Health Insurance Tips | ஹெல்த் இன்சூரன்ஸ் டிப்ஸ்

0 comments
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். அனைவருக்கும் அப்படி ஒரு செல்வம் கிடைப்பதில்லை. இன்றைய உலகில், புதுப் புது நோய்கள் முளைத்து நம்மை பல்வேறு துன்பத்திற்கு உள்ளாக்குகின்றன.

நோய்களின் கொடுமை ஒரு புறமிருக்க, அந்நோய்களை குணப்படுத்த தேவைப்படும் மருத்துவ செலவுகளும் அதிகரித்து நம்மைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தாரையும் பாதுகாத்து, சரியான மருத்துவ உதவி செய்ய உடல் நலக் காப்பீட்டு பாலிசி(ஹெல்த் இன்சூரன்ஸ்) எடுப்பது அடிப்படைத் தேவையாகிவிடுகிறது.

பல்வேறு உடல்நலக் காப்பீட்டு பாலிசிகள் சந்தையில் உள்ளது. அவற்றில், நமக்கு உகந்த பாலிசியை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? தேர்ந்தெடுப்பதில் நான் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன என்பதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

செய்ய வேண்டியவை:

உடல்நலக் காப்பீட்டு பாலிசியை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை பார்க்கலாம். பாலிசி எடுத்துவிட்டால், இனி என்ன நோய் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்க கூடாது. அனைத்து பாலிசிகளிலும் ஒரு சில கட்டுப்பாடுகள், விதிவிலக்குகள் உள்ளன. அவற்றைப் படித்து தெளிந்த பிறகு முடிவெடுப்பது நல்லது. உங்களுக்காக் ஒரு சில உதாரணங்கள் இங்கே.

1. நம்மிடம், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு, பாலிசி மூலம் பயன் பெற முடியாது.

2. உடல் நலக் காப்பீட்டு பாலிசிகளில் மருத்துவச் செலவுகளுக்கு பல விதி விலக்குகள் உண்டு. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் எவ்வளவு பணம் தர வேண்டும், எத்தனை நாள் தர வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும். மருத்துவச் செலவில் நாமும் நமது பங்கிற்கான பணத்தைத் தர சொல்வதாக கூட இருக்கலாம். எந்தெந்த மருத்துவமனைகளில் பாலிசிகள் செல்லுபடியாகும் என்பதும் இதில் அடங்கும்.

3. வருடா வருடம் பாலிசி புதுப்பிக்கப்பட வேண்டும். அதனை புதுப்பிப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றனர்.

4. பாலிசி எடுப்பதற்கு வயது உச்ச வரம்பு உள்ளது. பெரும்பாலும், குறிப்பிட்ட வயதிற்கு உட்பட்டவராக இருப்பவர்களுக்கு மட்டுமே உடல் நலக் காப்பீட்டு பாலிசிகள் வழங்கப்படுகின்றன.

5. சர்க்கரை வியாதி, ரத்த சோகை போன்ற நமக்கு ஏற்கனவே உள்ள நோய்களை ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும்.

6. பாலிசி எடுப்பவரின் வயதைப் பொறுத்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டி இருக்கும். அந்நிறுவனம் கூறும் வழிமுறைகளுக்கும், ஆவணங்களுக்கும் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

7. அப்படி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் எங்கு, எப்படி செய்து கொள்ள வேண்டும்? அதற்கான செலவை யார் ஏற்பது? போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

8. பாலிசி தொடர்பான அனைத்து விவரங்களைப் படித்து, தெளிவு பெற்ற பிறகே பிரீமியம் தொகையை செலுத்துங்கள்.

9. அந்தப் பாலிசியின் தன்மையை அறிந்து, அவர்களின் சேவையை மதிப்பீடு செய்து, வருடா வருடம் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

செய்யக் கூடாதவை;

1. எந்தத் தகவலையும் மறைக்காதீர்கள். தவறான தகவலையும் கொடுக்காதீர்கள். நோய்வாய்ப்பட்டு பாலிசியின் மூலம் பணம் பெறும் போது, இது சட்ட ரீதியான பிரச்சனையை உண்டாக்கும்.

2. சரியான நேரத்தில் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். கொஞ்சம் தாமதப்படுத்தினாலும் நமக்கு உபயோகப்படாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது.

3. பாலிசி தொடர்பாக வெற்று ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். பாலிசி படிவம் நிரப்பும் போது எந்த ஒரு பகுதியையும் நிரப்பாமல் விட்டுவிடாதீர்கள்.

திடீரென்று நமக்கோ, நம் பெற்றோருக்கோ நோய் வந்த பிறகு, இதை நாம் அப்பவே எடுத்திருக்கலாமே....என்று வருத்தப்படாமல், நோய் வரும் முன் நம்மை காத்துக் கொள்வோம். நமக்கு ஏற்ற உடல் நலக் காப்பீட்டுப் பாலிசியை தேர்ந்தெடுப்போம் !

கனவு வந்தால் நல்ல தூக்கம் என அர்த்தம்

0 comments
தூக்க சுழற்சி முறையின் அடிப்படையில் தான், நள்ளிரவு, அதிகாலை வேளைகளில் கனவுகள் வருகின்றன. பகலில் நினைப்பவை, இரவு உறக்கத்தில் வரும், சமகாலத்து நிகழ்வுகளாக, கனவை பார்ப்பது தான் சரி. 

அனுபவ ரீதியான நிகழ்வுகளின் அடிப்படையில், கனவுகளைப் பற்றிய பல்வேறு கற்பித்தல்கள், வழிவழியாக, நம் சமூகத்தில் உலவி வருகிறது. கனவுகள் குறித்து, பல்வேறு நம்பிக்கைகள் நிலவி வரும் நம் சமூகத்தில், அதைப் பற்றிய புரிதல்கள் அவசியமாகின்றன. கனவுகளுக்கான காரணங்கள், அவற்றின் பலன்கள் குறித்து விளக்குகிறார், மனநல மருத்துவர் ஆனந்த் பிரதாப். 

1. கனவுகள் வருவதற்கு என்ன காரணம்? 

பகலில், ஒருவரின் மனம் எதைப் பற்றி அதிகம் நினைக்கிறதோ, அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பு, சிதறல்கள், இரவில் அவர்களுக்கு கனவாக வருகிறது. உதாரணமாக, தெய்வ பக்தி அதிகம் உள்ளவர்களுக்கு, சாமிகளின் உருவங்கள், கோவில், கோபுரங்கள் அதிகம் கனவில் வரும். ஆறு மணி நேர தூக்கத்தில், தூக்க சுழற்சி முறைப்படி, ஒருவருக்கு, நான்கு முறை வரை கனவு வரலாம். 

2. வயதிற்கும், கனவிற்கும் தொடர்பு உண்டா? 

நிச்சயமாக தொடர்பு உண்டு. 3 முதல் 14 வயது வரையிலான பிள்ளைகளுக்கு, "கார்ட்டூன்' படங்கள் மற்றும் திரைப்படங்களில் வரும் கதாநாயகன், வில்லன் போன்ற கதாபாத்திரங்கள், அதிகம் கனவில் வரும். பயந்த சுபாவம் உள்ள குழந்தைகளுக்கு, அவர்களின் உறவினர்கள் சொல்லக் கேட்ட, பேய் கதைகளின் பாதிப்புகள் கனவில் வெளிப்படும். 

விடலைப் பருவத்தினரில் பெரும்பாலானோருக்கு, அவர்களுக்கு பிடித்தமான, எதிர் பாலினர் கனவில் வருவர். அதுவும் அவர்களுக்கு பிடித்தமான கதாநாயகர், கதாநாயகி, விளையாட்டு வீரர் போன்றோரின் சாயலில், கனவில் வந்து அசத்துவர். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம், வேலைவாய்ப்பு, திருமணம் போன்றவை பற்றி அதிகம் எண்ணும் நடுத்தர வயதினருக்கு, இவை தொடர்பான, நேர்மறை அல்லது எதிர்மறையான கனவுகள் வரும். குடும்ப பிரச்னை, பணக் கஷ்டம், வேலையின்மை போன்றவற்றுக்கு ஆட்படுவோருக்கு, வன்முறை சம்பவங்கள் அதிகளவில் கனவில் வரும். 

எதிர்காலம் மற்றும் மரணத்தை பற்றிய பயத்தால், முதியோர், அவர்களின் குடும்பத்தில் அகால மரணம் அடைந்தோர், எமதூதர்கள், இறந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் என, சாவு தொடர்பான கனவுகளுக்கு அதிகம் ஆளாகின்றனர். 

3. அதிகாலை கனவுகள் பலிக்குமா? 

தூக்க சுழற்சி முறையின் அடிப்படையில் தான், நள்ளிரவு, அதிகாலை வேளைகளில், கனவுகள் வருகின்றன. பகலில் நினைப்பவை, இரவு உறக்கத்தில் வரும், சமகாலத்து நிகழ்வுகளாக, கனவை பார்ப்பது தான் சரி. 

மாறாக, கனவில் திருமணம் நடப்பது போல், யாரேனும் கனவு கண்டால், அவர்கள் வீட்டில் கெட்டது நடக்கும்; பிணம், ரத்தக்காயத்தை கனவில் கண்டால், நல்லது நடக்கும்; கனவில் கோவில் கோபுரத்தை பார்க்கக்கூடாது; பாம்பை அடித்து, அதை கொல்லாமல் விட்டாலோ, பாம்பு துரத்தினாலோ, துன்பம் வரும்; கெட்ட கனவுகளை வெளியில் சொன்னால், அவை பலிக்கும் என்பன போன்ற, ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்படாத, வழிவழியாக கூறப்பட்டு வரும் கற்பித்தல்கள் அனைத்தும், மூடநம்பிக்கையே. 

4. "கலர்' கனவு எல்லாருக்கும் வருமா? 

வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு, மற்றவர்களைவிட, மூளைச் செல்களின் அதிர்வு அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு மட்டும், கலர் கனவு சாத்தியம். மற்றவர்களுக்கு, தங்கள் கனவில் வரும் நிறங்களை விவரிக்க முடியாது. இதேபோல், தூக்க மாத்திரை உட்கொள்வோர், மனச்சோர்வு, மனதளர்ச்சிக்கு மாத்திரை சாப்பிடுவோர், ஆகியோருக்கு, கொடிய ஆயுதங்களுடன் போரிடுவது போன்ற கனவுகள் வரும். 

5. கனவுகளுக்கு ஆட்படாத நபர்கள் உண்டா? 

தொடர்ந்து, ஆறு மணி நேரம் தூங்காதவர்கள், இரவில் தூக்க தடைக்கு ஆளாகும் நீரிழிவு நோயாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டோர் போன்றோருக்கு< கனவுகள் வராது. இவர்களை தவிர, சராசரி மனிதர்கள் எல்லாருக்கும் நிச்சயம் கனவு வரும்; வர வேண்டும். மாறாக, யாராவது தமக்கு கனவே வராது என, சொன்னால், அவர்கள், பொய் சொல்ல வேண்டும் அல்லது தூக்கமின்மை பிரச்னைக்கு ஆளாகி இருக்க வேண்டும். 

ஆழ்ந்த உறக்கத்திற்கு அடையாளமான கனவு, ஒருவருக்கு வருவது நல்லது. அதற்காக, ஒருவருக்கு தினமும் கனவு வர வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இயல்பாகவோ, பணிநிமித்தம் காரணமாகவோ, சிந்தனை ஓட்டம் அதிகம் உள்ளோருக்கு, அதிகம் கனவு வரும். 

டாக்டர் ஆனந்த் பிரதாப், மனநல மருத்துவர், 
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை

Ms-Word Tips | வேர்ட் டிப்ஸ்

0 comments
வேர்டில் பக்க எண்களின் பார்மட்டுகளை மாற்ற: வேர்ட் டாகுமெண்ட்களில் பக்க எண்களை இணைப்பது எளிது. பக்க எண்களை உண்டாக்கிய பின்னர் அதனை நாம் விரும்பிய பார்மட்களில் மாற்றுவதும் எளிது. இதற்கான வழிகளை இங்கு காணலாம். 

வேர்ட் நம் பக்க எண்களை ஹெடர் மற்றும் புட்டர்களின் ஒரு பகுதியாகவே அமைக்க அனுமதிக்கிறது. இதன் பின் இதன் பார்மட்டுகளை மாற்றலாம். முதலில் என்ன வகையான பார்மட்டுகள் உள்ளன என்று பார்க்கலாம். 

1. அரபிக் எண்கள் – 1,2,3
2. அரபிக் எண்கள் சிறிய டேஷ் அடையாளத்துடன் –1, –2,–3 .. 
3. அப்பர் கேஸ் ரோமன் I, II, III
4. லோயர் கேஸ் ரோமன் i, ii, iii 
5. அப்பர் கேஸ் எழுத்துகள் A,B,C,
6. லோயர் கேஸ் எழுத்துகள் a, b, c,

இனி பார்மட்டினை மாற்றுவது குறித்துக் காணலாம்.
 
1. உங்கள் டாகுமெண்ட்டில் எந்த பகுதியில் உள்ள பக்க எண்களின் பார்மட்டை மாற்ற வேண்டுமோ அந்த பகுதியில் கர்சரைக் கொண்டு செல்லவும். 
2. வியூ மெனுவிலிருந்து ஹெடர் அண்ட் புட்டர் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஹெடர் கட்டம் கிடைக்கும். கீழாக அதனை எடிட் செய்வதற்கான டூல் பார் கட்டம் கிடைக்கும். இதில் 
3. பார்மட் பேஜ் நம்பர் ஐகானைக் கண்டறிந்து அதனைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் சிறிய பாக்ஸில் பேஜ் நம்பர் பார்மட்டுகள் தரப்படும். அதில் தேவையான பார்மட்டைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். 
4. பின் ஓகே கிளிக் செய்திடவும். 
5. பின் ஹெடர் அண்ட் புட்டர் பாக்ஸிலும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 

வேர்டில் டேட்டா சார்ட்டிங்:

ஒரு சிலர், வேர்டில் அமைந்துள்ள தகவல்களை வகைப்படுத்த, குணிணூtடிணஞ் செய்திட, அவற்றை அப்படியே காப்பி செய்து எக்ஸெல் கொண்டு சென்று, பின் வரிசையாக்கிய பின் மீண்டும் வேர்டில் ஒட்டும் பழக்கத்தினைக் கொண்டுள்ளனர். இது தேவையே இல்லை. வேர்ட் புரோகிராம் இதற்கான வசதியைக் கொண்டுள்ளது. 
வேர்ட் டேபிளில் அமைந்துள்ளவற்றில் எந்த கட்டத்தில் உள்ள தகவல்களை வரிசைப்படி அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந் தெடுக்க வேண்டும். பின் டேபிள் மெனுவில் சார்ட் என்று உள்ளதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தகவல்கள் வரிசைப்படுத்தப்படும். டெக்ஸ்ட், எண்கள் மற்றும் நாள்களை இதன் மூலம் வரிசைப்படுத்தலாம். 

டெக்ஸ்ட்டை கீழாக அல்லது மேலாக அமைக்க:

டாகுமெண்ட் ஒன்றில் நீங்கள் முக்கியத்துவம் காட்ட விரும்பும் சொற்களை மற்ற சொற்களிலிருந்து சற்று தூக்கியோ அல்லது இறக்கியோ காட்டுவது ஒரு ஸ்டைலாகும். இதனை வேர்ட் தொகுப்பில் எளிதாக அமைக்கலாம். 
1. எந்த சொற்களை இவ்வாறு அமைக்க வேண்டுமோ அவற்றை முதலில் தேர்ந்தெடுக்கவும். 
2. பின் இதில் ரைட் கிளிக் செய்து "Font" தேர்ந்தெடுக்கவும். 
3. "Font" என்ற பெயருடைய பல டேப்கள் உள்ள விண்டோ கிடைக்கும். இதில் "Text Effects" என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும். 
4. அடுத்து "Position" என்ற இடத்திற்கு அருகே உள்ள பல ஆப்ஷன்ஸ் உள்ள பெட்டியில் "Normal", "Raised" அல்லது "Lowered". என மூன்று ஆப்ஷன்ஸ் கிடைக்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் எப்படி அமைய வேண்டும் என விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். 
5. எல்லாம் முடிந்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf