Tamil Vijaya Year | விஜய வருடம்

0 comments
தமிழ் வருடங்கள் 60ல் விஜய வருடம் 27ஆம் ஆண்டாக வருகிறது. தமிழ் வருடப்பிறப்பின் முதல் நாளில் பஞ்சாங்கம் படிப்பது வழக்கம். இவை கணிதப்படி பலன்களை கூறுகின்றன. ஜயம் என்றால் வெற்றி. 

விஜயம் என்றால் மிகப் பிரமாண்டமான வெற்றி. இந்த விஜய வருடத்தில் எந்தச் செயலைத் துவக்கினாலும், அது ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கவல்லது என்கின்றன ஞான நூல்கள். சூரியன் உதயமானதும், இருள் விலகி எப்படி வெளிச்சம் பாய்கிறதோ, அதேபோல், விஜய வருடம் துவங்கியதும் மங்கல காரியங்களும் சத் காரியங்களும் வரிசைகட்டி வந்தே தீரும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர். 

பஞ்சாங்கத்தின் சிறப்பு எவரொருவர் இந்தப் புத்தாண்டு தினத்தில் பஞ்சாங்கம் வாசிப்பதைக் கேட்கிறாரோ, அவருக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்! அவர்கள் விரோதிகள் இல்லாதவர்களாக, தீயகனவுகள் ஏதும் இல்லாதவர்களாக வாழ்வர்; புனித கங்கையில் குளித்த புண்ணியத்தைப் பெறுவர்; பசுவை தானம் செய்த பலனை அடைவர்; 

நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. பஞ்சாங்கம் என்பது திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம் மற்றும் கரணம் என ஐந்து அங்கங்களை, உறுப்புகளைக் கொண்டவை. 

இந்த விஜய வருடம் பற்றி திருக்கணித பஞ்சாங்கத்தில் என்ன கூறியுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்களேன். சூறாவளி மழை உலகத்தில் அனைத்து இடங்களிலும் சூறாவளி காற்றுடன் நல்ல மழை பெய்யும். புஞ்சை தானியங்கள் அதிக அளவில் அறுவடை ஆகும். சில குறிப்பிட்ட டெல்டா பகுதிகளில் மழையால் அதிக அளவு விவசாயம் பாதித்து விவசாயிகள் கடுமையான அளவில் பாதிக்கப்படுவார்கள். 

வட ஆற்காட்டில் ஏமாற்றிய மழை தவறாமல் இந்த வருடம் பொழிய வாய்ப்புள்ளது. வடக்குப் பிரதேசம் மிக அதிக அளவில் பாதிக்கும். மருந்து வகை, இரும்பு, விலை ஏறும். வெடி வகைகளுக்கு பல புதிய சட்டங்கள் அரசாங்கம் கொண்டு வரும். சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கும். நீர்த்தேக்கத்தில் இடி விழுந்து பாதிப்பு ஏற்படும். ஊட்டி, கொடைக்கானல் கர்நாடகா, இமாச்சலம் ஆகிய பகுதிகளில் கடுமையான மூடுபனி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கும். 

கரிசல் பூமி, மணல் பூமி இவைகளில் மரம், செடி கொடிகள் செழிப்பாக வளரும். இந்த ஆண்டு ஆதாயம் 53, விரையம் 56 என கூறப்பட்டுள்ளது. ஆதாயத்தை விட விரையம் கூடுதலாக இருப்பதால் அரசுக்கு வருவாய் குறையும். எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் இருந்தாலும் ஆளும் கட்சியை பாதிக்காது. கருப்பு பணம் கிடைக்கும் நல்ல மழை பெய்யும்.

கருப்பு பணம் கோடிக்கணக்கில் அரசாங்க கஜானாவிற்கு வரும். பொன், வெள்ளி, இவற்றின் விலை நிலையில்லாத நிலையில் இருக்கும். மதுபான வகையில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும். ரசாயனம், விவசாயத்துறையில் அரசு ஆர்வம் காட்டும். இரும்பு, சிமெண்ட், மணல் உள்ளிட்டவைகளின் விலை குறையும். வெடி பொருட்களின் கிடங்குகளில் தீ விபத்து ஏற்படும். 

கடலில் ராட்சத அலைகள் உருவாகும். இந்த விஜய வருடத்தின் ராஜா குரு பகவான். குரு பார்க்க கோடி தோஷங்களும் விலகும். எனவே, இந்த விஜய வருடம் நமக்கும் நம் நாட்டுக்கும் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று கூறப்பட்டுள்ளது

Tamil New-year Rituals | தமிழ் புத்தாண்டு: கனி காணுதலும் கை நீட்டமும்…

0 comments
ஒரு வருடத்தின் தொடக்கம் என்பது மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். தொடக்கம் சரியாக இருந்தால் அந்த வருடம் முழுவதும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்பது நம்பிக்கை.

சித்திரை முதல் நாளான தமிழ் வருடப்பிறப்பும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே வீட்டில் கனி காணுதலோடு புத்தாண்டை தொடங்குகின்றனர்.

தமிழ்நாட்டில் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த கனி காணுதல் சிறப்பாக நடைபெறுகிறது. குமரி, நாகர்கோவில், திருப்பூர், கோவை போன்ற ஊர்களில் கனி காணுதல் நடைபெறுவது வழக்கம்.

12-kanikanuthal-600

வாழைப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள், மாதுளை இப்படி பலவகை பழங்களை ஒரு தட்டில் வைத்து அலங்கரித்து மையப்பகுதியில் புதிய ரூபாய் நோட்டுக்களை வைத்து, அதன் மேல் தங்க, வெள்ளி நகைகளை வைத்து அலங்கரிப்பார்கள்.

வருடப்பிறப்பிற்கு முதல்நாள் இரவே பூஜை அறையில் ஒரு கண்ணாடியை வைத்து அதன் முன்பாக இந்த பழத்தட்டினை வைத்து விடுவார்கள். விடிந்த உடன் குழந்தைகளின் கண்களை மூடிக்கொண்டு பூஜை அறைக்கு அழைத்து செல்லும் அம்மா அந்த பழத்தட்டிலும், கண்ணாடியிலும் விழிக்கச் சொல்வார்கள். இதுபோன்ற மங்கலப் பொருட்களைப் பார்த்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

கை நீட்டம் கொடுங்களேன்...

குளித்து முடித்து புத்தாடை உடுத்தி சாமி கும்பிட்ட பின்னர், பெரியவர்கள், தட்டில் வைத்த புது ரூபாய் நோட்டுக்களை எடுத்து வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள் இதனை கைநீட்டம் என்கின்றனர். இதன் மூலம் ஆண்டுதோறும் பணம் குறையாமல் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும். இந்த பழக்கம் மலையாள மக்களிடம் இருந்து வந்ததுதான் என்றாலும் அன்றைய தினம் கனி காணுதலையும், கை நீட்டம் நிகழ்ச்சியையும் பார்க்கும் போது புது வருட தினத்தன்று உற்சாகத்தைத்தான் தருகிறது.

மங்களங்கள் அருளும் மரகத லிங்கம்

0 comments
சப்த லிடங்கத் தலங்கள் என்று சிவ பெருமானுக்கு ஏழு தலங்கள் உண்டு. உளி
படாமல் அமைந்த சிவலிங்க திருமேனிகளை லிடங்கர் என்பர். அப்படிஅமைந்த ஏழு
தலங்களே சப்த லிடங்கத்தலங்கள்.

தியாக விடங்கர், அவனி விடங்கர், புவன விடங்கர் என்னும் அந்த வரிசையில்
ஆதி விடங்க பெருமான் எழுந்தருளியுள்ள தலம். திருக்கார வாசல் தேவாரத்தில்
இத்தலம் திருக்கார வாயில் என்று குறிப்பிடப்படுகிறது.

வெள்ளாற்றின் மேற்கரையில் அநமைசந்த ஆலயம் . இறைவன் பெரியர் கண்ணாயிர நாத
கல்வெட்டுகளில் தருக்காறாயிரம் நாயனார் என்றும் இத்தலத்து இறைவன் பெயர்
காணப்படுகிறது.

பிரம்மனுக்கு ஆயிரம் கண் காட்சியருளியது: ஆணவம் கொண்ட பிரம்மன் தன் பிழை
பொறுக்கத் தவம் செய்தததால் அவனுக்கு ஆயிரம் கண்களுடன் இறைவன்
காட்சிதந்தார். அதனால் இவ்விடத்து ஈசனுக்கு கண்ணாயிர நாதன் என்ற பெயர்
ஏற்பட்டது. ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் விசுவநாதர் பரிவாரங்க்
எழுந்தருளியுள்ளார். பிராகாரத்தில் விநாயகர், முருகன், நடராஜ பெருமான்
சந்நதிகள் உள்ளன. தெற்க பார்த்தவாறு அம்பிகை சந்நதி அம்பிகை நின்ற
திருக்கோலத்தில் மேற் நோக்கிய திருககரங்களில் அக்கமாலையும் தாமரையு ம்
துலங்க காட்சி தருகிறார்.

இவ்வாலயத்தில் உள்ள மரகத லிங்கம் பிரசித்தி பெற்றது. இதற்கும் ஆதி
விடங்கர் என்றே பெயர். இந்த சிவலிங்க திருமேனிக்கு தினமும் காலையில்
அபிஷேகம் நடைபெறுகிறது. தல விருட்சம் பலாமரம் கோயிலுக்கு அழகிய
மதில்களும், கோபுரங்களில் அழகான கதை பொம்மைகளும் உள்ளன.

கபால முனிவர் கதை: கபாலமுனிவர் அம்மையை நோக்கி தவம் இருந்தார். அவருடைய
தவ நெருப்பை தாங்க முடியாத தேவர்கள் இறைவனிடம் சென்று விரைவில் காபல
முனிவருக்கு அருள் வழங்க வேண்டியுள்ளனர்.
இறைவனும் அவ்வாறே அருள் வழங்கி இன்று முதல் இத்தலம் உன் பெயரால் கபாலவனம்
என்றே வழங்கப்படும் எனஅருளினார். இத்தலத்தில் ஆதிவிடங்கர் எழுந்தருறளி
இருப்பது வீரசிங்காசனத்தில் வீர சிங்காசனம் என்பது நான்கு பக்கங்களிலுளம்
சிங்கங்ளை பதுமைகளாக கொண்டு அமைய பெற்றது. அமாவசை, சோமவாரம், சூரிய
சந்திர கிரகணம் ஆகிய புண்ணிய காலங்களில் இத்தலத்தில் உளள தீர்த்தங்களில்
நீராஸ்ரீடுபவர்கள் பாவங்கள் நீங்கி, சிவனருள் பெறுவர்.

கடுக்காய் பிள்ளையார்
இத்தலத்தில் கடுக்காய் பிள்ளையார் சந்நதிஎன்று இங்குள்ள திருக்குலத்தின்
கரையில் உள்ளது. விநாயகரின் பெயர் தான் கடுக்காய் பிள்ளையார்.
இதற்கு ஒரு கதை உண்டு.
வணிகன் ஒருவன் சாதிக்காய் மூட்டைகளை கொண்டு வந்தான். அதற்கு வரிகட்ட
வேண்டி வந்தபோது சாதிக்காய் மூட்டைகளை கடுக்காய் மூட்டை என்று பொய் கூறி
குறைவான வரி கட்டினான். விநாயகபெருமானின் ஆணையின் பேரில் சாதிக்காய்
மூட்டைகள் அனைத்தும் உண்டமயிலேயே கடுக்காய் மூட்டைகளாக ஆகிவிட்டன.
அதிர்ச்சியுள்ள வணிகன், தன் தவறுக்கு வருந்தி பிள்ளையாரிடம் மன்னிப்பு
கோரினான். விநாயகரின் கருணையினால், கடுக்காய்கள் மீண்டும் சாதிக்காய்களாக
மாறின.
இக்காரணத்தால் இந்த பிள்ளையாருக்குகடுக்காய் பிள்ளையார் என்று பெயர் ஆயிற்று
மரகத லிங்கத்தால் மகிமை பெற்றதும், சப்தவிடங்க தலங்களுள் ஒன்றாக
விளங்குவதுமான திருக்காரவாசல் சென்று ஆதி விடங்கரை வணங்குவோர் வாழ்வில்
குறை எல்லாம் நீங்கி நிறைவாழ்வு பெருவர்.
திருவாரூரிலிருந்து 8 கி.மீ. தொலைவு. அடிக்கடி பேருந்து உண்டு. பேருந்து
செல்லும் சாலையோரமாகவே ஆலயம் அமைந்துள்ளது.

2013ல் இந்திய இணையம்

0 comments
இந்தியாவில் இணையப் பயன்பாடு 2013 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளில்,
அதன் பொற்காலத்தைக் காண இருக்கிறது எனப் பலரும் கருத்து
தெரிவித்துள்ளனர். இணைய வழி வர்த்தகம் மிக வேகமாக வளரும் என்றும், அதன்
சார்பான இணையப் பயன்பாடு தற்போது இருப்பதனைக் காட்டி லும் அதிக வளர்ச்சி
பெறும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற
இருப்பதைக் கவனத்தில் கொள்ளும் முன், இந்த 2013 ஆம் ஆண்டில் எந்த எந்த
வகைகளில், பிரிவுகளில் இணைய வளர்ச்சி இந்தியாவில் இருக்கும் என்பதனைக்
காணலாம்.
ஏறத்தாழ 15 கோடி இணைய பயனாளர்களுடன், இந்தியா உலக அளவில் மூன்றாவது
இடத்தைப் பெற்றுள்ளது. 57.5 கோடி பேருடன் சீனா முதல் இடத்திலும், 27.5
கோடி பேருடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஜனத்தொகையுடன்
கணக்கிடுகையில், இந்தியாவில் இணையப் பயனாளர்கள் 12%. சீனாவில் இது 43%
ஆகவும், அமெரிக்காவில் 80% ஆகவும் உள்ளது. குறைவாக உள்ளதாலேயே,
இந்தியாவில் வரும் ஆண்டுகளில், மிக வேகமான அளவில் வளர்ச்சி வீதம்
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களும்
சூழ்நிலைகளும் விரிவடைந்து வருகின்றன. இணைய வழி வர்த்தகம், இணையத்தில்
விளம்பரம், சமூக ஊடக வளர்ச்சி, தேடல், இணைய வெளி தகவல்கள், இணைய வழி
வர்த்தக சேவை மற்றும் சார்ந்த நடவடிக்கைகள் என பல பிரிவுகளில் இந்த
வளர்ச்சியைக் காணலாம். குறிப்பிட்டு சில தளங்களில் 2013 ஆம் ஆண்டில்,
மேற்கொள்ளப்பட இருக்கிற வளர்ச்சி குறித்த தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

1. பயனாளர்கள் 15% கூடுதல்:


நடப்பு நிதியாண்டில், மேலும் 3 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தத்
தொடங்குவார் கள். மொத்த இணையப் பயனாளர் எண்ணிக்கை 18 கோடியாக உயரும்.
அதாவது, இந்திய ஜனத்தொகையில் இது 20% ஆக இருக்கும்.

2. இணைய நேரம் அதிகரிக்கும்:

இணையத்தில், இந்தியாவில் உள்ள ஒருவர் சராசரியாக வாரம் ஒன்றுக்கு 13 மணி
நேரம் செலவிடுகிறார். இது இனி 16 வாரமாக உயரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரம் பெரும்பாலும், இணைய வர்த்தகம், சமூக
தளங்கள், போட்டோ மற்றும் வீடியோ பகிர்வு, இணையப் பயன்பாடுகள், வங்கி
மற்றும் பிற நிதி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படும்.

3. மொபைல் இணையப் பயன்பாடு:

மொபைல் வழி இணையப் பயனாளர் எண்ணிக்கை, இந்த ஆண்டில் 10 கோடியாக உயரும் என
எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த எண்ணிக்கை 9 கோடியே 50 லட்சமாக
உள்ளது. உயர்வு 6% லிருந்து 10% வரை இருக்கலாம்.

4. பெண்கள் மற்றும் வீட்டில் அதிகப் பயன்பாடு:

இதுவரை இணையப் பயன்பாடு, ஆண்களே அதிகம் மேற்கொள்வதாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டில் அதிகம் பெண்களை இணையத்தில் எதிர்பார்க்கலாம். அதே போல கல்வி
நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படும்
இணையம், இனி வீடுகளிலிருந்தும் அதிகம் பயன்படுத்தப்படும். இதற்குக்
காரணம், குறிப்பிட்ட சாரார் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த இணையம்,
இனி, பொதுமக்கள் சாதனமாக மாற இருக்கிறது.

5. இணைய வழி வர்த்தக வருமானம் உயரும்:

இணைய வழியில் கிடைக்கும் வர்த்தக வருமானம் 2012 ஆம் ஆண்டில், 55 கோடி
டாலராக இருந்தது. இது இந்த ஆண்டில் 90 கோடியாக உயரும் வாய்ப்பு உள்ளது.

6. வளரும் நகரங்களில் இனி வளரும்:

தற்போது குறிப்பிட்ட சில பெரிய நகரங்களில் மட்டுமே அதிகம் காணப்படும்
இணைய வர்த்தகம் (45% முதல் 65% வரை ), இனி வளரும் நகரங்களிலும் அதிகம்
இருக்கும். இந்தியாவின் முதல் 40 நகரங்களை அடுத்து உள்ள நகரங்களே இவை.

7. இணைய விளம்பரம் அதிகரிக்கும்:

இந்திய இணையத்தில் வளர்ச்சி காண இருக்கும் துணைத் தொழில் பிரிவுகளில்,
இணைய விளம்பரம் முதல் இடம் பெறும். 2012ல், இந்த வகை வருமானம் 30 கோடி
டாலராக இருந்தது. நடப்பு ஆண்டில், இது இரு மடங்காக உயர்ந்து 60 கோடி
டாலராக வளரும்.

8. இணைய நிறுவனங்களுக்கு மூலதன நிதி:

புதிய பிரிவுகளில், பல இணைய சேவை நிறுவனங்கள் தோன்றி வருகின்றன. ஆனால்,
எப்போதும் போல இவற்றிற்கான மூலதன நிதி கிடைப்பது கடினமாகவே உள்ளது. இந்த
ஆண்டில் இது சிறிது எளிமைப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
இணையப் பயன்பாடும் வர்த்தகமும் அதிகரித்து வருவதால், இப்பிரிவில்
ஈடுபட்டு வரும் இணைய நிறுவனங்கள் இணைந்து செயல்படும் சூழ்நிலை ஏற்படலாம்.
அதே போல, மும்பை, டில்லி, பெங்களூரு, சென்னை, புனே என்று சில குறிப்பிட்ட
நகரங்களில் மட்டும் இந்த நிறுவனங்கள் செயல்படாமல், அடுத்த நிலை
நகரங்கலில் இவை தொடங்கப்பட்டு செயல்படலாம்.

புளூடூத் பெயர் வரக் காரணம்

0 comments
900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு
வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின்
கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார்.

தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச்
சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில்
மரணமடைந்தார். இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகளின்
(டென் மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து) விஞ்ஞானிகள் தான்
உருவாக்கினர்.

இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில்,
தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர்.
மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும் பெயருக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை

Fwd: [New post] இந்தியாவில் பேஸ்புக் மக்கள் 7.1 கோடி

0 comments
உலகின் மிகப் பெரிய சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக், சென்ற டிசம்பர் வரையில், இந்தியாவில் 7 கோடியே 10 லட்சம் பதிவாளர்களைக் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை அடுத்து, இந்தியாவில் தான் அதிகம் பேர் பேஸ்புக் இணைய தளத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். மொத்தத்தில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 10 முதல் 15 கோடியாக இருப்பதாகக் கணக்கிட்டாலும், இந்திய இணையப் பயனாளர்களில் பாதிப்பேருக்கும் மேலானவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டதில் பேஸ்புக் பெருமை கொள்ளலாம். 
உலக அளவில் பேஸ்புக் நேயர்களைக் கணக்கிட்டால் இது வெறும் 7% தான். அண்மையில் பேஸ்புக் தளப் பதிவாளர் எண்ணிக்கை பன்னாட்டளவில் நூறு கோடியைத் தாண்டியது என்ற தகவல் வெளியானது. பேஸ்புக் தளத்தினைப் பொறுத்தவரை, இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் தான் வாடிக்கையாளர் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது. மொத்த வாடிக்கையாளர்களில், 84% பேர் அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளில் உள்ளனர். பிரேசில் 2011ல், பேஸ்புக் தள நேயர்களின் எண்ணிக்கையை 81% உயர்த் தியது. மொத்த பயனாளர்கள் 6.70 கோடி பேர். இந்தோனேஷியா 25% வளர்ச்சி மேற்கொண்டு, 2012ல் 6 கோடி பேரைக் கொண்டிருந்தது. 
தினந்தோறும் பேஸ்புக் தளத்தினைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், 2012ல் 28% ஆக உயர்ந்தது. இவர்களில் அதிகம் பேர், பிரேசில், இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்களாவர். 2012 செப்டம்பரில் தினந் தோறும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 58 கோடியே 40 லட்சம் ஆகும். 
ஆனால், அனைத்து நாடுகளிலும், மொபைல் சாதனங்கள் வழியாக பேஸ்புக் தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.சென்ற டிசம்பர் முடிவில், இவர்களின் எண்ணிக்கை 15.7 கோடியாகும். மற்ற 52.3 கோடி பேர் மொபைல் சாதனங்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் களில் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத் தினார்கள். இருப்பினும் வருங்காலங்களில், மொபைல் வழி பேஸ்புக் பயன்படுத்து பவர்களே அதிகமாக இருப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 
2004ல் தொடங்கப்பட்டு, பிப்ரவரி 4 முதல் தன் ஒன்பதாவது ஆண்டு இயக்கத்தினைத் தொடங்கியுள்ளது பேஸ்புக். ஆர்குட், யாஹூ 360 போன்றவற்றின் வாடிக்கையாளர்கள் படிப்படியாய் குறைந்துவிட, பேஸ்புக் வேகமாக வளர்ந்து, தானே முதல் இட சமூக இணைய தளம் என்ற பெயரினைப் பெற்றுள்ளது.

கணையத்தின் காவலன் – சலபாசனம்

0 comments
சலப என்றால் வெட்டுக்கிளி. இது ஒரு பூச்சியின் பெயர். இந்த ஆசனத்தின்
உச்ச நிலையில் உடல், ஒரு வெட்டுக்கிளியைப் போல தோற்றமளிக்கிறது.

தரை மீது குப்புறப்படுங்க. உள்ளங்கைகள் தரையில் படர்ந்திருக்க வேண்டும்.
அப்ப இந்த நேரத்துல கைகள் ரெண்டுமே தரை மீது உரசியபடி நீட்டியிருக்கும்.
தலையைச் சற்றே தூக்கி, முகவாயை தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
அதே சமயத்துல கால்கள் ரெண்டும் இணைந்து ஒரே நேர்கோடு போல நீட்டி இருக்க
வேண்டும். அப்போது உள்ளங்கால்கள் மேல்நோக்கி அமைந்திருக்கணும். அதாவது
தலை முதல் கால்வரை உடல் ஒரே நேர்கோட்டில் அமைதல் வேண்டும்.

இரு கைகளின் முஷ்டியையும் இடுப்பின் கீழ்ப்பகுதியில் வைத்துக் கொள்ளவும்.
உள்ளங்கால்களை மேல்நோக்கியபடியே, இடுப்பிலிருந்து இரண்டு கால்களையும்
இணைத்தபடியே மேலே தூக்கவும். முகவாய் தரைமீது தொட்டிருக்கவேண்டும்.
மார்பு, கைகள், இடுப்புப் பகுதிவரை தரை மீது படர்ந்தும், இடுப்புக்கீழான
பகுதிகள் உள்ளங்கால்கள் வரை முக்கோணத்தின் ஒரு சாய்வு போல மேல்நோக்கித்
தூக்கியிருக்க வேண்டும். அந்த நிலையில் ஒரு நிமிடம் நீடித்திருக்க
வேண்டும்.

இதுவே சலபாசனம்.

உடல் கீழ்நோக்கிச் செல்லும் போதெல்லாம் மூச்சை வெளியேவிட்டு, மேலே
எழும்போது மூச்சை உள்ளே இழுத்தல் வேண்டும். உச்ச நிலையில் முழங்கால்கள்
நேராக இருக்க வேண்டும். இந்தச் சலபாசனம், புஜங்காசனத்தின் உபரி பலன்களைப்
பூத்தி செய்கிறது.

உடல் இலேசாக, சுறுசுறுப்பானதாக, நன்கு செயல்படக்கூடியதாக ஆகிறது.
புலன்களைக் கட்டுப்படுத்துகிறது.

மலச்சிக்கல், வாயுத் தொல்லை, நீரிழிவு, இடுப்பு வலி போன்றவற்றை
எதிர்த்துப் போராடுகிறது. பொதுவாக இடுப்பு, முதுகின் கீழ்பகுதி,
இடுப்பெலும்பு, வயிறு, தொடை, சிறுநீரகம், கால்கள் ஆகியவை ஊக்கம்
பெறுகின்றன. மிக முக்கியமாக கணையம் நன்கு செயல்படுகிறது. அதனாலே இந்த
ஆசனம், கணையத்தின் காவலன் எனப்படுகிறது.

சிறுநீரக் கோளாறுகளால் அவதிப்படுபவர்கள், குடல் வால் மற்றும் அதிக ரத்த
அழுத்தக்காரர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.

சைப்ரஸ் சிக்கல்!

0 comments
உலகப் பொருளாதாரத்தை லேசாக ஆட்டம் காண வைத்திருக்கும் சமீபத்திய நாடு,
சைப்ரஸ். ஐரோப்பிய யூனியனின் ஓர் குட்டித் தீவு, சைப்ரஸ். யூரோதான் இதன்
நாணயம்.

ஏன் இவ்வளவு சத்தம்? இத்தனை ஆண்டுகளாக, சைப்ரஸ், கிரேக்கப் பொருளாதாரத்தை
நம்பியே இருந்தது. கிரேக்கக் கடன் பத்திரங்களி" பெருமளவு முதலீடு செய்தன
சைப்ரஸின் முக்கிய வங்கிகள். சென்ற ண்டு கிரேக்கப் பொருளாதாரம் சரியத்
தொடங்கியவுடன், சைப்ரஸுக்குச் சளி பிடித்தது. அதன் முதலீடுகளின் மதிப்பு
பெருமளவு குறைந்த நிலைமை கிடுகிடுவென மோசமானது.

உடனே சைப்ரஸ், ரஷ்யாவிடம் கையேந்திப் போனது, ஏனெனில், சைப்ரஸ் வங்கிகளில்
முதலீடு செய்திருப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பணக்கார
ரஷ்யர்கள்தாம். அவர்களுடைய நல்ல/அல்ல பணத்தைப் பாதுகாக்கும் இடமாக இத்தனை
ஆண்டுகளாக சைப்ரஸ் இருந்தது.

ரஷ்யா கொடுத்த 2.5 பில்லியன் யூரோ கடன் தொகையும் போதவில்லை. வேறு
வழியில்லாமல், ஐரோப்பிய யூனியனிடம் மடிப்பிச்சை ஏந்தத் தொடங்கினார்
சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியடஸ்.

பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய
வங்கி, ஐ.எம்.எஃப் ஆகியவை இணைந்து பத்து பில்லியன் யூரோவை வழங்கி,
சைப்ரஸைக் காப்பாற்ற முன்வந்தன. ஆனால், அதற்கு முன் ஒரு கண்டிஷன்.
சைப்ரஸ் வங்கிகள் தம் பங்காக 5.8 பில்லியன் யூரோக்களைத் திரட்டவேண்டும்.

அதிபர், சைப்ரஸ் வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்புகள், கடன்கள்
மீதெல்லாம் வரி போடத் தீர்மானித்தார. ஒரு லட்சம் யூரோவுக்கு மேல்
சேமிப்பு வைத்திருப்போருக்கு 9.9 சதவிகித வரி. அதைவிடக் குறைவான
சேமிப்புகளுக்கு 6.75 சதவிகிதம் வரி. சாதாரண மக்கள் ஆடிப்
போய்விட்டார்கள். ஒரு லட்சம் யூரோ சேமிப்பெல்லாம் ரஷ்யர்களுடையது. அதைப்
பற்றி கவலை இல்லை. ஆனால், சின்ன சேமிப்புகளின் தலைமேல் கைவைத்ததுதான்
பெரிய அதிர்ச்சி.

ஓடு ஏ.டி.எம்.மைத் தேடி. திட்டம் அமலாவதற்கு முன், வங்கிச் சேமிப்புகளை
எல்லாம் வெளியே எடுத்துவிட வேண்டும். பரபரப்பு நாடெங்கும். உடனே வங்கிகளை
எல்லாம் மூடிவிட்டார் அதிபர். இருக்கும் பணத்தை மக்கள் எடுத்துவிட்டால்?

உலக நாடுகள் கவலை கொண்டது இங்குதான். ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த மக்கள்,
வங்கிகளில் இருந்து தம் சேமிப்புகளை எல்லாம் எடுத்துவிட்டால் என்னாவது?
மிகப் பெரிய அபாயம். ஒரே சமயத்தில் மக்களுக்கு எப்படிப் பணத்தைத்
திரும்பத் தர முடியும்? சேமிப்புகள்தானே வங்கிகளின் உயிர்நாடி. அது
நீங்கினால்?

பயம், உலகச் சந்தையைப் பற்றிக் கொண்டது. சைப்ரஸைக் காக்காவிட்டால்,
தங்கள் பொருளாதாரங்களும் குட்டிக் கரணம் அடித்தவிடும் அபாயம் உலக
நாடுகளுக்குத் தெரியாதா என்ன?
நல்லவேளையாக, சைப்ரஸ் நாடாளுமன்றம், மக்கள் மேல் வரிவிதிக்கும் திட்டத்தை
எதிர்த்து வாக்களித்தது. அதுவும் சின்ன முதலீடுகளைக் காக்க வேண்டியது
அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்தனர். சென்ற வாரம் முழுவதும் சைப்ரஸில்
இருந்த பதற்றம் லேசாக இப்போது தணித்தது. இப்போது ஐரேப்பிய யூனியன்,
சைப்ரஸ் வங்கிகள் மூழ்கிவிடாமல் தடுக்க, பொருளாதார உதவி செய்ய
ஒத்துக்கொண்டு இருக்கின்றன. இந்த உதவியைப் பெற 5.8 பில்லியன் யூரோக்களை
சைப்ரஸ் திரட்டித் தான் ஆக வேண்டும். ஆனால், ஒரே ஒரு மாற்றம், சைப்ரஸ்
தனது சிறிய முதலீட்டாளர்களுக்கு வரி விதிக்காது.

உலகப் பொருளாதாரம் லேசாக மூச்சுவிடுகிறது. இப்போதைக்கு சைப்ரஸ்
பொருளாதாரப் பிரச்னை மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுத்து விட்டோம் என்ற
கணநேர இளைப்பாறல். இது எவ்வளவு தூரம் தாங்கும், மீண்டும் சைப்ரஸ்
பொருளாதாரம் சரியுமா என்றெல்லாம் சொல்வதற்கு இல்லை. இப்போதைக்கு தீ
அணைக்கப்பட்டு இருக்கிறது. அவ்வளவுதான்!

நன்றி-கல்கி

டூத் பேஸ்ட் டெரர்

0 comments
அன்றாடம் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் ப்ளோரைடு இருப்பதாக
விளம்பரங்கள் வரிசை கட்டுது. அதுவும் தெரியும். ஆனால், தெரியாதது.

புகையிலையில் புதைந்து கிடக்கும் நிக்கோட்டின் என்கிற கொடிய ரசாயனத்தை
டூத் பேஸ்ட் டூத் பவுடர்களில் சேர்க்கிறார்கள் என்பது புதுதில்லியை
சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பார்மாசூட்டிகல்ஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனம்
இதனை உறுதி செய்திருக்கிறது. இதில் அதிர்ச்சியான விஷயம் நாட்டில்
பிரபலமான பத்தில் ஆறு நிறுவனத் தயாரிப்புகளில் இந்த ரசாயனம்
சேர்க்கப்படுவதாக வரும் தகவல்களால் மக்களிடையே பீதி, பயம்.

சிகரெட் தயாரிப்புக்கு அடிப்படை புகையிலை புகைபிடிப்பவர்கள் அந்த
பழக்கத்துக்கு தொடர்ந்து அடிமையாக முழுமுதற் காரணமான நிக்கோட்டின் ஒரு
கொடிய விஷம். அதனால் உதடு, வாய், நுரையீரலில் கேன்சர் ஏற்படுவது ஏற்கனவே
நிரூபிக்கப்பட்டிருக்கு. பொதுவாக பற்களில் வரும் பாதிப்புகளை தடுக்க டூத்
பேஸ்ட் பவுடர்களில் அவ்வப்போது புதிய ரசாயனங்கள் சேர்க்கப்படுவது உண்டு.
அதனடிப்படையில் ப்ளோரைடு இருக்கும் டூத் பேஸ்ட், பவுடரை தொடர்ந்து
பயன்படுத்தியபோது பல்லின் மேல்பூச்சு (எனாமல்) கரைந்து, பற்களில் கூச்சம்
வருவதாக புகார்கள் வந்தன. அதானல் பேஸ்ட், பவுடர்களில் ப்ளோரைடின்
அளவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அந்த வரிசையில் புதிதாக நிக்கோட்டின் சேர்க்கப்படுவதாக சொல்கிறார்கள்.
அந்த வரிசையில் புதிதாக நிக்கோட்டின் சேர்க்கப்படுவதாக சொல்கிறார்கள்.

இது குறித்து பிரபல டென்டிஸ்ட் ஒருவரிடம் பேசினோம். நிக்கோட்டின்
மணமில்லாத போதைதரும் ரசாயன பொருள், நிறம் கறுப்பு, ஒருவர் பிரெஷ்
பண்ணும்போது பேஸ்ட், பவுடரில் இருக்கும் நிக்கோட்டின் உதடு, வாய்,
பற்களில் படியும்.
விழுங்கும்போது குடலுக்குள் போய்விடும் ஈறுகளில் ரத்தம், பற்குழி சொத்தை
என்பதையெல்லாம் ஒப்பிடும் போது நிக்கோட்டின் ஏற்படுத்தும் பாதிப்பின்
வீரியம் கொடூரமானது என எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார். சற்றே திகில்
ரகமான இந்த ரசாயனம் அல்கலாய்ட் வகையை சேர்ந்தது. தேயிலை, காபியில்
அதிகமிருக்கும். இதனை டூத் பேஸ்ட்டில் பயன்படுத்துவதாக சொல்வது தான்
அதிர்ச்சி. காரணம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்க முடியாத
பொருள் பேஸ்ட், பவுடர், ஒரு முறை முறை நிக்கோட்டின் சுவையை நாக்கு
உணர்ந்து கொண்டால் தொடர்ந்து அதற்கு அடிமையாகும் ஆபத்து இருக்கு.

உதாரணமாக சிகரெட் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல்
இருக்க நிக்கோட்டின் தான் காரணம் என்கிறார்கள். இது உண்மைதான்
நிக்கோட்டின் தொடர்ந்து உடலுக்குள் போனால் ரத்த அழுத்தம் முதல் நரம்பு
மண்டலம் வரை பாதிக்கம் ஆபத்து உண்டு என எச்சரிக்கிறார் பிரபல பயட்டீஷியன்
கௌசல்யா.

டூத் பேஸ்ட், பவுடர்களில் நிக்கோட்டின் சேர்ப்பது இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பே தொடங்கிவிட்டது. ஆய்வக சோதனைகள் அதனை உறுதி செய்த பின்வரும்
நிறுவனங்கள் தவிர்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் சொல்லப்படுகிறது.
ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே நிக்கோட்டினை பயன்படுத்துவதாக
சொல்லி நிறுவனங்கள் தப்பிக்க பார்ப்பது தான் வேடிக்கை.

இது குறித்து கான்சர்ட் நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சந்தான ராஜன்.
பொதுவாக ரசாயன சேர்மங்களை மக்களின் அன்றாட உணவுப்பொருட்களில் சேர்க்க
கூடாது. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவு என்று சொல்லி நிறுவனங்கள்
தப்பித்துவிடும். ஆனால் டூத் பேஸ், பவுடர் குழந்தைகளும் பயன்படுத்தும்
பொருள் அப்படியிருக்க அதில் நிக்கோட்டின் சேர்ப்பது எதற்காக என்பது
புரியவில்லை. போட்டியை சமாளிக்க இப்படி செய்தால் அது தவறுதான் என்கிறார்
சந்தானராஜன்.

நன்றி - குமுதம்

பாய்பிரண்ட் தொல்லைகள்!

0 comments
பருவ வயதுப் பெண்கள் `பாய்பிரண்ட்' உடன் சுற்றித் திரிவதை இயல்பாக
பார்க்க முடிகிறது. ஆண் நண்பர்களை தங்கள் அழகுக்கு கிடைத்த அங்கீகாரமாக
அனேக பெண்கள் நினைக்கிறார்கள். பாய் பிரண்ட் இல்லையென்று வருத்தப்படும்
பெண்களும் உண்டு.

பாய்பிரண்டுகளுடன் இருப்பதே `ஜாலி` என்ற நினைப்பும் பெண்களிடம்
இருக்கிறது. இளம்பெண்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க, பெற்றோருக்குள்
எப்போதுமே பிள்ளைகள் மீது உரிமையுள்ள பொறுமல் இருந்து கொண்டுதான்
இருக்கிறது.

`ஆண் பெண் நட்பால் கலாசாரமே சீரழிந்து வருகிறது` என்ற எண்ணமும்
சமூகத்தினரிடையே உள்ளது. பள்ளி – கல்லூரிகளில் ஆண், பெண் இருவரும்
சேர்ந்து படிக்கிறார்கள். இது குழந்தைப் பருவத்திலேயே இயல்பாக பழகும்
வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

ஆணும் பெண்ணும் சமூகத்தில் சமமாக, ஒன்றாக இருப்பது நல்லதுதான் என்றாலும்,
இப்படி இருக்கும்போது ஏற்படும் புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான்
இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம். பணத்தை வாரி இறைத்து பெண்களை
வளைக்கும் பாய்பிரண்டுகளும் பெருகி வருகிறார்கள்.

வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன்
இருப்பவர்கள் கொஞ்சப்பேர் தான். எனவே ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம்
எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும்.

அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும்,
தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

விண்டோக்களைக் கையாளும் வழிகள்

0 comments
பெர்சனல் கம்ப்யூட்டரில் பணியாற்று கையில், நிறைய விண்டோக்களைத் திறந்து
வைத்து செயல்படுவது நம் வழக்கமாகி விட்டது. இது நம் வேலைத் திறனை
ஓரளவிற்குப் பாதிக்கவும் செய்திடலாம். பல வேளைகளில், நாம் பணியாற்றும்
விண்டோ தவிர மற்றவற்றை மூடுவது நமக்கு நல்லதாகிறது. ஒரு விண்டோவினை
மட்டும் திறந்து வைத்து செயல்படுவது நமக்கும் எளிதாகிறது. விண்டோஸ் 7
இதற்கான சில வழிகளைக் கொண்டுள்ளது. இந்த வழிகளை இரண்டு பிரிவுகளாகப்
பிரிக்கலாம். முதல் செயல்பாடு, நாம் செயல்படும் விண்டோ தவிர மற்ற
அனைத்தையும் சுருக்கி வைப்பது. இரண்டாவது அனைத்து விண்டோக்களையும்
சுருக்கி வைப்பது.

1. ஏரோ ஷேக் (Aero Shake):

விண்டோஸ் 7 சிஸ்டம் தொகுப்பு தரும் ஒரு நவீன தொழில் நுட்ப வசதி இது.
நீங்கள் செயல்படும் விண்டோவினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் மேலாக உள்ள
பிரிவில், லெப்ட் கிளிக் செய்திடவும். பின்னர், உங்கள் மவுஸை சற்று
அசைக்கவும். விண்டோவும் அசையும். இப்போது, நீங்கள் செயல்பட்டு, ஷேக்
ஆகும் விண்டோ தவிர திறந்திருக்கும் மற்ற விண்டோக்கள் அனைத்து
விண்டோக்களும் மறைந்து போகும். இந்த வசதி விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம்,
ப்ரபஷனல், அல்ட்டிமேட் மற்றும் என்டர்பிரைஸ் எடிஷன் பதிப்புகளில் மட்டும்
கிடைக்கிறது.

2. விண் +ஹோம்:

உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் 7 பதிப்பில் ஏரோ ஷேக் வசதி
இல்லையா? கவலைப்பட வேண்டாம்; இந்த விண்டோக்களை மூடும் வேலையை இரு கீகள்
மூலம் மேற்கொள்ளலாம். Win + Home கீகளை ஒரு சேர அழுத்தவும். செயல்பட்டுக்
கொண்டிருக்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தும் மறைவதைப் பார்க் கலாம். விண்
ஷேக் வசதி விசேஷமாக உள்ளதே; ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் அது இல்லையே
என்று கவலைப்பட்டு, அந்த வசதியினை அனுபவிக்க வேண்டும் என எண்ணினால்,
விண்ஷேக் என்ற அப்ளிகேஷன் புரோகிராமினை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி

http://members.chello.nl/h.h.j.f.beens/WinShake/Functions.htm

3. விண்டோக்களைச் சுருக்க:

திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் சுருக்கி டாஸ்க் பாருக்குக்
கொண்டு செல்ல வேண்டுமா? நீங்கள் அழுத்த வேண்டிய கீகள் Win + D. மீண்டும்
இந்த விண்டோக்கள் எழுந்து கொள்ள, அதே கீகளை மீண்டும் அழுத்தவும்.

4. டெஸ்க் டாப் காட்டும் பட்டன்:

அடுத்து இது தொடர்பான இன்னொரு வசதியையும் விண்டோஸ் 7 சிஸ்டம் தருவதனைப்
பார்க் கலாம். இதன் டாஸ்க்பாரின் முடிவில், விண்டோஸ் கடிகாரம் அருகே, ஷோ
டெஸ் க்டாப் பட்டன் இருப்பதனைக் காணலாம். இந்த பட்டன் அருகில் மவுஸின்
கர்சரைக் கொண்டு சென்று அதனைச் சற்று சுற்றவும். இப்போது திறந்திருக்கும்
விண்டோக்கள் அனைத்தும் ஒளி ஊடுருவும் தன்மையுடன் (ட்ரான்ஸ்பரண்ட்)
காட்டப்படும். இந்த வசதியில், நாம் எந்த விண்டோவினையும் மினிமைஸ்
செய்திடாமல் பார்க்கலாம். இந்த பட்டனில் கிளிக் செய்தால், அது அனைத்து
விண்டோக்களையும் உடனே மூடிவிடும். மீண்டும் கிளிக் செய்தால், திறக்கும்.

வெயில் கால நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க

0 comments
தகுந்த காலங்களில், தடுப்பூசி போடாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை
தொற்றுக்கு ஆளாகின்றனர். அதனால், பெற்றோர், குழந்தைக்கான
தடுப்பூசிகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். வெயில் காலங்களில்,
ஈரத்தன்மையுள்ள பொருட்களில், கிருமிகள் மிக வேகமாக வளரும் என்பதால்,
பழம், காய்கறி நறுக்கிய கத்திகள், சமைக்கும் பாத்திரங்களை, ஒவ்வொரு
முறையும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.


வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில், குழந்தைகளை வெளியில்
விளையாடுவதை தடுத்து, கேரம், செஸ், போன்ற விளையாட்டுக்களை, வீட்டில்
அமர்ந்து விளையாடச் சொல்லலாம். வேர்க்குருவை தவிர்க்க, ஒரு நாளில்
இருமுறை குளிப்பதும், விளையாடியபின், கை கால்களை நன்கு சோப்பு போட்டு
கழுவுவதும், உடல் தூய்மையை அதிகரித்து, நோய் தாக்கத்தை குறைக்கிறது.
வெளியில் செல்லும்போதோ அல்லது விளையாடும்போதோ, தலையில் தொப்பியும்,
குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்க, கண் கண்ணாடி (வெப்பத் தடுப்பு) அணியச்
செய்வதும் அவசியம். வெயில் காலங்களில், குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு
சிறுநீர் கடுப்பு நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

காரணம், விளையாடும் குஷியில், சிறுநீர் கழிக்கக் கூட மறந்து விடுவர்.
அதனால், அவர்களை இந்த விஷயத்திலும் கண்காணிக்க வேண்டியது பெற்றோரின்
கடமை.
உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து, பின், அதை எடுத்து
பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், அந்த உணவு வகைகளை நன்றாக
சூடாக்கி பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கும், வயிற்றுக்கும் நல்லது.
இதனால், வயிற்றுப்போக்கு பிரச்னைகளை தடுக்கலாம். அதுவும், வெயில்
காலத்தில் வயிற்றுப் போக்கு பிரச்னைகள் வந்துவிட்டால், குழந்தைகளின்
உடம்பில், நீர்ச்சத்து குறைந்து, விரைவில் சோர்ந்து விடுவர்.


வெளியில் செல்லும் போது, வணிக நோக்கத்தை மையமாகக் கொண்ட சுகாதாரமற்ற
முறையில் இருக்கும் சில கடைகளை தவிர்த்து, எலுமிச்சை ஜூசை வீட்டிலேயே
தயாரித்து எடுத்துச் செல்வது நல்லது. தண்ணீரை, மாற்றி மாற்றி குடிப்பதால்
ஏற்படும் தொண்டை சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம்.
வெயில் காலத்தில், குழந்தைகள் அணியும் ஆடைக்கும் முக்கியத்துவம் தந்து,
அரிப்பு ஏற்படுத்தாத, வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகளை
அணிவிக்கலாம். சாதாரண பவுடர்களுக்கு பதில், வேர்க்குருவைத் தடுக்கும்
பவுடர்களை குழந்தைகளுக்குப் பயன்படுத்துவது நல்லது.

பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!

0 comments
புதிதாக ஒரு ஃப்ளாட் வாங்கியிருந்தேன். அதில் கெய்சர், வாஷிங்மெஷின்,
வாஷ்பேஸின் ஆகியவற்றை பொருத்தவேண்டியிருந்தது. எனக்கு ப்ளம்பர் நண்பர்
ஒருவர் உண்டு. அவரை வீட்டுக்கு வரவழைத்தேன். அவர் நல்ல திறமைசாலிதான்.
ஆனால் அன்று ஏனோ கெய்சரை பொருத்தி டெஸ்ட் செய்த போது சூடு ஏறவில்லை.
பிறகு தவறை கண்டுபிடித்து மீண்டும் பரிசோதிக்க முயற்சித்தபோது மின்சாரம்
போய்விட்டது.

பொருத்துவதற்காக ட்ரில்லிங் செய்தபோது, டிரில் பிட் உடைந்து விட்டது.
வாஷிங்மெஷினில் நிப்பிள் மேட்ச் ஆகவில்லை. ஆக அவற்றை பொருத்த ஏதுவாக
என்னையும் கடைக்கு அழைத்தார். கூடச் சென்று வாங்கி கொடுத்தேன். அவரது
வீடு கடை அருகில் தான் இருந்தது. வீட்டிற்கு ஒரு நிமிடம் வாருங்கள் என
அழைத்தார். நான் மறுத்தும் மிகவும் வற்புறுத்தி அழைத்து சென்றார்.

வீட்டுவாசலில் ஒரு செடி வளர்ந்திருந்தது. அதனை ஒரு நிமிடம் தொட்டவர்,
பிறகுஉள்ளே அழைத்து சென்றார். அவரை பார்த்ததும் குழந்தைகள் ஓடி வந்தன.
ஒவ்வொன்றாக தூக்கி கொஞ்சி, இறக்கி விட்டார்.முகமலர்ச்சியுடன் வரவேற்ற
அவரது மனைவி உள்ளே சென்று சில நிமிடங்களில் சூடான காப்பி கொண்டு வந்தார்.
இதனிடையே ப்ளம்பர் நண்பர், மனைவி, குழந்தைகள் பற்றி சுவையாக கூறி
கொண்டிருந்தார்.
காப்பியை குடித்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றேன். என் மனத்தில்
ஒர சந்தேகம். ஏன் பிளம்பர் வாசலில் இருந்த செடியை நின்று தொட்டு
சென்றார்?

அடுத்தநாள் அவர் வந்ததும் என் சந்தேகத்தை கேட்டேன். நேற்று நான்
எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் டென்ஷனானேன். ஆனால் அதே
பதற்றத்துடன் வீட்டுக்குள் சென்றாள் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக
இருக்க முடியாது. அதனால் என் கவலை. டென்ஷன் எல்லாவற்றையும் அந்த செடியில்
இறக்கிவிட்டு நாளை மீண்டும் எடுத்து கொள்கிறேன் எனக்கூறி இலேசான
மனத்துடன் உள்ளே சென்றேன் என்றார். நான் வியந்து நின்றேன்.

இது உணர்த்துவது என்ன?

பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. நாம்தான் சில நேரம்
அதனை விலக்கி வைக்க வேண்டும்.
ஆபீஸில் பிரச்னையா? பொது வேலைக்குசென்ற இடத்தில் பிரச்னையா? அதனை
மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். அந்த பிரச்னைகளை, வாசலிலேயே
மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில்
தினமும் மாலையில் புது மனிதராக நுழையுங்கள். இரவு நல்லபடி கழியும்.
அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf