என்சிசி சான்றிதழ் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை

0 comments

என்சிசி சிறப்பு நுழைவு திட்டத்தின் மூலம் ஏப்ரல் 2013 ஷார்ட் சர்வீஸ் கமிஷனின் 33வது கோர்ஸில் சேர (எஸ்எஸ்சி- நான்டெக்னிக்கல்), என்சிசி சி சான்றிதழ் பெற்ற தகுதி யானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த இடங்கள்: 58 (ஆண்-50, பெண்-8). 10 சதவீத காலியிடங்கள் போர்க்களத்தில் காய  மடைந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. வயது: 19 லிருந்து 25க்குள்.


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். என்சிசி சீனியர் டிவிஷனில் குறைந்த பட்சம் 2 வருடங்கள் சேவையாற்றி என்சிசி 'சி' சான்றிதழுக் கான தேர்வில் 'பி' கிரேடு அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, குழுத் தேர்வு, உளவியல் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


அவர்களுக்கு சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகடமியில் 11 மாதங்கள் பயிற்சியளிக்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடித்தவர்கள் ராணுவத்தில் லெப்டினன்ட் அந்தஸ்தில் அமர்த்தப்படு வார்கள். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகிலுள்ள OC, NCC Unitக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.1.

Employment Opportunities

0 comments

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 728 காலியிடங்கள்
 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிளார்க் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி: கிளார்க் - 728
 
கல்வித் தகுதி: 65 சதவிகிதத் தேர்ச்சியுடன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடவே கிளார்க் பணிக்காக ஐ.பி.பி.எஸ். நடத்திய பொதுத் தேர்வில் பொதுப் பிரிவினர்கள் 120 மதிப்பெண்களும், எஸ்.சி./ எஸ்.டி./ ஓ.பி.சி. பிரிவினர்கள் 105 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

 வயது: 28க்குள்

 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.07.2012
 
மேலும் விவரங்களுக்கு: www.iob.in 

ராஜா ரமணா சென்டரில் டிரெய்னி பணியிடங்கள்
 
ராஜா ரமணா சென்டரில் டிரெய்னி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி: டிரெய்னி - 21
 
கல்வித் தகுதி: இயற்பியல்/ கணிதம்/ வேதியியல்/ எலெக்ட்ரானிக்ஸ்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.எஸ்சி. பட்டம் அல்லது எலெக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல்/ இன்ஸ்ட்ரூமெண்டேஷன்/ எலெக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 வயது: 24க்குள்

 விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 10.08.2012

 மேலும் விவரங்களுக்கு: www.cat.gov.in 

எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியிடங்கள்
 
எல்லைப் பாதுகாப்புப் படையில் ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி: அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் - 100
 
கல்வித் தகுதி: ரேடியோ மற்றும் டி.வி. டெக்னாலஜி/ எலெக்ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேஷன்/ கம்ப்யூட்டர்/ எலெக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 வயது: 25க்குள்

 பணி: ஹெட் கான்ஸ்டபிள் - 959
 
கல்வித் தகுதி: ரேடியோ மற்றும் டி.வி./ எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 வயது: 23க்குள்

 விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.07.2012

 மேலும் விவரங்களுக்கு: www.bsf.nic.in
 

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வு

 Tamilnadu Transport Subordinate Serviceல் மோட்டார் வாகன ஆய்வாளர் பதவியை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது.

 பணி: மோட்டார் வாகன ஆய்வாளர் - 17

 கல்வித் தகுதி: ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கூடவே ஆட்டோமொபைல் பட்டறையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் பணியில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 வயது: 32க்குள்

 விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 25.07.2012

 மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in 

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் பணியிடங்கள்
 
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி: கான்ஸ்டபிள் - 34
 
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

 வயது: 23க்குள்

 விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.07.2012

 மேலும் விவரங்களுக்கு: www.cisf.nic.in

பிளஸ் டூ படித்தவர்கள் ஐஐஎம்ல் படிக்க வாய்ப்பு!

1 comments
இந்தூரில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்தமாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
 
பட்டப் படிப்பு படித்த பிறகு சட்டப்படிப்பு என்ற காலம் மாறி ஐந்து ஆண்டு சட்டப்படிப்பில் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்த சிஏ, ஐசிடபிள்யூஏ, ஏசிஎஸ் போன்ற படிப்புகளில் தற்போது பிளஸ் டூ முடித்த மாணவர்களும் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கான ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக்....இப்படி பல்வேறு ஒருங்கிணைந்த படிப்புகள் வந்து விட்டன. இதேபோல ஒருங்கிணைந்த ஆசிரியர் பட்டப் படிப்புகளும் வரத் தொடங்கி விட்டன. ஆர்வமிக்க, திறமையான மாணவர்களை இளநிலைப் பட்ட நிலையிலேயே ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவுகளின் பக்கம் ஈர்க்கும் முயற்சியின் வெளிப்பாடுதான் இது. இந்த நிலையில், பிளஸ் டூ முடித்த மாணவர்களும் நேரடியாக ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் ஓருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பைப் படிக்கும் வாய்ப்பை இந்தூரில் உள்ள ஐஐஎம் வழங்குகிறது. எதிர்காலத்தில் சிறந்த நிர்வாகிகளாக விரும்பும் மாணவர்களை, பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற நிலையிலிருந்தே தயார்படுத்துவதற்காக இந்தப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தியரிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு செயல்முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்கிறார்கள்.
 
இந்தப் படிப்பில் சேர என்ன தகுதி வேண்டும்?
 பிளஸ் டூ படித்த மாணவர்கள் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள். இந்தப் படிப்பில் சேர விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவு மாணவர்கள் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். சேட்- 1 (SAT-1) தேர்வு எழுதிய மாணவர்கள் 2,400க்கு1,600க்கு மேல் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். சேட் தேர்வு எழுதிய மாணவர்கள் அதில் 1,475க்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து இந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி வரை பெறப்பட்ட சேட்-1 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே செல்லுபடியாகும். இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவு மற்றும் கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவு மாணவர்கள், ஜூன் 30ம் தேதி நிலவரப்படி 20 வயதுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 22 வயதுக்கு மேற்படக்கூடாது.
 
இந்தப் படிப்புக்கு மாணவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
 அட்மிஷன் இரண்டு கட்டங்களாக இருக்கும். பிளஸ் டூ மதிப்பெண்கள்  அல்லது சேட்-1 தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியுடைய மாணவர்கள் திறனறித் தேர்வுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள். அதாவது, கொல்கத்தா, புதுதில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், இந்தூர் ஆகிய இடங்களில் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி திறனறித் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் குவான்டிடேட்டிவ் எபிலிட்டி, வெர்பல் எபிலிட்டி ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். அப்ஜெக்ட்டிவ் முறையில் 100 கேள்விகள் கேட்கப்படும். இரண்டு மணி நேரத்துக்குள் இதற்கு விடையளிக்க வேண்டும். இத்தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. இத்தேர்வு எழுதிய மாணவர்களிலிருந்து தகுதி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து 3ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும். திறனறித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்களும் நேர்காணலுக்கு 40 சதவீத மதிப்பெண்களும் என்ற அடிப்படையில் மாணவர்களின் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதியுடைய மாணவர்கள் இந்த ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையும் கடைப்பிடிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்களது அட்மிஷனை உறுதி செய்யும் வகையில் குறிப்பிட்ட தேதிக்குள் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும். படிப்புக் கட்டணத்தைச் செலுத்தும் போது, இந்தத் தொகை அதில் சரிசெய்து கொள்ளப்படும். இந்த ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதையடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.5 லட்சம். கட்டணம் மாறுதலுக்கு உட்பட்டது. இதுதவிர, தங்கும் விடுதி மற்றும் உணவுச் செலவுகள் தனி. இந்தப் படிப்பில் சேரத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கல்வி நிலைய வளாகத்திலேயே தங்கிப் படிக்க வேண்டும்.
 
இந்தப் படிப்பில் என்ன கற்றுத் தருவார்கள்?
 இந்த ஐந்து ஆண்டுப் படிப்பில் 15 டேர்ம்கள் உண்டு. ஒவ்வொரு டேர்மிலும் குறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச மதிப்பெண்களை (கிரிடிட்) பெறும் மாணவர்கள்தான் அடுத்த நிலை வகுப்புகளில் சேர அனுமதிக்கப்படுவார்கள். வகுப்புகள் காலை 9.30 மணியிலிருந்து பகல் 1.30 மணி வரை வாரம் ஐந்து நாட்கள் நடைபெறும். குரூப் டிஸ்கஷன் உள்பட படிப்பு தொடர்பான காரணங்களால் வகுப்பறை நேரம் 4 மணி வரை நீடிக்கப்படலாம். ஐஐஎம் ஆசிரியர்கள் தவிர சர்வதேச அளவில் உள்ள தொழில்துறை சார்ந்த நிபுணர்களும் வகுப்புகளை எடுப்பார்கள். இதுதவிர, கலை, அறிவியல், வணிகவியல் கல்லூரிகளில் பணிபுரியும் அல்லது ஓய்வு பெற்ற தலைசிறந்த ஆசிரியர்களும் பாடங்களைக் கற்பிப்பார்கள். இந்தப் படிப்பு மாணவர்களுக்காக ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்கேற்புக்கான சாத்தியங்கள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
 
இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடங்களுடன் மேனேஜ்மெண்ட் பாடங்களும் இருக்கும். கணிதம், புள்ளியியல், லாஜிக், கம்ப்யூட்டர் சயின்ஸ், அரசியல் அறிவியல் மற்றும் இலக்கிய அறிமுகம், தேசிய மற்றும் சர்வதேசிய நாகரிக வரலாறு, பயாலஜிக்கல் சயின்சஸ் ஆகியவையும் கற்றுத்தரப்படும் பாடங்களில் அடங்கும். ஒரு வெளிநாட்டு மொழியும் ஒரு இந்திய மொழியும் குறித்த அறிமுகம் இருக்கும். லீடர்ஷிப் டெவலப்மெண்ட்,  பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், டீம் ஒர்க், கம்யூனிக்கேஷன் ஸ்கில்ஸ் போன்றவற்றிலும் படிப்புக் காலத்தில் கவனம் செலுத்தப்படும். அக்கவுண்டிங், ஃபைனான்ஸ், ஆர்கனைசேஷன் பிகேவியர் டெசிஷன் சயின்ஸ், ஆபரேஷன்ஸ் அண்ட் சர்வீசஸ் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் எகனாமிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்யூனிக்கேஷன், லீகல் ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் பிசினஸ், நெறிகள் (எத்திக்ஸ்), கார்ப்பரேட் கவர்னன்ஸ், கார்ப்பரேட் சோஷியல் செக்யூரிட்டி, பிசினஸ் ஸ்ட்ரேட்டஜி , இன்டர்நேஷனல் பிசினஸ் ஆகிய மேனேஜ்மெண்ட் தொடர்பான பாடங்களும் இருக்கும். இதுதவிர, இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு சர்வேதச அளவில் விஷயங்களை அறிந்துகொள்ள வாய்ப்புகளும் இருக்கும். அத்துடன், பல்வேறு அமைப்புகளில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதாவது, ஐந்து ஆண்டு காலத்தில் சிறந்த மேனேஜ்மெண்ட் புரபஷனலை உருவாக்கும் வகையில் இந்தப் படிப்பு இருக்கும். இந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஐந்தாவது ஆண்டின் முடிவில் Integrated Diploma in Management (IDM) என்று சான்றிதழ் வழங்கப்படும்.
 
விண்ணப்பிப்பது எப்படி?
 இந்தூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் இணையத்தளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.  இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இந்தூரில் மாற்றத்தக்க வகையில், 'இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் --இந்தூர்' என்ற பெயரில் இந்தத் தொகைக்கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இந்தூரில் உள்ள ஐஐஎம் நிர்வாக அலுவலகத்திற்கு ஜூலை 20ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
 
இங்கு படிக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பற்றி கவலைப்பட வேண்டாம். பட்டப் படிப்பை முடித்து விட்டு ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் மேனேஜ்மெண்ட் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம்  கொத்திக்கொண்டு போக பிரபல நிறுவனங்கள் காத்திருக்கும்போது, இந்த ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைக்காதா என்ன? மிகச் சிறந்த கல்வி நிறுவனம். தலை சிறந்த ஆசிரியர்கள். நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். ஆர்வமிக்க மாணவர்கள் இப்போதே உங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

 
விவரங்களுக்கு:www.iimidr.ac.in

நேர்மைக்குப் பரிசு கட்டாயக் காத்திருப்பு!

0 comments
'சத்துணவுச் சண்டை!’ - இது, கடந்த இதழ் கழுகார் பகுதிக்கு நாம் கொடுத்திருந்த தலைப்பு. சத்துணவு அமைப்பாளர்கள் நியமனத்தில் ஆளும் கட்சிப் புள்ளிகளுக்கும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் பாலாஜிக்கும் ஏற்பட்ட மோதலை கழுகார் விலாவாரியாகச் சொல்லி இருந்தார்.
'யார் எந்தப் பரிந்துரை செய்தாலும் தகுதியின் அடிப் படையில்தான் சத்துணவு அமைப்பாளர் நியமனம் நடக்கும்’ என்று, தான் நினைத்ததை சாதித்தும் விட்டார் கலெக்டர் என்ற கழுகார், 'அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் இப்படி நடக்க ஆரம்பித்தாலே, நாடு சுபிட்சம் அடையும்’ என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்!
நாடு அவ்வளவு சீக்கிரத்தில் திருந்தி விடுமா, திருந்து​வதற்குத்தான் விட்டு விடுவார்களா நம்முடைய அதிகாரிகளும் ஆட்சியாளர்களும். நம்முடைய இதழ் வெளியான கடந்த சனிக்​கிழமை அன்று, 'பாலாஜியின் பத​விக்கு வேட்டுவைக்கப்​பட்டு​விட் டது. அவ​ருக்கு எந்தப் பதவி​யும் ஒதுக்கப்​படாமல் கட்டாயக் காத்திருப்பில் வைக் கப்பட்டு உள்ளார்.
ஐ.ஏ.எஸ். தேர்​வில் தேர்ச்சி பெற்றதும் பாலாஜி முதன்​முதலில் சேரன்மகாதேவி உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். மணல்கடத்தல் கும்பல் மீது எடுத்த கடும் நடவடிக்கைகள் காரணமாக அப் போதே பரபரப்பாகப் பேசப்பட்டார். பின்னர் தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையில் துணை கமிஷனராகப் பணியாற்றினார். அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், விருதுநகர் மாவட்டகலெக்டராக நியமிக்கப்பட்டார். வந்த நாளில் இருந்தே ஊழல் மற்றும் முறைகேடுகளில் புரையோடிக்கிடந்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். ஒருகட்டத்தில், கலெக்டர் பாலாஜியின் அதிரடிகளை எதிர்த்து அரசு ஊழியர் சங்கம் போராட்டங்கள் நடத்தியது. பின்னர் மக்கள் கோபத்துக்குப் பயந்து மனம் மாறி, பாலாஜிக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தொடங்கினர்.
விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி போன்ற பகுதிகளில் அதிரடியாக 144 தடை உத்தரவு பிறப்​பிக்கப்​பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மாவட்டத்தில் காலியாக இருந்த பல பணி இடங்களுக்கு முறையாகத் தேர்வு நடத்தி, ஆட்களை நியமனம் செய்தார்.
வருவாய்த் துறை மற்றும் ஊரகத் துறை வளர்ச்சிப் பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் பாலாஜியின் பேச்சில் அனல் பறக்கும். 'லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப் பதற்குச் சமம்’ என்று சொல்லி ஒழுங்கீனமாகச் செயல்படும் அதிகாரிகளை மீட்டிங்கில் வறுத்து எடுத்துவிடுவார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் ஒருவர், கலெக்டர் பெயரைச் சொல்லி கான்ட்ராக்ட் ஆசாமிகளிடம் பணம் பறித்து வந்தார். கலெக்டர் பங்க​ளாவுக்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டும் என்று வசூல் வேட்டையில் இறங்கினார். தகவல் தெரிந்ததும், அவரைக்  கண்டித்து, மெடிக்கல் லீவில் போகச் சொன்ன கையோடு, அவரது அறையைப் பூட்டி விட்டார் கலெக்டர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம், நன்கொடை வசூல் குறித்துப் புகார் வந்தது. உடனே, அந்தப் பள்ளியின் வங்கிக் கணக்கை முடக்கி வைத்து, கூடுதல் கட்டணத்தை பெற்றோர்களிடம் திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டார். ஆனால், பள்ளி நிர்வாகம் மசியவில்லை. அதனால், பள்ளி முதல்வர் மற்றும் பள்ளித் தாளாளர் உட்பட ஆறு பேர் மீது மோசடி வழக்குப் பதிவானது. தமிழகத்தில் இப்படி ஒரு வழக்குப்பதிவு நடந்திருப்பது இங்கு மட்டும்தான்.
பசுமை வீடுகள் கட்டும் திட்டம், இந்திரா காந்தி நினைவுக் குடியிருப்பு திட்டங்களில், பயனாளிகளைத் தேர்வு செய்​வதில் தொடங்கி கமிஷன் வாங்குவது வரை பல முறைகேடுகள் நடந்தன. இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களின் 'செக் பவர்’ பறிக்கப்பட்டது.
ராஜபாளையம் அருகே கன்சாபுரத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். ஆனால், மின் தடை காரணமாக பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. 'ஒரு மாதத்துக்கு சீரான மின்சப்ளை இல்லை என்றால், பயிர்கள் வீணாகிவிடும்’ என்று கோரிக்கை வைத்தனர். உடனே, கன்சாபுரம் பகுதியில் மட்டும் கூடுதல் நேரம் மின்சாரம் வழங்குவதற்கு மின் வாரியத் தலைவரிடம் சிறப்பு அனுமதி பெற்றுத்தந்தார். இதில் சிக்கல் ஏற்படுத்த முயன்ற தென்மண்டல மின் பகிர்மான உயர் அதிகாரி மற்றும் விருதுநகர் மாவட்ட மின்வாரிய உயர் அதிகாரியையும், தனக்கு உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட் பவரைப் பயன்படுத்தி வழிக்குக் கொண்டு வந்தார்.
இதுபோல, ஏகப்பட்ட அதிரடி​களை நடத்திய பாலாஜியைக் கண்டு ஆளும் கட்சியினர் அதிர்ந்து நின்ற நேரத்தில்தான், சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்த நியமனத்துக்கு என சில விதிமுறைகள் இருந்தாலும், ஆளும் கட்சிக்காரர்கள் சுட்டிக்காட்டும் நபர்களுக்குத்தான் வேலை கிடைக்கும் என்பது நடைமுறை. அதனால் ஆளும் கட்சியினர்,  ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வசூல் வேட்டையில் இறங்கினர்.
இது, பாலாஜி காதுக்குப் போனதுமே, விருதுநகர் மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் கடிதம் எழுதினார். அதில், 'சத்து​ணவுப் பணியாளர்கள் நியமனம் முறையாக நடத்தப்பட்டு, தகுதி​யானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்​படுவார்கள். ஏழைகள் தேர்வு செய்யப்பட்டால்தான், ஒழுங்காக வேலை பார்ப்பார்கள். குழந்தைகளுக்கும் சத்தான உணவு கிடைக்கும். எனவே, இந்த நியமனத்தில் நீங்கள் அரசுக்கு முழுஆதரவு அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தார்.
அதோடு நிற்காமல், சத்துணவுப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், 'யாராவது அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் சிபாரிசோடு வந்தால், மூன்று ஆண்டு காலம் எந்த அரசுப்பணிக்கும் செல்ல முடியாதபடி அவர்கள் பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்’ என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு 10-ம் வகுப்பும், சமையலருக்கு எட்டாம் வகுப்புத் தேர்ச்சியும், சமையல் உதவியாள ருக்கு 5-ம் வகுப்பும் கல்வித்தகுதி ஆகும். ஆனால், இந்த வேலையில் சேருவதற்கு டிகிரி படித்தவர்களும் விண்ணப் பித்தனர். அதனால் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய முதலில் மூன்று பேர் அடங்கிய 41 குழுக்கள் அமைக்கப்பட்டன. 'விண்ணப்பதாரர் உண்மையிலே ஏழையா அல்லது நடிக்கிறாரா? கணவர் எங்கே வேலை செய்கிறார்? குடும்பத்தின் மொத்த சம்பளம் எவ்வளவு? சொந்த வீட்டில் வசிக்கிறாரா? என்று பல கேள்விகளுக்கு விடை தெரியவேண்டும் என்று உத்தரவு போட்டார். அதன் அடிப்படையில்தான் இன்டர்வியூக்கு வரும் பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
வயதுக்கு 12 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு 3, வேலை வாய்ப்பு சீனியாரிட்டிக்கு 19, விதவை, கணவனால் கைவிடப்பட்ட நிலையில் இருப்பவர்​களுக்கு 20, வறுமை நிலைக்கு 15, குடும்ப நிலைக்கு 10, நேர்முகத் தேர்வு செயல்பாட்டுக்கு 6 என்று மொத்தம் 85 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. அதன்படி ஜூன் 23 முதல் 26 வரை இன்டர்வியூ நடத்தப்பட்டு, அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இந்தத் தகவல் தெரிந்ததும், தாங்கள் கொடுக்கும் லிஸ்ட்டும் இடம் பெறவேண்டும் என்று ஆளும் கட்சியினர் கடும் நெருக்கடி கொடுத்தனர். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல், ஜூன்  27 அன்று காலை 7 மணிக்கு அலுவலகம் வந்த பாலாஜி, மெரிட் அடிப்படையில் தேர்வான 1,006 பேருக்கும் ஒரே நேரத்தில் கையெழுத்துப் போடத் தொடங்கினார். அத்தனை கடிதங்களையும் ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பிவிட்டுத்தான் கிளம்பினார்.
கலெக்டர் கையெழுத்துப் போட்டுக்கொண்டு இருந்த நேரத்​தில், அந்தத் தகவல் அறிந்து தலைமைச் செயலகத்தில் இருந்து முக்கிய அதிகாரி போன் செய்தாராம். சத்துணவு நியமனம் தொடர்பான விஷயம் என்பதைப் புரிந்து கொண்டதால் பாலாஜி போனை எடுக்கவில்லை என்கிறார்கள். செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோதும் பேசவில்லை. முழுமையாக கையெழுத்துப் போட்டு, கடிதங்களை அனுப்பிய பிறகுதான் தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிக்கு  போன் செய்தாராம் பாலாஜி. அப்போது எதிர்முனையில் போன் எடுக்கப்படவில்லை.  அந்தக் கோபத்தில்தான், டிரான்ஸ்ஃபர் உத்தரவு உடனே தயாரானது என்கிறார்கள்.
இதுகுறித்துப் பேசும் உயர் அதிகாரிகள், ''ஆளும் கட்சி அமைச்சர் முதல் அரசுத் துறை செயலாளர் வரை பலரும், 'ஆளும் கட்சி லிஸ்ட்டில் இருந்தும் சிலருக்கு நியமனம் போட வேண்டும்’ என்று கேட்​டார்கள். ஆனால், 'அரசுக்கு கெட்டபெயர் வந்துவிடும்’ என்று எல்லாரையும் நிராகரித்து​விட்டார் கலெக்டர். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, பாலாஜியின் வீட்டுக்கே சென்று சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். பாலாஜி அதைக் கையில்கூட வாங்கவில்லை. பாலாஜியை வேறு இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்திருந்தாலும் பரவாயில்லை. கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கின்றனர். மீண்டும் போஸ்டிங் வாங்குவதற்கு அவர் பெரும்பாடு பட வேண்டும். நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி பழிவாங்கப்பட்டு இருக்கிறார். அதனால் நேர்மையான அதிகாரிகள் இனி, ஆளும் கட்சிக்காரர்களைக் கண்டு பயப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது'' என்று வருத்தப்பட்டனர்.
எந்த ஒரு காரியத்துக்காக கலெக்டர் பாலாஜி முழு மூச்சுடன் செயல்பட்டாரோ, அது நிறைவேறவில்லை என்பதுதான் வேதனை. ஆம், சத்துணவு அமைப்பாளர்களால் வேலைக்குச் சேர முடியவில்லை. 'இவர்கள் தரும் நியமன உத்தரவு களை வாங்க வேண்டாம்’ என்று, மேலிடத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு போயிருக்கிறதாம். 'சென்னை கவுன்சிலர்களிடம் சீறிய முதலமைச்​சருக்கு, விருதுநகரில் மட்டும் அல்ல.. மாநிலம் முழுவதுமே சத்துணவு அமைப்பாளர் நியமனத்தில் நடக்கும் நெறிமுறை மீறல் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. 'வாய்மையே வெல்லும்’ என்பது விளம்பரத்துக்கு மட்டும்தானா?
எம்.கார்த்தி
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

Thanks to Vikatan

Source: http://www.vikatan.com/article.php?page=2&mid=2&sid=577&aid=21254&type=all#cmt140200

Please join and support the cause in our facebook page, let this initative be the first in terms of opposing the politicians.

திகைக்க வைக்கும் செக்ஸ் கொடுமைகள்

0 comments
அதிர்ச்சியானது.. கவலைக்குரியது.. அனைவரும் அறிந்துகொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டியது.. என்ன விஷயம் தெரியுமா?

- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்ற கொடுமை!

* 53 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

* பாதிக்கப்படுபவைகளில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளின் சதவீதம் அதிகம்.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப குழந்தைகளைவிட மேல்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம்.

* ஒன்று முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இந்த பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள்.

* 5 முதல் 12 வயது வரை பாதிப்பின் உச்சம். பாதிக்கப்பட்டவைகளில் 40 சதவீதம் இந்த வயதுதான். 30 சதவீதம் பேர் 13-14 வயதினர்.

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்கிற வர்கள், பீடோபீலியா (Peadophilea) என்ற வக்கிர புத்தி கொண்டவர்கள். இது ஒரு மனநோயாகவும் கருதப்படுகிறது. சிறுவர்- சிறுமியர்கள் மூலம் இன்பமடையும் வக்கிரவாதிகள் மேலைநாடுகளில் அதிகம். `சைல்டு செக்ஸ் டூரிசம்' என்ற பெயரில் அவர்களை சில சமூக விரோத அமைப்புகள் ஆசிய நாடுகளுக்கு அழைத்து வருகின்றன. முன்பு தாய்லாந்து போன்ற நாடுகளில் கால்பாதித்த இந்த பாதகர்கள் இப்போது இந்தியாவில் ஒடிசா, கோவா, மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு ரகசி யமாக வந்து `ஆசைகளை' தீர்த்துவிட்டு போகி றார்கள்.

இது தொடர்பான சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்களில் 15 சதவீதத்தினர் 15 வயதிற்கும் குறைவானவர்களாக இருக்கி றார்கள். 25 சதவீதத்தினர் 16 முதல் 18 வயதிற்கு உள்பட்டவர்கள். 2005-ம் ஆண்டு இந்தியாவில் 44,476 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார் கள். அவைகளில் 11,008 குழந்தைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவர்கள் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

- குழந்தைகளை எளிதாக ஏமாற்ற முடியும்.
- குழந்தைகள் காட்டிக்கொடுக்காது.
- குழந்தைகளுக்கு விளைவுகளை புரியத்தெரியாது. எதிர்ப்பு தெரிவிக்காது.
- தனக்கு ஏற்பட்ட பாதிப்பை குழந்தைகளுக்கு விளக்கத் தெரியாது. விளக்கினாலும் பெற்றோர் அதை நம்பமாட்டார்கள்.
- வயதானவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சும் பாவனையில் வக்கிர செயலில் ஈடுபடும் போது, பெற்றோருக்கு சந்தேகம் வராது.
- ஆண்மை அதிகரிக்கும், ஆயுள் நீடிக்கும் போன்ற மூட நம்பிக்கைகள்.

இப்படிப்பட்ட பல காரணங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித் துக்கொண்டே போகிறது. கற்பனைக்கு எட்டாதவிதத்தில்கூட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள் அல்லது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், வேலைக்காரர்கள், அம்மாவின்- அப்பாவின் நண்பர்களாக வந்து போகிறவர்கள்.... போன்றவர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். புதிய நபர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு.

பயணங்கள், திருவிழா, திருமணவிழாக்களில் உருவாகும் மக்கள் நெருக்கடியை பயன் படுத்தி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தருபவர்கள் உண்டு. குழந்தை தொழி லாளர்கள், தெருவோரக் குழந்தைகள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவது சாதாரண விஷய மாக மாறிக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள், ஒருசில பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பாலியல் பலாத்காரத்தால் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலா வதாக அவர்களுக்கு பால்வினை நோய்கள் உண்டாவதை குறிப்பிடலாம். குழந்தைகளின் `உறுப்பு' பகுதியில் புண்களோ, கட்டிகளோ, சீழ் வடிதலோ இருந்தாலும் குழந்தையின் தாய்க்கு அது பால்வினை நோயின் அடையாளம் என்ற சந்தேகம் வருவதில்லை. ஒருசில மருத்துவர்களும் அது பால்வினை நோயின் அறிகுறி என்பதை உணராமல், வேறு விதமான சிகிச்சைகள் கொடுத்துவிடுவதும் உண்டு.

நன்றாக தெரிந்தவர்களால் குழந்தைகளுக்கு பாலியல் பாதிப்பு ஏற்படும்போது, அவை களின் உடலில் காயங்களோ, சிராய்ப்புகளோ இருப்பதில்லை. அதனால் பெற்றோரோ, மருத் துவர் றகளோ குழந்தை பலாத்காரத்திற்கு உட்பட்டிருக்கிறது என்று முதலில் நினைப்ப தில்லை. அப்படியே நினைத்து விசாரித்தாலும் குழந்தையால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறமுடியாது.

வெளிநபர்களால் பாதிப்பு ஏற்படும்போது காயம், சிராய்ப்பு, உறுப்பு பகுதியில் ரத்தம் வடிதல் போன்றவை காணப்படும். அவசரத்திலும், பயத்துடனும் அந்த பாதகர்கள் செயல்படுவதால் குழந்தைகள் காயம் அடைந்துவிடுகின்றன.

பலாத்காரத்திற்கு உள்பட்ட குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றன. பால்வினை நோய் மற்றும் காயங்களை சிகிச்சையால் குணப்படுத்திவிடலாம். ஆனால் மனநிலை பாதிப்பால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். வயதுக்கு மீறிய பாலியல் மாற்றங்கள், மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, எதைக் கண்டாலும்- யாரைக் கண்டாலும் பயம், தனிமை மீது விருப்பம், உணவில் நாட்டமின்மை, போதை மருந்துகளுக்கு அடிமையாகுதல், வீட்டை விட்டு ஓடுதல், படிப்பில் ஆர்வமின்மை, பாலியல் தொழில் ஆர்வம் போன்றவை முக்கியமான எதிர்கால பாதிப்புகளாகும்.

மக்கள் விழிப்புணர்வு கொண்டால் மட்டுமே இந்த பாதகத்தை தடுக்கவோ, குறைக்கவோ முடியும். சமூகத்தின் அடிப்படையில் இருந்து இந்த பணியை தொடங்கவேண்டும். பள்ளி கள், கல்லூரிகள், மருத்துவ துறை, தன்னார்வ அமைப்புகள், அரசு அமைப்புகள் ஆகிய அனைத்தும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும். தங்கள் தம்பி, தங்கை களை காத்து கண்காணிக்க மூத்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். குழந்தைகளின் உடலில் எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது நல்ல தொடுதல் என்றும்- எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது தவறான அணுகுமுறை என்றும் சொல்லித்தர வேண்டும். இதை சரியாக சொல்லித்தர அம்மாக்களாலே முடியும்.

மற்றவர்களின் பிரச்சினைக்குரிய செயல்கள் பற்றியோ, பிரச்சினைக்குரிய நபர்கள் பற்றியோ குழந்தைகள் கூறினால் அதை அலட்சியப்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். யாரையும் நம்பி குழந்தைகளை விட்டுச்செல்லக்கூடாது. பொது இடங்களில் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த பாதகத்தில் ஈடுபடு கிறவர்கள் நீதியின் முன்னே நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஒரு தனிநபர் பிரச்சினையோ, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்து பிரச்சினையோ இல்லை. இது சமூக பிரச்சினை. அதனால் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒத்துழைத்து இதை தடுக்கவேண்டும்.

கட்டுரை: டாக்டர் என்.உஸ்மான் M.D., D.V., Ph.D., 
(பாலியல் நோய் நிபுணர் மற்றும்
உலக சுகாதார நிறுவன ஆலோசகர்) சென்னை.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf