Meenakshi Kalyanam: மீனாட்சி கல்யாணம்

0 comments
கந்தர்வ லோகத்தில் வசித்த விச்வாவஸு என்பவன் சிவனருளால், வித்யாவதி என்ற குழந்தையைப் பெற்றான்.

ஒரு சமயம், வித்யாவதிக்கு, அம்பாள் அருள் பாலிக்கும், பூலோக புண்ணிய தலங்களுக்கு செல்ல வேண்டும் என, விருப்பம் ஏற்பட்டது.

தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விச்வாவஸு அவளிடம், ‘கடம்பவனம் எனப்படும் மதுரையில், ‘சியாமளா’ என்ற பெயரில், அம்பாள் அருள்பாலிக்கிறாள். அவளை வழிபட்டு வா…’ எனக் கூறினான்.

அதன்படி அம்பாளைத் தரிசிக்க, வித்யாவதி கடம்பவனம் வந்தாள். சியாமளா தேவி சன்னிதி முன் நின்று, மனமுருக வழிபட்டாள்.

அந்த தலம், அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே, கந்தர்வ லோகத்துக்கு திரும்ப மனமின்றி, அங்கேயே தங்கி, அன்னைக்கு சேவை செய்தாள்.

அவளுக்கு மூன்று வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, ‘என்ன வரம் வேண்டும் கேள்…’ என்றாள். அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி, ‘குழந்தையாகக் காட்சி தந்த நீ, எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும்…’ என்று, வேண்டிக் கொண்டாள்.

அவளது விருப்பம், அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று, அம்பாள் வாக்களித்தாள்.

அதன்படி, மறு பிறப்பில், சூரசேனன் என்னும் மன்னனின் மகளாக அவதரித்தாள் வித்யாவதி. அவளுக்கு காஞ்சனமாலை என, பெயரிட்டனர். ‘காஞ்சனம்’ என்றால், தங்கம். தங்கம் போல் ஜொலிக்கும் அழகுடன் திகழ்ந்த அவளை, மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

இவர்களுக்கு குழந்தை இல்லை. மன்னன் குழந்தை பேறுக்காக, புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அந்த யாகத்தில், மூன்று வயது குழந்தையாகத் தோன்றினாள் அம்பிகை. அப்போது காஞ்சனமாலைக்கு, முற்பிறவியில் அம்பிகை வாக்களித்தது நினைவுக்கு வந்து, மகிழ்ந்தாள்.

யாகத்தில் தோன்றிய அக்குழந்தைக்கு, தடாதகை என, பெயர் சூட்டினர்.
ஆண் வாரிசு இல்லாத மன்னன், தடாதகைக்கு சகல கலைகளையும் கற்றுக்கொடுத்து, ஒரு ஆண் மகனைப் போல் வளர்த்து, பின், மதுரையின் ஆட்சி பொறுப்பையும் ஒப்படைத்தான்.

இவள் மீன் போல, எப்போதும் விழிப்புடன் இருந்து, ஆட்சி செய்ததால், மீனாட்சி என்ற பெயரைப் பெற்றாள். இதன் பிறகு, அம்பாளுக்கு சியாமளா என்ற பெயர் மாறி, இறுதியில், மீனாட்சி என்ற பெயரே நிலைத்து விட்டது. ‘சியாமளம்’ என்றால், பச்சை. மீனாட்சி, பச்சை வண்ண மேனியளாக இருந்தாள்.

சியாமளா தேவி, கல்விக்குரிய தெய்வம். இதனால் தான், மதுரை கல்விக்குரிய கிரகமான புதன் ஸ்தலமாக விளங்குகிறது. தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி இத்தலத்தில் அருளுகிறாள்.

இதனால் தான், பெண்களின் தெய்வமாக போற்றப்படுகிறாள். உலகையே வென்ற அவள், சுந்தரேஸ்வரரை மணம் முடித்து, இன்றும் நல்லாட்சி புரிகிறாள்.

அன்னையின் திருக்கல்யாண நன்னாளில், அவளது நல்லாசியைப் பெறுவோம்.

Understanding Pramma: பிரம்ம தத்துவம்

0 comments
பணம், பதவி, அதிகாரம் இம்முன்றும், எப்பேர்பட்ட மனிதருக்கும், ‘நான்’ எனும், ஆணவத்தை கொடுத்து விடுகிறது. அதன் விளைவாக, நாம் செய்யும் ஆணவ செயல்கள், பாவ வினைகளை பரிசாக கொடுத்து, பிறவிதோறும் அப்பாவ கர்மத்தை அனுபவிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது. 

மேலும், இறை தன்மையை உணர, கர்வம், ஆணவம் இரண்டும் மிகப் பெரிய தடை கற்கள். அதனால் தான், ‘நான்’ எனும் ஆணவத்தை கடக்காமல், இறைவனை உணர முடியாது என்கின்றனர் மகான்கள். 

விநாயக பெருமான், ஜனக மகாராஜனுக்கு பிரம்மம் குறித்து ஏற்பட்டிருந்த ஆணவத்தை சுட்டிக் காட்டி, ஞானத்தை உபதேசித்த கதை இது: 

நாரதர், மிதிலையில் ஜனக மன்னன் சபைக்குள் நுழைந்தார். மன்னன், நாரதரை அலட்சியப்படுத்துவது போல், பார்க்கவும் இல்லை; ஆசனத்தில் இருந்து எழுந்திருக்கவும் இல்லை. ஆனால், அவன் செய்த அவமானத்தை, பொருட்படுத்தாத நாரதர், ‘ஜனக மன்னா… நலம் பெறுவாயாக…’ என்று, வாழ்த்தினார். 

இதைக் கேட்டதும், மன்னன் ஏளன சிரிப்புடன், ‘முனிவரே, அனைத்தும் பிரம்ம மயம் என, நம்புபவன் நான். அப்படி இருக்கும் போது, இதில் வாழ்த்துவது யார், வாழ்த்தப்படுவது யார்; பிரம்மம், பிரம்மத்தை வாழ்த்துமா, வாழ்த்தத்தான் முடியுமா?’ என்றார். 

ஜனகனின் பேச்சால், மனம் வருந்திய நாரதர், கவுண்டன்ய முனிவரின் ஆசிரமத்திற்குப் போனார். அங்கு பூஜையில் இருந்த, விநாயகர் திருவுருவை வணங்கி, ‘விநாயகா, ஜனகனுக்கு நல்லறிவைக் கொடு…’ என, வேண்டினார். 
அதே நேரத்தில், ஜனகனின் அரண்மனை வாயிலில், வெண் குஷ்டம் பிடித்த ஒருவர், பசிக்கு உணவு கேட்டார். மன்னன் உத்தரவுப்படி, அவரை ஓரமாக உட்கார வைத்து, உணவு கொடுத்தனர் பணியாளர்கள். 

வந்தவரோ, போடப் போட உண்டு கொண்டே இருந்தார். சற்று நேரத்திற்குள், அரண்மனையில் இருந்த அத்தனை உணவுப் பொருட்களும் தீர்ந்து போயின. 
பணியாளர்கள் உணவுப் பொருள் தீர்ந்து போன விஷயத்தை சொன்னதும், மன்னன் ஓடி வந்தான். ‘ஐயா, சற்று நேரம் தாமதியுங்கள். 

வெளியில் இருந்து பொருள் வரவழைத்து, உணவு போடுகிறேன்…’ என, வேண்டினான். 
வந்தவரோ, ‘மன்னா… இப்போது எனக்கு இருக்கும் பசியையே உன்னால் தீர்க்க முடியவில்லையே… இன்னும் சிறிது நேரம் தாமதித்தால், பசி அதிகமாகுமே… பசித்த வயிற்றுக்கு உணவிட முடியாத நீ எப்படி பிரம்மம் ஆக முடியும்? பிரம்மம் என்பது, ஒரு ஜீவராசியை, சிருஷ்டி செய்வதற்கு முன், அந்த உயிருக்கான உணவைப் படைத்த பின் தான், அந்த ஜீவனையே படைக்கும். அப்படியிருக்கையில், உன்னை எப்படி பிரம்மத்துக்கு ஒப்பிடுகிறாய்?’ என்று கேட்டு, வெளியேறினார். 

வெளியேறிய அந்த மனிதர், திரிசிரன் என்ற ஏழை வீட்டுக்குச் சென்று, அருகம்புல்லும், தீர்த்தமும் உண்டு, பசி தணிந்தார். அப்போது அந்த மனிதரின் வெண் குஷ்ட நோய் நீங்கி, அங்கே, விநாயகர் நின்றார். திரிசிரனின் ஏழ்மை நீங்க, அவர் இல்லத்தில், செல்வங்கள் நிறைந்தன. 

ஜனகனின் ஆணவ பக்திக்கு, அகப்படாத ஆண்டவன், ஒரு சாதாரண ஏழையின் அன்பிற்கு கட்டுப்பட்டு, அவர் தந்த, அருகம்புல்லை உண்டான். பக்திக்கு பணிவு அவசியம். பிறரை அவமதித்து, கடவுளை துதிப்பதில் பயனில்லை. 

பின் குறிப்பு: அருகம்புல், வெண் குஷ்டத்திற்கு தலைசிறந்த மருந்து என்று, தற்போதைய ஆராய்ச்சி கூறுகிறது. இதை, நம் முன்னோர்கள் ஏற்கனவே அறிந்திருக்கின்றனர்.

H.T.C Desire 616 tamilnadu: ஹெச்.டி.சி டிசையர் 616

0 comments
ஸ்மார்ட் போன் உலகில் தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ள ஹெச்டிசி நிறுவனம், தனது புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனான 'ஹெச்டிசி டிசையர் 616’-ஐ கடந்த வாரம் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியது.

இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டு இயங்குகிறது. ரூ.14,335 விலையில் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட் போன், டூயல் சிம்  வசதிகளோடு வருகிறது.

5  இன்ச் அகலமான 720X1,280 பிக்ஸல் ஹெச்டி அளவு மிகத் துல்லியமான டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், மீடியாடெக் MT6592 1.7GHz ஆக்டோ கோர் (Octo core) பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது.

ஹெச்.டி.சி டிசையர் 616
ஹெச்.டி.சி டிசையர் 616
மேலும், 'மாலி 450MP4’ என்ற கேமிங் பிராசஸரைக் கொண்டுள்ள ஹெச்டிசி டிசையர் 616, 1ஜிபி ரேம்மை கொண்டு இயங்குகிறது. விலை அதிகம் கொண்ட சில ஸ்மார்ட் போன்களில்கூட இந்த வசதிகள் இல்லை.

4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியோடு வரும் ஹெச்டிசி டிசையர் 616 எஸ்டி கார்டு மூலம் 32 ஜிபி வரை விரிவுபடுத்தலாம். ஹெச்டிசி டிசையர் 616, 8 மெகா பிக்ஸல் பின்புற கேமராவை எல்இடி ஃப்ளாஷ் வசதியோடு பெற்றுள்ளது.

2 மெகா பிக்ஸல் முன்புற கேமராவையும் பெற்றுள்ளது. 3T, GPRS/EDGE, WiFi,  ப்ளூடூத் 4.0 போன்ற வசதிகளோடு வரும் இந்த போன், 2000mAh  பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது.

14 மணிநேரம் வரை டாக்டைம் தரும் என ஹெச்டிசி நிறுவனம் உறுதி தந்துள்ளது.



தனது பிரத்யேகமான ஓஎஸ் டிசைன் மற்றும் மொபைல் லுக்குக்குப் பெயர்போன ஹெச்டிசி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

Business with subsidies in India,Tamilnadu: மானியம் வழங்கப்படும் தொழில்கள்

0 comments
Business with subsidies in India,Tamilnadu: மானியம் வழங்கப்படும் தொழில்கள்

1. மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
3. கன உதிரிபாகங்கள் தயாரிப்பு
4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி
5. சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
6. ஏற்றுமதி ஆபரணங்கள்
7. மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
8. விளையாட்டுப் பொருட்கள்
9. சிக்கன கட்டுமானப் பொருட்கள்
10. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்

Business with subsidies in India,Tamilnadu: மானியம் வழங்கப்படும் தொழில்கள் சரி, அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?

15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.

சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.

உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்தபட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

1971ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மானியம் வழங்கப்படும் தொழில்கள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.

Sipcot parks are here in the below districts,

Cheyyar
Cuddalore
Dharmapuri
Erode
Gangaikondan
Gummidipoondi
Irungattukottai
Manamadurai
Nilakottai
Pudukkottai
Ranipet
Siruseri
Sriperumbudur
Tuticorin

Subscribe to our mailing list for more about Starting a Business and other interesting articles in Tamil apart from this Business with subsidies in India,Tamilnadu: மானியம் வழங்கப்படும் தொழில்கள்.

Instant Tomoto Soup recipe Business: உடனடி தக்காளி சூப் மிக்ஸ் தயாரிக்கும் முறை - சுய தொழில்

0 comments
முழுவதுமாக பழுத்த கெட்டியான தக்காளிப் பழங்களை குழாயில் ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவவும்.

பின் இதனை சிறு துண்டுகளாக  வெட்டி தனி அறை உலர்த்தியில் 80 0 செல்சியஸில் 10 மணி நேரம் உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட துண்டுகளை மின் அம்மியில் அரைத்து பொடியாக்க வேண்டும்
.
தக்காளி சூப் மிக்ஸ் தயாரிக்கும் முறை:

உடனடி தக்காளி சூப் மிக்ஸ் தேவையான பொருட்கள்

தக்காளிப் பொடி 5.0 கிராம்
வெங்காயப் பொடி 0.5 கிராம்
சோள மாவு 2.0 கிராம்
சீரகத் தூள் 0.5 கிராம்
மிளகுத் தூள் 0.3 கிராம்
உப்பு 1.5 கிராம்
அஜினமோட்டோ 0.5 கிராம்

உடனடி தக்காளி சூப் மிக்ஸ் செய்முறை:

அனைத்து தேவையான பொருட்களை நன்கு கலக்கி பாலித்தீன் பைகளில் மூட்டை கட்டவேண்டும்.

வெங்காயப் பொடியை தயாரிக்கும் முறை:

பெரிய வெங்காயத்தை தேர்வு செய்து தோலை உறிக்கவும். பின் இதனை குழாயில் ஓடும் நீரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.

இதனை தனி அறை உலர்த்தியில் 60 0 செ 7 மணி நேரம் வரை வைத்து உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட செதில்களை அரைத்து பொடியாக்கி பாலித்தீன் பைகளில் மூட்டைகட்டவும்.

10 கிராம் செய்து வைத்திருந்த தக்காளி சூப் மிக்ஸை 150 மில்லி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்கு கிளறவும்.

puliyodharai recipe Business: உடனடி புளியோதரை மிக்ஸ் - சுய தொழில்

Subscribe to our newsletter to get more Instant recipe business tips.

கார்ப்பரேட் விவசாய பட்ஜெட்! | 2014 Budget of india aligns with corporate agriculture

0 comments
கார்ப்பரேட் விவசாய பட்ஜெட்! | 2014 Budget of india aligns with corporate agriculture

விவசாயத்தில் 4% வளர்ச்சி என அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். இந்த பட்ஜெட் அதற்கு உதவுமா என விவசாயத் துறை நிபுணரான நெல்லிக்குப்பம் கோதண்ட ராமனிடம் கேட்டோம்.

''விவசாயத்துக்கு 8 லட்சம் கோடி ரூபாய் கடன் அளிக்கப்படும் என்கிறார் அமைச்சர். ஆனால், இந்தக் கடனுதவியை யார், எப்படி பெறப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

பாரம்பரிய விவசாயத்துக்கு கடனுதவி தரப்படுமா அல்லது கார்ப்பரேட் விவசாயம் செய்பவர்களுக்குச் சென்று சேருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதுபோல, விவசாயிகளுக்கு மண்பரிசோதனை செய்துகொள்ள ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு ரூ.100 கோடி, வேளாண் துறைக்கு என்று தனித் தொலைக்காட்சி, நிலமில்லாத விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கடனுதவி என பல திட்டங்களை அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டங்கள் விவசாய வளர்ச்சிக்கு எந்த அளவு பயன்படும் என்பது தெரியவில்லை.  விவசாய விளைபொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லி, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய விலையைக் கிடைக்காமல் செய்துவிடக்கூடாது. இந்த பட்ஜெட்,  கார்ப்பரேட் விவசாயம் செய்பவர் களையே ஊக்குவிக்கும்'' என்றார்.

கார்ப்பரேட் விவசாய பட்ஜெட்! | 2014 Budget of india aligns with corporate agriculture

கட்டுரையாளர் தூரன்நம்பியிடம் பேசினோம். ''விளைபொருட்களின் விலையை நிர்ணயம் செய்து கட்டுக்குள் வைத்திருக்க ரூ.500 கோடி என்பது ஏமாற்றுவேலை.

சென்ற ஆண்டு உணவு தானிய உற்பத்தி 263 மில்லியன் டன். இதற்கு வெறும் 500 கோடி ரூபாய் ஒதுக்கினால் போதுமா? கங்கை மட்டுமல்ல, அனைத்து நதிகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.

பால் உற்பத்தி குறித்து ஒருவார்த்தையும் பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகளுக்கு நேரடியாகப் பயன்படாத பட்ஜெட் இது'' என்றார்.
அடுத்த பட்ஜெட்டிலாவது விவசாயிகளை மத்திய நிதி அமைச்சர் திருப்திப்படுத்த வேண்டும்!

Subscribe to our blog for more news letters like கார்ப்பரேட் விவசாய பட்ஜெட்! | 2014 Budget of india aligns with corporate agriculture.

Romance ragasiyangal: earth will not revolve if no love is here - ரொமான்ஸ் ரகசியங்கள்! காதல் மட்டும் இல்லைனா பூமி இங்கு சுத்தாது

0 comments
Romance ragasiyangal: earth will not revolve if no love is here - ரொமான்ஸ் ரகசியங்கள்! காதல் மட்டும் இல்லைனா பூமி இங்கு சுத்தாது.

மனித வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத விஷயம்... காதல். கற்கால மனிதர்களின் குகை ஓவியங்களில் இருந்து... லேட்டஸ்ட் இணையதளங்கள் வரை காதல் எங்கேயும் இடம் பிடித்திருக்கிறது.

இலக்கியம், புராணங்கள், இசை, ஓவியம், சிற்பம் என்று காதலைப் பற்றிப் பேசாத கலைகளே இல்லை. 'கலைகளிலேயே உன்னதமான கலை... சினிமா' என்பார் ரஷ்யப் புரட்சிக்காரர் லெனின்.

அந்த சினிமாவிலும் காதலே கதையின் தளம். டைட்டானிக் கப்பல் மூழ்கிய சம்பவத்தை ஒரு காவியமாக எடுத்த ஹாலிவுட், அதன் பிரதான அடிப்படையாக ஒரு காதலைத்தானே சொன்னது!

காதலைப் பற்றி ஆயிரக்கணக்கான படங்கள் உலகின் அநேக மொழிகளில் வெளிவந்து அழியாப் புகழைப் பெற்றிருக்கின்றன. அப்படிப்பட்ட  உன்னதமான படங்களில் ஒன்றுதான் பிரபல இரானிய இயக்குநர் மஜீதி மஜீத் இயக்கிய 'பரன்’!

'பரன்’ என்கிற வார்த்தைக்கு 'மழை’ என்று பொருள். இது ஒரு கவிதைத்துவமான காதல் கதை. ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். இரான் நாட்டு தலைநகரான டெஹ்ரானின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஆப்கன் அகதிகளின் முகாம்கள் இருக்கும். தலிபான் அரசாங்கத்தின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், அங்கேதான் பல சிரமங்களிடையே வாழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்பவர்கள். அதிகாரப்பூர்வமான அனுமதி அட்டை இல்லாமல் சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள்.

டெஹ்ரான் நகரத்தில் குறைந்த கூலிக்கு இப்படி கட்டடப் பணியில் ஈடுபட்டிருக்கும் அகதிகளுக்கு... டீ, சாப்பாடு தரும் வேலையில் இருப்பான் உள்ளூர் குர்தீஷ் இளைஞனான லத்தீஃப். சுலபமான வேலை என்பதால் ஜாலியாகப் பொழுதை ஓட்டுவான்.

எல்லோரையும் கலாட்டா செய்தபடி இருப்பான். கட்டட வேலையில் இருக் கும் ஆப்கன் அகதி ஒருவர் விபத்தில் சிக்கி, காலில் அடிபட்டதால், தனக்குப் பதிலாக தன் இளம் மகனை வேலைக்கு அனுப்புகிறார். ரஹமத் என்னும் அந்தப் பையன் மிகவும் மென்மையாக இருக்கிறான்.

கடினமான வேலைகளை அவனால் செய்ய முடியாது என்று நினைக்கும் முதலாளி, டீ கொடுக்கும் வேலையில் அவனை போட்டுவிட்டு, லத்தீஃபை கட்டட வேலைக்கு மாற்றுகிறார்.

சுலபமான வேலை பறிபோனதால் கடுப்பான லத்தீஃப், ரஹ்மத்தை வம்பு செய்து கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில்... ரஹ்மத் ஆண் அல்ல பெண் என்பதும், அவளுடைய உண்மையான பெயர் பரன் என்பதும் அவனுக்குத் தெரிய வருகிறது.

பெண்கள் இதுபோல் வேலைக்குச் செல்ல அனுமதி இல்லை. ரஹ்மத்திடம் முறையான அனுமதி அட்டையும் இல்லை. இதெல்லாம் வெளியே தெரிந்தால் அவளுக்குப் பெரிய பிரச்னை ஆகிவிடும் என்பதால்தான் ஆண் வேடமிட்டிருக்கிறாள். இது தெரிந்த பிறகு, லத்தீஃபுக்குப் பாவமாகிவிடுகிறது. இன்ஸ்பெக்டர்களிடமிருந்தும் மற்ற ஆண்களிடமிருந்தும் அவளைக் காப்பாற்றுவதே அவனுக்கு வேலையாகிறது.

ஒரு பிரச்னையில் எல்லா ஆப்கன்காரர்களையும் வேலையைவிட்டே நீக்கி விடுகிறார் முதலாளி.  பரனைத் தேடி அவளுடைய அகதி முகாமுக்குப் போகிறான் லத்தீஃப். அங்கே காணும் காட்சிக ளும், பரனின் மேல் அவன் காதல் வயப்படும் காட்சிகளும் அற்புதமாக படம்பிடிக்கப்பட்டிருக் கின்றன. மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பரனின் குடும்பம். ஆனால், அவர்களிடம் பணம் இல்லை. தன்னுடைய அனுமதி அட்டையை விற்று, அந்தப் பணத்தை அவர்களிடம் தருகிறான் லத்தீஃப்.

பரன், லத்தீஃப்பிடம் விடைபெறும் கடைசி காட்சி கவிதை போல் எடுக்கப்பட்டிருக்கும். வெளியே சொல்லாத காதலுடன், ஒரு டிரக்கில் பரன் கிளம்ப, லத்தீஃப் கையசைக்க, அவளுடைய பெயரைச் சொல்வது போல் அப்போது மழை பொழிய ஆரம்பிக்கும். அரசியல் மற்றும் சமூக இன்னல்களிடையே ஒரு காதல் சத்தமின்றி நசுக்கப்படுவதை அதிக வசனம் இன்றி வெறும் விஷ§வலாகவே அழுத்தமாகச் சொன்ன அருமையான படம்... 'பரன்’.

காதல், நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. பழைய குடிசையில் வாழும் ஏழை விவசாயிக்கும் காதல் உண்டு. அம்பிகாபதி - அமராவதி, லைலா - மஜ்னு, ஷாஜகான் - மும்தாஜ், ஜென்னி -  மார்க்ஸ் என்று புகழ் பெற்ற ஜோடிகள் சரித்திரத்தில் இருந்தாலும், பாடப்படாத காவிய காதல்கள் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கின்றன.

காதல் என்பதற்கு திட்டவட்டமான தியரி கிடையாது. மனிதனின் ஆதார இனப்பெருக்கத்துக்காக ஆண் - பெண்ணிடையே இயற்கை தோற்றுவிக்கும் இனக்கவர்ச்சிதான்... காதல். அறிவியல், காதலைப் பற்றி என்ன சொல்கிறது? ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கும்போது காதல் தோன்றுவதற்கு முன்னால் அட்ரினலின் போன்ற ரகளையான நரம்பு வழி ரசாயனம், ஒரு பூகம்பம் போல் வெடித்துக் கிளம்புகிறது (இதைத்தான் 'ஒரு வித்தியாசமான ஃபீலிங்’ என்கிறார்கள் காதலர்கள்).

ஃபினைல்தைலமைன் என்கிற ரசாயனம் (காதலர்களின் ஃபேவரைட்டான சாக்லேட்டில் இது நிறைய உண்டு), அப்போது நரம்பு செல்களுக்கிடையே ரொமான்டிக்கான செய்திகளைப் பரப்புகிறது. இதனுடன் டோபோமைன் மற்றும் நோர்பைன்ஃபரைன் போன்ற உற்சாக ரசாயனங்களும் கைகோத்துக் கொள்ள, அட்ரினலின் சுரந்து, இதயம் ஏகாந்தமாக உணர்ந்து, படபடவென்று அடித்துக்கொள்கிறது.

ஆண் - பெண்ணுக்கிடையே காதல் தொடர்ந்து நீடிக்க ஆக்ஸிடோசின் என்கிற ரசாயனம் பெரும் உதவி செய்கிறது.
இதெல்லாம் அறிவியல் பார்வை. இதைத் தாண்டி இலக்கியப்பூர்வமான, கவிதைத்தனமான, இதிகாசத்தனமான காதல்கள் உண்டு. எந்தவித விளம்பரமும் இல்லாத சாதாரண மனிதர்களின் காதல்தான் உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை!

''நீங்கள் காதல் வயப்பட்டிருக்கும்போது உங்களால் தூங்க முடியாது. ஏனென்றால், காதலின் நிஜம் என்பது நீங்கள் தூக்கத்தில் காணக்கூடிய கனவுகளைவிட சுகமானது, ஆச்சர்ய மானது!'

'காதலுக்கு இனிமையான முடிவு என்பது கிடையாது. ஏனென்றால் காதலுக்கு முடிவு என்பதே கிடையாது!'

- இப்படி காதலைப் பற்றி எத்தனை எத்தனையோ பார்வைகள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன!

ஆகவே தோழிகளே... வாழ்க்கையின் அடிப்படை சூட்சமம் என்னவென்று தெரிகிறதா? ரொமான்ஸ்! அது இல்லாமல் வாழ்க்கை இல்லை. அது உங்கள் கண்ணீரில் ஆனந்தத்தை வரவழைக்கும்.

இதயத்தின் ரத்த ஓட்டத்தைச் சரிப்படுத்தும். துன்பங்களை விரட்டியடிக்கும் துணிவைத் தரும். தனிமையை தலைதெறிக்க ஓடவிடும். உங்கள் மனம் மற்றும் உடல் பிரச்னைகளை அற்புத மருத்துவமாகிக் காப்பாற்றும்.

காதலில்லாத மனித சரித்திரம் இல்லை. இலக்கியம், கலைகள் இல்லை.
உலகத்தின் அச்சு சுழல்வதே காதல் என்னும் அச்சாணியில்தான்.

Subscribe to our mailing letter for more articles like this Romance ragasiyangal: earth will not revolve if no love is here - ரொமான்ஸ் ரகசியங்கள்! காதல் மட்டும் இல்லைனா பூமி இங்கு சுத்தாது.

Curvy hip's for ladies: பெண்கள் அழகான உடலமைப்பைப் பெற முடியும்

0 comments
கொடி போல் இடை என்பது சில பெண்களுக்கு எட்டாக்கனிதான். பலர் குனிந்து, கால் விரல்களைத் தொட முடியாத அளவுக்கு தொப்பை விழுந்து  நடப்பதற்கே கஷ்டப்படுகின்றனர்.

முறையற்ற உணவுப்பழக்கமும், சரியான உடற்பயிற்சியின்மையும்தான் இதற்குக் காரணம்.

''நேரம் கிடைக்கும்போதெல்லாம், வீட்டிலிருந்தபடியே சின்ன சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைத்து பெண்கள் அழகான உடலமைப்பைப் பெற முடியும்'' என்கிறார் 'ஃபிட்னெஸ் ஹப்’ உடற்பயிற்சி மையத்தின் உரிமையாளர் சாரதி. அப்படி சில எளிய பயிற்சிகள் இவை...

க்ரஞ்சஸ் (CRUNCHES)

தரையில் நேராகப் படுத்துக்கொண்டு இரண்டு கைகளையும் தலையின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும்.



பிறகு மெதுவாக கால்களை மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது தலை மற்றும் உடலின் மேற்பகுதியை நேராக முன் நோக்கி எழுந்து, திரும்பவும் பழைய நிலைக்கு வர வேண்டும்.

இதுபோல், 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: மேல் வயிறும் கீழ் வயிறும் சுருங்கி விரிவதனால், கொழுப்பு கரையும்.

பைசைக்கிள் க்ரஞ்சஸ் (BICYCLE CRUNCHES)

தரையில் நேராகப் படுத்து கைகளை மடக்கி தலைக்கு அடியில் வைத்துக்கொள்ள வேண்டும்.



கால்களை மடங்கிய நிலையில் தரையில் பதிக்க வேண்டும். இப்போது வலது கால் முட்டியும், இடது கை முட்டியும் தொடும் வகையில் உடலை  மேலே உயர்த்த வேண்டும்.

ஓரிரு விநாடிகளில் பழைய நிலைக்குத் திரும்பி,  இடது கால், வலது கைக்கு அதேபோல் செய்ய வேண்டும்.  இதுபோல் 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: நடு வயிற்றுப் பகுதி மற்றும் கீழ் வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.

லெக் ரெய்சஸ் (LEG RAISES)

நாற்காலியில் அமர்ந்துகொண்டு கால்களை ஒன்றாகச் சேர்த்துவைத்து, மேலே நேராக உயர்த்தி, பிறகு மெதுவாக கீழே இறக்க வேண்டும். இதுபோல் 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.



பலன்கள்:: அடி வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு மற்றும் சதைப் பகுதி குறையும்.

சிட்டிங் ட்விஸ்டர் (SITTING TWISTER)

நாற்காலியில் நேராக அமர்ந்துகொண்டு கால்களை அகட்டிவைத்துக்கொள்ளவும்.

ஒரு கம்பை, தோள்பட்டைக்கு மேலாக வைத்துக்கொண்டு இரண்டு கைகளையும் தோள்களுக்கு நேராக நீட்டிவைக்க வேண்டும். இந்த நிலையிலேயே,  வலது மற்றும் இடது புறமாகத் திரும்ப வேண்டும். இந்த பயிற்சியை 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:தொடை, இடுப்புப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.


சைடு டம்பிள்ஸ் (SIDE DUMBBELL)  

தரையில் நேராக நின்றுகொண்டு ஒரு கையை சல்யூட் அடிப்பது போல் நெற்றியிலும், மற்றொரு கையில் கனமான ஒரு பொருளையும் வைத்துக்கொண்டு, இடது மற்றும் வலது புறமாக மாறி மாறி சாய வேண்டும். இந்த பயிற்சி 15-20 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: தொடை, இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும்.


ஹைபர் எக்ஸ்டென்ஷன் (HYPER EXTENSION)

தரையில் குப்புறப் படுத்துக்கொண்டு கைகள் இரண்டையும் தலையின் பின்புறம் வைத்துக்கொள்ள வேண்டும்.


இரண்டு கால்களையும், தலையையும் தரையில் இருந்து சற்று மேலே உயர்த்த வேண்டும். உடல் எடை வயிற்றில் தாங்கியபடி பார்ப்பதற்கு படகு போல் இருக்கும்.

இதை 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: முதுகுத் தசைகள் வலு பெறும். வயிற்றுப் பகுதியில் உள்ள தேவை இல்லாத கொழுப்பு கரையும்.

Thanks: Vikatan

Subscribe to our mailing list for more articles like Curvy hip's for ladies: பெண்கள் அழகான உடலமைப்பைப் பெற முடியும்

Increase sales through websites: வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி

0 comments
Increase sales through websites: வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி

தங்களை பற்றி சொல்ல, தங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள, செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுசெல்ல மற்றும் பணம் சம்பாதிக்க என்று பலரும் பலவிதமாக வெப்சைட்டுகளை அமைத்து பராமரித்து வருகின்றனர்.

மக்கள் இப்போது போன் மற்றும் டிவியை விட இன்டர்நெட்டை அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர் என்பதே இதற்கு காரணம். ஏனென்றால் நீங்கள் தேடும் மற்றும் எதிர்பார்க்கும் அனைத்தும் இன்டர்நெட்டில் சில நொடிகளில் கிடைக்கிறது.

உதாரணமாக இப்போது கிரிக்கெட் நடந்து கொண்டு இருக்கிறது. உங்கள் டிவியில் அந்த சானல் வரவில்லை என்றால் அந்த போட்டியை உங்களால் காண இயலாது.

ஆனால் இன்டர்நெட்டில் அப்படியில்லை, அந்த போட்டியை நீங்கள் நேரடியாக அதுவும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

Increase sales through websites: வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி

டிவி ஒளிபரப்புகள் மட்டும் இன்டர்நெட் வளர காரணமல்ல. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கவும், வேண்டாத பொருட்களை விற்கவும், ஒரு செய்தியை தெரிந்து கொள்ளவும் மற்றும் பலவற்றையும் அமர்ந்த இடத்திலேயே இன்டர்நெட் மூலம் பெற்று விடுவதால்தான் இந்த வளர்ச்சி.

அதனால்தான் அனைவரும் தங்களுக்கென்று ஆளாளுக்கு வெப்சைட் ஆரம்பித்து வருகிறார்கள்.

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும்.

நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தொழில் மட்டுமில்லைங்க உங்களின் சாதனைகள், உங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் உலகத்தாருக்கு தெரியப்படுத்த ஒரு கருவியாகவும் உபயோகப்படுத்தலாம்.

வெப்சைட்டை பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த பக்கம் பத்தாது, இன்னும் நூறு பக்கங்கள் எழுதவேண்டும்.

உங்களுக்காகவோ அல்லது உங்களின் நண்பர்களுக்காகவோ வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 07305847197

Read more about Business Websites in tamil: விற்பனைக்கு கைகொடுக்கும் வியாபார வலைதளம்

Subscribe to our email newsletter to get more articles like Increase sales through websites: வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி

Business Websites in tamil: விற்பனைக்கு கைகொடுக்கும் வியாபார வலைதளம்

0 comments
Business Websites in tamil: விற்பனைக்கு கைகொடுக்கும் வியாபார வலைதளம்

பிட் நோட்டீஸை விநியோகித்து பிசினஸை வளர்த்தது அந்தக் காலம். சிறு நிறுவனமாக இருந்தாலும் அதை வெப்சைட் (Website) மூலம், அதாவது வலைதளங்களின் மூலம் உலகம் முழுக்கக் கொண்டுசெல்வது இந்தக் காலம்.

வெப்சைட்டை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பிசினஸில் நல்ல லாபம் பார்க்க முடியும் என்கிற நிலையில், நாம் செய்துவரும் தொழிலுக்கான வெப்சைட்டை எப்படித் தொடங்குவது?

ஆரம்பித்தபிறகு அதை எப்படிக் கையாள்வது, வெப்சைட்களின் மூலம் வாடிக்கையாளர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்கிற கேள்விகளுக்கு விரிவான விளக்கம் தந்தார் பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் சமூக வலைதளங் களுக்கான பிரிவின் தலைவர் கே.எஸ்.ராஜசேகர்.

உங்களுக்கென ஒரு வெப்சைட்டை  உருவாக்கும்போது நம்பகமான டொமைன் பதிவாளர்களை அணுக வேண்டும்.

முதலில், வெப்சைட் ஹோஸ்டிங் (தங்களுக்குத் தேவையான வெப்சைட்டை டிசைன் செய்யும் முறை) செய்ய யாஹூ ஸ்மால் பிசினஸ், சென்னை ஆன்லைன் மற்றும் வேர்டுபிரஸ் ஹோஸ்டிங் வலைதளங்களை அணுகலாம்.

பாலமாகச் செயல்படுகின்றன!

''பிசினஸ் வெப்சைட்கள் வியாபாரத்துக்கும் வாடிக்கையாளர் களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுகின்றன.

தொழில் செய்துவருகிறவர்களில் பெரும்பாலானவர்கள் இதுகுறித்த தொழில்நுட்ப அறிவு தங்களுக்கு இல்லை என்பதால் இந்தப்பக்கமே வராமல் இருக்கிறார்கள்.

ஆனால், இன்றைய நிலையில், வெப்சைட் தொடங்குவதற்குப் பெரிய அளவில் டெக்னிக்கல் விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை.
சரியான தேர்வு முக்கியம்!

இந்த வலைதளங்களே டெக்னிக் சார்ந்த அத்தனை விஷயங்களையும் பார்த்துக்கொள்கின்றன. வெப் ஹோஸ்டிங் செய்ய ஒரு மாதத்துக்கு 250 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Business Websites in tamil: விற்பனைக்கு கைகொடுக்கும் வியாபார வலைதளம் வெப்சைட் வடிவமைப்பு செய்யும்முன்

எதற்காக இந்த வெப்சைட் வடிவமைக்கிறோம் (பொருட்களை விற்பதற்காகவா, புதிய வாடிக்கையாளர் களைக் கவர்வதற்காகவா, தொழிலை வளர்த்துக்கொள்வதற்காகவா) என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.

அவரவர்களின் தொழில் சார்ந்த மற்ற வெப்சைட்டைப் பார்த்து எது தேவை, எது தேவையில்லை என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அதன்பின்னர் நமக்கான வெப்சைட்டை  வடிவமைப்பது நல்லது.

வெப்சைட் வடிவமைப்பின்போது

வெப்சைட்டை வடிவமைக்கும் போது டொமைன் பெயரை (உதா: www.tamilnews.com) தேர்வு செய்வதுதான் மிக முக்கியம்.

இந்த டொமைன் பெயர் வாடிக்கையாளர்கள் எளிதில் நினைவில் வைத்திருக்கும்படி, தொழில் சார்ந்த வார்த்தையாக (மக்களிடம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை), ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டு வார்த்தைகள் என்றால் அவை இணைந்தே இருக்க வேண்டும். இரண்டுக்கும் இடையில் சிறப்புக் குறியீடுகளோ எண்களோ இடம்பெறக் கூடாது.

டொமைன் பெயரை தேர்வு செய்து பதிவு செய்ய ஆரம்பக் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். டிமாண்ட் கொண்ட டொமைன் பெயர்களுக்கு ஏற்றபடி கட்டணங்கள் மாறுபடலாம்.

டொமைன் பதிவாளர்களைத் தேர்வு செய்யும்போது மிக எச்சரிக்கையுடன், நம்பகமான ஆட்களையே தேர்வு செய்யவேண்டும்.

வெப்சைட்களில் போடும் தகவல்கள் (தமிழ், ஆங்கிலம் எதுவாக இருந்தாலும்) தெளிவாக இருக்க வேண்டும்.

வெப்சைட் குறித்தும், அதனை நிர்வகிப்பவர் குறித்தும், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறித்த விவரம், சலுகை விவரம் மற்றும் வாடிக்கையாளர் சேவை குறித்த விவரம் போன்றவற்றை வலைதளங்களில் தரும்போது வாடிக்கையாளர்களிடமிருந்து முழுமையான நம்பிக்கையைப் பெற முடியும்.

வெப்சைட்களை வடிவமைக்கும் போது, அதிலேயே பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும்படியான 'பே கேட்வே’ (Pay gateway)  ஆப்ஷன் இருக்கிறமாதிரி பார்த்துக்கொள்வது அவசியம்.

இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன்களில் வெப்சைட்களைப் பார்க்கிறவர்கள் அதிகம் இருப்பதால், அதற்கேற்றமாதிரி தயார் செய்ய வேண்டும்.

வடிமைக்கும் வலைதளத்தை 5-10 ஆண்டுகள் வரையாவது பதிவு செய்யவேண்டும். இதற்குக் குறைவாகப் பதிவு செய்யும்பட்சத்தில் அந்த வெப்சைட்டின் மீது வாடிக்கையாளர் களும், ரேட்டிங் ஏஜென்சிகளும் நம்பிக்கை இழக்கலாம்.

வெப்சைட் வடிவமைத்தபிறகு..!

வெப்சைட்களை உருவாக்கியபிறகு அதை உடனே 'லோக்கல் லிஸ்ட்டிங் சர்வீஸ்’-க்கு (உதா: கூகுள் லோக்கல், யாஹூ லோக்கல், பிங்க் (Bing)) சென்று பதிவுசெய்ய வேண்டும். அதேபோல கிளாஸிஃபைடு சைட்களிலும் வெப்சைட் பெயர்களைப் பதிவு செய்வது அவசியம்.

லோக்கல் லிஸ்ட்டிங் மற்றும் கிளாஸிஃபைடு சைட்கள்தான் வாடிக்கையாளர்கள் தேடும்போது யார் வெப்சைட்களை லிஸ்ட் செய்திருக்கிறார்களோ, அதையே முதலில் காட்டும்.
புதுமையைத்தான் அனைவரும் விரும்புகின்றனர்.

அடிக்கடி புதிய தகவல்களைக் கொண்டு உங்கள் இணையதளத்தைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பது அவசியம்.  முழுமையாக மாற்றாமல், சிறு  மாற்றங்களைச் செய்தாலே போதும்.

வெப்சைட் உருவாக்கியபிறகு அதைக் கட்டாயம் விளம்பரப்படுத்தியே ஆக வேண்டும். உங்களது பிசினஸ் கார்டுகளில் (விசிட்டிங் கார்டு) அச்சிட்டுக்கொள்வதன் மூலம், வெப்சைட் பெயரில் இ-மெயில் ஐடி-ஐ உருவாக்கிக்கொள்வதன் மூலம், சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்துவதன் மூலம் அதைச் சாத்தியப்படுத்தலாம்.

வாடிக்கையாளர் சேவை! Business Websites in tamil: விற்பனைக்கு கைகொடுக்கும் வியாபார வலைதளம்

வெப்சைட் வடிவமைக்கும்போது அதனுள் பிளாக்குகளை அமைத்து, தொழில் சார்ந்த பல தகவல்களை வாடிக்கையாளர்களுக்குத் தரலாம். இந்த பிளாக்குகள் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வாரி வழங்கவேண்டும். தகவல்களை எழுத்து வடிவில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்தும் போடலாம்.

வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள இ-மெயில் ஐடி-யை வெப்சைட்டில் குறிப்பிடச் சொல்லலாம். மெயில் ஐடியை தெரிவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதம் ஒருமுறை தங்களின் வெப்சைட்கள் குறித்தும், புதிய தகவல்களை மெயில் மூலமும் அனுப்பி அவர்களைக் கவரலாம்.

இப்போது வெப்சைட்டை பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெப்சைட் நிறுவனத்துடன் பேசும்படியான ஆப்ஷன்கள் வந்துவிட்டன. அந்த வெப்சைட்டில் 'கிளிக் தி கால்’ என்கிற ஆப்ஷன்கள் இருக்கும்பட்சத்தில் அப்போதே வெப்சைட் நிறுவனத்துடன் போனில் உரையாடி, சந்தேகங்களை நிவர்த்திச் செய்து கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளர்கள் காத்திருக்காமல், உடனுக்குடன் பதில் பெறமுடிகிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்!

வெப்சைட் பயனாளர் பெயர் (User Name), பாஸ்வேர்டு (Password)  போன்ற தகவல்களை ரகசியமாக வைத்திருத்தல் அவசியம். கூகுள் அனலடிக்ஸ் (google analytics)   என்ற ஃபைலை உருவாக்கும் வெப்சைட்டுக்குள் இன்ஸ்டால் செய்துவைத்துக் கொண்டால், அந்த வெப்சைட்டுக்கு வரும்

வாடிக்கையாளர் எங்கிருந்து வந்தார், எத்தனை மணிக்கு வெப்சைட்டை பார்வையிட்டார், எந்தப் பக்கத்தைப் பார்வையிட்டார் என்கிற தகவல்களைப் பெற முடியும்.

கூகுள் வெப்மாஸ்டரில்  (Webmaster)  தங்களின் வெப்சைட்டை பதிவு செய்து, பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளலாம்.

கவனிக்கவேண்டிய விஷயங்கள்!

ஒரு வெப்சைட்டின் முகப்புப் பக்கம் வழியாகவே பலரும் நுழைவார்கள். இதனை அமைப்பதில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்.

முகப்புப் பக்கம் லோடு ஆக அதிக நேரம் எடுத்துக்கொண்டால் பார்ப்பவர்கள் எரிச்சல் அடைவார்கள். தவிர, உங்களைப் பற்றிய தகவல்கள் நேரடியாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எளிமையாக இருப்பது நல்லது!

தளத்தைப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கும் வசதி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும்.

உங்கள் வெப்சைட் உங்களுக்குப் பிடித்த பிரவுஸரில் மட்டுமில்லாமல்,  மற்ற பிரவுஸர்களிலும் சரியாக இயங்க வேண்டும்.

நீங்கள் பதித்துள்ள படங்கள் சரியாக இருக்கின்றனவா, நீங்கள் எதிர்பார்க்கும் தோற்றத்தைத் தருகின்றனவா என்பதை அடிக்கடி நீங்கள் சோதித்து அறியவேண்டும்.

வெவ்வேறு வேகத்தில் இயங்கும் இணைய இணைப்புகளில் இந்தப் படங்கள் எப்படி இறங்கி இயங்கு கின்றன என்று சோதித்துப் பார்க்க வேண்டும்.

அனைவருக்கும் தெரிந்த மொழிகளில் உங்கள் தளத்தை அமைப்பது நல்லது. அப்போதுதான் பார்ப்பவர்கள் அந்த வெப்சைட் தங்களுக்கானது என்பதை உணர்வார்கள்.''

தொழில் செய்கிறவர்கள் இனி இணையம் மூலமும் கலக்கலாமே!

Read more about Increase sales through websites: வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி


Romance ragasiyangal: Start loving oh people of the world - ரொமான்ஸ் ரகசியங்கள்: காதல் செய்வீர் உலகத்தீரே

0 comments
Romance ragasiyangal: Start loving oh people of the world - ரொமான்ஸ் ரகசியங்கள்: காதல் செய்வீர் உலகத்தீரே

பருவங்களில் இனிமையானது வசந்தகாலம் என்பார்கள். மனிதனுடைய வாழ்க்கையையும் பருவங்களாகப் பிரித்தால், அதில் வசந்தகாலம் என்பதும் ஒரு பகுதியாக இருக்கும். அதுதான் காதல் செய்யும் பருவம்.

வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி சிறகசைப்பது, உலகமே சங்கீதமயமாக ஒலிப்பது, நகரம் மழையில் நனைந்து அழகாகப் பூத்திருப்பது, மன வானில் பறப்பது... இதெல்லாம் காதல் செய்யும் பருவத்தில் தோன்றும் கவித்துவமான எண்ணங்கள்.

காதல்... எப்போது, எதனால் ஏற்படுகிறது என்பதற்குத் தீர்மானமான வரையறைகள் இல்லை. கண்ணும் கண்ணும் நோக்கும்போதும், வார்த்தைகளால் கலந்து உரையாடும்போதும், நண்பர்களாகப் பழகும்போதும்... காதல் எப்போது வேண்டுமானாலும் பூக்கலாம்.

நிறைய ஜோடிகளிடம், 'உங்களுக்குக் காதல் மலர்ந்த கதையைச் சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்கிறேன். உறையூரைச் சேர்ந்த சந்திரசேகரின் அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது.

அவர் கல்லூரியில் படிக்கும்போது கூடப் படிக்கும் விமலாவைக் காதலித்திருக்கிறார். அந்தப் பெண் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சந்துருவுக்குத் தூது போனது, விமலாவின் தோழி அருணா. அவர், காதல் கடிதத்தை விமலாவிடம் கொடுக்க, ''அந்த ஆளுக்கு ஏற்கெனவே இதயம் வீக் (சந்துரு சிறு வயதில் இருந்தே ஹார்ட் பேஷன்ட்).

அவரை லவ் பண்ண எனக்கு என்ன பைத்தியமா? அவரை முதல்ல ஒழுங்கா ட்ரீட்மென்ட் எடுக்கச் சொல்லு'' என்று கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டாள். இதை அருணா சந்துருவிடம் சொல்ல, மனமுடைந்தவன் விஷம் குடித்துவிட்டான்.

நண்பர்கள் பதறிப்போய் ஆஸ்பத்திரியில் சேர்க்க, கூடவே இருந்து கவனித்துக் கொண்டாள் அருணா. அவனுக்காகக் கடவுளிடம் மனமுருகி பிரார்த்தித்தாள். மருந்து, உணவுகளை வேளாவேளைக்குக் கொடுத்து தாயுணர்வுடன் கவனித்துக் கொண்டாள்.

''உன்னுடைய தீவிரமான காதலை விமலா புரிந்து கொள்ளவில்லையே...'' என்று அவனிடம் அழுதாள். அப்போதுதான் சந்துருவிடம் அந்த மாற்றம் நிகழ்ந்தது. தனக்குக் கிடைக்காத ஒரு பெண்ணுக் காக ஏங்கி வாழ்க்கையையே வீண் செய்வது என்னவொரு முட்டாள்தனம் என்று தோன்றியது. அருகேயே இருக்கும் அருணாவின் கவனிப்பு அவனுக்கு ஒரு புது உலகத்தைக் காட்டியது. இவளைப் போன்ற பெண்ணைக் கவனிக்காமல் போனோமே என்று மனம் வருந்தியவன், சற்றும் தாமதிக்காமல், ''நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?'' என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.

Romance ragasiyangal: Start loving oh people of the world - ரொமான்ஸ் ரகசியங்கள்: காதல் செய்வீர் உலகத்தீரே

சந்துருவின் காதல் உள்ளத்தைப் பற்றி நன்கு அறிந்த அருணாவுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ''என்னைக் கடைசி வரை விட்டுப் பிரியாமல் காப்பாற்றினால்... உங்களை மணம் புரியத் தயார்’' என்றாள் அவள். இருவரின் வாழ்க்கையிலும் வசந்தகாலம் எனும் பருவம் தென்றலாக வீச ஆரம்பித்தது.


விரைவில் குணமடைந்த சந்துருவுக்கு வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்பட, நன்றாகப் படித்து ஒரு வேலையில் சேர்ந்தான். அருணாவும் ஆசிரியை பணியில் சேர்ந்தாள். இருவரும் திருமணம் செய்தார்கள். மணியான இரு குழந்தைகளோடு... இன்று மிக நல்ல நிலைமையில் காதல் சற்றும் குறையாமல் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

காதல் என்பது யார் மீதும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வரலாம். அந்தக் காதலின் உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்வதும், அதை அழகாகப் பயன்படுத்திக் கொள்வதும்தான் அடிப்படையான 'ரொமான்ஸ் ரகசியம்' என்பதற்கு, சந்துரு - அருணா... ஓர் அழகு உதாரணம்!


தியாகம், வீரம், சோகம், உருக்கம், சந்தோஷம், தன்னம்பிக்கை, அன்பு, காமம் எல்லாம் நிறைந்த அற்புதம்தான் காதல். அதனால்தான் பாரதி உணர்ச்சி மிகுதியுற்று இப்படிப் பாடிக் கூத்தாடினான்....

காதலினால் மானுடர்க்கு கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்
காதலினால் மானுடர்க்கு கவிதை உண்டாம்,
கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்;
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!

Join in our mailing list for more articles like this Romance ragasiyangal: Start loving oh people of the world - ரொமான்ஸ் ரகசியங்கள்: காதல் செய்வீர் உலகத்தீரே.

Google values 200 ranking factors for their SE Listings

0 comments
Google values 200 ranking factors for their SE Listings, Here you’ll find about the Google’s 200 Ranking Factors in an  list an info graphic manner.

Infograbic on Google values 200 ranking factors
Google values 200 ranking factors info-graphics
This info-graphic is not an official one or recognized one from Google, but the makers of this info-graphic about Google values 200 ranking factors for their SE Listings are some what close to Google's way of the search engine listings.

Impact of domain factors in Google ranking factors
Impact of domain factors in Google ranking factors

Impact of page level factors in Google ranking factors
Impact of page level factors in Google ranking factors

Impact of site level factors in Google ranking factors
Impact of site level factors in Google ranking factors

Impact of back-link factors in Google ranking factors
Impact of back-link factors in Google ranking factors

Impact of user interaction in Google ranking factors
Impact of user interaction in Google ranking factors

Impact of Special Algorithm Rules in Google ranking factors
Impact of Special Algorithm Rules in Google ranking factors

Impact of social signals in Google ranking factors
Impact of social signals in Google ranking factors

Impact of brand signals in Google ranking factors
Impact of brand signals in Google ranking factors

Impact of on-site webspam in Google ranking factors
Impact of on-site webspam in Google ranking factors

Impact of Off-site webspam in Google ranking factors

Sponsors of Google values 200 ranking factors for their SE Listings
Sponsors of Google values 200 ranking factors for their SE Listings
Sponsors of Google values 200 ranking factors for their SE Listings are http://backlinko.com/ and http://www.singlegrain.com/ and i came to know about this through http://doseoyourself.com/google-ranking-factors/ about this Google values 200 ranking factors for their SE Listings.

Subscribe to our mailing list for more SEO updates.

puliyodharai recipe Business: உடனடி புளியோதரை மிக்ஸ் - சுய தொழில்

0 comments
Puliyodharai recipe Business: உடனடி புளியோதரை மிக்ஸ்!

இந்த அவசர யுகத்தில் அன்றாட உணவுகளும் தப்பவில்லை. காலையில் வேலைக்குக் கிளம்பும் அவசரத்தில் சிலர் காலை உணவையே தவிர்த்துவிடுகிறார்கள்.

இன்னும் சிலர் அதிகம் செலவழித்து  ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள். இதுமாதிரியான வர்களின் அவசர தேவைகளுக்காக உடனடி சப்பாத்தி, இடியாப்பம் மற்றும் பொடிவகைகள் வந்துவிட்டன.

என்றாலும், பிடித்தமான குழம்பு மற்றும் தொக்கு வகைகள் இருந்தால் நன்றாக இருக்குமே என்பதுதான் பலரது ஏக்கமாக இருக்கிறது.

இந்தத் தொழில்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதில் பெரிய, பெரிய நிறுவனங்கள் ஆர்வமாக இருந்தாலும், தரமாகவும், சுவையாகவும் தந்தால் சிறிய நிறுவனங்களாலும் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

புளிக்குழம்பு, தொக்கு வகைகள், புளிசாத மிக்ஸ், லெமன்சாத மிக்ஸ் போன்றவை சில மாத காலத்துக்கு கெட்டுப்போகாத வகையில் தயாரிக்க முடியும்.

தவிர, இதுபோன்ற உடனடி மிக்ஸ் வகைகள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்றுவருவதால், இந்த தொழிலில் கவனம் செலுத்தலாம்.

puliyodharai recipe Business: உடனடி புளியோதரை மிக்ஸ்!

புளியோதரை மிக்ஸ் தயாரிப்பு முறை!

புளி, மிளகாய், வெந்தய பொடி, கடலை பருப்பு, நல்லெண்ணெய் மற்றும் உப்பு இவைகளை தரமானதாக கொள்முதல் செய்ய வேண்டும். புளியை தண்ணீர்விட்டு கரைத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தப் புளிக்கரைசலுடன் தேவையான அளவில் தாளிப்பு பொருட்களைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதை ஆறவிட்டு காற்று புகாத பாட்டில்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான்.

ஒரு கிலோ புளித்தொக்கு செய்ய 350 கிராம் புளி, 250 கிராம் நல்லெண்ணெய் தேவைப்படும். கடுகு, வெந்தயப்பொடி, மிளகாய், கடலைப்பருப்பு போன்றவை தேவைக்கு ஏற்ப 30 கிராம் முதல் 100 கிராம் வரை தேவைப்படும்.

இயந்திரம்!

புளிக்கரைசல் இயந்திரம், கலவை இயந்திரம், பேக்கிங் இயந்திரம், எடை போடும் இயந்திரம், சீலிங் இயந்திரம். இந்த  இயந்திரங்களை ரூ.10 லட்சத்துக்குள் வாங்கிவிடலாம். மின் இணைப்பு மற்றும் இதர உபகரணங்கள் ரூ.2 லட்சம் தேவை. ஆக  மொத்தம் ரூ.12 லட்சம் தேவைப்படும்.

முதலீடு in puliyodharai recipe Business: உடனடி புளியோதரை மிக்ஸ்!

Puliyodharai recipe Business
Puliyodharai recipe Business
நமது பங்கு (5%)        : ரூ.60,000

மானியம் (25%)         : ரூ.3,00,000

வங்கிக் கடன் (70%)     : ரூ.8,40,000


பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் அல்லது நீட்ஸ் திட்டத்தின் கீழ் மானியம் மற்றும் வங்கிக் கடன் கிடைக்கும்.

மூலப்பொருள்!

ஒரு கிலோ புளித்தொக்கு உற்பத்தி செய்ய 350 கிராம் புளி தேவை. நாம் தினசரி 1,000 கிலோ வரை உற்பத்தி செய்யலாம். என்றாலும், சராசரியாக 500 கிலோ என கணக்கு வைத்துக்கொள்வோம்.

இதற்கு 175 கிலோ புளி தேவை. தவிர, 125 கிலோ நல்லெண்ணெய்யும், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் மிளகாய்த் தூள், கடலைப்பருப்பு என இதர பொருட்கள் 50 கிலோ தேவை.

ஒரு கிலோ புளி ரூ.50 முதல் 80 வரை சந்தையில் கிடைக்கிறது. தரமான, அதிக புளிப்பு தன்மையுடைய புளியை வாங்க வேண்டும். விலை சராசரியாக ரூ.70 என வைத்துக்கொள்வோம்.

இதற்கு ஆகும் செலவு ரூ.12,250. தரமான நல்லெண்ணெய் ரூ.240 – ரூ.280 வரை கிடைக்கிறது. நாம் ரூ.250 என வைத்துக் கொள்வோம். நமக்கு 125 கிலோ நல்லெண்ணெய் தேவைப்படும். இதற்கு ரூ.31,250 தேவைப்படும்.

இதர பொருட்கள் சந்தை விலைக்கு ஏற்ப ரூ.10,000 என கணக்கு வைத்துக் கொள்ளலாம். மூலப்பொருட்கள் மொத்த செலவு ரூ.53,500. மாதம் 25 வேலை நாட்கள் எனில் மூலப்பொருட்களுக்கன மொத்த செலவு: ரூ.13,37,500.

பேக்கிங்!

உற்பத்திக்குப்பின் பாட்டில்களில் அடைத்து, அதை அட்டை பெட்டிகளில் அடுக்கிதான் விற்பனைக்கு அனுப்ப முடியும். 200 கிராம் கொள்ளளவு கொண்ட பாட்டில் 20 பாட்டில்களாக அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம். இதன்படி, ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வீதம் பேக்கிங் செலவு ஆகும். நமது ஒரு நாள் உற்பத்தி 500 கிலோ எனில் 2,500 பாட்டில்கள் தேவைப்படும். இதற்கான மாதாந்திர செலவு ரூ.6,25,000.

பணியாளர்கள்: (ரூ)

மேற்பார்வையாளர் 1 :  10,000
திறன் பணியாளர்கள் 4X8000: 32,000
உதவியாளர்கள்: 4X6000 :     24,000
பேக்கிங் பணியாளர்கள் 2X6000: 12,000
மொத்தம் :  78,000

நிர்வாகச் செலவுகள் (ரூ.)

வாடகை:  10,000
மின்சாரம் :   10,000
அலுவலக நிர்வாகம் :   10,000
இயந்திரப் பராமரிப்பு : 10,000
ஏற்று இறக்கு போக்குவரத்து கூலி :    20,000
இதர செலவுகள் :       10,000
வர்த்தக சலுகைகள் :     50,000
மொத்தம் :   1,20,000

நடைமுறை மூலதன செலவுகள்: (ரூ.)

மூலப்பொருட்கள் :  13,37,500
பேக்கிங் :   6,25,000
சம்பளம் :       78,000
நிர்வாகச் செலவுகள் :    1,20,000
மொத்தம் :   21,60,500

நடைமுறை மூலதனத்துக்கு தனியாக கடன் பெற்றுக்கொள்ள முடியும்.

விற்பனை வரவு:

உற்பத்திக்குபின் 200 கிராம் பாட்டில் விலை ரூ.40 என விற்பனை செய்யலாம். (இதன் அதிகபட்ச விற்பனை விலை ரூ.45 வரை விற்பனை செய்ய முடியும்.) இதன்படி தயாரிப்புக்குப்பின் ஒரு கிலோ புளியோதரை மிக்ஸின் விலை ரூ.200. நமது ஒருநாள் உற்பத்தி 500 கிலோ என்கிறபோது, நமது தினசரி வரவு ரூ.1,00,000-ஆக இருக்கும். நமது மொத்த உற்பத்தி 12,500 கிலோ. இதன்படி மொத்த விற்பனை வரவு ரூ.25,00,000-ஆக இருக்கும்.

கடன் திருப்பம் மற்றும் வட்டி (ரூ.)

மூலதன திருப்பம் (60 மாதங்கள்) :        14,000
மூலதன கடனுக்கான வட்டி (12.5%) :     8,750
நடைமுறை மூலதன கடனுக்கான வட்டி:   22,500
மொத்தம் :    45,250
மொத்த வரவு :  25,00,000
மொத்த செலவு :  21,60,500
கடன் திருப்பம் மற்றும் வட்டி :    45,250
லாபம் :   2,94,250


நன்றி- நாணயம் விகடன்

Subscribe to our mailing list for more self business and how to start a business articles like this puliyodharai recipe Business: உடனடி புளியோதரை மிக்ஸ்!.

How to start oil mill Business: எண்னை மில் தொடங்குவது எப்படி

0 comments
How to start oil mill Business: எண்னை மில் தொடங்குவது எப்படி 

வறுவல், பொரியல் என எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

How to start oil mill Business: எண்னை மில் தொடங்குவது எப்படி சந்தை வாய்ப்பு!

உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், நான்-வெஜ் அயிட்டங்கள் தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே இதன் மார்க்கெட் களைகட்டியிருக்கும்.

How to start oil mill Business: எண்னை மில் தொடங்குவது எப்படி முதலீடு

எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான். ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.

கட்டடம்!

Details on How to start oil mill Business in tamil
How to start oil mill Business
ஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.

வேலையாட்கள் needed for How to start oil mill Business: எண்னை மில் தொடங்குவது எப்படி 

இத்தொழிலில் வேலையாட் களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.

மூலப் பொருட்கள்!

நிலக் கடலை, எள், தேங்காய், சோயா பீன்ஸ் போன்ற பொருட்கள்தான் முக்கிய மூலப் பொருட்கள். இதில் எது உங்களுக்கு சுலபமாகக் கிடைக்குமோ அதைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யலாம். சில இடங்களில் மேற்சொன்ன எல்லா மூலப் பொருட்களும் எளிதாகக் கிடைக்கும்பட்சத்தில், எல்லாவிதமான எண்ணெய்களையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி இயந்திரங்கள் தேவைப்படும். காரணம், ஒரு இயந்திரத்தில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே தயார் செய்ய முடியும். தேங்காய் கிடைக்கும்போது தேங்காய் எண்ணெய், எள் கிடைக்கும் போது நல்லெண்ணெய் என மாதத்திற்கு ஒரு எண்ணெய்யை நம்மால் தயார் செய்ய முடியாது. இங்கு நாம் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு மட்டுமே பார்க்க இருக்கிறோம்.தேங்காய் எண்ணெய் தயார் செய்ய தேங்காய்தான் முக்கிய மூலப் பொருள். நூறு கிலோ தேங்காய் பருப்பிலிருந்து 63 கிலோ எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும்.

இயந்திரம்!

எக்ஸ்பெல்லர், வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.





தயாரிப்பு முறை!



தேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்தும் பருப்பை நாமே எடுத்து கொள்ளலாம். இப்படி தனியே எடுத்த தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள். பின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது. இந்த தேங்காய் எண்ணெய் இதன்பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஆயில் ஃபில்லிங்’ இயந்திரம் மூலம் பாக்கெட்டுகளிலும், சிறிய டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.

பிளஸ்!

தேங்காய் எண்ணெய் முக்கியமான சமையல் எண்ணெய் என்பதால், எளிதில் சந்தைப்படுத்த முடியும். தலை முடியில் தேய்த்துக் கொள்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யையே பலரும் பயன்படுத்துவதால் கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது.

மைனஸ்!


மூலப் பொருளான தேங்காய் விலையைப் பொறுத்தே இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தேங்காய் விலை அதிகரிக்கும்போது, மூலப் பொருள் கொள்முதல் விலையும் அதிகரிக்கும். இதனால் தேங்காய் எண்ணெய் விலை உயரும்போது விற்பனை பாதிப்படையும்.இந்த தொழிலின் சூட்சுமங்களை அனுபவ ரீதியாகப் பெற்ற பிறகு தனியாகத் தொடங்கி நடத்தினால் நிச்சயம் வெற்றிதான்!

Subscribe to our blog news letter for more updates related to How to start oil mill Business: எண்னை மில் தொடங்குவது எப்படி .

Saivam ! 2014 Tamil Cinema Review | சைவம் - சினிமா விமர்சனம்

0 comments
Saivam ! 2014 Tamil Cinema Review | சைவம் - சினிமா விமர்சனம்

ஒரு சேவல் என்ன செய்யும்? ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அன்பால் இணைத்து, 'சைவம்’ ஆக்கும்!

ஊர்த் திருவிழாவுக்கு ஒன்று கூடுகிறார்கள் ஊர்ப் பெரியவர் நாசர் குடும்பத்தினர். ஒரு திடீர் அசம்பாவிதம், காவல் தெய்வம் கருப்பனுக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனை நினைவுபடுத்துகிறது. கருப்பனுக்கு நேர்ந்துவிட்ட சேவலைப் பலிகொடுக்க முடிவு செய்கிறார் நாசர். ஆனால், சேவல் மிஸ்ஸிங். சேவல் கிடைத்ததா... நேர்த்திக்கடன் நிறைவேறியதா... என்பது கிளைமாக்ஸ்!

ஒரு மெகா குடும்பம், ஒரு மெகா மெகா வீடு, ஒரு குட்டி சேவல்... படத்தில் மூன்றே விஷயங்கள். அதற்குள்ளேயே  கூட்டுக் குடும்ப பலம், விவசாயத்தின் நலம், தலைமுறை இடைவெளி, டீனேஜ் நேசம், ஒரு சிறுமியின் பாசம், கிராமங்களின் அழிவு... என எக்கச்சக்க விஷயங்களை பேக் செய்திருக்கிறார் இயக்குநர் விஜய். படத்தில் நாயகன், நாயகி, ரொமான்ஸ், வயலென்ஸ்.. என சினிமா மெனுவுக்கான எந்தச் சங்கதிகளும் இல்லை. ஆனால், சிலாகிக்க இவ்வளவு இருந்தும், படம் ஒற்றைச் சேவலின் பஞ்சாரத்துக்குள்ளேயே சுற்றுகிறது!

Saivam ! 2014 Tamil Cinema Review | சைவம் - சினிமா விமர்சனம்

சைவம் - சினிமா விமர்சனம்
Saivam ! 2014 Tamil Cinema Review 
அத்தனை துறுதுறுப்பாகப் பார்த்துப் பழகிய சாரா, இதில் ஆச்சர்ய அண்டர்ப்ளே! பார்வையிலேயே உணர்வுகளைக் கடத்துவது, ஷ்ரவனிடம் ஆங்கிலத்தில் பொருமுவது, பிறகு அவனுக்கு சல்யூட் அடித்து பம்முவது, 'சேவலை யார் காப்பாத்துவா?’ என்று ஏக்கமாகக் கேட்பது என... சின்னச் சின்ன இடைவெளிகளிலும் பிரகாச மின்னல். மூக்கு விடைக்க, உதடு பிதுக்கி 'சரவணன் இல்லை.. ஐ யம் ஷ்ரவன்’ என்று கோபத்தில் கொந்தளிக்கும் ரே பால். 'இது என் வைஃபை... இது ஐயாவோட வைஃபை’ என்று மனைவிகளை அறிமுகப்படுத்தும் ஜார்ஜ், 'வெத்தலை வேணுமா?’ என்று சாமியாரிடம் கேட்டுக் கொடுத்துவிட்டு சீரியஸாகக் கலாய்க்கும் மாலதி, 'அத்தை... அத்தை...’ என்று நச்சரித்து, ஆர்வக்கோளாறில் பாய்ந்தோடும் பாஷா... என அனைவருமே பந்தி இலைப் பாயசப் பரவசம்! ஆனால், அதிர்ந்து பேசாத அதட்டல் பார்வை, சேவலைக் காணாத வேதனைப் பார்வை... இவற்றைத் தவிர நாசருக்கு வேறு வேலையே இல்லை.

'பாப்பா’ சேவலுக்கும் பாப்பா சாராவுக்குமான அன்பை, ஆரம்பத்தில் அழகழகாகக் காட்சிப்படுத்தித் தொடங்கியிருந்தால்... இன்னும் படம் நெஞ்சுக்கு நெருக்கமாகி இருக்கும். அது மிஸ்ஸிங் என்பதால், ஒரு சேவலுக்கு இத்தனை அக்கப்போரா எனும் கேள்வியே எழுகிறது.

Saivam ! 2014 Tamil Cinema Review | சைவம் - சினிமா விமர்சனம்

சேவல் பற்றிய மர்மம் தெரிந்த பின்னரும் நாசருக்காக 'பக்... பக்’ என அனைவரும் சேவலைத் தேடி அலையும் அத்தியாயம்கூட ஓ.கே. ஆனால், சேவலைக் காணாமல் வீதிவீதியாக, வீடுவீடாகத் தேடி, மைல் நீளத்துக்கு நீளும் காட்சிகள்... ஊப்ஸ். எந்தப் பிரச்னைக்கும் வீட்டின் கடைக்குட்டியான சாராவிடம் தீர்வு இருப்பது... தமிழ் சினிமாவின் 'ஜீனியஸ் ஜூனியர்’கள் லாஜிக்போல!

ஜி.வி.பிரகாஷ் இசை 'அழகு அழகு...’ பாடல் மட்டும் முணுமுணுக்கவைக்கிறது. சந்து, பொந்து, வயல், தொழுவம்... என இண்டு இடுக்குகளில் இருள், ஒளி சேர்க்கை காட்டுகிறது நீரவ் ஷா கேமரா.

'அன்-லிமிடெட்’ பக்பக்ஸைக் குறைத்து, 'லிமிடெட்’ வெஜ் விருந்தாகப் பரிமாறியிருந்தால், 'சைவம்’ ரொம்பவே ருசித்திருக்கும்!


Thanks to Vikatan

To read more cinema reviews like Saivam ! 2014 Tamil Cinema Review | சைவம் - சினிமா விமர்சனம் please subscribe to our news letter.

Start New Business and Win Easily: புதிய தொழில்களை உருவாக்குங்கள்! எளிதாய் வெற்றி பெறுங்கள்!

0 comments
Start New Business and Win Easily: புதிய தொழில்களை உருவாக்குங்கள்! எளிதாய் வெற்றி பெறுங்கள்!

நம்மில் பலருக்கு வாழ்க்கையில் முதல்முறையாக புதிய தொழில் தொடங்கி ஜெயிக்க ஆசை. இன்னும் சிலர், ஏற்கெனவே ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்துகொண்டு இருப்பார்கள்.

ஆனாலும், அதிக லாபம் தரக்கூடிய புதிய தொழில் ஏதேனும் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் ஒரு கை பார்த்துவிடத் துடிப்பார்கள்.

இந்த இரண்டு வகையினருக்கும், அதிக ரிஸ்க் இருந்தாலும் அதிக லாபம் தரக்கூடிய புதிய பொருளாதாரத் தொழில்கள் ஏற்றவை.

அது என்ன புதிய பொருளாதாரத் தொழில்கள் என்று கேட்கிறீர்களா..?

Start New Business and Win Easily: புதிய தொழில்களை உருவாக்குங்கள்! எளிதாய் வெற்றி பெறுங்கள்!

1990-ல் நம் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபோது பல துறைகளிலும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைத்தன.

தொலைபேசித் துறையில் பார்தி ஏர்டெல், ஐ.டி. துறையில் இன்ஃபோசிஸ், விப்ரோ, வங்கித் துறையில் ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., யெஸ் பேங்க், மருந்துத் துறையில் பயோகான், டாக்டர் ரெட்டீஸ் என பல நிறுவனங்கள் உருவாகி, இந்தியாவின் புதிய தொழில் முகத்தை உலகுக்கு காட்டியது.

கன்ஸ்யூமர் துறையில் ஐ.டி.சி., கவின்கேர், மாரிகோ என பல நிறுவனங்கள் உருவாகி, இன்றும் சக்கைப்போடு போட்டு வருகின்றன.

இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தப் பொருளாதார மாற்றங்களினால் இன்றும் புதிது புதிதாக பல தொழில் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

இவற்றில், இன்டர்நெட், மொபைல் டெக்னாலஜி, டெலிகாம் போன்ற துறைகளில் உருவாகிவரும் வாய்ப்புகளை புதிய பொருளாதாரத் தொழில்களாக நாம் கருதலாம்.

உதாரணத்திற்கு, உணவகங்கள் (ரெஸ்டாரன்ட்ஸ்) முன்பெல்லாம் ஒரு வகைதான்.

ஆனால், இன்றோ துரித உணவகம், தோசை ஹட், பிட்ஸா ஹட், சைனீஸ், அமெரிக்கன், இத்தாலியன், அரேபிக் என்று பல வகை - ஒவ்வொருநாளும் பெருகிக்கொண்டே போகின்றன.

கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் ஒரு சின்ன அப்ளிகேஷனை கஷ்டப்பட்டு உருவாக்கி, அதனைப் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதைச் சொல்லி பிரபலப்படுத்துகிறார்கள்.

அது ஓரளவுக்கு பிரபலமாகி, பலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பல நூறு கோடி ரூபாய்க்கு அந்த சாஃப்ட்வேரை விற்றுவிட்டு, சென்றுவிடுகிறார்கள்.

இவை மட்டுமல்ல, இன்னும் பல புதிய தொழில் வாய்ப்புகளைச் சொல்லலாம். உதாரணமாக, கால் டாக்ஸி ஏற்கெனவே இருக்கிறது.

இப்போது கால் டாக்ஸிக்குப் பதிலாக கால் ஆட்டோவும் வந்துவிட்டது! வாடகைக்கு சைக்கிள் விட்டோம் முன்பு.

இனி வாடகைக்கு கார்/பைக் விட்டால் எப்படி இருக்கும்?

Start New Business and Win Easily: புதிய தொழில்களை உருவாக்குங்கள்! எளிதாய் வெற்றி பெறுங்கள்!

நாம் எல்லோரும் கடைகள் வைத்து ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் சேவை செய்கிறோம். ஆன்லைன் கடை வைத்து உலகம் முழுவதும் தொழில் செய்தால் எப்படி இருக்கும்?

டாக்டர்களை பல வியாதிகளுக்கும் நேரிலேயே சென்று பார்த்து உரிய கட்டணத்தைச் செலுத்திவிட்டு வருகிறோம்.

போன் அல்லது இ-மெயில் மூலம் டாக்டர் கன்சல்டிங் செய்தால் எப்படி இருக்கும்? மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்து வாங்கி வருகிறோம். ஆன்லைன் அல்லது போன் மூலம் மருந்து விற்பனை செய்தால்?

இதுபோல் இன்றைய இளம் தலைமுறையினருக்கு என்னென்ன தேவை என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

புதிய ஒயினை புதிய கோப்பையில் தர முடியுமா என்று பாருங்கள். அல்லது பழைய ஒயினை புதிய கோப்பையில் தரமுடியுமா என்று யோசியுங்கள்.

அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், அமெரிக்கர்கள் குறைந்த மார்ஜின் உள்ள பிசினஸைத் தூக்கி எறிந்து கொண்டே இருப்பார்கள்.

அதேசமயம், புதிய ஹை மார்ஜின் தொழில்கள் உலையில் வெந்துகொண்டே இருக்கும். இதுவே அந்நாட்டை எப்போதும் உலகளவில் தலைமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இதுமாதிரியான தொழில்களைத் தேர்வு செய்யும்போது நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

அனுபவம் இல்லாத புதிய தொழில், ஜெயிக்கும் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருக்காது என்பதால் முதலீடு கிடைப்பது கடினம், அரசின் சட்டதிட்டங்கள் திடீர் பாதகங்களை உருவாக்கலாம்... என நெகட்டிவ் அம்சங்கள் இத்தொழிலில் இருந்தாலும், பாசிட்டிவ் விஷயங்களும் நிறைய இருக்கவே செய்கின்றன.

புதிய தொழில்கள் மூலம் நம் நாட்டில் தோண்டி எடுக்கவேண்டிய பணம் இன்னும் ஏராளமாக உள்ளது. அதைத் தோண்டுபவராக ஏன் நீங்கள் இருக்கக் கூடாது?

அப்படி நீங்கள் தோண்ட நினைத்தால், ஹை மார்ஜின் பிசினஸாக யோசியுங்கள். உங்கள் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள். வெளியில் சென்று உங்கள் எண்ணங்களை உங்களுக்கு நம்பகமானவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

பிசினஸ் ப்ளானை பட்டை தீட்டுங்கள்! தொடர்ந்து பாடுபடுங்கள். உங்கள் உழைப்பு இன்னும் சில ஆண்டுகளில் பல நூறு கோடி ரூபாயைச் சம்பாதித்துத் தரும் என்பதற்கு மூன்று நிஜ உதாரணங்களை இனி சொல்கிறேன்.

ரெட்பஸ்:

2006-ல் www.redbus.in என்ற வெப்சைட் பனிந்த்ர சமா மற்றும் இரண்டு நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் மூவரும் பிட்ஸ் பிலானியில் படித்தவர்கள்.

தீபாவளியின்போது தாங்கள் வேலை பார்த்த இடமான பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்தில் இருக்கும் வீட்டிற்கு பஸ்ஸுக்கு டிக்கெட் கிடைக்காமல் தவித்தபோது உருவான ஐடியாதான் ரெட்பஸ்.இன்

இந்த வெப்சைட் மூலம் இந்தியாவில் அனைத்து இடங்களிலிருந்தும் தொலைதூர பஸ்ஸிற்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

சமீபத்தில் இந்த நிறுவனத்தினை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நேஸ்ப்பர்ஸ் என்ற நிறுவனத்தின் இந்திய அங்கமான இபிபோ ரூ.500-600 கோடிக்கு வாங்கியுள்ளது.

மூன்று பேர் ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து உழைத்ததற்கு கிடைத்தப் பரிசுதானே இது!

ஜஸ்ட்டயல்:

ஒரு தொழிலின் டெலிபோன் எண் அல்லது முகவரியை அறிந்துகொள்ள ஜஸ்ட்டயல் என்ற நிறுவனத்தின் சேவையை உங்களில் பலர் பயன்படுத்தி இருப்பீர்கள்.

இத்தொழிலை ஆரம்பித்தவர் மும்பையைச் சேர்ந்த வி.எஸ்.எஸ். மணி. இதற்குமுன் பல தொழில்களில் தனது கையை நனைத்தார். ஆனால், இத்தொழில்தான் அவருக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தது.

வெறும் ரூ.50,000-த்தைக்கொண்டு 1996-ல் தனது 29-வது வயதில் ஜஸ்ட்டயலை ஆரம்பித்தார். ஓரிரு மாதங்களுக்கு முன்பு வந்த ஐ.பி.ஓ-வில் பல நூறு கோடிக்கு அதிபதியாக மாறியிருக்கிறார்.

மேக்மைடிரிப்:

தீப் கார்லா மேக்மைடிரிப் என்ற ஆன்லைன் டிராவல் வெப்சைட்டை 2000-த்தில் புதுடெல்லியில் ஆரம்பித்து 2010-ல் அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் வெற்றிகரமாக லிஸ்ட் செய்தார்.

ஒரு பங்கு அமெரிக்க டாலர் 14 என விற்று 70 மில்லியன் டாலர்களை நிறுவனம் திரட்டியது.

கூடிய சீக்கிரம் இந்திய சந்தையில் இவரது நிறுவனத்தின் பங்கு பட்டியலிடப்பட்டாலும் ஆச்சரியமில்லை.


இதுமாதிரி நீங்களும் ஏன் ஒரு புதிய தொழிலைத் தொடங்கக்கூடாது?

Subscribe to our mail list to get our mailing list for more articles like this Start New Business and Win Easily: புதிய தொழில்களை உருவாக்குங்கள்! எளிதாய் வெற்றி பெறுங்கள்.

How to start oil mill Business: எண்னை மில் தொடங்குவது எப்படி 
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf