கருப்பட்டி ஆப்பம்

0 comments
கருப்பட்டி ஆப்பம் தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 200 கிராம்
உளுந்து - 50 கிராம்
வெந்தயம் - 1தேக்கரண்டி
தேங்காய் - 1 மூடி
கருப்பட்டி - 400 கிராம்
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
உப்பு -தேவையான அளவு

கருப்பட்டி ஆப்பம் செய்முறை:

பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்தெடுத்த மாவுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலக்குங்கள். அதோடு கருப் பட்டியைப் பாகு காய்ச்சி ஊற்றவும். கலக்கிய மாவை கரண்டியில் எடுத்து, தோசைக் கல்லில் வார்த்தெடுங்கள். சுவை மிக்க, புதுமையான கருப்பட்டி ஆப்பம் ரெடி. தொட்டுக் கொள்ள தேங்காய் பால் போதும்.

Addison: அடிஸன் நோய்!

0 comments
அலுவலகத்தில் இருந்து வீடு வரும் அவர் சோர்ந்து காணப்படுகிறார். அலுவலகத்தில் வேலை செய்யும்போது கூடச் சோர்வு ஏற்படுகிறது. ரத்த ஓட்டம் குறைகிறது. சில நேரங்களில் வாந்தியும் ஏற்படுகிறது. தோல் வறண்டு, நிறம் மாறுகிறது. சில நாட்களாகத் தனது உடலில் வலிமை குறைந்த மாதிரி உணர்கிறார்.

இவை எல்லாவற்றுக்கும் என்ன காரணம் என்று கேட்டு மருத்துவரிடம் செல்கிறார். அப்போதுதான், அட்ரினல் சுரப்பி சரியாகச் சுரக்காமல் போனதால்அவருக்குப் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் கூறுகிறார்.

இந்த நோய்க்கு என்ன காரணம் என்பதை அடிஸன் என்பவர் முதன்முதலில் கண்டறிந்து வெளியிட்டார். அட்ரினலின் சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டு, அதன் சுரப்புத் தன்மை குறைவதால் இப்பிரச்சினை ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்தார். அதனால் `அடிஸன் நோய்' என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டது.

அடிஸன் நோய் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. இது ஆண்களைத்தான் பெரும்பாலும் பாதிக்கும். நோயாளிகளுக்குப் பலவீனம், தோல் வறண்டு போதல், சோர்வு முதலியவை உண்டாகும். பிறகு சிறிது சிறிதாக அது அதிகரித்துக்கொண்டே போகும். உற்சாகம் குறையும். வளர்ச்சி இல்லாமல் மெலிந்துவிடுவார். தசைகள் ஒடுங்கிவிடும். கையில் `ஜில்'லென்று ஆகிவிடும்.

ஆரம்ப நிலையாக இருந்தால், சாதாரணமாக உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டாலே போதும். விரைவில் குணம் ஏற்பட்டுவிடும். டாக்டர் நிர்ணயிக்கும் அளவில் கார்ட்டிசோன் மாத்திரைகளை உட்கொண்டாலே போதும்.

ஆனால் சோர்வடையும் அனைவருமே தங்களுக்கு அடிஸன் நோய் ஏற்பட்டிருப்பதாகக் கருதக் கூடாது. இது ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படக் கூடியது. எனவே மருத்துவரை நாடாமல் நோயை முடிவு செய்துவிடக் கூடாது.
நன்றி-தினத்தந்தி

Life Changing Friendship: வாழ்வை மாற்றும் `நட்பு’!

0 comments
`ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்' - ஆங்கிலப் பழமொழி.

`அன்பாக இரு`. அனைத்து மதங்களின் போதனை இது. அன்புடன் இருப்பது என்பது பொறுப்புடன் கூடிய ஒரு முடிவு. இன்றைய நட்புகளை எடை போட்டால் பெருமூச்சுதான் பெரிதாய் வரும். `உல்லாசத்துக்காக ஒன்று சேர்ந்தவையே நட்பாக இருக்கின்றன' என்ற ஒருவரின் விமர்சனம் இன்றைய நட்புலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும்.

இன்று பெரும்பாலானவர்களின் அன்பு பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிஜத்தில் அது நட்புமல்ல, அன்புமல்ல, வெறும் சுயநலமே!

"பிறரைப் பார்த்து நீ புன்னகைப்பது கூட ஒரு அறச்செயல்'' என்று நபிகள் நாயகம் சொல்கிறார். ஆனால் வாய்விட்டுச் சிரித்தாலோ, அனைவரிடமும் சிரித்துப் பழகினாலோ சமூக வழக்கில் தப்பாய்ப் பார்க்கும் கண்ணோட்டம் பரவி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாமே வலியவந்து எல்லோரிடமும் சிரித்துப் பழகி தொடர்ந்து அன்புறவில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நாம் எத்தனை பேருடன் நட்புறவுடன் இருக்கிறோமோ, அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான அடையாளம்.

`என்னை நேசிப்பவரை நான் நேசிப்பேன், எனக்கு உதவி செய்தவருக்கு நான் உதவி செய்வேன்' என்பதுவே பலரின் எழுதப்படாத அன்பு இலக்கணம். பழிக்குப் பழி என்பதற்கும், இதற்கும் வித்தியாசமே இல்லை.

"மற்ற எல்லோருமே வெளியே செல்லும்போது உள்ளே வருபவன் தான் உண்மையான நண்பன்'' என்று அறிஞர் டாக்டர் பில் மெக்கிராவ் சொல்வார். ஆமாம், உங்களிடம் எதைஎதையோ எதிர்பார்த்துப் பழகியவர்கள் எல்லாம் உங்களிடம் ஏதுமில்லை என்று அறிந்து விலகிச் செல்லும்போது, உங்களுடன் கரம் கோர்க்க, உங்களின் துயர் போக்க வருபவனே உண்மையான நண்பன் ஆவான். இதைத்தான் "இடுக்கண் களைவதே நட்பு'' என்று வள்ளுவர் இலக்கணப்படுத்துகிறார்.

நீங்கள் நட்பு நிறைந்தவரா? என்பதை சோதிக்க உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள்...

என்னிடம் எதுவுமே சரியில்லை என்கிறபோதும் அணுகிப் பேசும் நண்பனை பெற்றிருக்கிறேனா?

ஒத்துப்போகாத விஷயங்களின்போது அவனுக்கு தனித்தன்மை இருப்பதை ஆமோதிக்கிறேனா?

வருத்தத்தில் இருக்கும் நண்பனின் சூழலை சமாளிக்க எனக்குத் தெரிந்திருக்கிறதா?

நண்பனின் சில பழக்கங்கள் பிடிக்காதபோது அதைப்பற்றி அவனிடம் வெளிப்படையாக பேசுகிறேனா?

தேவையென்றால் நண்பனிடம் தயக்கமின்றி உதவி கேட்கிறேனா? உதவிக்கு நன்றி கூறுகிறேனா?

நண்பனின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நடக்கிறேனா?

நண்பன் ஒரு புதிய நண்பனைச் சந்திக்கும்போது, நம் நட்புக்கு இடையூறு வந்துவிட்டது என்று எண்ணுகிறேனா?

கடைசி இரு கேள்விகளைத் தவிர மற்ற கேள்விகளுக்கு `ஆம்' என்ற பதில் வராவிட்டால் நீங்கள் உண்மையான நண்பனை அடையவோ, உண்மையான நண்பனாக மாறவோ இன்னும் நிறைய பயணிக்க வேண்டும்.

உங்கள் நட்புறவை பரிசீலிக்க விரும்பினால் உங்கள் வாழ்வின் முக்கியமான 3 உறவுகளை பட்டியலிடுங்கள். அவர்கள் ஏன் உங்களுக்கு முக்கியமானவர்கள்? அவர்களுக்கு அந்த விசேஷ இடத்தைப் பெற்றுத் தந்த குணங்கள் என்ன? அவர்களின் கஷ்டங்களைப் போக்க நான் என்ன செய்ய தயாராக இருக்கிறேன்? என்று பட்டியலிடுங்கள். அவர்களின் சிறப்பு குணங்கள் உங்களுக்கு ஏற்படவும், அதே குணத்துடன் பிறருடன் நேசமாகப் பழகவும் முயற்சி செய்யுங்கள்.

ஒருவரோடு ஒருவருக்கு உள்ள உறவில் மட்டுமே நாம் முழுமையாக நாமாக இருக்கிறோம். நாமிலிருந்து பிரிந்த `நான்' அழிந்து விடும். அப்படியென்றால் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? முகம் மலர பேசுவதல்ல, அகம் மலர பழகுவதே நட்பு என்கிறார் வள்ளுவர். ஒருவனுக்கு எப்படிப்பட்ட நண்பன் தேவை என்பதை ஆங்கிலக் கவிதை ஒன்று இப்படி வரையறுக்கிறது...

"தன் மனத்தை அப்படியே வெளிப்படுத்த முடிந்தவன்;

எப்போது வாயை மூட வேண்டும் என்று அறிந்தவன்;

அன்புடன் உணவையும், நல்ல நகைச்சுவைகளையும், சூரிய அஸ்தமனத்தையும் பகிர்ந்து கொள்பவன்;

உங்களுடன் பெரியவனாகவோ, சிறியவனாகவோ நடிக்காமல் தோழமையுடன் இருப்பவன்;

நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிப்பவன் எவனோ அப்படிப்பட்ட நண்பனே உங்களுக்குத் தேவை''

நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்!

Registry Cleaners: ரெஜிஸ்டரி கிளீனர்கள்

0 comments
விண்டோஸ் இயக்கத்தில், மால்வேர் மற்றும் வைரஸ்களுக்கு அடுத்தபடியாக, ரெஜிஸ்ட்ரி தான் விண்டோவில் பலவீன மான ஒரு இடமாகும். இவற்றினால், விண்டோஸ் முடக்கப்படலாம்; மெதுவாக இயங்கலாம் அல்லது பிரச்னைக்குரிய தாகலாம்.
ரெஜிஸ்ட்ரியில் தான் அனைத்து புரோகிராம்களின் இன்ஸ்டலேஷன் மற்றும் அவற்றின் இயக்கம் குறித்த வரிகள் எழுதப்படுகின்றன. ஒரு புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் இவை எழுதப்படும். ஆனால், அந்த புரோகிராமினை, கம்ப்யூட்டரிலிருந்து நீக்குகையில், ரெஜிஸ்ட்ரியில் எழுதப்பட்ட பல வரிகள் தங்கி விடுகின்றன. இவை விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தினை மந்தப்படுத்துகின்றன. எனவே தான், விண்டோஸ் மெதுவாக இயங்கினால், ரெஜிஸ்ட்ரியை முழுமையாக சுத்தப்படுத்துங்கள்; தேவையற்ற வரிகளை நீக்குங்கள் என நமக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

ஆனால், ரெஜிஸ்ட்ரியின் வரிகளை நீக்குவது அவ்வளவு எளிதான செயல் அல்ல; நீக்கக் கூடாத வரிகளை நீக்கிவிட்டால், விண்டோஸ் தொடர்ந்து செயல்படுவது அல்லது சில புரோகிராம்கள் முழுமையாகச் செயல்படுவது சிக்கலாகி விடும். இதனால் தான், பல புரோகிராம்கள் இதற்கென்றே தயாரிக்கப்பட்டு இணையத்தில் தரப்பட்டுள்ளன. சில புரோகிராம் கள் மற்ற பயன்பாட்டுடன், ரெஜிஸ்ட்ரி சுத்தப்படுத்தும் பயன்பாட்டினையும் சேர்த்துத் தருகின்றன. பெரும்பாலான புரோகிராம்கள்இலவசமாகவே இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் எளியதாகவும், அதிக பயனுள்ளதாகவும் திறன் கொண்ட ஐந்து புரோகிராம்கள் இங்கு பட்டியலிடப்பட்டுத் தரப்படுகின்றன.

1. சிகிளீனர் (CCleaner): ரெஜிஸ்ட்ரி சுத்தப் படுத்தும் புரோகிராம்களில், மிகச் சிறப்பான இடம் கொண்டுள்ள புரோகிராம் சிகிளீனர் ஆகும். இதனைப் பயன்படுத்தியதால், சிஸ்டம் பிரச்னைக்குள்ளாகியது என்ற சொல்லை இந்த புரோகிராம் பெற்றதில்லை. இதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இதில் உள்ள ரெஜிஸ்ட்ரி கிளீனரைப் பயன்படுத்து முன்னர், ரெஜிஸ்ட்ரி பைலுக்கு ஒரு பேக் அப் எடுத்துக் கொள்ளும்படி இது அறிவுரை தரும். மேலும், சிகிளீனர், மிக நுணுக்கமாக ரெஜிஸ்ட்ரி பைலை ஆய்வு செய்து வரிகளை நீக்காது. தெளிவாக தேவையற்ற வரிகள் என்று தெரிந்தாலே, அவற்றை நீக்கும். எனவே இதனால் பிரச்னை ஏற்பட்டதில்லை.

2. காம்டோ சிஸ்டம் யுடிலிட்டீஸ் (Comodo System Utilities):ரெஜிஸ்ட்ரி கிளீனிங் மட்டுமின்றி மற்ற வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு புரோகிராம் இது. இதனை http://www.comodo.com/home/support-maintenance/system-utilities என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இது சிகிளீனரைக் காட்டிலும் இன்னும் ஆழமாகச் சென்று, நுணுக்கமான முறையில் இடம் பிடித்த தேவையற்ற வரிகளைக் கண்டறிந்து நீக்குகிறது. இதனை ஒரு முறை பயன்படுத்தினால், அதன் பின், கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்தினைக் கொண்டு, இந்த புரோகிராமின் ரெஜிஸ்ட்ரி கிளீனிங் திறனை அறிந்து கொள்ளலாம்.

3. ட்வீக் நவ் ரெக் கிளீனர் (TweakNow RegCleaner): காம்டோ அளவிற்கு நுண்ணியமாக வரிகளைக் கண்டறியாவிட்டாலும், ட்வீக் நவ் ரெக் கிளீனர், மிக வேகமாக ரெஜிஸ்ட்ரியைச் சுத்தப்படுத்தும் எனப் பெயர் பெற்றதாகும். வேகம் ஒன்று மட்டும் உங்கள் விருப்பம் எனில், இந்த ரெஜிஸ்ட்ரி கிளீனரைப் பயன் படுத்தலாம். விண்டோஸ் இயக்கத்தில் ஏற்படுத்தப்படும் தற்காலிக பைல்கள், இணைய உலாவில் உருவாக்கப்படும் பைல்கள், கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் டேட்டா பைல்கள் என அனைத்தையும் சுத்தப் படுத்துவதுடன், விண்டோஸ் செட்டிங்ஸ் அமைப்பையும் சரி செய்கிறது. அத்துடன் நெட்வொர்க் செட்டிங்ஸ் சரியாக இல்லை எனில் அதனையும் சரி செய்கிறது. இதனைப் பெற http://www.tweaknow.com/ RegCleaner.php என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

4. வைஸ் ரெஜிஸ்ட்ரி கிளீனர் (Wise Registry Cleaner):ரெஜிஸ்ட்ரி கிளீனிங் சரியாக மேற்கொள்ளப்படாவிட்டால், சில வேளைகளில் விண்டோஸ் முடங்கும் நிலை உருவாகும். அதனால் தான், ஏற்கனவே உள்ள ரெஜிஸ்ட்ரி யை பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ள அறிவுரை தரப்படுகிறது. ரெஜிஸ்ட்ரி கிளீன் செய்த பின்னர், அது சரியாக இயங்காவிட்டால், பேக் அப் செய்த பைலை மீண்டும் அமைத்து இயக்கலாம். பலர் இதனை மேற்கொள்வதில்லை. இந்த வைஸ் ரெஜிஸ்ட்ரி கிளீனர், இதனை மிக எளிதான ஒரு வழி மூலம் நமக்கு உதவிடுகிறது. இதில் உள்ள பட்டன் ஒன்றின் மீது கிளிக் செய்வதன் மூலம், முந்தைய ரெஜிஸ்ட்ரி பைலை மீண்டும் கொண்டு வந்து சரி செய்கிறது. இந்த புரோகிராமினைப் பெற http://www.wisecleaner.com/wiseregistrycleanerfree.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.

5. ஏ.எம்.எல். ரெஜிஸ்ட்ரி கிளீனர் (AML Registry Cleaner):அதிக திறனும், பல்முனைப் பயன்பாடும் கொண்டது ஏ.எம்.எல். ரெஜிஸ்ட்ரி கிளீனர். நிறைய கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. சொல் கொடுத்து தேடி அறியும் வசதி, நாமாக குப்பை பைல்களை அழிக்கும் வசதி, விண்டோஸ் தொடங்குகையில் இயங்கும் அனைத்து பைல்களையும் காணும் வசதி எனப் பலவகை வசதிகளைத் தருகிறது. மற்ற கிளீனர்களில் இருப்பதைக் காட்டி லும் பல செயல்பாடுகளைத் தருவதால், நிறைய பட்டன்கள் இதில் தரப்பட்டிருப் பதனைக் காணலாம். ஆனால், இதனா லேயே இதனைப் பயன்படுத்துபவர்கள், ரெஜிஸ்ட்ரி குறியீடுகளைப் பிரித்து விடுகின்றனர். எனவே ரெஜிஸ்ட்ரி பேக் அப் செய்த பின்னர், இதனைப் பயன்படுத்துவது நல்லது. இந்த புரோகிராமினைப் பெற http://www.amltools. com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இன்னும் நிறைய ரெஜிஸ்ட்ரி கிளீனர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால், மேலே கூறப்பட்ட கிளீனர்கள் அனைத்தும் பல வசதிகள் கொண்டவையாக உள்ளன. நீங்களும் பயன்படுத்திப் பார்க்கலாம்.

Food Control Will save Brain: மூளையைக் காக்கும் உணவுக் கட்டுப்பாடு

0 comments
குறைவாகச் சாப்பிடுவது, மூளையை இளமையோடு வைத்திருக்கும் என்கிறார்கள், இத்தாலி விஞ்ஞானிகள்.

கட்டுப்பாடான உணவு முறையால் நடைபெறும் ஒரு மூலக்கூறுச் செயல்பாடு, மூளை முதுமை அடைவதில் இருந்து காப்பாற்றுகிறது என்கிறார்கள் இவர்கள்.

இதுதொடர்பாக அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வு ஒன்று விவரிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, எலிகள் வழக்கமாகச் சாப்பிடும் உணவு அளவில் 70 சதவீதம் மட்டுமே அவற்றுக்கு வழங்கப்பட்டது. கலோரி குறைந்த அந்த உணவு, சி.ஆர்.ஈ.பி.1 என்ற புரத மூலக்கூறைத் தூண்டுவதும், அதன் மூலம், மூளையின் ஆயுள் நீட்டிப்பு மற்றும் நல்ல செயல்பாட்டுடன் தொடர்புடைய பல்வேறு ஜீன்களை செயல்படச் செய்வதும் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

``எங்களின் நோக்கமே, சி.ஆர்.ஈ.பி.1-ஐ செயல்படச் செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதுதான். உதாரணமாக, ஏதாவது மருந்தின் மூலம் அதைச் சாதிக்கலாம் என்று நினைக்கிறோம். அதன் மூலம், கட்டுப்பாடான உணவுமுறை இன்றியே மூளையை இளமையாக வைத்திருக்கலாம்'' என்கிறார், இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ரோமைச் சேர்ந்த விஞ்ஞானி கியாவாம்பட்டிஸ்டா பானி.

கட்டுப்பாடான உணவு முறைக்கு உட்படுத்தப்படும் எலிகளுக்கு நல்ல நினைவுத்திறன், குறைவான ஆக்ரோஷம், அல்சைமர் என்ற ஞாபகமறதி வியாதி ஏற்படுவது தவிர்ப்பு போன்ற அம்சங்கள் காணப்படுவதை ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்
திருக்கின்றனர்.

இதற்கிடையில், உணவுமுறை தொடர்பான மற்றொரு கண்டுபிடிப்பையும் விஞ்ஞானிகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதாவது, கணையப் புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க விரும்புவோர், செலினியம், நிக்கல் செறிந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.

இதுதொடர்பான புதிய ஆய்வில், உடம்பில் செலினியம், நிக்கல் தடயம் அதிகமாகக் காணப்படும்போது அது அபாயகரமான கணையப் புற்றுநோயைத் தடுக்கிறது. அந்த நோய்க்கு எதிராக இவை ஒரு தடுப்புக் கவசம் போலச் செயல்படுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

New Swift Dzire: Price, Specification, Mileage details of New Swift Dzire

1 comments
New Swift Dzire
New Swift Dzire is expected to be launched in the overwhelming indian market on February 2012, the New Swift Dzire is expected to be the sedan version of the popular swift model by maruthi.With added 15" alloy wheels, stylish exteriors and excellent interiors, the 2012 New Maruti Swift Dzire will be an trendsetter again for the maruthi family.

Models of New Swift Dzire

The latest models of all the dzire includes the ZXi and VXi with both models boasting the much awaited USB playback functionality

Interiors and Exteriors of New Swift Dzire


Length : 3,995 MM
Wheelbase: 2,430 MM
Boot Space: 316 Liters
Tail Lamp Clusters
Egg-grate style grille
15" Alloy wheels
Climate Control A/c
Premium Sound System
Steering wheel mounted audio controls

Specifications of New Swift Dzire

K12 Fuel economy engine
86 Bhp @ 6,000 RPM
19.1 KM/l Claimed fuel Economy

The New Swift Dzire also boasts a 1.3L diesel engine featuring the fiat, which is belived to give an extradinory mileage of 23.4 Km/l and 74 HP at 190Nm Torque (Yes, 180 they claim)

As welcomed for the long time, now the New Swift Dzire is getting and automatic transmission variant which is code named under VXi petrol and , believe me that's the one i am waiting for @ a price tag of around 6 lacks which will give a lesser mileage than it's manual transmission counter parts.

So at a price range of 5-6 lacks and an added AT this New Swift Dzire is about to rollout from Feb 2012.

Food which improves the Impotence: `வாரிசு’ வருவதை தடுக்கும் உணவு

0 comments
`உடல் பருமன் என்பது ஒரு அழகியல் சார்ந்த சாதாரண பிரச்சினைதானே. அதனால் பெரிதாக என்ன ஆகிவிட போகிறது, சமாளித்துக்கொள்ளலாம்' என்றே பலரும் நினைத்தனர். ஆனால், `உடல் பருமன் வெறும் அழகியல் சார்ந்த பிரச்சினையல்ல. அதனால் இதய நோய்கள் ஏற்படும்' என்ற கருத்தை முன்வைத்து அதிர்ச்சியூட்டியது அறிவியல்.

`அட, அப்படியா? சரி சரி, இனி நன்றாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை பராமரித்துக்கொள்வோம்' என்று சுதாரித்த மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது! அது, உடல் பருமன் அல்லது தொப்பையால் `டிமென்சியா' என்னும் மூளைக்கோளாறு ஏற்படக்கூடும் என்னும் ஆய்வு முடிவு.

ஆக, இதுவரை உடல் பருமனால் ஒருவரின் இதயமும், மூளையும் பாதிக்கப்பட்டு நோய்கள் உண்டாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது, ஒருவர் உடல் பருமனாக இருந்தால் அது அவருடைய ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக, அவருடைய பல சந்ததிகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும் என்கிறது ஒரு
ஆய்வுச்செய்தி.

அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவினை உண்டுவந்த எலிகளின் குட்டிகள் `இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்' என்னும் சர்க்கரை நோய் தொடர்பான குறைபாட்டுடன் பிறந்தன. இதற்கு காரணம் ஆண் எலிகளின் `விந்தணுக் களே' என்கிறார்கள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களான மரியா ஆல்சன் டீக் மற்றும் மிஷ்ஷெலி லேன் இருவரும்.

அது சரி, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுக் கும், விந்தணுக்களுக்கும் என்ன தொடர்பு?

உணவுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மரபணு செயல்பாடுகள் மற்றும் புரத உற்பத்தியை கட்டுப்படுத்தும் வேதியல் மாற்றங்கள் மூலம் ஒருவருடைய டி.என்.ஏ.வில் பதிந்துபோகிறது என்கிறது மூலக்கூறு அறிவியல். இந்த உயிரியல் நிகழ்வுக்கு `எபிஜெனடிக் மாற்றங்கள்' என்று பெயர்.

ஆனால், விந்தணுவில் இருக்கும் டி.என்.ஏ, விந்தணு மற்றும் கருமுட்டையின் சங்கமத்திற்கும் முன்பும், பின்பும் பல மாற்றங்களுக்கு உட்படுவதால், டி.என்.ஏ.வில் பதிந்துபோகும் பாதிப்புகள் எல்லாம் அழிக்கப்பபட்டு டி.என்.ஏ. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று இதுவரை நம்பப்பட்டது.

`இல்லை, இந்த கூற்று முற்றிலும் தவறானது. விந்தணுவின் சில பகுதிகளில்
டி.என்.ஏ.வில் பதியும் பாதிப்புகள் மாறாமல் அப்படியே இருக்கின்றன' என்கிறது மரியா மற்றும் மிஷ்ஷெலி ஆகியோரின் ஆய்வு முடிவுகள்.

இதனை உறுதிசெய்ய, ஆரோக்கியமான உணவு மற்றும் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட எலிகளுக்கு கொடுக்கப்பட்டது. இவ்விரு பிரிவு எலிகளின் விந்தணுக்களில் எபிஜெனடிக் மாற்றங்களை உண்டாக்கும் (புரத உற்பத்தியை நிறுத்தும்) திறனுள்ள மரபுப்பொருளான `மைக்ரோ ஆர்.என்.ஏ.' இருக்கின்றனவா என்பது பரிசோதிக்கப்பட்டது.

பரிசோதனைக்கு பின்னர், அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு கொடுக்கப்பட்ட எலிகளின் விந்தணுக்களில் 21 மைக்ரோ ஆர்.என்.ஏ.க்கள் வித்தியாசமாக செயல்படுவது கண்டறியப்பட்டது. இந்த 21 மைக்ரோ ஆர்.என்.ஏ.க்கள் சிசு, விந்தணு வளர்ச்சி மற்றும் உணவு செரிமான கோளாறுகள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

எலிகளின் விதைப்பையை சுற்றியுள்ள கொழுப்பு படிவமே விந்தணுக்களை பாதிக்கும் எபிஜெனடிக் மாற்றங்களுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்கிறார் ஆய்வாளர் மரியா ஆல்சன் டீக்.

இதன் மூலம் அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு ஒருவரின் விந்தணுக்களை பாதிப்பதால் அவருடைய சந்ததிகள் ஆரோக்கிய குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள் என்னும் அறிவியல் உண்மை நிரூபிக்கப்படுகிறது.

இம்மாதிரியான குறைபாடுகளை தவிர்க்க, இனிவரும் காலங்களில் செயற்கை கருத்தரிக்கும் முறைகளின்போது விந்தணுக்களில் தேவையற்ற எபிஜெனடிக் மாற்றங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பரிசோதிக்க முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் மருந்து சிகிச்சைகள் மூலம் அவற்றை அகற்றவும் முடியும் என்கிறார் ஆய்வாளர் டீக்!

முனைவர் பத்மஹரி

Chhattisgarh Swami Vivekananda Technical University BE 4th Semester (Backlog) Exam Results

0 comments
Chhattisgarh Swami Vivekananda Technical University announced the BE 4th Semester for Backlog Exam Results, These results are now availabile at Chhattisgarh Swami Vivekananda Technical University official website.

Chhattisgarh Swami Vivekananda Technical University BE 4th Semester Exam Results

http://www.indiaresults.com/Chattisgarh/CSVTU/default.asp?inst=CSVTU
http://schools9.com/
http://csvtu.net/results.html

Re-evaluation details for Chhattisgarh Swami Vivekananda Technical University BE 4th Semester Exam Results

Before 30th January students are asked to applf for the re-evaluation.

Chhattisgarh Swami Vivekananda Technical University Results Page

http://csvtu.ac.in/results_Nov_Dec_2011.htm is the official link for Chhattisgarh Swami Vivekananda Technical University.

Karnataka State university B.Ed Results

0 comments
Karnataka State university decalred the results for the B.Ed exams for the students of Karnataka State university.

Results link for Karnataka State university

http://www.results.manabadi.co.in/Karnataka-state-womens-University-BED-Results-18012012.htm

Karnataka State university Official website

http://ksoumysore.edu.in/

Kerala Public Service Commission invites application for Assistant Project Engineer in Kerala Land Development Corporation Ltd

0 comments
Kerala Public Service Commission jop openings in  Kerala Land Development Corporation Ltd for Assistant Project Engineer

Eligibility:

Degree in Civil Engineering of a recognised university or equivalent OR A pass in sections A &B of the AMIE of the Institution of Engineers in India in Civil Engneering OR B.Tech (Agricultural Engineering) OR BE (Agricultural Engineering) OR B.Sc (Agricultural Engineering) of a recognised university or equivalent)

Method of appointment :  Direct Recruitment from Candidates belonging from Hindu Nadar Community only.

Applications submitted by candidates other than Hindu/ Nadar community will be summarily rejected. No rejection memo will be issued to these candidates.

Age    : 18-38. Only candidates born between 02.01.1973 and 01.01.1993 (both dates included) in respect of Hindu Nadar candidates are eligible to apply for the post.

More details about this Kerala Public Service Commission vacancy can be found at http://www.keralapsc.org/noti11/cat%20509-11.pdf

Income tax benefit from Home Loans: வீட்டுக்கடனில் கிடைக்கும் வருமான வரிச்சலுகை

0 comments
வங்கியிலிருந்து வீட்டுக்கடனோ அல்லது வீட்டு அடமான கடனோ பெற்றிருக்கிறீர்களா?ஆம் என்றால், வருமான வரி துறை உங்களுக்கு வழங்கும் சலுகைகள் என்னென்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

முந்தைய தலைமுறையில் 50 வயதுக்கு மேல் தான் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கவோ அல்லது கட்டவோ முடிந்தது. அவர்களது பொருளாதார வசதி போதுமானதாக இல்லாமலிருந்தது. மேலும் அந்த காலகட்டத்தில் வங்கி கடன் வசதிகள் பெறுவது எளிதாக இல்லை.ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் 35 வயதுக்குள்ளாகவே வீடு ஒன்றிற்கு சுலபமாக சொந்தக்காரர்களாக முடிகிறது.

கல்வி அறிவு வளர்ச்சி; விவசாய பொருளாதாரத்தில் இருந்து தொழில் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாடு பீடு நடை போடுவது; தகவல் மற்றும் தொழில் தொடர்பு துறைகளின் குறுகிய கால அசுர வளர்ச்சி போன்ற காரணங்களால் இன்றைய இளைய தலைமுறையினரின் பொருளாதார நிலை உன்னதமாக காணப்படுகிறது.1961 ல் 70.3 சதவீத மக்கள் விவசாயத்தை சார்ந்திருந்த நாட்டில் இன்று இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் 48.9 சதவீதம் பேர் தான் என்று கூறுகிறது அரசின் புள்ளி விவரம் ஒன்று.

கடன் வாங்கி ஒரு வீட்டினை உரிமையாக்கிக்கொள்வது நமது வசதிகளை மேம்படுத்துவதோடு நின்று விடுவதில்லை. கடனை முழுவதுமாக திரும்ப செலுத்தி முடிக்கின்ற வரையிலும் வருமான வரி சலுகையையும் அது பெற்று தருகிறது.எனவே, வீட்டுக்கடன் பெற்றுத்தரும் வருமான வரி சலுகைகள் குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு முன், மாதாந்திர தவணை அதாவது (Equated Monthly InstallmentEMI) என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மாத தவணை

வீடு வாங்குவது என்பது பலவகைப்படும். சிலர் கட்டிய வீட்டை வாங்கலாம். சிலர் கட்டுமான நிறுவனங்கள் கட்டிக்கொடுக்கும் தனி வீடு அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்து வீடு வாங்கலாம். சிலர் தங்களுக்குரிய நிலத்தில் வீடு கட்டலாம். எனவே இதற்கு ஏற்ப சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் அல்லது வீடுகட்டுமான நிறுவனத்தின் பெயரில் வங்கி கடன் அளிக்கும். இந்த கடன் தொகை காசோலை அல்லது பணவிடை மூலம் தரப்படுகிறது.கடனாக பெற்ற இந்த தொகையை நாம் குறிப்பிட்ட காலத்துக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையாக திரும்ப செலுத்துகிறோம். இதனைத்தான் இ.எம்.ஐ. (EMI) என்கிறோம்.

இந்த இ.எம்.ஐ. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி அசலாகவும், மற்றொரு பகுதி வட்டியாகவும் நமது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் நாம் அசலையும் நிலுவையிலுள்ள தொகைக்கு வட்டியையும் சேர்த்தே செலுத்தி வருவதால் கடன் அளவு மாதாமாதம் குறைந்து வருகிறது. இவ்வகையில், ஆரம்ப காலத்தில் கடன் தொகை அதிகம் என்பதால் அதன் மீது செலுத்த வேண்டிய வட்டியும் அதிகமாகவே இருக்கும்.

எனவே, ஆரம்பகாலத்தில் செலுத்தப்படும் இ.எம்.ஐ.- ல் பெரும் பகுதி வட்டிக்காகவே வரவு வைக்கப்படுகிறது. அப்படியானால், அசலுக்காக வரவு வைக்கப்படும் தொகை தொடக்க காலத்தில் குறைவாகவே இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை. இவ்வாறு மாதங்கள் செல்லச்செல்ல, இ.எம்.ஐ.- ல் வட்டிக்காக எடுத்துக்கொள்ளப்படும் தொகை குறைந்து வருவதையும், அசலுக்காக எடுத்துக்கொள்ளப்படும் தொகை அதிகரித்து வருவதையும் நாம் காணலாம்.

வருமான வரி சலுகை, திரும்ப செலுத்தப்படும் அசலுக்கு ஒரு விதமாகவும், செலுத்தப்படும் வட்டிக்கு மற்றொரு விதமாகவும் வழங்கப்படுகிறது. இது மத்திய அரசின் தனி நபர்களுக்கான வரி சலுகை வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 80 சி யின்படி வழங்கப்படுகிறது.

இந்த வருமான வரிச்சட்டப்பிரிவு என்ன சொல்கிறது தெரியுமா?

பிராவிடெண்ட் பண்ட் (பி.எப்.), பொது பிராவிடெண்ட் பண்ட் (பி.பி.எப்.), இன்சூரன்ஸ் பிரிமியம் மற்றும் பங்குகளோடு இணைந்த சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் ஆண்டுக்கு, (மேற்சொன்ன அனைத்து திட்டங்களிலும் சேர்த்து) ரூபாய் ஒரு லட்சம் வரை சேமிக்கலாம்.இந்த ஒரு லட்சம் சேமிப்பு நமது மொத்த வருமானத்திலிருந்து குறைத்துக்கொள்ளப்படும். அதாவது, வரி செலுத்த வேண்டிய வருமானம் குறையும். உதாரணமாக உங்களது மொத்த வருமானம் ரூ. 5 லட்சம் என்று வைத்துக்கொள்வோம்.மேலே குறிப்பிட்ட இனங்களில் உங்கள் சேமிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆக இருக்கிறது என்றால், நீங்கள் வரி செலுத்த வேண்டிய வருமானம் 4 லட்ச ரூபாய் ஆக கணக்கிடப்படும்.

ஒருவேளை, மேற்சொன்ன இனங்களில் நீங்கள் சேமிப்பு எதுவும் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம். அதுபோன்ற நிலையில் நீங்கள் வீட்டுக்கடன் வாங்கி இருந்தால், திருப்பி செலுத்தப்படும் வீட்டுக்கடன்களுக்கான அசலில் ரூபாய் ஒரு லட்சம் வரையில் வருமான வரி விலக்கு பெறலாம்.எந்த வீட்டு மீதான கடனுக்கு நீங்கள் வருமான வரி விலக்கு கோருகிறீர்களோ அந்த வீட்டில் நீங்கள் குடியிருக்க வேண்டும் என்பது வருமானவரி துறையின் விதியாக உள்ளது. ஒருவேளை, கடன் வாங்கி கட்டிய வீடு இருக்கும் அதே ஊரில் இல்லாமல், பணியின் காரணமாக வேறு ஊரில் நீங்கள் குடியிருப்பதாக வைத்துக்கொண்டால் உங்களுக்கு மேற் சொன்ன விதி பொருந்தாது. அதாவது, சலுகையை பெறுவதில் தடையில்லை.

உதாரணமாக நீங்கள் சென்னையில் வேலை செய்கிறீர்கள்; சென்னையிலேயே குடியிருக்கிறீர்கள். அதே நேரம், நீங்கள் கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீடும் சென்னையிலேயே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது வருமான வரி துறை தரும் சலுகைக்கு நீங்கள் உரியவரல்ல. ஏனெனில், கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீட்டில் நீங்கள் வசிக்கவில்லை என்பதனால் நீங்கள் சலுகை பெற தகுதியுடையவரல்ல.

நீங்கள் சென்னையில் வேலை செய்கிறீர்கள்; அங்கேயே குடியிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீடு மதுரையில் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். இப்போது உங்களுக்கு சலுகை உண்டு, மதுரையில் உள்ள வீட்டினை நீங்கள் வாடகைக்கு கொடுத்திருந்தாலும் கூட.

இந்த சலுகையின் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களுக்கு ஏற்கனவே சொந்தமாக வேறு வீடுகள் இருந்தாலும் அதே பகுதியில் கடன் வாங்கி கட்டிய வீட்டில் நீங்கள் குடியிருக்கும் பட்சத்தில் நீங்கள் சலுகைக்கு தகுதியானவரே.

எனவே, சென்னையில் கடன் வாங்கி கட்டிய வீட்டில் குடியிருக்கும் போது அதேபோல் கடன் வாங்கி மதுரையில் மற்றொரு வீட்டை கட்டியிருந்து, அதனை வாடகைக்கு கொடுத்திருந்தாலும் இரண்டு வீட்டிற்கும் வருமான வரி சலுகை உண்டு.

அடுத்து, வீட்டுக்கடனுக்கு செலுத்தப்படும் வட்டி மீதான சலுகை குறித்து வருமான வரி சட்டம் என்ன சொல்கிறது?

வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 24 ன்படி, வீட்டுக்கடன் மீது செலுத்தப்படும் வட்டி ரூ.1.50 லட்சம் வரை உங்களது மொத்த வருமானத்திலிருந்து குறைக்கப்படுகிறது. அதாவது, அந்த ரூ.1.50 லட்சத்திற்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை. இன்னும் விளக்கமாக சொன்னால், வீட்டுக்கடன் மீது செலுத்தப்படும் வட்டி `வீடு மூலம் ஈட்டப்பட்ட வருவாய்' என்ற தலைப்பின் கீழ் செலவாக கருதப்பட்டு அது மொத்த வருமானத்திலிருந்து குறைக்கப்படுகிறது.

அதே சமயம், குறிப்பிட்ட வீட்டின் மூலம் வாடகை கிடைப்பதாக இருந்தால் அது வருமானமாக கருதப்படும். அதாவது, வீட்டுக்கடனுக்காக செலுத்திய வட்டியிலிருந்து வாடகை வருவாய் குறைக்கப்பட்டு மீதமுள்ள வட்டி தொகைக்கே வருமான வரி சலுகை கிடைக்கும்.

நீங்கள் எத்தனை வீட்டுக்கடனுக்காக வட்டியை செலுத்தினாலும் சரி மொத்தத்தில் ரூ. 1.50 லட்சம் அளவிற்கு தான் சலுகை பெறமுடியும்.வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 24 மேலும் ஒரு சலுகையை வழங்குகிறது. அதாவது, வீட்டுக்கடன் மீதான வட்டிக்குரிய வரி சலுகையை பெற நீங்கள் அந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.

முன்னதாக செலுத்தப்படும் வட்டி

கடன் பெற்று கட்டப்படும் வீடுகளின் கட்டுமானத்தின் வெவ்வேறு நிலைகளில் வங்கிகள் கடனை கொஞ்சம் கொஞ்சமாகவே வழங்கும். அப்போதெல்லாம், அசலுக்கான இ.எம்.ஐ-யை வங்கிகள் வசூலிப்பதில்லை. மாறாக, வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியை இ.எம்.ஐ. வாயிலாக உங்களிடமிருந்து வங்கிகள் வசூலிக்கும்.

அவ்வாறு நீங்கள் செலுத்தும் வட்டியை எந்த நிதியாண்டில் செலுத்தினீர்களோ, அதே நிதியாண்டில் அதற்கான வருமான வரி சலுகையை பெற முடியாது. ஆனால், எந்த நிதியாண்டில் வீடு கட்டி முடிக்கப்படுகிறதோ அதிலிருந்து ஐந்து நிதியாண்டுகளுக்கு ஐந்து தவணைகளாக அந்த வட்டிக்கு வரி விலக்கு பெற முடியும்.

உதாரணமாக, நீங்கள் 2003-04, 2004-05 மற்றும் 2005-06 ஆகிய வருடங்களில் முறையே ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் வட்டிக்கான இ.எம்.ஐ. மட்டும் செலுத்தியதாக வைத்துக்கொள்வோம். ஆக மொத்தம், ரூ. 80 ஆயிரத்தை வட்டியாக மூன்றாண்டுகளில் நீங்கள் செலுத்தியுள்ளீர்கள்.

ஆனால், வீடு 2006-07 ஆம் வருடத்தில் தான் கட்டி முடிக்கப்படுகிறது என்றால், இந்த ரூ. 80 ஆயிரத்துக்கான வரிச்சலுகையை 2006-07 ஆம் ஆண்டு தொடங்கி 2010-11 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் என்ற அளவில் வரி சலுகை பெறலாம்.

ஒருவேளை வாங்கப்படுகிற வீடு இரண்டு பேர் பெயர்களில் இருந்தால்?

இருவரும் இ.எம்.ஐ.-யை என்ன விகிதத்தில் பகிர்ந்து செலுத்துகிறார்களோ அதே விகிதத்தில் தான் சலுகையை பெற இயலும்.

உதாரணமாக, இருவர் சேர்ந்து வாங்கும் வீட்டிற்கான இ.எம்.ஐ. யில் 40 சதவீதத்தை ஒருவரும் 60 சதவீதத்தை மற்றொருவரும் பகிர்ந்து செலுத்துவதாக வைத்துக்கொண்டால் வருமான வரி சலுகையும் அதே 40:60 என்ற விகித அடிப்படையில் தான் கிடைக்கும்.

வருமானவரிச்சலுகை தொடர்பான கூடுதல் தகவல்களை வருமான வரித்துறையின் இணைய தளத்தின் http://www.incometaxindia.gov.in மூலம் அறிந்து கொள்ளலாம்.

Save the Lungs: நுரையீரலை பாதுகாப்பது அவசியம்

0 comments
நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது.காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம்.

நம் சுவாசத்தை சீராக வைத்திருக்கும் நுரையீரலில், நோய் தாக்காமல் இருக்க, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.நுரையீரல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, நிமோனியா, காசநோய், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் ஏற்படுகிறது. இத்துடன் பஞ்சு, குவாரி, சிமென்ட் உள்ளிட்ட தொழிலில் பணிபுரிவோருக்கும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் தாக்குகின்றன.

நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க நுரையீரலை 
பாதுகாப்பது மிக மிக முக்கியம்.

நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகள்:

இருமல், சளி, மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமலுடன் ரத்தம் வருதல், இளைப்பு போன்றவை நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகளாகும்.

இரண்டு வாரங்கள் தொடர்ந்து இருமல் இருந்தால் காசநோய் அல்லது ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறான நிலையில், மருத்துவரை அணுகி சளி மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; எவ்வித நோய் தாக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை தொடரவேண்டும்.

பனிக்காலத்தில் வறண்ட காற்றை சுவாசிக்கும்போது நுரையீரல் பாதிக்கப்படும் என்பதால், இக்காலங்களில் வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. பஞ்சு, குவாரி, சிமென்ட் உள்ளிட்ட தூசி நிறைந்த இடங்களில் பணியாற்றும் போது, முகத்துக்கு, "மாஸ்க்' அணிந்து கொள்ள வேண்டும்.

சிகிச்சை முறைகள்

நுரையீரல் பாதிப்புக்கு, இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பரிசோதனையில், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், ரிலீவர் மருந்தும், பாதிப்பு முற்றிய நிலையில் இருந்தால், "கன்ட்ரோலர்' மருந்தும் அளிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரைப்படி பயன்படுத்த வேண்டும்; பரிசோதிக்கும் மருத்துவருக்குத்தான் நோயின் தன்மை மற்றும் அதன் தாக்கத்தின் அளவு தெரியும்.

குளிர்காலத்தில் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில், 50 சதவீதம் பேர், சுவாசம் மற்றும் நுரையீரல் சார்ந்த பாதிப்புகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளவே வருகின்றனர். சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலில் முக்கியமாக குளிர் மற்றும் பனி காலங்களில், சாதாரண அலர்ஜியான, சளி முதல் நிமோனியா காய்ச்சல் வரை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே நுரையீரல் பாதிப்புள்ளவர்களுக்கு, இக்காலங்களில் அந்நோயின் தன்மை தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது.
அலர்ஜி என்பது ஒவ்வாமையாகும். இது ஒருவருக்கு பலவிதமாக வெளிப்படுகிறது. முக்கியமாக, இந்த ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சுவாச குழாய் சம்பந்தமான பிரச்னை அதிகம் காணப்படுகிறது. குளிர்ந்த காற்று, தூசு ஆகியவற்றை சுவாசிக்கும்போது அவர்களுக்கு தும்மல், மூக்கில் நீர் வழிதல், கண்களில் அரிப்பு, மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. இது "அலர்ஜிக் ரைனைட்டிஸ்' என்றழைக்கப்படுகிறது. இந்த பிரச்னைகளுக்கு, ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை தற்காலிகமாகவோ அல்லது நோயின் தன்மைக்கேற்ப தொடர்ச்சியாகவோ கொடுத்து, கட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை மாத்திரைகள் மூலமோ அல்லது,"ஸ்பிரே' மருந்து வகையிலோ மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பிரச்னை வரும்முன் காக்கும் வகையில், ஒவ்வொருவரும் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள், "ஹெல்மெட்' அணிந்து செல்வதன் மூலம், இந்நோயின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது.ஒவ்வாமையின் மற்றொரு வெளிப்பாடு காசநோய் மற்றும் ஆஸ்துமா. காசநோய் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் நோயின் தாக்கம் அதிகமாக வாய்ப்புள்ளது. இவர்களுக்கு, வறட்டு இருமல் (குறிப்பாக இரவில்), மூச்சிரைப்பு, நெஞ்சில் பாரம் போன்ற தொந்தரவுகள் அதிகம் காணப்படும்; குளிர்காலத்தில் காற்றில் நிலவும் வறண்ட ஈரப்பதம், வைரஸ் இன்பெக்ஷன்(புளூ காய்ச்சல்)போன்றவையே இதற்கு முக்கிய காரணம்.

ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குளிர்காலத்தில் நோயின் தன்மை தீவிரமாகும் முன்பே, மருத்துவரை அணுகி நோய் வராமல் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து, "இன்ஹேலர்' பயன்படுத்த வேண்டும்.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்படி மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும். காசநோய் தொற்றுநோய் என்பதால் இந்நோய் பாதிப்புக்குள்ளானோர் இருமல், தும்மல் வரும்போது துணியால் வாய் மற்றும் மூக்கு பகுதியை மறைத்துக் கொண்டால், அருகில் இருப்பவருக்கு பரவாமல் தடுக்கலாம்.

"இன்ஹேலர்' எடுத்துக் கொள்வதில், மக்களிடையே தயக்கமும், சந்தேகமும் உள்ளது. முக்கியமாக, இவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படுமோ அல்லது இந்த மருந்துக்கு அடிமையாகி விடுவோமோ என்ற அச்சமும் தயக்கமும் உள்ளது."இன்ஹேலரால்' எவ்வித பக்கவிளைவும் வராது.நுரையீரல் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் முதல் அனைத்து வயதுடையவர்களும் சர்க்கரை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் குளிர்காலம் துவங்கும்முன்பே புளூ தடுப்பூசி எடுத்துக் கொண்டால், நிமோனியா என்ற நுரையீரல் நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Thanks - டாக்டர். எஸ்.கீர்த்திவாசன்,
நுரையீரல் சிகிச்சைத் துறைத் தலைவர்(பொறுப்பு),
கோவை அரசு மருத்துவமனை.

CAT 2011 Results from 11.01.2012, Announced at official CAT 2011 Results Page

0 comments
CAT 2011 Results
CAT 2011 Results for the studnets who took the entrance exams for all the indian institute of management will be announced at the official CAT 2011 Results page from 11.01.2012.

Once announced the results will be available online at the CAT 2011 Results page at http://www.catiim.in/ , this results page will also display the necessary information for the other steps involved in the process of applying for the MBA courses in IIM's and other affliated institutions who accepts the cat score for the admission to MBA and PGDM courses.

Website for CAT 2011 Results

http://www.catiim.in/

Expected date of release of CAT 2011 Results

11.01.2012

Complete list of IIM's Which Accepts CAT 2011 Results



S.NNameShort Code
1Indian Institute of Management CalcuttaIIM-C
2Indian Institute of Management AhmedabadIIM-A
3Indian Institute of Management BangaloreIIMB
4Indian Institute of Management LucknowIIML
5Indian Institute of Management KozhikodeIIMK
6Indian Institute of Management IndoreIIMI
7Indian Institute of Management ShillongIIMS
8Indian Institute of Management RohtakIIM-R
9Indian Institute of Management RanchiIIM-R
10Indian Institute of Management RaipurIIM-Rp
11Indian Institute of Management TiruchirappalliIIMT
12Indian Institute of Management UdaipurIIMU
13Indian Institute of Management KashipurIIMkpv

More details, links and updates about results will be puplished here as soon as the CAT 2011 Results announced.

MIdas is about to Go: பறிபோகும் மிடாஸ்?

0 comments
Midas to Go
'முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் படப்பை பகுதியில் அமைக்கப்பட்ட மதுபான ஆலைதான் மிடாஸ். அதன் நிர்வாகப் பொறுப்பு வெளிப் படையாகவே சசிகலா வட்டாரத்துக்குச் சொந்த மானதாக அமைக்கப்பட்டது. இந்த ஆலையில் தயாராகும் மதுபானங்களைத்தான் மதுக்கடைகளில் விற்க வேண்டும் என்பது ஊர் அறிந்த ரகசியம். அதுவரை தனியார் வசம் இருந்த கடைகளின் சில்லறை விற்பனையையும் அரசாங்கமே எடுத்தது. 'டாஸ்மாக்’ கடைகளாக அவை பச்சை வண்ணத்தில் மின்ன ஆரம்பித்தன. தமிழகத்தில் புதிதாக மதுபான ஆலைக்கு அனுமதி தருவதில் இருந்த ஏராளமான விதிமுறைகளைத் தளர்த்தி, மிடாஸுக்குப் பாதை திறந்தார்கள். 'மிடாஸ் சரக்குகள்தான் அதிகம் விற்பனை ஆகின்றன’ என்கிற அளவுக்கு புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வளமும் நலமுமாக அந்த நிறுவனம் வளர்ந்து செழித்தது. ஜெயலலிதா போய் கருணாநிதி வந்தார். 'அரசாங்கமே சாராயம் விற்பதா?’ என்று கேட்டவர், தனது ஆட்சியிலும் அதையே தொடர்ந்தார். அதைவிட ஆச்சர்யமாக, மிடாஸ் கம்பெனியில் இருந்து 'ஓரவஞ்சனை’ இல்லாமல் கருணாநிதியும் சரக்குகள் வாங்கினார். எனவே, மிடாஸ் நிறுவனத்தின் வருமானத்துக்கு எந்தத் தடங்கலும் இல்லை. ஆட்சி மாறினாலும் வரத்து குறையவில்லை. ஆனால், அதற்கு இப்போது சிக்கல் வரப்போவதாகச் சொல்கிறார்கள்.''

''ஆபரேஷன் சசிகலா ப்ராஜெக்ட்டின் அடுத்த ஆக்ஷன் இதுதானா?''

''சசிகலா குடும்பத்துக்குப் பணம் வரும் பாதையை அடைக்கச் சிலர் திட்டம் இடுகிறார்கள். சொத்துக்கள், இடம், பணம் என நிறைய வைத்து இருந்தாலும் தொடர்ந்து பணம் கொட்டும் இடமாக இருப்பது இந்த மிடாஸ் ஆலைதானாம். அதை முடக்கிவிட்டால், அவர்களின் அடுத்த கட்ட நகர்வுகளை முழுமையாக முடக்கி விடலாம் என்பது திட்டமாம்!:''

''அது சாத்தியமா?''

''சாத்தியமா, இல்லையா என்பதற்கான பேச்சுக் கள் தான் இப்போது அதிகாரிகள் மட்டத்தில் மெள்ளத் துளிர்த்து இருக்கிறது. 'மிடாஸ் ஆலையை அரசாங்கமே எடுத்துக்கொண்டால் என்ன?’ என்ற ஒற்றைக் கேள்வியில்தான் இந்த விவாதம் தொடங்கியது. 'தமிழ்நாட்டில் இருக்கும் மதுபான ஆலைகள் அனைத்துமே தனியாருக்குச் சொந்த மானவை. அரசாங்கம் இதுவரை அந்தக் காரியத்தைச் செய்யவில்லை. இப்போது மிடாஸை எடுத்தால் அதற்கென ஒரு கார்ப்பரேஷனை உருவாக்கித்தான் நடத்த வேண்டும். அல்லது தனி அதிகாரியை நியமித்தும் நடத்தலாம்’ என்கிறார்கள். அல்லது மிடாஸ் நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தி வேறு ஒரு நிறுவனத்திடம் விற்க வைக்கவும் முயற்சிப்பார்கள் என்கிறார்கள். மொத்தத்தில் சசிகலா உறவு வட்டாரத்தில் அது இயங்கக் கூடாது என்பது திட்டமாம். இது சசிகலாவின் சொந்தங்களுக்கு கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. 'ஏற்கெனவே பல இடங்களில் ரெய்டு என்ற பெயரால் அத்துமீறி நடந்துகொண்டார்கள். இப்போது நம்முடைய வாழ்க்கையையே அழிக்கப் பார்க்கிறார்கள்’ என்று புலம்பல்கள் கேட்க ஆரம்பித்து உள்ளன.''

''அதிகாரிகள் தரப்பு ரியாக்ஷன் என்னவாம்?’

''மிடாஸ் சாராய ஆலையை முடக்கச் சொல்லி முதலில் அதிகாரிகளிடம் கறார் காட்டப்பட்டதாம். ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு மிடாஸ் சரக்குகள் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்படுவதால், அதற்கான காலஅவகாசம் அதிகமாகும் என சொல்லப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வழக்கறிஞர்களோடு ஆலோசித்த மேலிடம்,

'மிடாஸ் நிறுவனத்தை அரசு நிறுவனமாக ஏற்று நடத்தும் நடைமுறைகளைச் செய்யலாம்’ என்று சொன்னதாம். 'இதனால் அரசாங்கத்துக்குக் கெட்ட பெயர் ஏற்படுமே?’ எனச் சிலர் தயக்கமாகச் சொல்ல, 'அந்த உறவுகளுக்குப் பணம் காய்க்கும் மரமாக இருக்கும் மிடாஸ் நிறுவனத்தைப் பறித்தால்தான், அவர்கள் வேறு எந்தக் குதர்க்க வேலைகளிலும் ஈடுபடாமல் இருப்பார்கள்!’ எனப் பதில் சொல்லப்பட்டதாம். எனவே, அடுத்த கட்ட அதிரடிகள் இன்னும் சில நாட்களில் இருக்கலாம் என்கிறார்கள். கட்சியைவிட்டு நீக்கப்பட்ட மோகன் -தான் அதன் அத்தனை நிர்வாகங்களையும் பார்த்தார். கடந்த ஒரு வாரமாக அவரும் அந்தக் கம்பெனிப் பக்கமாக எட்டிப்பார்க்கவில்லையாம். நிர்வாக ரீதியான விஷயங்களை கார்த்திகேயன் என்பவர் பார்க்கிறாராம்.!''

''பார்ப்போம்!''

''மன்னார்குடி உறவு வட்டாரங்களிலேயே மிகுந்த நடுக்கத்தில் கிடப்பவர் கோவை ராவணன்தான். ஜாதக சம்பிரதாயங்களில் ரொம்பவே ஆர்வமாக இருந்த ராவணன், சில வாரங்களுக்கு முன்பு ஒரு சாமியாரை சந்தித்து இருக்கிறார். 'நாடாளும் யோகம் உமக்கு’ என வாக்குச் சொன்ன சாமியார் ஒரு மோதிரத்தையும் அவருக்கு அணிவித்து, 'பெரிய பதவியில் அமர்ந்த பின்னர் என்னை வந்து பார்த்து நன்றி சொல்’ என்றாராம். மோதிரத்தை மாட்டிக்கொண்டு வந்த அடுத்த இரண்டாவது நாளிலேயே அம்மாவின் அதிரடிகள் பாய... ராவணன் நொந்து போனாராம். 'இதனாலதான் எல்லா சிக்கலும்’ எனச் சொல்லி, சாமியார் அணிவித்த மோதிரத்தைக் கழற்றி வீசிய ராவணன் இப்போது நாட் ரீச் ஏரியாவில்!''

''இவர்கள் செய்த தவறுகளுக்கு அந்தச் சாமியார் என்ன செய்வார் பாவம்?''

''உறவு வட்டாரத்தில் ராவணனை 'ராணா’ எனச் சுருக்கி மரியாதையாக அழைப்பார்களாம். 'ராணான்னா அது ரஜினி இல்லண்ணே... நீங்க தாண்ணே’ என உசுப்பேற்றியே ராவணனை ஆனந்தத்தில் மிதக்க வைத்தனர் அவருடைய அடிவருடிகள். 'அண்ணன் ஆரம்பத்தில் முற்போக்குக் கொள்கை கொண்டவராகத்தான் இருந்தார். ஆனால், கார்டன் பக்கம் வந்ததும்தான் அவருக்கும் ஜோசியம், ஜாதகம்கிற வியாதி எல்லாம் தொத்திக்கிச்சு. அண்ணன் அமைதியா இருந்தாலும் அவருடைய உதவியாளரான மோகன் போட்ட ஆட்டத்துக்கு அளவே இல்லை. அண்ணன் பேரைச் சொல்லி பல அமைச்சர்களுக்கும் போன் போட்டு, 'வா... போ’ன்னு அவர் பண்ணிய அட்டகாசங்கள் அதிரடி ரகம். ஆனா, இப்பவும் அண்ணன் அந்த மோகனின் தவறுகளை உணராமல், அந்தச் சாமியாரையே திட்டிக்கிட்டு இருக்கார்!’ என்கிறார்கள் கோவை புள்ளிகள் சிலர். இதற்கிடையில், 'இப்பவும் சொல்றேன்... அவர் பேருக்கு நாடாளும் யோகம் இருக்கு’ என அந்த சாமியார் அள்ளிவிட, கோபத்தில் நையப்புடைத்திருக்கிறது உறவுத் தரப்பு.''

''ஏற்கெனவே மன்னார்குடி சாமியார் ஒருவர் அடி வாங்கினார். இப்போது இவரா?''

''போயஸ் கார்டனிலும் அமைச்சர்களின் பாதுகாவலர்களிலும் பல அதிரடி மாற்றங்களை ஜெ. செய்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அமைச்சரவை மாற்றம் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது என்பதையும் உமக்குச் சொல்லி இருந்தேன். ஆனால், மந்திரிகள்தான் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள்.''

''இருக்கத்தானே செய்யும்!''

''நீக்கப்பட்ட பாதுகாவலர்களுக்குப் பதிலாக புதியவர்கள் வந்துவிட்டார்களாம். இவர்களில் பலரும் ஆஃப் தி ரெக்கார்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் தூங்கும் நேரத்தைத் தவிர்த்து இதர நேரங்களில் அவர்களுக்கு அருகிலேயே அந்த ஆட்கள் இருக்கிறார்கள். யாரைச் சந்திக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்கிற விவரங்களை எல்லாம் கார்டனுக்கு தெளிவாகச் சொல்லத்தான் இந்த ஏற்பாடாம். ஓர் அமைச்சருக்கு ஓர் உதவியாளர் என மர்மமாகத் தொடரும் இந்த ஆட்களைப் பார்த்துத்தான் அமைச்சர்கள் ஆடிப் போயிருக்கிறார்கள்.''

''ஜெ.ஆட்சி என்றாலே மந்திரிகளுக்கு நித்ய கண்டம் பூர்ண ஆயுசுதானே?''

''அமைச்சரவையில் இருந்து கோகுல இந்திரா, பச்சைமால், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் மூவரும் நீக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு மாற்றாக கு.ப.கிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், பொள்ளாச்சி ஜெயராமன், அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட இருப்பதாகவும், கடந்த புதன்கிழமை, கோட்டை வட்டாரத்தில் வதந்தி பரவியது. இந்தச் செய்தி பரவும்போது ஆலங்குடியில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் இருந்தார் கு.ப.கிருஷ்ணன். அவருக்குப் பலரும் வாழ்த்துச் சொல்லத் தொடங்கி விட்டார்கள். ஒரு தொண்டர் உற்சாகத்தில், 'அம்மாவின் கருணைப் பார்வையால் அமைச்சராகி இருக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்’ எனச் சொல்லி மேடையிலேயே பொன்னாடை போர்த்தினாராம். இதற்கிடையில் நயினார் நாகேந்திரனின் ஆட்கள் வெடி வெடித்துக் கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். 'தயவுபண்ணி இப்படிப் பண்ணாதீங்க... அமைச்சரா ஆனாலும் சரி, ஆகலைன்னாலும் சரி... தயவுபண்ணி அமைதியா இருங்க’ எனக் கதறாத குறையாகத் தன் ஆதரவாளர்களிடம் புலம்பி இருக்கிறார் நயினார். அந்த அளவுக்கு உள்காய்ச்சல் அதிகம்!''

''கார்டன் நிலவரம்?''

''மூதாட்டி ஒருவர் கார்டனில் வலம் வர ஆரம்பித்து உள்ளாராம். முதல்வரின் சித்தி என்று இவருக்கு அடையாளம் சொல்கிறார்கள். அதேபோல் குஜராத் மாநிலத்தில் இருந்து சில அதிகாரிகள் டெபுட்டேஷனில் தமிழகம் வரப்போகிறார்கள். முக்கியத் திட்டங்களுக்கான ஆலோசகர்களாக இவர்கள் இருப்பார்களாம். தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை முதல்வர் நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் ஆவாராம். ஒரு வாரமாக, அரசு அறிவிப்புகள் அதிகமாக வருவதைப் பார்த்தீரா? 'சசிகலா குடும்பத்தின் பிரிவால் முதல்வர் எந்த சோர்வுக்கும் ஆளாகவில்லை. சுறுசுறுப்பாக செயல்படுகிறார்’ என்பதைக் காட்டுவதற்கான மூவ்தான் இவை என்றும் சொல்கிறார்கள்''

Auto Expo 2012: 11th Auto Expo will begin from 7 January for 2012

0 comments
Auto Expo 2012
Auto Expo 2012  which is about to start in delhi, will be a event which show cases the automobiles in indian auto sector, Auto Expo 2012 will this year show cases more than 50 launches from various manufacturers.

High lights of Auto Expo 2012

Largest Automotive show in India and Auto Expo 2012 is the only complete Automotive show in World Special focus on Green Technologies & Environment,Around 1500 participants from 23 countries.

Big Launches in Auto Expo 2012

4WD launches from Peugeot, Mini and Ssangyong are the expected four wheel drive launches, Triumph, Vespa two-wheelers launch for the first time and BharatBenz and DAF trucks or commercial vehicles launch is also expected in this Auto Expo 2012 .

Date, Times and Venue of Auto Expo 2012


Location : Pragadi Maiden, New delhi, India
Date : January 7 - January 11 2012

Stay with us for more Auto Expo 2012 updates, launches and images.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf