என்பது சிலாின் கருத்து. விலங்கும் உறவு கொள்கிறது. மனிதனும் உடலறவு கொள்கிறான் .

இரண்டும் ஒன்றாகிவிடுமா..?

விலங்கு தனது உணவை அப்படியே உண்கிறது மனிதனக்கோ பக்குவம் தேவைப்படுகிறது. அதனால் தானே அவன் உயிாினங்களில் முதலிடம்
வகிக்கிறான்.

அவனுக்கு உடலுறவிலும் பக்குவம் தேவை அதனால் தான் காம நுால் அவசியப்படுகிறது. அச்சமும் தயக்கமும் கொண்டவா்களிற்கு
வேண்டுமேயானால் காமநுால்கள் மருட்சியை ஏற்படுத்தலாம்.

ஆனால் இந்நுால்கள் அவா்களை அச்சத்திலிருந்தும்  தயக்கத்திலிருந்தும் விடுவிக்கும். காமம் சக்தி வாய்ந்து அது கற்றவா்களை காதலில் தோ்ச்ி உடையவா்களாக்கும்.

மற்றவா்களை பொறுத்தவரை மணவாழ்க்கையை நாசம் செய்யும்
நற்பெயருக்க களங்கம் ஏற்படுத்தும்.

காமம்-விலங்குகள் உலகில் வெறும் பாலுணா்வு வேட்கை  மனிதா்கள் வாழ்வில் அது ஒரு யோகசாதனை  காமத்தை துறவிகள் விலக்கலாம் ஆனால்  சம்சாாிக்க அது ஆகாது.

சுகத்தை தேடுகிறவன் பாவங்கள் செய்யும்படி யாகும்.  குற்றங்கள் பாியும்படி இருக்கும் என்பது மகான்களின் கருத்து. காமவாய்ப்பட்டவன் தன் குடும்பத்தை தானே  நாசம் செய்துவிடுவான் என்று அவா்கள் கருதினார்கள்.

பொஜா்குல மன்னன் தாண்டக்கயன் ஒரு மேல்ஜாதிப்  பெண்ணை கற்பழித்துவிட அதன் விளைவாக அவன்  செத்துப் போனான்.அவனுடைய நாடு புழுதி காற்றில்  காணமல் போயிற்று என்று புராணங்கள் கூறும்.


இந்திரன் அகலியகயை ஏமாற்றினான் கீசகன்  திரௌபதியை இழிவு செய்தான். ராவணன் சீதையை துக்கிச் சென்றான்.  இப்படி தங்கள் பலத்தையும் பிரக்யாதியையும்  நம்பி செயல் பட்டவா்கள் எல்லாம் அழிந்து பட்டார்கள்
காமம் அவா்கள் கண்கள் மறைத்தது என்பார்கள்.

காமம் கெடுதல் செய்வதில்லை மனிதனிடம் உள்ள தீய  பண்புகள் தாம் அவனையும் கெடக்கின்றன.  அவனைச் சுற்றியுள்ளவா்கள் கெடுக்கின்றன.

உடலுறவும் முக்கியம். உடம்புக்கு உணவு தண்ணீா்  மாதிாி உடலுறவு அவசியப்படுகிறது. காமம் என்பது அா்த்தம்.தா்மம் இவற்றின் விளைவு
பலன் என்கிறாா் வாத்ஸ்யாயனா்.

அச்சம் பாலுறவுக்கு இடையுறாகிவிடக்கூடாது  கால் நடைகள் பயிரை மேய்ந்துவிடும் என்பதற்காக  விவசாயம் செய்யாமல் இருக்க முடியுமா..?

பிச்சை காறனுக்குப் பயந்து சமைப்பதை நிறுத்தி விடலாமா..? என்று வாத்ஸ்யாயனா் கேட்கிறார். அா்த்தம். காமம். தா்மம் இவற்றை
அறிந்தவனும் தனது உடம்பு.மனம். ஆன்மாவில்  அவற்றை கடைபிடிக்கிறவனும் இவ்வுலகத்தோடு மறுவுலகிலும் மகிழ்ச்சியாயிருப்பார்.

இளைஞா்கள் கலைகள் அறிவியல் கற்பதுடன்  தா்மம் அா்த்தம் காமம் பற்றிய நுால்களையம் கற்றுத்  தோ்ச்சிபெற வேண்டும். முதலிரவை எதிர்நோக்கி
யிருக்கும் மணப்பெண் காமசூத்திரம் அறிந்திருக்க  வேண்டும் என்கிறார் வாத்ஸயாயனார்.

திருமணம் செய்து கொள்வதன் நோக்கமே தா்மங்களை நிறைவேற்றுவது தான்.  அதற்கு தேவையான  செல்வங்களை தேடி குவிப்பதும் தான்.

காமம்- குழந்தை பெற உதவுகிறது.  அர்த்தம்- குழந்தைக்கான சொத்துக்களைச்
சம்பாதிக்க உதவுகிறது.

கன்னித் தன்மை இழக்காத பெண்ணை மணந்து காதலை பாலுறவு மகிழ்ச்சியை அனுபவித்திரு  என்கிறது வேதம். மணவினை எப்படி நிகழ
வேண்டும் என்பதற்குப் பல நியமங்களையும் வேத நுால்கள் செய்து வைத்திருக்கின்றன.

ஓா் ஆண் தன்னைவிட மூன்று வயதேனும் குறைந்த பெண்ணை மணக்க வேண்டும். அவளுடைய பெற்றோர் தங்கள் மகளை கட்டுப்பாடாக
வளா்த்திருக்க வேண்டும். அவளுக்கு அத்தை மார் மாமா மார் என்று
சொந்த பந்தங்கள் இருக்க வேண்டும்.

பெண்ணின் குடும்பம் வசதியாகவும் கௌரவமான  தாயும் இருக்க வேண்டும்.

அவளுடைய குடும்பத்தவரும் உறவினர்களும் நாட்டில் பிரபலமானவாகளோடு பழக்கம் உள்ளவாகளாயிருக்க வேண்டும்.

பெண் அழகும். நன்னடத்தையும் கொண்டவளாயிருப்பது அவசியம். ஆரோக்கியமும். கவா்ச்சியும் தேவை. நல்ல பற்கள். நகங்கள்.காதுகள். கண்கள். மார்பகங்கள். ஆகியவை விளக்கமாய் அமைந்திருக்க வேண்டும்.
உடம்பில் மாசு மறு இருக்கக் கூடாது.

ஒா் ஆண் மகனுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்விக்கிற புனித கடமை அவனுடைய  பெற்றோர்களும். உறவினர்களும் உண்டு. தங்கள்
மகனுக்குப் பெண்ணைத் தரும்படி பையனின் பெற்றோர்கள்
எவ்வகையிலும் முயற்சிக்கலாம்.பெண் வீட்டாரிடம்
பையனுடைய வம்சாவழி குணநலன் பற்றி புகழ்ந்து பேசலாம்.

இரண்டு குடும்பத்தார்கள் மட்டும் தங்களுக்குள்  பேசி திருமணத்தை உறுதி செய்து கொண்டு விடக் கூடாது. அவா்களுடைய உற்றார் உறவினர்கள் முன்னிலையில் அந்த திருமணம் நிச்சயிக்கப்பட வேண்டும்
மற்றவா்களின் கருத்தும் அறியப்பட வேண்டும்.

மணப்பெண் சோம்பேறித்தனமுடையவளா முன்பே  வேரொருவனை விரும்பியவளா ஏறுமாறானவளா  நரம்பு கோளாறு உடையவளா என்பதையெல்லாம் சோதித்தறிய வேண்டும்.

பொய்யான கூந்தல் உடையவளை கோடையில் கை  கால் வியா்ப்பவளை ஆணைப்போல் தோற்றம் கொண்டவளை விலக்க வேண்டும். ஊமையான கூன் விழுந்தவளை மிகப்பெரிய பிருஷ்டபாகம் கொண்ட வளைத்
தவிர்க்க வேண்டும்.

அமங்கலமான பெயர்கள் உடைய பெண்ணை ஒரு நதி.மரம்.அல்லது நட்சத்திரன் பெயா் கொண்ட வளை மணக்ககூடாது லா. அல்லது ரா என்று முடிகிற பெயருடைய பெண்ணையும் மணக்ககூடாது.

தன்னை விட வயதில் மிகவும் இளைய பெண்ணை மணப்பதும் தவறு. குழந்தை பருவத்தில் தன்னோடு விளையாடியவளையும் மணப்பது தவறு..

பெற்ரோர்கள் தங்களுடைய பெண்ணை சமூக நிகழ்ச்சிகளும் விழாக்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுடைய வீட்டில் ஒரு பெண்
திருமணத்துக்கு தயராயிருக்கிறாள் என்பதை அதன் மூலம் மற்றவாகளுக்குத் தெரியவைக்க முடியும்.

அந்த பெண்ணை தங்களுடைய மகனுக்கு வரிக்க எண்ணும் குடும்பத்தார் அவா்களுடன் கலந்து பேசி விருந்துண்ண அது வகை செய்யும்.

தங்களுடைய பெண்ணுக்கு ஏற்ற வரனாக இவன் இருப்பான் என்று உறதிப்படாதவரை அந்தப் பையனுடைய குடும்பத்தாரிடம் எது பற்றியும் வாக்களிக்க் கூடாது.எங்கள் உறவினரிடம் கலந்து பேசி இன்னும் சில நாட்களில் பதிலளிக்கின்றோம் என்று சொல்லி விடலாம்.

தங்களுடைய நடை மற்றும் குடும்ப சம்பிரதாயங்களுக்கு ஏற்ப்ப மணவினை நிகழ்த்தப்பட வேண்டும். ஒருவர் தன் இனத்தாருடன் மட்டுமே நடப்பு கொள்ளவும் மணம் பேசி முடிக்கவும் வேண்டும்.

தனது அந்தஸ்தைவிட உயாந்த இடத்தில் பெண்ணெடுத்தால் சுய கௌரவத்தை இழக்கும்படி ஆகும். ஒரு வேலைக்காரனைப் போல் நடத்தப்படும் நிலைதான் இருக்கும்.

தன்னைவிட அந்தஸ்து குறைந்த இடத்தில் பெண்ணெடுத்தால் அவளுடைய குடும்பத்தை கொடுமை படுத்த நேரிடலாம். சம அந்தஸ்து
இல்லாத திருமணங்கள் தவிர்க்கப் பட வேண்டியவை.

காம சூத்திரா: காம சூத்திரம் எனும் காதல் வேதம் இன்னும் தொடரும். 

கண்டிப்பாக வயது வந்த திருமணம் ஆனவர்களக்கான பதிவாக காம சூத்திரா கலவி நிலைகள் நமது தமிழ் ப்ளாக் எழுதியிருக்கிறது , கீழ்க்கண்ட லிங்க் வழி சென்று படித்து பயனடையும் படி கேட்டுக்கொள்கிறோம்.


Subscribe to our blog for more articles.

Buying used car's is Profitable: பழைய கார் வாங்குவது லாபமா?

0 comments
பழைய கார் வாங்குவது லாபமா? பழைய கார் எதை வாங்கலாம்? என்ன கவனிக்க வேண்டும்?

Buying used car's is Profitable: பழைய கார் வாங்குவது லாபமா?

கார் யூஸ் பண்ணலாமா?

பழைய கார்
பழைய கார்
நகர எல்லைகள் விரிவடைந்துகொண்டே போகும் நிலையில், இப்போது கார் என்பது மிகவும் அத்தியாவசியம். புது கார் வாங்கும் அளவுக்கு பட்ஜெட் இல்லை; காசு இருந்தாலும் பலருக்கு சின்ன கார் வாங்கப் பிடிக்கவில்லை.

அதனால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஸ்டைலான, அதே சமயம் அதிக வசதிகள்கொண்ட பெரிய கார் வாங்கும் எண்ணம் பரவ ஆரம்பித்திருப்பதுதான், இப்போது யூஸ்டு கார் மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது.

யூஸ்டு கார் வாங்க வேண்டும் என்றால், எங்கே வாங்குவது? யாரை நம்புவது? கார் வாங்கும் முன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்? எந்த கார்களை எல்லாம் நம்பி வாங்கலாம்? எந்த கார்களை எல்லாம் தவிர்க்க வேண்டும்? ஏற்கெனவே பயன்படுத்திவரும் பழைய காரை எங்கே, எப்படி, யாரிடம் விற்கலாம்? வாருங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடை தேடுவோம்!

ஏன் பழைய காரை வாங்க வேண்டும்?

1.5 லட்சம் ரூபாய்க்கு ஆல்ட்டோ வாங்கலாம் என முடிவு செய்துவிட்டு, பழைய கார் ஷோரூம் போனதும் மூன்று லட்சம் ரூபாய்க்கு ஸ்கோடா ஆக்டேவியா காரையே வாங்கலாம் என்று ஆசை கிளம்பும்.

பழைய கார் மார்க்கெட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திவந்த கார் தயாரிப்பு நிறுவனங்களே இப்போது, தங்கள் ஷோரூம்களுக்குள்ளேயே யூஸ்டு கார் விற்பனையையும் துவக்கிவிட்டன.

பழைய கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருவதுதான் இதற்குக் காரணம். 2017-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பழைய கார் மார்க்கெட் 16 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்கிறார்கள் மார்க்கெட் நிபுணர்கள்.

பழைய காரை ஏன் வாங்க வேண்டும் என்பதற்கான பதில், புது கார் வாங்கும் அளவுக்கு பட்ஜெட் இல்லை என்பது மட்டும் அல்ல. அதாவது, நீங்கள் புதிதாக ஒரு காரை வாங்கினால், அதன் மதிப்பு முதல் இரண்டு ஆண்டுகளில்தான் அதிகமாகக் குறையும். உதாரணத்துக்கு, நீங்கள் கடந்த ஆண்டு ஃபோர்டு ஃபிகோ டீசல் ணிஙீ மாடலை 6.42 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருப்பீர்கள்.

ஆனால், அதே மாடல் இப்போது வெறும் 5 லட்சம் ரூபாய்க்குத்தான் விற்பனையாகும். அதாவது, முதல் ஆண்டு காரின் ஒரிஜினல் விலையில் இருந்து கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறையும். இரண்டாவது ஆண்டு, காரின் மதிப்பில் கிட்டத்தட்ட 35 சதவிகிதம் குறைந்துவிடும்.

மூன்று ஆண்டுகள் பழைய கார் என்றால், அதன் ஆரம்ப விலையில் இருந்து 45 சதவிகிதம் குறைந்துவிடும். நான்கு லட்சம் ரூபாய்க்கு புதிதாக ஹூண்டாய் இயான் வாங்குவதைவிட, அதே விலைக்கு நான்கு ஆண்டுகள் பழைய ஹோண்டா சிட்டி வாங்கலாம் என்பதுதான் லாஜிக்.

அதேபோல், நீங்கள் நான்கு லட்சம் ரூபாய்க்கு வாங்கிய ஹோண்டா சிட்டி நல்ல கண்டிஷனில் இருந்தால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விற்கும்போது, எப்படியும் இரண்டு லட்சம் ரூபாய் வரை விலை போகும். ஆனால், புதிய கார் வாங்குவதைவிட பழைய காரை வாங்குவது என்பது மிகவும் சவாலான விஷயம்.

இங்கே உங்களைச் சபலப்படுத்த பல காரணிகள் உண்டு. உங்கள் மனதில் 1.5 லட்சம் ரூபாய்க்கு ஆல்ட்டோ வாங்கலாம் என முடிவு செய்திருப்பீர்கள்.

ஆனால், பழைய கார் ஷோரூம் போனதும் மூன்று லட்சம் ரூபாய்க்கு ஸ்கோடா ஆக்டேவியா காரையே வாங்கலாம் போலிருக்கிறதே என்று ஆசை கிளம்பும். பட்ஜெட்டை முடிவு செய்யாமல், காரின் அழகைப் பார்த்து வாங்கிவிட்டு, பிறகு பராமரிப்பு, மைலேஜ் என பட்ஜெட்டில் பஞ்சர் ஆனவர்கள் அதிகம்.

ஆனால், கொஞ்சம் பொறுமையுடன் தேடினால், பழைய கார் சந்தையில் உங்கள் மனம் விரும்பும் காரை, மிகக் குறைந்த விலைக்கு வாங்க முடியும்.‑
பட்ஜெட் முக்கியம்!

நான்கு, ஐந்து ஆண்டுகள் பழைய கார் என்றால், அதை முழுப் பணம் கொடுத்து வாங்குவதுதான் நல்லது. ஃபைனான்ஸில் வாங்கும்போது அதன் வட்டி விகிதம் மிகவும் அதிகமாக இருக்கும்.

பழைய கார்தான் வாங்கப்போகிறேன் என்றதும், முதலில் முடிவு செய்ய வேண்டிய விஷயம், பட்ஜெட். உங்கள் பட்ஜெட்டை முடிவு செய்தபின் அதில் என்னென்ன கார்கள் எல்லாம் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பதைத் தேட வேண்டும். செய்தித்தாள் மற்றும் யூஸ்டு கார் இணையதளங்களைப் பார்த்தாலே உங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கிடைக்கும்.

உங்கள் பட்ஜெட்டைவிட 50,000 ரூபாய் அதிகம் இருந்தாலும், அந்த கார்களையும் நீங்கள் உங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். ஏன் என்றால், டீல் முடியும்போது அதை நீங்கள் 50,000 ரூபாய்க்குக் குறைத்தும் வாங்க முடியும்.

முழுத் தொகை கொடுத்து கார் வாங்க முடியாது, கடனில்தான் கார் வாங்கப்போகிறீர்கள் என்றால், வட்டி விகிதத்தில் கவனமாக இருங்கள். பெரிய கார் வாங்க வேண்டும் என்பதற்காக, அதிக விலைகொண்ட காரை கடனில் வாங்கினால், அதனால் பைசா பிரயோஜனம் இல்லை. உங்களுடைய ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய் என்றால், உங்களுடைய ஆண்டுத் தவணை 2.16 லட்சம் ரூபாயைத் தாண்டாமல் இருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, நீங்கள் 2010 மாடல் ஹோண்டா சிட்டி காரை ஐந்து லட்சம் ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஃபைனான்ஸ் மூலம் வாங்கும்போது மாதத் தவணை எப்படியும் 15,000 ரூபாய் வரை வரும். ஹோண்டா சிட்டி பொதுவாக, லிட்டருக்கு 13 கி.மீ மைலேஜ் தரும். மாதத்துக்கு நீங்கள் 1,500 கி.மீ வரை பயன்படுத்துவீர்கள் என்றால், மாதத்துக்கு 8,500 ரூபாய் வரை நீங்கள் பெட்ரோல் நிரப்ப வேண்டியிருக்கும்.

ஹோண்டா சிட்டி அதிக செலவு வைக்காத கார் என்பதால், ஆண்டுக்கு நீங்கள் அதிகபட்சமாக 5,000 ரூபாய் மெயின்டனன்ஸுக்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாக நீங்கள் நான்கு ஆண்டுகள் பழைய காருக்கு ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

அதனால், கார் வாங்கும்போது ஒட்டுமொத்தமாக எவ்வளவு செலவாகும் என்று தெளிவாகக் கணக்குப் போட்ட பின்பு காரை வாங்குவது நல்லது.
நான்கு, ஐந்து ஆண்டுகள் பழைய கார் என்றால், அதை முழுப் பணம் கொடுத்து வாங்குவதுதான் நல்லது. ஃபைனான்ஸ் மூலம் வாங்கும்போது அதன் வட்டி விகிதம் மிக அதிகமாக இருக்கும்.

நீங்கள் நான்கு லட்சம் ரூபாய்க்கு நான்கு ஆண்டுகள் பழைய காரை வாங்கிவிட்டு, அதை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எட்டு லட்சம் ரூபாயாகச் செலுத்துவீர்கள். நீங்கள் எட்டு லட்சம் ரூபாய் கட்டி முடிக்கும்போது, காரின் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் கீழே இருக்கும். இதனால், உங்களுக்கு எந்தப் பயனும் இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும்.

பிஎம்டபிள்யூ, ஆடி கார்களின் மேல் ஆசைகொண்ட பலர், பழைய கார் மார்க்கெட்டில் அந்த கார்களை வாங்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. மூன்று ஆண்டுக்கு மேலான கார்களை வாங்கும்போது, இதன் பராமரிப்புச் செலவு இன்னும் அதிகமாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதனால், பழைய கார் மார்க்கெட்டில் ஆடம்பரக் கார்களைத் தவிர்ப்பது நல்லது.

என்ன கார்?

2001 ஹோண்டா சிட்டி, மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்கிறது என்று வாங்க வேண்டாம். இதன் மெயின்டனன்ஸ் செலவுகள் அதிகம் இருக்கும்.
உங்கள் தேவையைப் பொறுத்து என்ன கார் என்பதை முதலில் தேர்ந்தெடுத்துவிடுங்கள்.

ஐந்து பேர் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய பெரிய செடான் காரா அல்லது எஸ்யுவியா? அதிக மைலேஜ் தரக்கூடிய காரா? உங்கள் தேவை என்ன என்பதை முடிவெடுக்க வேண்டும்.

இப்போது டீசல் கார்களுக்குத்தான் யூஸ்டு கார் மார்க்கெட்டில் மவுசு அதிகம். அதனால், கொஞ்சம் பெரிய காராகப் போகும்போது டீசல் காரை வாங்குவதே நல்லது. நீங்கள் விற்கும்போது அது நல்ல விலைக்கு விற்பனையாகும்.

ஹோண்டா ஜாஸ் எனக்கு மிகவும் பிடித்த கார் என்பவர்கள், தாராளமாக ஜாஸை வாங்கலாம். பெட்ரோல் கார் என்பதோடு, தற்போது விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டுவிட்டது என்பதால், ஜாஸ் குறைந்த விலைக்கு இப்போது பழைய கார் மார்க்கெட்டில் கிடைக்கிறது.

அதிக இட வசதிகொண்ட, சிறப்பம்சங்கள் அதிகம் உள்ள மிகச் சிறந்த காரான ஜாஸ், எட்டு லட்சம் ரூபாய் விலைக்கு வந்ததே அதன் தோல்விக்குக் காரணம். இது, பழைய கார் மார்க்கெட்டில் வாங்கும்போது 3-4 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கும் என்பதால், இதனைத் தாராளமாக வாங்கலாம்.

3-5 ஆண்டுகள் ஆன பழைய காரை வாங்குவதுதான் நல்லது. நீங்கள் அடுத்து ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தினாலும் அதிக செலவுகள் இருக்காது. ஆனால், அதற்கு மேற்பட்ட உதாரணத்துக்கு, 2001-ம் ஆண்டு ஹோண்டா சிட்டி மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்கிறது என்று வாங்க வேண்டாம். இதன் மெயின்டனன்ஸ் செலவுகள் அதிகமாக இருக்கும்.

பழைய கார் எப்போது வாங்க வேண்டும்?

எப்போதுமே சிங்கிள் ஓனர் கார்களை வாங்குவதே நல்லது. இரண்டு மூன்று பேர்களிடம் கைமாறிய கார் என்றால், அந்த கார்களின் பராமரிப்பு சரியாக இருக்காது!

சில நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளே ஓடிய கார்கள் விற்பனைக்கு வரும். இது நல்ல விலைக்குக் கிடைக்கும்போது, இதை வாங்கலாம். ஆனால், அந்த கார் எதனால் அவ்வளவு சீக்கிரத்தில் விற்பனைக்கு வருகிறது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். கார் வாங்கியவர் வெளிநாடு செல்கிறார் அல்லது பெரிய கார் ஏதும் வாங்க இருக்கிறார் என்பதைத் தாண்டி வேறு விஷயம் எதாவது இருந்தால், காரில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்று புரிந்துகொள்ளுங்கள்.

சில நேரங்களில் விபத்தில் சிக்கிய கார்கள், வங்கியில் வாங்கிய கடனை ஒழுங்காகச் செலுத்தாத கார்கள் அல்லது மைலேஜ் மிகவும் குறைவாகத் தரும் கார்கள் விற்பனைக்கு வரும். அதனால், இந்தப் புதிய கார்கள் மேல் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை கிட்டத்தட்ட எல்லா கார் ஷோரூம்களிலுமே கடந்த ஆண்டு மாடல் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த கார்களுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம், சில கார்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை டிஸ்கவுன்ட் கிடைக்கும்.

இது செம டீல். எந்தத் தேய்மானமும் இல்லாத புதிய காரை ஒரு லட்சம் ரூபாய் விலை குறைத்து வாங்க முடியும். இதில் உள்ள ஒரே மைனஸ், நீங்கள் விற்கும்போது ஒரு ஆண்டு கூடுதல் பழைய காராகச் சொல்ல வேண்டும் என்பதால், ரீ-சேல் மதிப்பு குறையும்.

பழைய கார் மார்க்கெட்டில் கார் வாங்கும்போது, விலையை மட்டும் பார்க்கக் கூடாது. மிக முக்கியமான விஷயம், கார் எப்படிப் பராமரிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். மிகச் சரியாகப் பராமரிக்கப்பட்ட காரை வாங்குவதே நல்லது.

அதேபோல, பழைய கார் மார்க்கெட்டில், பெரும்பான்மையாக சிங்கிள் ஓனர் கார்களை வாங்குவதே நல்லது. இரண்டு மூன்று பேர்களிடம் கைமாறிய கார் என்றால், அந்த காரின் மைலேஜ் குறைவாக இருக்கும் என்பதோடு, பராமரிப்பும் சரியாக இருந்திருக்காது. அதனால், அதைத் தவிர்த்துவிடலாம்.
வீடு பார்ப்பது போலத்தான். 'ஏற்கெனவே இரண்டு பேர் பார்த்துவிட்டார்கள், சாயங்கலாம் ஒருவர் புக் செய்யப் போகிறார்’ என்று சொன்னால், அதற்காக உடனடியாக முடிவெடுத்து, அட்வான்ஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

பழைய கார் எங்கே வாங்கலாம்?

டீலர்ஷிப்பில் வாங்குவதால் உள்ள ஒரே நன்மை, சில டீலர்கள் ஒரு ஆண்டு வாரன்டி கொடுக்கிறார்கள். இந்த வாரன்டி மூலம் எதாவது பிரச்னை என்று வந்தால், அவர்கள் சரிசெய்து தருவார்கள்.


பழைய கார் மார்க்கெட்டைப் பொறுத்தவரை, பழைய கார் ஷோரூம்களைவிட ஆன்லைன் மற்றும் பத்திரிகை விளம்பரங்களில் நேரடியாகவே வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு வாங்குவதுதான் நல்லது.

பழைய கார் ஷோரூம்களைப் பொறுத்தவரை, அங்கே இருக்கும் காரை நீங்கள் வாங்கினால், காரின் விலையைப் பொறுத்து 8,000 முதல் 20,000 ரூபாய் வரை டீலருக்கு கமிஷன் தர வேண்டியிருக்கும். உங்களுக்கான காரை முடிவு செய்துவிட்ட பின்பு, அங்கே இருக்கும் விற்பனையாளர் உங்கள் முன்பாகவே காரின் உரிமையாளருக்கு காரின் விலை குறித்துப் பேசுவார்.

அவர் உங்களுக்கு நண்பர் என்பது போலவும், நீங்கள் காரின் குறைகளாகச் சொன்ன விஷயங்களை எல்லாம் அவர் சொல்வார். சேல்ஸ்மேன் நமக்காக இவ்வளவு பேசுகிறாரே என்றெல்லாம் அவரை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு கார் வேண்டும்; அவருக்குக் காசு வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இங்கே நட்பு முக்கியம் இல்லை. அதனால், எப்போதுமே சேல்ஸ்மேன்களுடன் நட்பாகாமல், டீலீல் கவனம் செலுத்துவது நல்லது.

ஆன்லைன் மற்றும் செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் நீங்கள் நேரடியாக வாடிக்கையாளரைத் தொடர்பு கொள்ளும்போது, இந்த கமிஷன் தொகை இருக்காது. மேலும், நேரடியாக நீங்களே வாடிக்கையாளர்களிடம் பேசி, விலையைக் குறைக்க முடியும். தனியாரிடம் காரை வாங்கும்போது, அவர்களின் வீட்டுக்குச் சென்று காரைப் பார்ப்பதுதான் நல்லது.

அப்போதுதான் நாளை காரில் பிரச்னை என்று ஏதாவது வந்தால், அவர்களை மீண்டும் நீங்கள் பார்த்துக் கேட்க முடியும். மேலும், ஒரு நம்பகத்தன்மை வருவதற்கும் இது உதவும். சில நேரங்களில் திருட்டு கார்களை சிலர் இணையதளம் மூலம் விற்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.


டீலர்ஷிப்பில் வாங்குவதால் உள்ள ஒரே நன்மை என்னவென்றால், சில டீலர்கள் ஒரு ஆண்டு வாரன்டி கொடுக்கிறார்கள். இந்த வாரன்டி மூலம் எதாவது பிரச்னை என்று வந்தால், அவர்கள் சரிசெய்து தருவார்கள். ஆனால், கார் வாங்கும்போதே வாரன்டியில் என்னவெல்லாம் கவர் ஆகும் என்பதைக் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

பழைய கார் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும்?

கார் வாங்கச் செல்லும் முன்பு, அந்த காரைப் பற்றிய ஒரு புரிதலுடன் சென்றால், காரை விற்பனை செய்பவருக்கு உங்களிடம் கவனமாகப் பேச வேண்டும் என்பது புரியும்.

எப்போதுமே பிரச்னைக்குரிய காரை வாங்க வேண்டாம். அதாவது நீங்கள் காரைப் பார்க்கும்போது ஏ.சி ஓடவில்லை, பவர் ஸ்டீயரிங் வேலை செய்யவில்லை, பவர் விண்டோ வேலை செய்யவில்லை என எதாவது பிரச்னை இருந்து, அந்த காரை அதன் உரிமையாளர் குறைந்த விலைக்கு விற்றாலுமே அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

ஏ.சி சரிசெய்துகொள்ளலாம் என நீங்கள் வாங்கிய பின்பு, அது அந்தச் செலவோடு முடியாது. தொடர்ந்து பல செலவுகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

பழைய காரை வாங்கும்போது, மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், ஓடோ மீட்டர் ரீடிங். பெட்ரோல் கார் என்றால், ஆண்டுக்கு பொதுவாக 12,000 கி.மீ வரை அந்த கார் பயணித்திருக்கலாம். டீசல் கார் என்றால், ஆண்டுக்கு 15,000 கி.மீ என்பது ஓகே. இதற்கு மேல் அதிகமாகப் பயணித்திருந்தால், அந்தக் கார் மிகவும் ரஃப்பாக ஓட்டப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

மூன்று ஆண்டுகள் பழைய கார் 50,000 கி.மீ-க்கு மேல் ஓடியிருக்கிறது என்றால், அந்த காரை வாங்காமல் தவிர்ப்பதே நல்லது. மிகவும் குறைவான விலைக்குக் கிடைக்கிறது என்றால் மட்டுமே வாங்கலாம்.

சர்வீஸ் ஹிஸ்டரி மிகவும் முக்கியம். எப்போதெல்லாம் காரை சர்வீஸ் செய்திருக்கிறார்கள் என்கிற விவரங்களை வாங்கிவிடுங்கள். சர்வீஸ் ஹிஸ்டரி இல்லாத கார்களை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

ஒரு காரைப் பார்க்கப் போகும் முன்பு மோட்டார் விகடன் அல்லது இணையதளங்களில் அந்த காரின் நிறை, குறைகள் என்னவென்று படித்துவிட்டுச் செல்லுங்கள். அந்த காரின் பவர் என்ன? அது எந்த ஆண்டு மாடல்? அதில் இருக்கும் வசதிகள் என்னென்ன என்று ஒரு புரிதலுடன் செல்வது பயன்தரும்.

டெண்ட், ஸ்கிராட்ச் என ஏதும் இருக்கிறதா என காரின் வெளிப்பக்கத்தை முழுமையாகப் பாருங்கள். காருக்கு அடியில் துருப்பிடித்திருக்கிறதா என்று பார்ப்பது முக்கியம். கார் ரீ-பெயின்ட் செய்யப்பட்டிருக்கிறதா என்றும் கவனியுங்கள்.

விண்ட் ஷீல்டைக் கவனிப்பது அவசியம். விண்ட்ஷீல்டு உடைந்திருக்கிறதா அல்லது வைப்பர் ஒழுங்காக வேலை செய்யாமல் கீறல் விழுந்திருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியம். ஏனென்றால், விண்ட் ஷீல்டின் விலை அதிகம். விண்ட் ஷீல்டை மாற்ற குறைந்தபட்சம் 7,000 ரூபாய் வரை செலவாகும். காரின் பின்பக்க வைப்பர்கள் வேலை செய்கிறதா என்றும் பாருங்கள்.

டயர்களின் கண்டிஷன் மிகவும் முக்கியம். ஐந்து டயர்களும் நல்ல கண்டிஷனில் இருக்கிறதா? எவ்வளவு கி.மீ ஓடியிருக்கிறது? தேய்மானம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். காரின் ஒரிஜினல் டயர் இல்லாமல், வேறு ஏதும் விலை மலிவான டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றனவா என்றும் பாருங்கள். டயர்களை மாற்ற வேண்டுமானால், குறைந்தபட்சம் 15,000 ரூபாய் வரை செலவாகும் என்பதால், இதில் கவனம் தேவை.

ரிமோட் கீ என்றால், இரண்டு சாவிகளுமே சரியாக வேலை செய்கிறதா என்று பாருங்கள். ரிமோட் மூலம் டிக்கியைத் திறக்க முடிகிறதா என்றும் பாருங்கள்.

இருக்கைகள் மற்றும் சீட் பெல்ட்டுகள் சரியான கண்டிஷனில் இருக்கிறதா என்று பாருங்கள். சீட் கவர்களை அகற்றிவிட்டுப் பார்ப்பது அவசியம்.

ஹெட்லைட், பனி விளக்குகள், காரின் உள்ளே இருக்கும் விளக்குகள் மற்றும் ஹார்ன் சரியாக வேலை செய்கிறதா என்று பாருங்கள்.

பவர் விண்டோ மற்றும் உள்ளே இருந்தபடியே அட்ஜஸ்ட் செய்யும் எலெக்ட்ரானிக் ரியர் வியூ மிரர் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள். ரிவர்ஸ் சென்ஸார் அல்லது கேமரா இருந்தால், அந்த வசதிகள் சரியான முறையில் இயங்குகிறதா என்று பார்ப்பது அவசியம்.

காரின் கன்ட்ரோல்கள் அனைத்தையும் சரியாக செக் செய்யுங்கள். மியூஸிக் சிஸ்டம், யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ்-இன் ப்ளக் அனைத்தும் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள்.

ஏ.சி, பின்பக்க ஏ.சி, ஹீட்டர் அனைத்தும் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள். ஏ.சி வென்ட்டுகளை ஒழுங்காகத் திறந்து மூட முடிகிறதா என்றும் பாருங்கள். வென்ட்டுகளில் இருந்து ஆயில் வாசனை வந்தால், இன்ஜின் ஆயில் லீக் இருக்கிறது என்று அர்த்தம். இப்போது பல கார்களில் கூல்டு க்ளோவ் பாக்ஸ் வசதி உள்ளது. அதனால், க்ளோவ் பாக்ஸ் கூல் ஆகிறதா என்று பார்ப்பதும் அவசியம்.

காரின் பானெட்டைத் திறந்து பாருங்கள். இங்கே, எல்லாம் அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஆயில் நாற்றம் அல்லது இன்ஜின் பகுதியில் பெரிய அளவில் ஏதாவது ரிப்பேர் செய்யப்பட்டிருந்தால், அது தெரிந்துவிடும். பேட்டரி, அதன் கேபிள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். கார் பேட்டரியை மாற்ற குறைந்தது 5,000 ரூபாய் செலவாகும்.

காரின் கன்ட்ரோல்கள் அனைத்தையும் சரியாக செக் செய்யுங்கள். மியூஸிக் சிஸ்டம், யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ்-இன் ப்ளக் அனைத்தும் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள்.

காருக்கு அடியில் குனிந்து, ஏதேனும் ஸ்கிராட்ச் மற்றும் துருப் பிடித்திருக்கிறதா என்று கவனித்துப் பாருங்கள்!
டெஸ்ட் டிரைவ் செய்யுங்கள்.

குண்டும் குழியுமான சாலைகள், நெடுஞ்சாலை, நகர நெருக்கடி மிகுந்த சாலை என எல்லாவிதமான சாலைகளிலும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது காரை ஓட்டிப் பாருங்கள்.

எந்த காரையும், ஓட்டிப் பார்த்து டெஸ்ட் செய்யாமல் வாங்கவே கூடாது. காரின் உரிமையாளர் அல்லது டீலர்ஷிப் சேல்ஸ்மேனோடு காரை டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். காரை டெஸ்ட்செய்யும் முன்பு, காரின் கன்ட்ரோல்கள் என்னென்ன என்பதை ஒருமுறைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆட்டோமேட்டிக் காரில் கிளட்ச்சைத் தேடிக்கொண்டிருந்தால், காரின் உரிமையாளர் உங்களை ஒன்றும் தெரியாத ஆசாமி என்று எடை போட்டுவிடுவார்.

 குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது நீங்கள் காரை ஓட்டிப் பார்க்க வேண்டும். குண்டும் குழியுமான சாலைகள், நெடுஞ்சாலை, நகர நெருக்கடி மிகுந்த சாலை என எல்லாவிதமான சாலைகளிலும் ஓட்டிப் பாருங்கள். காரை ஸ்டார்ட் செய்ததும், கியர் லீவரில் அதிகமாக அதிர்வுகள் ஏற்படுகிறதா என்று பாருங்கள்.

கியர்களை மாற்றிவிட்டு, கிளட்ச்சை ஃபீல் செய்துபாருங்கள். கிளட்சை அழுத்தி மிதிக்க வேண்டியிருக்கிறதா? காரின் பவர் போதுமானதாக இருக்கிறதா? ஆக்ஸிலரேஷன் சரியாக இருக்கிறதா என்று கவனியுங்கள். 5 அல்லது 6 கியர்களையும் சரியான இடைவெளிகளில் மாற்றி, கியர்கள் எந்தத் தாமதமும் இல்லாமல் ஸ்லாட் ஆகிறதா என்று பாருங்கள்.

பிரேக் சரியாகப் பிடிக்கிறதா? பிரேக் பிடிக்கும்போது சத்தம் எதுவும் அதிகமாகக் கேட்கிறதா என்றும் பாருங்கள். காரை மேட்டில் நிறுத்தி ஹேண்ட் பிரேக்கை அழுத்திவிட்டு, கார் சரியாக நிற்கிறதா என்று பாருங்கள்.

நெடுஞ்சாலையில் காரை ஓட்டும்போது, கார் ஸ்டேபிளாக இருக்கிறதா அல்லது அலைபாய்கிறதா என்று பாருங்கள். அதிக வேகத்தில் செல்லும்போது ஸ்டீயரிங் கிரிப்பாக இருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியம்.
பழைய கார் மார்க்கெட்டில்      வாங்கக்கூடிய நல்ல கார்கள்!

ஹூண்டாய் ஆக்ஸென்ட்

1.5 - 2 லட்சம் ரூபாய்க்குள் 2006- 2007-ம் ஆண்டு ஆக்ஸென்ட் கார்கள் கிடைக்கும். இட வசதி அதிகம்கொண்ட, மெயின்டனன்ஸ் செலவுகள் குறைவான கார், ஆக்ஸென்ட். பெரிய கார்தான் என்றாலும் ஆக்ஸென்ட்டில் பவர் விண்டோ, ஏ.சி-யைத் தவிர, பெரிய சிறப்பம்சங்கள் எதுவும் இல்லை.

டொயோட்டா கரோலா

2006-2007 மாடல் கரோலா கார்கள் 3 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கின்றன. பிரச்னை இல்லாத இன்ஜின் கொண்ட கார் கரோலா. மெயின்டனன்ஸ் செலவுகளும் குறைவு. இடவசதி அதிகம் என்பதோடு, ஐந்து பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்கலாம். இது நகருக்குள் லிட்டருக்கு 10-11 கி.மீ, நெடுஞ்சாலையில் 14-16 கி.மீ மைலேஜ் தரும். இந்த கார் யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்குவது லாபம். ஆனால், சிங்கிள் ஓனர் கார் என்றால் மட்டுமே வாங்குவது நல்லது. சர்வீஸ் ஹிஸ்டரியைப் பார்த்துவிட்டு வாங்குங்கள்.

ஹூண்டாய் வெர்னா

வெர்னாவைப் பொறுத்தவரை, பெட்ரோல் கார்களைத் தவிர்ப்பது நல்லது. டீசல் வெர்னா பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜில் கில்லி. 2006-2007 மாடல் வெர்னா கார் 3.50 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கும். ஆனால் 2006-ம் ஆண்டு வந்த முதல் தலைமுறை வெர்னா கார்களில், சஸ்பென்ஷன் மற்றும் பவர் ஸ்டீயரிங்கில் பிரச்னைகள் இருந்தன. அதனால், டீல் பேசும்போது இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மேலும், டீசல் என்பதால், ஒரு லட்சம் கி.மீ தாண்டிய கார்கள்தான் விற்பனைக்குக் கிடைக்கும். அதனால், சர்வீஸ் ஹிஸ்டரியைப் பார்த்து வாங்குங்கள்.

ஹூண்டாய் ஐ10 ஆட்டோமேட்டிக்

நான்கு ஆண்டுகள் பழைய ஐ10 கார்கள் 2.5 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கும். இது நகருக்குள் 12 கி.மீ, நெடுஞ்சாலையில் 16 கி.மீ வரை மைலேஜ் தரும். ஆனால், ஐ10-ல் நான்கு பேர் மட்டுமே வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும்.

மாருதி ஆல்ட்டோ

புதிய கார் மார்க்கெட்டில் மட்டும் அல்ல... பழைய கார் மார்க்கெட்டிலும் ஆல்ட்டோ ஹாட் கேக்தான். இரண்டு லட்சம் ரூபாய்க்குள் நல்ல ஆல்ட்டோ காரை வாங்கலாம். ஆனால், சின்ன குடும்பம் என்றால் மட்டுமே இந்த காரை வாங்கலாம். இல்லை என்றாலும் இதே விலைக்கு வேறு நல்ல கார்கள் இருக்கின்றன.

மிட்சுபிஷி லான்ஸர் சிடியா

சிடியா வெர்ஷனாக வெளிவந்த மிட்சுபிஷி லான்ஸர் கார்களை வாங்கலாம். நல்ல கண்டிஷன் சிடியாவும் 3.50 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கும். இது நகருக்குள் 9 கி.மீ, நெடுஞ்சாலையில் 13-14 கி.மீ மைலேஜ் தரும். ஆனால், மிட்சுபிஷிக்கு டீலர்ஷிப்புகள் மிகவும் குறைவு என்பதோடு, காரின் இருக்கைகள் மிகவும் உயரம் குறைவாக இருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களுக்கு காருக்குள்ளே போவதும், வருவதும் சிரமமாக இருக்கும்.

மாருதி ஸ்விஃப்ட்

நோ-நான்சென்ஸ் கார் என்றே இதைச் சொல்லலாம். பெட்ரோல், டீசல் இரண்டு கார்களுமே யூஸ்டு கார் மார்க்கெட்டில் நல்ல டீலுக்குக் கிடைக்கும். மாருதி கார்களைப் பொறுத்தவரை ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் பாகங்களின் விலை குறைவு என்பதற்காகவே, அதிக அக்கறை இல்லாமல் கார்களை சிலர் பயன்படுத்தியிருப்பார்கள். அதனால், பொதுவாக பழைய கார் மார்க்கெட்டுக்கு வரும் கார்களில் ஏராளமான ஸ்கிராட்ச் மற்றும் டெண்டுகள் இருக்கும். இதைச் சரியாகப் பார்த்து, இதற்கு ஏற்றபடி விலையைக் குறைத்து டீலை முடிப்பதுதான் சாமர்த்தியம்.

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ டீசல்தான் பழைய கார் மார்க்கெட்டில் நம்பர் ஒன் கார். அதிக மைலேஜ் மற்றும் ஸ்டெபிளிட்டியில் சிறந்த கார் ஃபிகோ. ஆனால், குறைந்தபட்சம் 60,000-70,000 கிமீ-க்கு மேல் ஓடிய கார்கள்தான் பழைய கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும். இந்தச் சமயத்தில் இன்ஜின், சஸ்பென்ஷன் உள்ளிட்டவற்றில் சில பாகங்களை மாற்ற வேண்டிவரும். இதனால், அதிக கி.மீ ஓடிய கார் என்றால்,  சர்வீஸ் ஹிஸ்டரியைப் பார்த்து என்ன பாகங்கள் எல்லாம் மாற்றியிருக்கிறார்கள், அடுத்த சர்வீஸில் என்ன எல்லாம் மாற்ற வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு வாங்குவது நல்லது.

ஹோண்டா சிவிக்

2008-2009 மாடல் சிவிக் கார்கள் நான்கு லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்குக் கிடைக்கும். பெர்ஃபாமென்ஸ், பாதுகாப்பு, சிறப்பம்சங்கள் அனைத்திலும் சிறந்த கார் சிவிக். ஆனால், இது 'ஞி’ செக்மென்ட் கார் என்பதை நினைவில் இருக்கட்டும். நீங்கள் நான்கு லட்சம் ரூபாய்க்கு காரை வாங்கினாலும், இதன் ஸ்பேர் பார்ட்ஸ் 15 லட்சம் ரூபாய் காருக்கு ஏற்ற வகையிலே இருக்கும்.

பழைய கார் வாங்குவது தவிர்க்க வேண்டியவை:

மெயின்டனன்ஸ் செலவுகள் அதிகம், மைலேஜ் குறைவு, ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பதில்லை போன்ற காரணங்களால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கார்களைத் தவிர்த்தல் நலம்.

மாருதி பெலினோ, ஃபோர்டு எஸ்கார்ட், ஃபியட் சியன்னா,  ஃபியட் பேலியோ, யுனோ, 2004 ஆண்டுக்கு முந்தையை மிட்சுபிஷி லான்ஸர், ஓபல் ஆஸ்ட்ரா,  ஓபல் கோர்ஸா, செவர்லே ஆப்ட்ரா, ஃபோர்டு ஐகான், ஹோண்டா சிஆர்-வி, ஃபோர்டு எண்டேவர், டாடா சியரா, டாடா சஃபாரி.

Subscripe to our mailing list for more articles like Buying used car's is Profitable: பழைய கார் வாங்குவது லாபமா?

Corporate Agriculture in Tamil: 'பணத்தோட்டம்' | ஒரு விவசாய புரட்சியை நோக்கி உங்களை இழுத்துச் செல்ல? பாகம் - 2

0 comments
Corporate Agriculture in Tamil: 'பணத்தோட்டம்' |  ஒரு விவசாய புரட்சியை நோக்கி உங்களை இழுத்துச் செல்ல?  பாகம்  - 2:

Corporate Agriculture
Corporate Agriculture in Tamil
'விவசாயம் நல்ல லாபம் தரும் தொழிலா?' என்பது உட்பட பல கேள்விகளைக் கடந்த இதழில் எழுப்பியிருந்தோம். அதை மேற்கொண்டு விவாதிக்கும் வகையில்... இன்னொரு கேள்வி!

பின் வரும் நிறுவனங்களை உங்கள் பார்வையில் எப்படி நினைக்கிறீர்கள்?

ஐ.டி.சி., ஹிந்துஸ்தான் லீவர், ரிலையன்ஸ், பெப்சி, கோகோ கோலா, பாரதிடெல், கோத்ரெஜ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா... இப்படிப்பட்ட நிறுவனங்களின் பெயரைச் சொன்னாலே, சிகெரெட், சோப், ஷாம்பூ, பற்பசை, பெட்ரோலியப் பொருட்கள், ஜவுளி, குளிர்பானங்கள், தொலைபேசி, மாட்டுத் தீவனம், ஸ்கார்பியோ கார், டிராக்டர் இவைதானே வரிசையாக உங்களுக்கு ஞாபகம் வரும்.

இன்று இந்நிறுவனங்கள் வேறு ஒரு விஷயத்தையும் தங்களின் அடையாளமாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றன. அந்த வேறொரு விஷயம்... இன்று பலரும் 'ஐயோ ஆளவிடுங்க சாமி' என்று பயந்து, தலைதெறித்து ஓடத்தயாராக இருக்கும் விவசாயம்தான்!

ஆம், இந்த நிறுவனங்கள் மட்டுமல்ல... வேறு பல நிறுவனங்களும் கூட விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த துறைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இன்றைக்கு மின்னல் வேகத்தில் இறங்கிக் கொண்டிருக்கின்றன.

உங்களில் பலரும் சொல்வது... 'விவசாயம், லாபம் தரும் ஒரு தொழில் இல்லை'. அது உண்மை என்றால், லாபம் குவிப்பதை லட்சியமாகக் கொண்டிருக்கும் பெரியபெரிய நிறுவனங்கள் எல்லாம் எப்படி அதில் இறங்குவார்கள்? ஒரே ஒரு வித்தியாசம்; இவர்கள் எதைச் செய்தாலும் பெரிய அளவில் செய்கிறார்கள்.

மொத்த வியாபாரம் மாதிரி!

மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில் ஒருங்கிணைப்பு ( consolidation ) மற்றும் வியாபார அளவு ( Scale) முக்கியமென்பார்கள். நேரடியாக விவசாயத்தில் இறங்காமல், இடைத்தரகர்களைத் தவிர்த்து, தரமான விளைபொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு உதவி செய்து, அதனை கொள்முதல் செய்து லாபம் பார்க்கின்றன இந்த நிறுவனங்கள்.

விவசாயிகள் அதிகமான லாபத்தைக் காண வேண்டுமானால், பெரிய நிறுவனங்களின் வியாபாரத் தந்திரத்தை தங்களது விளைபொருட்கள் உற்பத்தியில் காட்ட வேண்டும். அதாவது, ஒருங்கிணைப்பு மற்றும் விவசாயத்தின் அளவு! இந்த தந்திரங்கள் இரண்டு பெரிய விளைவை உண்டு பண்ணும்.

ஒன்று ஆண்டு முழுவதும் நிலையான வருமானத்தை விவசாயத் தொழிலுக்குத் தரும்... இரண்டாவது, விளைபொருட்களை உற்பத்தி செய்யும் செலவு குறையும். இதனால் மக்களுக்கு விற்கும் விலையில் மாற்றமில்லாமல், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
பெரிய நிறுவனங்களைப் போல, விவசாயமும் ஒரு பிரமாண்டமான தொழிலாக, ஏனைய தொழில்களோட போட்டிபோட வேண்டுமென்றால், நாமும் பெரிதாக வளர வேண்டும்.

நம் கைகள் இணைய வேண்டும். இதைத்தான் நமது வாசகர் சிவசங்கரன், 'இமெயில்' மூலம் ஆர்வத்துடன் விவரித்திருக்கிறார். இவரின் ஈடுபாடும் மண்ணின் மீது இவர் வைத்திருக்கும் பாசமும் நம்மை வியக்க வைக்கிறது. இன்றைய தேதியில் உலகின் எல்லாவித வளர்ச்சிக்கும் முன்னணி நாடாக பெரும்பாலோர் சுட்டிக் காட்டும் நாகரிக தேசமான அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கிறார் சிவசங்கரன்.

'பட்டனைத் தட்டிவிட்டா ரெண்டு இட்லியும் சட்னியும் பட்டுனு பக்கத்தில் வந்துடணும்' என்று 'கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணன் சொல்வது போல... வசதி-வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லாத அப்படிப்பட்ட தேசத்தில் வசிக்கும் அவரின் மனமே மண்ணை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது.
சரி..., சிவசங்கரன் என்ன தான் எழுதியிருக்கிறார்?


'உங்கள் பணத்தோட்டம் கட்டு ரையைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகெ £ள்ள ஆவலாக உள்ளேன். பிரச்னைகளுக்கு மத்தியில் வாழும் நம் விவசாயிகளைப் பற்றியும், அவர்களின் மீது அக்கறை காட்டாத நம் அரசைப் பற்றியும் எனக்கு எப்போதுமே கவலை உண்டு. எந்த ஒரு நாட்டின் பொருளா தாரத்துக்கும் முதுகெலும் பானவர்கள் விவசாயிகள்தான்.

அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பதோடு நாம் உண்ணும் ஒவ்வொரு கவளம் சோற்றுக்கும் நன்றி செலுத்தி விட்டுத்தான் உண்ண வேண்டும்.

அந்நியச் செலாவணியைக் கொண்டுவரும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நமது முழுக்கவனத்தையும் செலுத்தினால் ஏகப்பட்ட பணம் குவியும். ஆனால், ஒரு காலகட்டத்தில் உணவை இறக்குமதி செய்வதற்காக இப்பணம் மொத்தத்தையும் நாம் திருப்பிச் செலவு செய்யவேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

விவசாயத்தைப் பற்றிய நம் மக்களின் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். நம் நாட்டின் இதயமே அங்குதான் இருக்கிறது. நான் தமிழக கிராமத்தைச் சேர்ந்தவன் என்றாலும் எனக்கென்று சொந்தமாக விவசாய நிலம் இருந்ததில்லை. ஆனால், இனி வரும் காலங்களில் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருக்கிறது. கொஞ்ச காலமாகவே கூட்டுறவு முறையில் விவசாயப் பண்ணை அமைக்க வேண்டும் என்று ஒரு திட்டம் என்னுள் ஊறிக்கொண்டிருக்கிறது.

கிராமங்களில் வளர்ந்தவன் என்கிற வகையில், வரப்புகளால் விவசாய நிலங்கள் பிரிக்கப்பட்டி ருப்பதைப் பார்த்திருக்கிறேன். தாத்தாவிடமிருந்து தந்தைக்கும் அவர் சகோதரர்களுக்கும் பின் பேரன்களுக்கும் என பிரிந்து வருகையில், பயிரிடும் இடம் சுருங்கி வரப்புகள் அதிகரிக்கும்! ஒரு கால கட்டத்தில் மிகச் சிறிய இடமே மிஞ்சும். இதைப் பார்க்கையில் வரப்புகளால் இப்படி இடம் வீணாகிறதே என என் மனம் வருந்தும்.

நாம் என்ன செய்ய வேண்டும்? விவசாய விளை நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்; அனைவரும் பங்குதாரர்களாக இணைந்து ஒரு அமைப்பைத் துவங்க வேண்டும். வரப்புகள் உடைந்து... நிலப்பரப்பு விரியும் பட்சத்தில் லாபமும் கூடும்.

நாம் எல்லோருமே உரிமையாளர் களாகிவிட்டதால், அதற்குத் தக்க ஒவ்வொருவரும் நம் உழைப்பையும் தேவையான பணத்தையும் கொடுப்போம். நிச்சயமாக அதிக வருவாயை ஈட்ட முடியும்.
விவசாய சமூகத்தையே ஒருங்கிணைக்கும் இத்திட்டம் 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதை நிச்சயம் புரியவைக்கும். முக்கியமாக, வரப்புச் சண்டைகள் ஓய்ந்து சமூக அமைதி நிலவும்!


நம் விவசாயிகளின் வாழ்க்கையில் மீண்டும் 'பசுமை'யைக் கொண்டுவரும் உங்கள் முயற்சிக்கு எனது நன்றி.
அன்புடன்
சிவசங்கரன்'


இவரைப் போல பலரும் இ-மெயில், கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாக இந்த விவாதத் தொடரில் நம்மோடு இணைந்த படி இருக்கிறார்கள். அவர்களில் பலரும் விவசாயத்தில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள், விவசாயத் தொழிலில் ஈடுபடும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

அதற்கு முதலில் நமது மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டும். விவசாயத்தை தொழிலாக பார்க்க வேண்டும்.
சரி... விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றும்போது எப்படி இந்த மாற்றம் ஒரு உயரிய சமூக மேம்பாட்டை உருவாக்கும்?

விவசாய புரட்சி தொடரும் 
Thanks to Pasumai Vikatan

Special Agricultural Zones: 'பணத்தோட்டம்' |  ஒரு விவசாய புரட்சியை நோக்கி உங்களை இழுத்துச் செல்ல?  பாகம்  - 1

30 Vagai Samayal: 30 Vagai Dosai Samaiyal | 30 வகை தோசை சமையல்

0 comments
Featuring 30 Dosai Samaiyal 30 வகை தோசை சமையல். On this சமையல் Post we have 30 Vagai Dosai Samaiyal Recipes.

மரவள்ளிக் கிழங்கு தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி - 1 கப், மரவள்ளிக் கிழங்கு - சிறியதாக 1, காய்ந்த மிளகாய் - 6, சீரகம் - 1 ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, 3 முறை பால் போக நன்கு கழுவிக் கொள்ளவும். புழுங்கலரிசியை கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றை அரைத்து, அதோடு கிழங்கையும் சேர்த்து அரைக்கவும்.

பின்னர் ஊறிய அரிசியையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். (ஆட்டுரல் இல்லாதவர்கள் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைக்கலாம்)
ஆட்டிய மாவை தோசை ஊற்றும் பக்குவத்தில் வைத்துக் கொண்டு மெல்லிய தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி விட்டு, எண்ணெய்விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும். எல்லோரும் சாப்பிட ஏற்ற ஆரோக்கிய தோசை இது.

தக்காளி தோசை

தேவையானவை:

பச்சரிசி - ஒன்றே கால் கப், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், தக்காளி - 4, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயம் - பாதி சுண்டைக்காய் அளவு, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசியையும், உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்).

தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். சீரகம், பெருங்காயம், ஊறிய மிளகாய் ஆகியவற்றை முதலில் அரைத்துக் கொண்டு, பின்னர் பச்சரிசி, தேங்காய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும். அரைபட்டதும் தக்காளியையும் போட்டு நன்றாக ஆட்டவும்.

பின்னர் உப்பு சேர்த்து, அனைத்தையும் கலக்கி ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு, வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.

கலர்ஃபுல்லாக கண்ணைப் பறிக்கும் இந்த தக்காளி தோசைக்கு, கொத்துமல்லிச் சட்னி மேலும் சுவை கூட்டும்.

கேழ்வரகு தோசை

தேவையானவை:

கேழ்வரகு மாவு - 1 கப், ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் - 15, பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்). வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும்.

மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கி விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சீரகத்தை தேய்த்துப் போட்டு தோசைக்கல்லை காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி சூடாக இருக்கும்போதே பரிமாறவும்.

இதற்கு காரச் சட்னி ஏற்ற ஜோடி.

பரங்கிக்காய் அடை

தேவையானவை:

புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், துவரம்பருப்பு - முக்கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 10, சோம்பு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, சின்ன வெங்காயம் - 6, உப்பு - தேவைக்கேற்ப, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு, பிஞ்சு பரங்கிக்காய் - 1 துண்டு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பரங்கிக்காயை தோல் சீவி, துருவிக்கொள்ளவும். அரிசியைத் தனியாகவும், பருப்புகளைத் தனித்தனியாகவும் ஊற வைக்கவும். மிளகாயை தண்ணீரில் ஊற வைக்கவும்.

2 மணி நேரம் கழித்து சோம்பு, மிளகாய், உப்பு, வெங்காயம் மற்றும் பெருங்காயத்தை விழுதாக அரைத்தெடுக்கவும். மிக்ஸியில் முதலில் உளுத்தம்பருப்பை போட்டு, சற்று பெருபெருவெனவும், பின்னர் அரிசியையும் அதே மாதிரி அரைத்தெடுக்கவும்.

பாசிப்பருப்பை ஒரு சில விநாடிகள் மட்டும் அரைக்கவும். துவரம்பருப்பையும் ஒன்றிரண்டாக அரைத்தெடுத்து, அனைத்தையும் அரைத்த மிளகாய் விழுதுடன் ஒன்றாக கலந்து அதில் மல்லித்தழையைக் கலக்கவும்.

பின்னர் தோசைக்கல்லை சூடு செய்து, இந்த மாவை மெல்லிய அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு, அடையின் மேல் துருவிய பரங்கிக்காயைத் தூவி கரண்டியால் அழுத்திவிட்டு, பின் அடையை திருப்பிவிட்டு எண்ணெய் ஊற்றி, நன்கு மொறுமொறுவென வெந்ததும் எடுக்கவும்.

(ஈரப்பதம் இருக்கும்போதே பரங்கிக்காய் துருவலைத் தூவ வேண்டும்.

தூதுவளை தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி - 1 கப், தூதுவளை இலை - 15, மிளகு - 10, சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் + நெய் - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸியிலோ, ஆட்டுக்கல்லிலோ பச்சை மிளகாய், மிளகு, சீரகம், தூதுவளை இலை, உப்பு சேர்த்து நன்றாக ஆட்டவும்.

பின்னர் தோசைக்கல்லில் இந்த மாவை மிக மெல்லிய ஊத்தப்பம் போல ஊற்றி நெய் + எண்ணெயைக் கலந்து அதை சுற்றிவர ஊற்றி, திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

மார்பில் சளிக்கட்டியிருந்தால் அதை குணப்படுத்தும் தன்மை உள்ளது இந்த தோசை. ஆனால், சூடாக சாப்பிட்டால்தான் சுவை.

ஆப்பம்

தேவையானவை:

பச்சரிசி - 1 கப், புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - கால் கப், வெந்தயம் - 1 டீஸ்பூன், ஜவ்வரிசி - 3 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - கல்லில் தடவ தேவையான அளவு, தேங்காய் (துருவியது) - 1 மூடி, சர்க்கரை - அரை கப்.

செய்முறை:

அரிசி, பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து ஆட்டி, உப்பு சேர்த்து கலக்கவும்.

 பின்னர் ஜவ்வரிசியில் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, ஜவ்வரிசி வேகும்வரை காய்ச்சி, ஆறியதும் மாவுடன் கலந்து வைக்கவும் (12 மணி நேரம்). காலையில் நன்கு மாவை கலக்கி விடவும்.

தேங்காயைத் துருவி, மிக்ஸியில் போட்டு, முதலில் கெட்டிப்பால், பிறகு தண்ணீர்பால் என மொத்தம் இரண்டரை டம்ளர் எடுக்கவும். சர்க்கரை சேர்த்து அதைக் கலந்துகொள்ளவும்.

தோசைக்கல்லில் ஒரு சிறிய துணி கொண்டு, எண்ணெயைத் தொட்டு தடவி பின்னர் ஆப்ப மாவை எடுத்து ஆப்பமாக ஊற்றி எடுத்து, அதில் தேங்காய்ப்பாலை விட்டு பரிமாறவும்.

குறிப்பு: ஜவ்வரிசி காய்ச்சி ஊற்றுவதற்கு பதில், 1 கைப்பிடி பச்சரிசி சாதம் போட்டும் மாவுடன் ஆட்டலாம். ஆப்ப சோடா சேர்க்கத் தேவையில்லை.

மைதா மாவு தோசை

தேவையானவை:

மைதா மாவு - 1 கப், பச்சரிசி மாவு - முக்கால் கப், உப்பு - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 15, பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - 10, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, எண்ணெய் - (தோசை சுடுவதற்கும், தாளிப்பதற்கும்) தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு வளையங்களாக நறுக்கவும். மிளகை உடைத்துக்கொள்ளவும்.

மைதா, பச்சரிசி மாவு, உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து ரவா தோசைக்கு கரைப்பதுபோல் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, சீரகம், மிளகு போட்டு தாளித்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில் கொட்டவும். அத்துடன் மல்லித்தழை சேர்த்து கலக்கவும்.

சூடான தோசைக் கல்லில் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையாக ஊற்றி எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு எண்ணெய் விட்டு நன்றாக மொறுமொறுப்பாக சிவக்க வெந்ததும் எடுக்கவும். வரமிளகாய் சட்னியுடன் இந்த தோசையை சாப்பிட்டால், சூப்பரோ சூப்பர்.

வெல்ல தோசை

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப், வெல்லம் (பொடித்தது) - 1 கப், பச்சரிசி - கால் கப் (அல்லது பச்சரிசி மாவு - கால் கப்), தேங்காய் (துருவியது) - கால் மூடி, ஏலக்காய் - 4, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

ஊறிய பச்சரிசியை ஆட்டி, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும்.

பின்னர் கோதுமை மாவு, வெல்ல நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.

வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.

ஆலு வெந்தயக்கீரை தோசை

தேவையானவை:

தோசைக்கான மாவுக்கு: இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - 1 கப், உளுத்தம்பருப்பு - இரண்டரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு. உருளைக்கிழங்கு மசாலுக்கு: சின்ன உருளைக்கிழங்கு - கால் கிலோ, தக்காளி - 1, வெங்காயத் தாள் - 1 செடி, பெரிய வெங்காயம் - 1, வெந்தயக்கீரை - 1 கட்டு, மிளகாய்தூள் - கால் டீஸ்பூன், தூள் உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 6 டீஸ்பூன், வெண்ணெய் - 1 பாக்கெட்.

செய்முறை:

இட்லி அரிசியையும், உளுத்தம்பருப்பையும் தனித்தனியே ஊற வைத்து (2 மணி நேரம்), பின் நன்றாக ஆட்டவும். உப்பு சேர்த்து முதல் நாள் மாலையே கலக்கிவைக்கவும் (12 மணி நேரமாவது புளிக்க வேண்டும்).

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நான்காகவோ அல்லது எட்டாகவோ நறுக்கவும். வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியையும் வெங்காயத் தாளையும் பொடியாக நறுக்கவும்.

வெந்தயக் கீரையில் இலைகளை எடுத்து அலசி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயத்தாள், கீரை ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அதோடு தூள் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வெந்ததும், சற்று சேர்ந்தாற்போல் இருக்கும்போது (வறண்ட பொரியல் மாதிரி இல்லாமல்) இறக்கவும். இதுதான் ஆலு மசாலா.

பின்னர் தோசைக்கல்லை காயவைத்து அதில் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி மூடி, வெந்ததும் அதன் மேல் சிறிது வெண்ணெயை எடுத்து ஸ்பூனால் தடவி, ஆலு மசாலாவை ஒரு பாதியில் வைத்து மறு பாதி தோசையை அதன்மேல் மடக்கி இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.

வெந்தயக்கீரையும் வெங்காயத்தாளும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்குமான சத்தான உணவு இது.

மசால் தோசை

தேவையானவை:

தோசை மாவு - 2 கப் (மசால் செய்ய) பெரிய உருளைக்கிழங்கு - 3, தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப், சோம்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1 கப்.

துவையலுக்கு:

தேங்காய் துருவல் - அரை மூடி, பச்சை மிளகாய் - 4, உப்பு, இஞ்சி - ஒரு சுண்டைக்காய் அளவு, பூண்டு - 2 பல்.

செய்முறை:

ஆலு வெந்தயக்கீரை தோசைக்கு சொன்ன மாதிரியே, தோசை மாவு தயார்செய்து கொள்ளவும்.

பொட்டுக்கடலையைப் பொடி செய்யவும். அடுத்ததாக, மசாலாவுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, சிறிது கட்டியும் தூளுமாக உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு வளையங்களாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி சோம்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, 1 சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.

பின் உப்பு சேர்க்கவும். வெங்காயம் வெந்ததும், உதிர்த்த கிழங்கையும் சேர்த்து கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.

துவையலுக்கு கூறியுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் அரைத்தெடுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை மெல்லிய தோசையாக ஊற்றி எண்ணெயை சுற்றிவர ஊற்றி மூடிவிடவும்.

தோசை வெந்ததும், அடுப்பை குறைந்த தணலில் வைத்து, ஸ்பூனால் துவையலை எடுத்து தோசை மேல் தடவவும். பின் பொட்டுக்கடலை மாவை தூவி, அதன் மேல் உருளைக்கிழங்கு மசால் வைத்து மறு பாதி தோசையை மடக்கவும். சூடாக எடுத்து பரிமாறவும்.

சாப்பிட்ட எல்லோரும் ‘ஒன்ஸ்மோர்’ கேட்பார்கள்.

கோதுமை தோசை

தேவையானவை:

கோதுமை மாவு - 1 கப், வெள்ளை ரவை - 4 டீஸ்பூன், பச்சரிசி மாவு - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - 4, கேரட் - 1, சீரகம் - அரை டீஸ்பூன், கெட்டி மோர் - கால் டம்ளர்.

செய்முறை:

ரவையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். வெங்காயத்தையும் மல்லித்தழையையும் பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை கழுவி, துருவிக்கொள்ளவும்.

கோதுமை மாவு, உப்பு, சீரகம், பச்சரிசி மாவு, ஊறிய ரவை, மோர் மற்றும் தண்ணீர் சேர்த்து சாதா தோசை மாவை விட சற்று தளர்வாக கரைத்துக் கொள்ளவும்.

அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து கலக்கவும். சூடாக இருக்கும் தோசைக்கல்லில், ஒரு கிண்ணத்தால் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையை ஊற்றி அதன் மேல் துருவிய கேரட்டை தூவவும்.

கரண்டியால் அதை அழுத்திவிட்டு சுற்றி வர எண்ணெய் விட்டு மூடி, வெந்ததும் தோசையை திருப்பி மறுபுறம் எண்ணெய் விட்டு மொறுமொறுவென வெந்ததும் எடுத்து விடவும். இதற்கு வரமிளகாய், பூண்டு சட்னி மேலும் சுவையைக் கொடுக்கும்.

மினி சாம்பார் தோசை

தேவையானவை:

(தோசைக்கு) ஆலு தோசைக்கான மாவு - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு. (சாம்பாருக்கு) துவரம்பருப்பு - கால் கப், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, பெரிய சைஸ் தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 15, சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன், மல்லித்தழை - 2 டீஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க:

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 3. தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன். (தேங்காயை மட்டும் கடைசியாக வதக்கிப் பொடிக்கவும்). தாளிக்க: எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை.

செய்முறை:

முதலில் சாம்பாரை தயாரித்துக் கொள்ளவேண்டும். வேகவைத்த பருப்புடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து வேகவிடவும். சாம்பார் பொடி சேர்க்கவும்.

தக்காளி, வெங்காயம் வெந்ததும் வறுத்து பொடித்த (தேங்காய் சேர்த்த) பொடியைப் போட்டு உப்பு சேர்க்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியானதும், சிறிது எண்ணெயைக் காயவைத்து, தாளிப்பவற்றை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டவும்.

அதோடு வெல்லத்தையும் சேர்த்து கலக்கி, கொதித்ததும் இறக்கி மல்லித்தழை தூவவும்.

தோசை மாவை நன்கு கலக்கி ஸ்பூனில் எடுத்து, குட்டி ஊத்தப்பங்களாக ஊற்றி (தோசைக்கல் சூடானதும் ஒரு தடவைக்கு 10 மினி ஊத்தப்பங்கள் ஊற்றலாம்), எண்ணெய் விட்டு, வெந்ததும் பின்புறம் திருப்பி சற்று சிவந்ததும் எடுக்கவும்.

சாம்பாரை வாயகன்ற கிண்ணத்தில் ஊற்றி அதில் தோசைகளை மிதக்க விட்டு, சூடாக பரிமாறவும். 1 கப் சாம்பாருக்கு, 7 குட்டி தோசைகள் சேர்க்கலாம். விருந்துகளுக்கு ஏற்ற ஸ்பெஷல் அயிட்டம் இது.

பெரு அரிசி தோசை

தேவையானவை:

புட்டரிசி - அரை கப், தேங்காய் (துருவியது) - கால் மூடி, வெல்லம் (பொடித்தது) - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊறவிட்டு நீரை வடித்து விடவும். வெல்லத்தை 2 டீஸ்பூன் நீர் விட்டு சூடு செய்து இறக்கி வடிகட்டவும். மிக்ஸியில் அரிசியையும் தேங்காயையும் போட்டு நீர் தெளித்து மைய அரைக்கவும்.

பின்னர் அதில் வெல்லத்தை வடிகட்டி சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து சூடான தோசைக் கல்லில் சிறு தோசைகளாக ஊற்றி எண்ணெய்விட்டு, அடிப்பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு (எண்ணெய் விட வேண்டாம்) ஓரிரு நிமிடங்களில் எடுத்து விடவும். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல உணவாகும். சூடாகச் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

மரக்கறிக்காய் தோசை

தேவையானவை:

பச்சரிசி - 3 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 1 கப், பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 8, சோம்பு - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, தேங்காய் (துருவியது) - கால் மூடி, சின்ன வெங்காயம் - அரை கப், எண்ணெய் - ஒன்றரை கப்.

செய்முறை:

மிளகாய், சோம்பு, சீரகம், உப்பு மூன்றையும் விழுதாக அரைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அரிசி, பருப்பு வகைகளை முதல் நாள் இரவு கழுவி ஊறவைத்து, மறுநாள் காலையில் சற்று கரகரப்பாக அரைக்கவும்.

அதில் சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், அரைத்த மிளகாய் விழுது ஆகியவற்றை கலந்து அடைமாவு பக்குவத்தில் வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதை தோசைக்கல்லில் சிறு ஊத்தப்பங்களாக ஊற்றி, வேகும் முன் திருப்பிவிட்டு அரை வேக்காடாக எடுக்கவும்.

பின்னர் வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணெய் விட்டு சூடானதும், இந்த ஊத்தப்பங்களை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக சிவந்து மொறுமொறுவென வெந்ததும் எடுக்கவும். சூடான மரக்கறிக்காய் தோசை ரெடி. செட்டிநாட்டின் பிரபல மான பலகாரங்களில் இதுவும் ஒன்று.

தேங்காய் தோசை

தேவையானவை:

பச்சரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - கால் கப்புக்கு சற்று குறைய, தேங்காய் (துருவியது) - கால் மூடி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி + பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் + உப்பு சேர்த்து நன்றாக ஆட்டி வைக்கவும். 10 மணி நேரத்திற்கு பின் (சிறிது பொங்கியதும்) தோசைகளாகச் சுட்டு எடுக்கவும்.

இந்த தோசைக்கு காய்ந்த மிளகாய் - 8, பூண்டு - 2 பல், புளி - 3 சுளை, உப்பு சேர்த்து பச்சையாக அரைத்து, பின் வாணலியில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு + பெருங்காயம் தாளித்து, அரைத்த சட்னியில் சூட்டுடன் விட்டு பரிமாறவும். மாலை நேரத்துக்கு ஏற்ற ருசியான சிற்றுண்டி இது.

அழகர் கோயில் தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி - 1 கப், பச்சரிசி - 1 கப், தோல் உளுந்து அல்லது வெள்ளை உளுத்தம்பருப்பு - 1 கப், காய்ந்த மிளகாய் - 4, மிளகு - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் + நெய் - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கலரிசியையும், பருப்பையும் தனித்தனியாக கழுவி ஊறவைத்து தோசை மாவு போல் ஆட்டி எடுக்கவும். பச்சரிசியை கழுவி நீர் வடியவிட்டு மிக்ஸியில் திரித்து சலிக்கவும்.

மிளகு, உப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைத்து மறுநாள் தோசைகளாக ஊற்றி எடுக்கவும். தனியாக சாப்பிடுவதற்கு மிகவும் ருசியானது.

இது அழகர் கோயிலில் கிடைக்கும் ஸ்பெஷல் தோசை. ஆனால், அங்கே மாவைக் கெட்டியாக பிசைந்து, சிறிய அடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுப்பார்கள்.

வெற்றிலை தோசை

தேவையானவை: ஆலு தோசைக்கான மாவு - 1 கப், வெற்றிலை - சற்று அகலமானது - 4, எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

எலுமிச்சம்பழச் சாற்றை, கால் கப் நீரில் கலந்துகொள்ளவும். வெற்றிலையை எலுமிச்சம்பழச் சாறு கலந்த நீரில் நனைத்துக் கொள்ளவும். (இது, வெற்றிலையின் நிறம் மாறாமல் இருக்க உதவும்).

பின்னர் மாவில் நனைத்து வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, அதன் நடுவில் மாவில் நனைத்த வெற்றிலையை வைத்து சுற்றிவர எண்ணெய்விட்டு வெந்ததும் திருப்பிவிட்டு எடுத்து விடவும்.

சளி, இருமல் இருப்பவர்களுக்கு ஊற்றித் தரலாம். விருந்துகளில் பரிமாறுவதற்கும் இது வித்தியாசமான தோசை.

பாசிப்பருப்பு தோசை

தேவையானவை:

பாசிப்பருப்பு - 1 கப், பச்சரிசி - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 10, பெருங்காயம் - 1 சிட்டிகை.

செய்முறை:

அரிசி + பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிளகாய், பெருங்காயம், உப்பை சேர்த்து அரைக்கவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அத்துடன் ஊறிய பருப்பையும், அரிசியையும் பெருபெருவென ஆட்டி எடுத்து அத்துடன் தேங்காய், வெங்காயம் சேர்த்து கலக்கி மெல்லிய தோசைகளாக ஊற்றி திருப்பிவிட்டு எடுக்கவும்.

வெஜிடபுள் தோசை

தேவையானவை:

ஆலு தோசைக்கான மாவு - 2 கப், கேரட் - 1, பீன்ஸ் - 2, பட்டாணி (உரித்தது) - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, குடமிளகாய் - 1, தக்காளி - 1, எண்ணெய் - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) அல்லது பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் - கால் கப்.

செய்முறை:

கேரட்டைக் கழுவி துருவிக் கொள்ளவும். வெங்காயம், பீன்ஸைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

குடமிளகாயையும் தக்காளியையும் மெல்லிய அரை வட்டங்களாக நறுக்கவும். வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் தாளிப்பவற்றை தாளித்து சிவந்ததும், கேரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தோசை மாவுடன் சேர்த்து கலக்கவும்.

பின்னர் தோசைக்கல்லில் ஊத்தப்பம் போல் ஊற்றி (சற்று கனமாக), அதன் மேல் நறுக்கிய அரை வளையங்களான தக்காளி குடமிளகாயை பதித்து, மேலே மல்லித்தழை அல்லது வெங்காயத் தாள் தூவவும்.

சுற்றிவர எண்ணெய்விட்டு மூடி ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு எண்ணெய் ஊற்றி, வெந்ததும் எடுத்துவிடவும். பார்ப்பதற்கு இது வெஜிடபுள் பீட்ஸா போல இருக்கும்.

தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் வெகு ஜோர்!

பீட்ரூட் ராகி தோசை

தேவையானவை:

கேழ்வரகு மாவு - 1 கப், உப்பு - தேவைக்கேற்ப, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - கால் கப், துருவிய பீட்ரூட் - கால் கப், பச்சை மிளகாய் - 3, எண்ணெய் - தாளிக்க + தோசை சுடுவதற்கு தேவையான அளவு

செய்முறை:

ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு, ராகி மாவு சேர்த்து கலந்து, 10 மணி நேரம் கழித்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் பச்சை மிளகாய், பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதக்கிய பீட்ரூட்டை மாவில் சேர்த்து கலக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு, வெந்ததும் திருப்பி விட்டு மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும். சத்து மிகுந்த தோசை இது.

செட் தோசை

தேவையானவை:

பச்சரிசி - 1 கப், புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், வடித்த பச்சரிசி சாதம் - 1 கைப்பிடி, உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள்தூள் அல்லது கேசரி பவுடர் - 1 சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி + பருப்பை கழுவி ஒன்றாக ஊற வைத்து (3 மணி நேரம்), சாதத்துடன் சேர்த்து மைய ஆட்டவும். பின் உப்பு கலந்துவைத்து, பொங்கிய பின் (10 மணி நேரம் கழித்து) மறுநாள் காலையில் அத்துடன் மஞ்சள்தூள் அல்லது கேசரி பவுடர் சேர்த்துக் கலக்கவும்.

தோசைக்கல்லில் ஊத்தப்பமாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். இதற்கு காரச் சட்னி மிகவும் சுவை கொடுக்கும். சென்னை போன்ற நகர்களில், ‘செட்தோசை-வடகறி’ என்பது டிபன்களில் மிகவும் பிரபலமான ஜோடி.

முள்ளுமுருங்கை இலை தோசை

தேவையானவை:

பச்சரிசி - 1 கப், முள்ளுமுருங்கை இலை - 6, பச்சை மிளகாய் - 2, மிளகு - 10, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் + நெய் - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 10.

செய்முறை:

அரிசியைக் கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

முள்ளுமுருங்கை இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், உப்பு, மிளகு, சீரகம், இலை, அரிசி ஆகியவற்றை நன்கு ஆட்டவும். பின் அத்துடன் வெங்காயத்தை போட்டு கலக்கவும்.

பின் மெல்லிய ஊத்தப்பம் போல் ஊற்றி, சுற்றிவர நெய் விட்டு வேகவைத்து பின் திருப்பிவிட்டு அதே மாதிரி எண்ணெய் + நெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.

பூண்டு புதினா தோசை

தேவையானவை:

ஆலு தோசை மாவு - 2 கப், பூண்டு - 20 பற்கள், புதினா (கழுவி, பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:

பூண்டுப் பற்களை தோலுரித்து, நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும். மிளகாயைப் பொடியாக நறுக்கவும். 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டை அரைப்பதமாக வதக்கி எடுக்கவும்.

1 டீஸ்பூன் எண்ணெயில் புதினாவை லேசாக வதக்கி வைத்துக்கொள்ளவும். மாவை ஊத்தப்பமாக ஊற்றி அதில் சீரகம் சிறிது தேய்த்துப் போட்டு, அதன் மேல் வதக்கிய பூண்டு + புதினாவை பதிக்கவும்.

ஒவ்வொரு ஊத்தப்பத்துக்கும் 6-லிருந்து 7 துண்டு பூண்டு பதிக்கலாம். எண்ணெய் ஊற்றி வேகவிட்டு, பின் திருப்பிபோட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும். தக்காளிச் சட்னியுடன் சேர்த்து இதை சாப்பிட்டால், சுவை அமோகம்.

துவரம் பருப்பு தோசை

தேவையானவை:

 புழுங்கலரிசி - 1 கப், துவரம்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்பை தனித்தனியாக ஊறவைத்து உப்பு சேர்த்து ஆட்டவும். பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து கலக்கி, உடனே மெல்லிய தோசைகளாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். இதற்கு குருமா சுவை கொடுக்கும்.

குறிப்பு: காரம் அதிகம் விரும்புவோர் பச்சை மிளகாய்க்கு பதில் 6 காய்ந்த மிளகாய்களை அரைத்துப் போடலாம்.

ரவா தோசை

தேவையானவை:

பச்சரிசி ஆட்டியது - 1 கப், ரவை - அரை கப், மைதா மாவு - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், மிளகு - 10 உடைத்தது, சீரகம் - அரை டீஸ்பூன், கறி வேப்பிலை - 1 ஆர்க்கு, முந்திரிப்பருப்பு - 6, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - அரை கப்.

செய்முறை:

ரவையை சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். மல்லித்தழை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கி, எண்ணெயில் வறுத்து வைத்துக்கொள்ளவும்.

மைதா மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொண்டு, அத்துடன் ஆட்டிய பச்சரிசி மாவு, ஊறிய ரவை, உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒன்றாகக் கலந்து வைக்கவும்.

பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் தாளிப்பவற்றை போட்டு தாளித்து மாவில் கொட்டவும்.

வறுத்த முந்திரியையும், கழுவிய மல்லித்தழையையும் மாவில் கலந்து எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கலக்கி சூடான தோசைக்கல்லில், மாவைக் கரண்டியில் எடுத்து, அள்ளித் தெளித்த மாதிரி மிக மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றி வர எண்ணெய் விட்டு மூடவும்.

வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு மொறுமொறுவென வேக வைத்தெடுக்கவும்.

விருப்பமுள்ளவர்கள், ரவா தோசைக்கு சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இதற்கு பூண்டு, மிளகாய்ச் சட்னி தொட்டுச் சாப்பிட்டால் சூப்பர் டேஸ்ட்!

மெதுகீரை தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், அவல் - கால் கப், மோர் - 2 டம்ளர், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையானது, நச்சு கெட்ட (லெச்சகெட்ட) கீரை - 30 இலைகள், பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 15, பாசிப்பருப்பு - கால் கப், உப்பு - தேவைக் கேற்ப, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை:

புழுங்கலரிசி முதல் அவல் வரையிலான பொருள்களை 6-லிருந்து 8 மணி நேரம் வரை மோரில் ஊறவைத்து ஆட்டி, உப்பு சேர்த்து சிறிது புளிக்க விடவும். கீரையின் நடுவில் உள்ள நரம்பை நீக்கி பொடியாக நறுக்கவும்.

பச்சை மிளகாயை நடுவில் வகுந்துகொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை அரைப்பதமாக வேகவிட்டு, நீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தாளிப்பவற்றை போட்டு தாளிக்கவும்.

பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கீரை சேர்த்து கிளறி, வெந்ததும் உப்பு சேர்க்கவும். கடைசியாக, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கிளறி எடுக்கவும்.

தோசை மாவை வட்டமாக மெல்லிய ஊத்தப்பமாக ஊற்றி சுற்றிவர எண்ணெய் விட்டு மூடவும். அடிப்புறம் வெந்ததும் மூடியைத் திறந்து அதன் மேல் கீரையை பரப்பிவிட்டு தோசைக் கரண்டியால் அழுத்தி விட்டு மறுபுறம் திருப்பாமல் எடுத்து பரிமாறவும். இந்தக் கீரை தோசை உடல்வலிக்கு நிவாரணம் தரும்.

சோயா தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி - 1 கப், காய்ந்த சோயா - 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 8, பச்சை மிளகாய் - 2.

செய்முறை:

அரிசி, சோயா, உளுத்தம்பருப்பை கழுவி தனித்தனியாக 3-4 மணிநேரம் ஊறவைத்து, தனித்தனியாக நன்றாக ஆட்டி ஒன்று சேர்த்து உப்புக் கலக்கிவைக்கவும்.

பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மாவு ஆட்டிவைத்த 10 மணி நேரம் கழித்து, அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் கலந்து மிக மெல்லிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் திருப்பிவிட்டு எண்ணெய் விட்டு, மொறுமொறுவென வேக வைத்து எடுக்கவும்.

ஜவ்வரிசி தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி - ஒன்றரை கப், ஜவ்வரிசி (மாவு அரிசி) - 1 கப், சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 4, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை கழுவி, 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஜவ்வரிசியைக் கழுவி, 4 மணி நேரம் தயிரில் ஊறவைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

முதலில் அரிசியை ஆட்டவும். பின் ஜவ்வரிசியையும் ஆட்டி எடுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடு வந்ததும் கடுகு தாளித்து பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதோடு உப்பு சேர்த்து மாவில் கலந்து ரவா தோசை போல் ஊற்றி இருபுறமும் மொறுமொறுவென வேகவைத்து எடுக்கவும்.

கொத்தமல்லி தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - 1 கைப்பிடி, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - அரை கப், மிளகு (உடைத்தது) - அரை டீஸ்பூன், இஞ்சி (துருவியது) - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க: சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன்.

செய்முறை:

அரிசி, உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, ஆட்டவும். மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு, சூடானதும் தாளிப்பவற்றை போட்டு தாளித்து, இஞ்சியை சேர்த்து வதக்கவும்.

அத்துடன் ஆட்டிய மாவு, உப்பு, மல்லித்தழை, தாளித்தவை ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து ரவா தோசைபோல் ஊற்றி இருபுறமும் மொறுமொறுப்பாக வெந்ததும் எடுத்து தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

டிரை ஃப்ரூட் தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - கால் கப், பெரிய கற்கண்டு (பொடித்தது) - 10 டேபிள்ஸ்பூன், பேரீச்சம்பழம் - 25, உலர் திராட்சை - 25, டூட்டி ஃப்ரூட்டி - 2 டேபிள்ஸ்பூன், தேன் - 5 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 30, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்பை கழுவி, தனித்தனியே 2 மணி நேரம் ஊறவைக்கவும். பேரீச்சம்பழத்தை விதை நீக்கி, சிறு சதுரங்களாக நறுக்கவும்.

ஊறிய அரிசி, பருப்பை நைஸாக ஆட்டவும். ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி, 10 மணி நேரம் பொங்க விடவும்.

மறுநாள் காலையில், தோசை ஊற்றப் போகும்போது பொடித்த கற்கண்டை மாவில் கலக்கவும்.

பின்னர் தோசைக் கல்லில் இதை மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு வெந்ததும், கலந்து வைத்திருக்கும் பேரீச்சம்பழம், உலர் திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றில் சிறிது எடுத்து தோசையின் ஒரு பாதியில் பரப்பவும்.

அதன் மேல் அரை டீஸ்பூன் தேன் விட்டு, மறு பாதி தோசையால் மூடி, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

Apart from 30 Vagai Dosai Samaiyal 30 வகை தோசை சமையல். we have other 30 Vagai Samayal Recipes as given below.



Subscribe to our news letter for more 30 Vagai Samayal recipes.

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf