Indian's Like Unlimited Internet: அளவற்ற இன்டர்நெட் விரும்பும் இந்தியர்கள்

0 comments
இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்திய அமைப்பு, நம் மக்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாத, அளவற்ற இன்டர்நெட் இணைப்பு தரும் கட்டண திட்டங்களையே விரும்புகிறார்கள் என்று அறிவித்துள்ளது. ஏர்னஸ்ட் அண்ட் யங் என்னும் இந்த அமைப்பு இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா உட்பட 12 நாடுகளில் இத்தகைய ஆய்வுக் கணக்கெடுப்பினை மேற்கொண்டது. மாறாத ஒரே மாதக் கட்டணத்தில் அளவற்ற டேட்டா தரவிறக்கம் செய்திடும் திட்டங்களையே தங்கள் மொபைல் போன்களில் மேற்கொள்ள 54% மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கணக்கெடுப்பில் கலந்து கொண்டோரில், மூன்றில் ஒருவர் டவுண்லோட் செய்யப்படும் டேட்டா அடிப்படையிலான திட்டங்களைப் புரிந்து கொள்ள இயலவில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் 31% பேர், இந்த திட்டங்களை நன்கு புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 16% பேர், பிரிட்டன் மற்றும் ரஷ்யாவில் 24% தான் இதனைப் புரிந்து கொண்டதாகக் கூறினார்கள். 
மொபைல் வழி இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள், மக்களிடம் தாங்கள் தரும் இணைப்பு எந்த அளவிற்குப் பாதுகாப் 
பானது என்றும், அதற்குத் தாங்கள் எடுக்கும் நடவடிக்கை குறித்தும் மக்களிடம் தெரிவிப்பது நல்லது என்று இந்த கணிப்பை நடத்திய நிறுவனம் அறிவித்துள்ளது. 
இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அதிகம் செலவழிப்போர், 3ஜி பயன்படுத்துவோர் மட்டுமே எனவும் அறிவித்துள்ளது. ஆனால், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு என்றும் தெரிவித்துள்ளது.

இயற்கையின் வரம் – தென்னை!

0 comments
நம் வாழ்வில் பிரிக்க முடியாத வகையில் பிணைந்துவிட்ட மரம், தென்னை. 
தென்னை எந்த நாட்டுக்கு உரியது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்தியாவில் மிகப் பழங்காலந்தொட்டே தென்னை இருந்து வருகிறது என்ற கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். 
மலேசிய பசிபிக் பெருங்கடலின் மேற்கிலும், மத்தியிலும் உள்ள தீவுகள், கிழக்குத் தீவுக் கூட்டம், இந்தியாவின் கரையோரப் பகுதிகள் ஆகியவற்றில் தென்னை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 80 லட்சம் ஏக்கரில் இது பயிராகிறது. ஆண்டு விளைச்சல் 14 ஆயிரம் கோடி தேங்காய்கள். 
பிலிப்பைன்ஸ் தீவுகளே தேங்காய் விளையும் பகுதிகளில் முதன்மையாகத் திகழ்கின்றன. அங்கு 20 லட்சம் ஏக்கரில் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு 300 கோடி தேங்காய்கள் விளைவிக்கப்படுகின்றன. பரப்பளவைப் பொறுத்தவரை இது உலக அளவில் மூன்றாவது. விளைச்சலில் இரண்டாவது. 
தென்னை, உயரமான தாவரம். நெட்டைத் தென்னை 70 முதல் 100 ஆண்டுகள் வரை இருக்கக்கூடியது. இது நடப்பட்டு 7-வது ஆண்டில் இருந்து 10-வது ஆண்டுக்குள் காய்க்கத் தொடங்கும். 
குட்டை வகைகள், நட்டு 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் காய்க்கத் தொடங்கும். இவற்றின் ஆயுள் 30- 35 ஆண்டுகள். 
செழிப்பான வண்டலோடு ஓரளவுக்குப் பெருமணல் கலந்த நல்ல மண்ணில் தென்னை மிகவும் செழிப்பாக வளரும். 
சரளை மண்ணிலும், குறுமண்ணிலும், கருங்களியிலும், மணற்பாங்கான இடத்திலும் நல்ல பயன் தரும் வகையில் பயிர் செய்யலாம். அந்த இடங்கள் கட்டாந்தரையாக இல்லாமலும், தண்ணீர் தேங்காமல் வடிந்து போகக் கூடியவையாகவும் இருப்பது அவசியம். 
குட்டைத் தென்னை வகைகள் குறுகிய காலத்துக்குள் பலன் தரத் தொடங்கினாலும், அவற்றில் தரமான தேங்காய் உண்டாவதில்லை. கொப்பரையும் கிடைப்பதில்லை. இவற்றை நோய்களும், பூச்சிகளும் தொற்றும் அபாயமும் உண்டு. 
இந்தக் குறைபாடுகளால், குட்டைத் தென்னை தோப்பாக வளர்க்க ஏற்றதல்ல என்று கருதப்படுகிறது. இருந்தபோதும் கவர்ச்சியான பச்சைக் கிச்சிலி, சிவப்புநிறக் காய்களின் அழகுக்காகவும், இளநீருக் காகவும் பயிர் செய்யப்படுகிறது. 
கொச்சி, சீனா, அந்தமான், லட்சத் தீவுகள், பிலிப்பைன்ஸ் தீவுகள், சிங்கப்பூர், ஜாவா, மலேசியா போன்ற இடங்களில் காணப்படும் தென்னைகள் இயல்பாகவே நல்ல பொருளாதாரப் பலன் அளிக்கக்கூடியவை. 
அந்தமான் பெருங்காய், கப்படம் என்னும் வகைகளில் உருவாகும் தேங்காய்கள் மிகப் பெரியவை. லட்சத்தீவில் பயிராகும் தேங்காய் மிகச் சிறியதாக இருக்கும். 
காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நெட்டை இனம், குட்டை இனம் இரண்டையும் இணைத்து புதிய வகை உருவாக்கப்பட்டது. இது அதிக எண்ணிக்கையில் நல்ல கொப்பரைகளோடு விரைவில் காய்க்கும் தன்மை கொண்டது. 
இந்தியாவின் மேற்குக் கரைப் பகுதியில் 150 அங்குலத்துக்கு மேல் மழை பெய்யும் பகுதியிலும் தென்னை வளர்கிறது, கர்நாடகத்திலும், பிலிப்பைன்சில் 40 அங்குலத்துக்குக் குறைவாக மழை பெய்யும் சில பகுதிகளிலும் தென்னை வளர்கிறது. 
தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்குப் பயன்படுகிறது. காயில் உள்ள பருப்பு பச்சையாக இருக்கும்போது சமையலுக்குப் பயன்படுகிறது. காய்ந்தபின் கொப்பரையாக மாறி, எண்ணை கொடுக்கிறது. தேங்காய் எண்ணையின் பயன்கள் பல. குளிர்ச்சியும், சத்தும் தரும் பானமாக, குளுக்கோஸ் நிறைந்ததாக இளநீர் உள்ளது. 
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக, மனிதனுக்கு இயற்கையின் வரம், தென்னை.

என்சிசி சான்றிதழ் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை

0 comments

என்சிசி சிறப்பு நுழைவு திட்டத்தின் மூலம் ஏப்ரல் 2013 ஷார்ட் சர்வீஸ் கமிஷனின் 33வது கோர்ஸில் சேர (எஸ்எஸ்சி- நான்டெக்னிக்கல்), என்சிசி சி சான்றிதழ் பெற்ற தகுதி யானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த இடங்கள்: 58 (ஆண்-50, பெண்-8). 10 சதவீத காலியிடங்கள் போர்க்களத்தில் காய  மடைந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. வயது: 19 லிருந்து 25க்குள்.


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். என்சிசி சீனியர் டிவிஷனில் குறைந்த பட்சம் 2 வருடங்கள் சேவையாற்றி என்சிசி 'சி' சான்றிதழுக் கான தேர்வில் 'பி' கிரேடு அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, குழுத் தேர்வு, உளவியல் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


அவர்களுக்கு சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகடமியில் 11 மாதங்கள் பயிற்சியளிக்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடித்தவர்கள் ராணுவத்தில் லெப்டினன்ட் அந்தஸ்தில் அமர்த்தப்படு வார்கள். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகிலுள்ள OC, NCC Unitக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.1.

Employment Opportunities

0 comments

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 728 காலியிடங்கள்
 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிளார்க் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி: கிளார்க் - 728
 
கல்வித் தகுதி: 65 சதவிகிதத் தேர்ச்சியுடன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடவே கிளார்க் பணிக்காக ஐ.பி.பி.எஸ். நடத்திய பொதுத் தேர்வில் பொதுப் பிரிவினர்கள் 120 மதிப்பெண்களும், எஸ்.சி./ எஸ்.டி./ ஓ.பி.சி. பிரிவினர்கள் 105 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

 வயது: 28க்குள்

 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.07.2012
 
மேலும் விவரங்களுக்கு: www.iob.in 

ராஜா ரமணா சென்டரில் டிரெய்னி பணியிடங்கள்
 
ராஜா ரமணா சென்டரில் டிரெய்னி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி: டிரெய்னி - 21
 
கல்வித் தகுதி: இயற்பியல்/ கணிதம்/ வேதியியல்/ எலெக்ட்ரானிக்ஸ்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.எஸ்சி. பட்டம் அல்லது எலெக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல்/ இன்ஸ்ட்ரூமெண்டேஷன்/ எலெக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 வயது: 24க்குள்

 விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 10.08.2012

 மேலும் விவரங்களுக்கு: www.cat.gov.in 

எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியிடங்கள்
 
எல்லைப் பாதுகாப்புப் படையில் ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி: அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் - 100
 
கல்வித் தகுதி: ரேடியோ மற்றும் டி.வி. டெக்னாலஜி/ எலெக்ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேஷன்/ கம்ப்யூட்டர்/ எலெக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 வயது: 25க்குள்

 பணி: ஹெட் கான்ஸ்டபிள் - 959
 
கல்வித் தகுதி: ரேடியோ மற்றும் டி.வி./ எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 வயது: 23க்குள்

 விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.07.2012

 மேலும் விவரங்களுக்கு: www.bsf.nic.in
 

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வு

 Tamilnadu Transport Subordinate Serviceல் மோட்டார் வாகன ஆய்வாளர் பதவியை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது.

 பணி: மோட்டார் வாகன ஆய்வாளர் - 17

 கல்வித் தகுதி: ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கூடவே ஆட்டோமொபைல் பட்டறையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் பணியில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 வயது: 32க்குள்

 விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 25.07.2012

 மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in 

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் பணியிடங்கள்
 
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி: கான்ஸ்டபிள் - 34
 
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

 வயது: 23க்குள்

 விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.07.2012

 மேலும் விவரங்களுக்கு: www.cisf.nic.in

பிளஸ் டூ படித்தவர்கள் ஐஐஎம்ல் படிக்க வாய்ப்பு!

1 comments
இந்தூரில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்தமாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
 
பட்டப் படிப்பு படித்த பிறகு சட்டப்படிப்பு என்ற காலம் மாறி ஐந்து ஆண்டு சட்டப்படிப்பில் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்த சிஏ, ஐசிடபிள்யூஏ, ஏசிஎஸ் போன்ற படிப்புகளில் தற்போது பிளஸ் டூ முடித்த மாணவர்களும் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கான ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக்....இப்படி பல்வேறு ஒருங்கிணைந்த படிப்புகள் வந்து விட்டன. இதேபோல ஒருங்கிணைந்த ஆசிரியர் பட்டப் படிப்புகளும் வரத் தொடங்கி விட்டன. ஆர்வமிக்க, திறமையான மாணவர்களை இளநிலைப் பட்ட நிலையிலேயே ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவுகளின் பக்கம் ஈர்க்கும் முயற்சியின் வெளிப்பாடுதான் இது. இந்த நிலையில், பிளஸ் டூ முடித்த மாணவர்களும் நேரடியாக ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் ஓருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பைப் படிக்கும் வாய்ப்பை இந்தூரில் உள்ள ஐஐஎம் வழங்குகிறது. எதிர்காலத்தில் சிறந்த நிர்வாகிகளாக விரும்பும் மாணவர்களை, பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற நிலையிலிருந்தே தயார்படுத்துவதற்காக இந்தப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தியரிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு செயல்முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்கிறார்கள்.
 
இந்தப் படிப்பில் சேர என்ன தகுதி வேண்டும்?
 பிளஸ் டூ படித்த மாணவர்கள் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள். இந்தப் படிப்பில் சேர விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவு மாணவர்கள் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். சேட்- 1 (SAT-1) தேர்வு எழுதிய மாணவர்கள் 2,400க்கு1,600க்கு மேல் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். சேட் தேர்வு எழுதிய மாணவர்கள் அதில் 1,475க்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து இந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி வரை பெறப்பட்ட சேட்-1 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே செல்லுபடியாகும். இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவு மற்றும் கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவு மாணவர்கள், ஜூன் 30ம் தேதி நிலவரப்படி 20 வயதுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 22 வயதுக்கு மேற்படக்கூடாது.
 
இந்தப் படிப்புக்கு மாணவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
 அட்மிஷன் இரண்டு கட்டங்களாக இருக்கும். பிளஸ் டூ மதிப்பெண்கள்  அல்லது சேட்-1 தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியுடைய மாணவர்கள் திறனறித் தேர்வுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள். அதாவது, கொல்கத்தா, புதுதில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், இந்தூர் ஆகிய இடங்களில் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி திறனறித் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் குவான்டிடேட்டிவ் எபிலிட்டி, வெர்பல் எபிலிட்டி ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். அப்ஜெக்ட்டிவ் முறையில் 100 கேள்விகள் கேட்கப்படும். இரண்டு மணி நேரத்துக்குள் இதற்கு விடையளிக்க வேண்டும். இத்தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. இத்தேர்வு எழுதிய மாணவர்களிலிருந்து தகுதி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து 3ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும். திறனறித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்களும் நேர்காணலுக்கு 40 சதவீத மதிப்பெண்களும் என்ற அடிப்படையில் மாணவர்களின் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதியுடைய மாணவர்கள் இந்த ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையும் கடைப்பிடிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்களது அட்மிஷனை உறுதி செய்யும் வகையில் குறிப்பிட்ட தேதிக்குள் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும். படிப்புக் கட்டணத்தைச் செலுத்தும் போது, இந்தத் தொகை அதில் சரிசெய்து கொள்ளப்படும். இந்த ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதையடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.5 லட்சம். கட்டணம் மாறுதலுக்கு உட்பட்டது. இதுதவிர, தங்கும் விடுதி மற்றும் உணவுச் செலவுகள் தனி. இந்தப் படிப்பில் சேரத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கல்வி நிலைய வளாகத்திலேயே தங்கிப் படிக்க வேண்டும்.
 
இந்தப் படிப்பில் என்ன கற்றுத் தருவார்கள்?
 இந்த ஐந்து ஆண்டுப் படிப்பில் 15 டேர்ம்கள் உண்டு. ஒவ்வொரு டேர்மிலும் குறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச மதிப்பெண்களை (கிரிடிட்) பெறும் மாணவர்கள்தான் அடுத்த நிலை வகுப்புகளில் சேர அனுமதிக்கப்படுவார்கள். வகுப்புகள் காலை 9.30 மணியிலிருந்து பகல் 1.30 மணி வரை வாரம் ஐந்து நாட்கள் நடைபெறும். குரூப் டிஸ்கஷன் உள்பட படிப்பு தொடர்பான காரணங்களால் வகுப்பறை நேரம் 4 மணி வரை நீடிக்கப்படலாம். ஐஐஎம் ஆசிரியர்கள் தவிர சர்வதேச அளவில் உள்ள தொழில்துறை சார்ந்த நிபுணர்களும் வகுப்புகளை எடுப்பார்கள். இதுதவிர, கலை, அறிவியல், வணிகவியல் கல்லூரிகளில் பணிபுரியும் அல்லது ஓய்வு பெற்ற தலைசிறந்த ஆசிரியர்களும் பாடங்களைக் கற்பிப்பார்கள். இந்தப் படிப்பு மாணவர்களுக்காக ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்கேற்புக்கான சாத்தியங்கள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
 
இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடங்களுடன் மேனேஜ்மெண்ட் பாடங்களும் இருக்கும். கணிதம், புள்ளியியல், லாஜிக், கம்ப்யூட்டர் சயின்ஸ், அரசியல் அறிவியல் மற்றும் இலக்கிய அறிமுகம், தேசிய மற்றும் சர்வதேசிய நாகரிக வரலாறு, பயாலஜிக்கல் சயின்சஸ் ஆகியவையும் கற்றுத்தரப்படும் பாடங்களில் அடங்கும். ஒரு வெளிநாட்டு மொழியும் ஒரு இந்திய மொழியும் குறித்த அறிமுகம் இருக்கும். லீடர்ஷிப் டெவலப்மெண்ட்,  பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், டீம் ஒர்க், கம்யூனிக்கேஷன் ஸ்கில்ஸ் போன்றவற்றிலும் படிப்புக் காலத்தில் கவனம் செலுத்தப்படும். அக்கவுண்டிங், ஃபைனான்ஸ், ஆர்கனைசேஷன் பிகேவியர் டெசிஷன் சயின்ஸ், ஆபரேஷன்ஸ் அண்ட் சர்வீசஸ் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் எகனாமிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்யூனிக்கேஷன், லீகல் ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் பிசினஸ், நெறிகள் (எத்திக்ஸ்), கார்ப்பரேட் கவர்னன்ஸ், கார்ப்பரேட் சோஷியல் செக்யூரிட்டி, பிசினஸ் ஸ்ட்ரேட்டஜி , இன்டர்நேஷனல் பிசினஸ் ஆகிய மேனேஜ்மெண்ட் தொடர்பான பாடங்களும் இருக்கும். இதுதவிர, இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு சர்வேதச அளவில் விஷயங்களை அறிந்துகொள்ள வாய்ப்புகளும் இருக்கும். அத்துடன், பல்வேறு அமைப்புகளில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதாவது, ஐந்து ஆண்டு காலத்தில் சிறந்த மேனேஜ்மெண்ட் புரபஷனலை உருவாக்கும் வகையில் இந்தப் படிப்பு இருக்கும். இந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஐந்தாவது ஆண்டின் முடிவில் Integrated Diploma in Management (IDM) என்று சான்றிதழ் வழங்கப்படும்.
 
விண்ணப்பிப்பது எப்படி?
 இந்தூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் இணையத்தளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.  இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இந்தூரில் மாற்றத்தக்க வகையில், 'இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் --இந்தூர்' என்ற பெயரில் இந்தத் தொகைக்கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இந்தூரில் உள்ள ஐஐஎம் நிர்வாக அலுவலகத்திற்கு ஜூலை 20ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
 
இங்கு படிக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பற்றி கவலைப்பட வேண்டாம். பட்டப் படிப்பை முடித்து விட்டு ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் மேனேஜ்மெண்ட் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம்  கொத்திக்கொண்டு போக பிரபல நிறுவனங்கள் காத்திருக்கும்போது, இந்த ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைக்காதா என்ன? மிகச் சிறந்த கல்வி நிறுவனம். தலை சிறந்த ஆசிரியர்கள். நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். ஆர்வமிக்க மாணவர்கள் இப்போதே உங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

 
விவரங்களுக்கு:www.iimidr.ac.in

நேர்மைக்குப் பரிசு கட்டாயக் காத்திருப்பு!

0 comments
'சத்துணவுச் சண்டை!’ - இது, கடந்த இதழ் கழுகார் பகுதிக்கு நாம் கொடுத்திருந்த தலைப்பு. சத்துணவு அமைப்பாளர்கள் நியமனத்தில் ஆளும் கட்சிப் புள்ளிகளுக்கும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் பாலாஜிக்கும் ஏற்பட்ட மோதலை கழுகார் விலாவாரியாகச் சொல்லி இருந்தார்.
'யார் எந்தப் பரிந்துரை செய்தாலும் தகுதியின் அடிப் படையில்தான் சத்துணவு அமைப்பாளர் நியமனம் நடக்கும்’ என்று, தான் நினைத்ததை சாதித்தும் விட்டார் கலெக்டர் என்ற கழுகார், 'அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் இப்படி நடக்க ஆரம்பித்தாலே, நாடு சுபிட்சம் அடையும்’ என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்!
நாடு அவ்வளவு சீக்கிரத்தில் திருந்தி விடுமா, திருந்து​வதற்குத்தான் விட்டு விடுவார்களா நம்முடைய அதிகாரிகளும் ஆட்சியாளர்களும். நம்முடைய இதழ் வெளியான கடந்த சனிக்​கிழமை அன்று, 'பாலாஜியின் பத​விக்கு வேட்டுவைக்கப்​பட்டு​விட் டது. அவ​ருக்கு எந்தப் பதவி​யும் ஒதுக்கப்​படாமல் கட்டாயக் காத்திருப்பில் வைக் கப்பட்டு உள்ளார்.
ஐ.ஏ.எஸ். தேர்​வில் தேர்ச்சி பெற்றதும் பாலாஜி முதன்​முதலில் சேரன்மகாதேவி உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். மணல்கடத்தல் கும்பல் மீது எடுத்த கடும் நடவடிக்கைகள் காரணமாக அப் போதே பரபரப்பாகப் பேசப்பட்டார். பின்னர் தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையில் துணை கமிஷனராகப் பணியாற்றினார். அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், விருதுநகர் மாவட்டகலெக்டராக நியமிக்கப்பட்டார். வந்த நாளில் இருந்தே ஊழல் மற்றும் முறைகேடுகளில் புரையோடிக்கிடந்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். ஒருகட்டத்தில், கலெக்டர் பாலாஜியின் அதிரடிகளை எதிர்த்து அரசு ஊழியர் சங்கம் போராட்டங்கள் நடத்தியது. பின்னர் மக்கள் கோபத்துக்குப் பயந்து மனம் மாறி, பாலாஜிக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தொடங்கினர்.
விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி போன்ற பகுதிகளில் அதிரடியாக 144 தடை உத்தரவு பிறப்​பிக்கப்​பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மாவட்டத்தில் காலியாக இருந்த பல பணி இடங்களுக்கு முறையாகத் தேர்வு நடத்தி, ஆட்களை நியமனம் செய்தார்.
வருவாய்த் துறை மற்றும் ஊரகத் துறை வளர்ச்சிப் பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் பாலாஜியின் பேச்சில் அனல் பறக்கும். 'லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப் பதற்குச் சமம்’ என்று சொல்லி ஒழுங்கீனமாகச் செயல்படும் அதிகாரிகளை மீட்டிங்கில் வறுத்து எடுத்துவிடுவார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் ஒருவர், கலெக்டர் பெயரைச் சொல்லி கான்ட்ராக்ட் ஆசாமிகளிடம் பணம் பறித்து வந்தார். கலெக்டர் பங்க​ளாவுக்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டும் என்று வசூல் வேட்டையில் இறங்கினார். தகவல் தெரிந்ததும், அவரைக்  கண்டித்து, மெடிக்கல் லீவில் போகச் சொன்ன கையோடு, அவரது அறையைப் பூட்டி விட்டார் கலெக்டர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம், நன்கொடை வசூல் குறித்துப் புகார் வந்தது. உடனே, அந்தப் பள்ளியின் வங்கிக் கணக்கை முடக்கி வைத்து, கூடுதல் கட்டணத்தை பெற்றோர்களிடம் திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டார். ஆனால், பள்ளி நிர்வாகம் மசியவில்லை. அதனால், பள்ளி முதல்வர் மற்றும் பள்ளித் தாளாளர் உட்பட ஆறு பேர் மீது மோசடி வழக்குப் பதிவானது. தமிழகத்தில் இப்படி ஒரு வழக்குப்பதிவு நடந்திருப்பது இங்கு மட்டும்தான்.
பசுமை வீடுகள் கட்டும் திட்டம், இந்திரா காந்தி நினைவுக் குடியிருப்பு திட்டங்களில், பயனாளிகளைத் தேர்வு செய்​வதில் தொடங்கி கமிஷன் வாங்குவது வரை பல முறைகேடுகள் நடந்தன. இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களின் 'செக் பவர்’ பறிக்கப்பட்டது.
ராஜபாளையம் அருகே கன்சாபுரத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். ஆனால், மின் தடை காரணமாக பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. 'ஒரு மாதத்துக்கு சீரான மின்சப்ளை இல்லை என்றால், பயிர்கள் வீணாகிவிடும்’ என்று கோரிக்கை வைத்தனர். உடனே, கன்சாபுரம் பகுதியில் மட்டும் கூடுதல் நேரம் மின்சாரம் வழங்குவதற்கு மின் வாரியத் தலைவரிடம் சிறப்பு அனுமதி பெற்றுத்தந்தார். இதில் சிக்கல் ஏற்படுத்த முயன்ற தென்மண்டல மின் பகிர்மான உயர் அதிகாரி மற்றும் விருதுநகர் மாவட்ட மின்வாரிய உயர் அதிகாரியையும், தனக்கு உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட் பவரைப் பயன்படுத்தி வழிக்குக் கொண்டு வந்தார்.
இதுபோல, ஏகப்பட்ட அதிரடி​களை நடத்திய பாலாஜியைக் கண்டு ஆளும் கட்சியினர் அதிர்ந்து நின்ற நேரத்தில்தான், சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்த நியமனத்துக்கு என சில விதிமுறைகள் இருந்தாலும், ஆளும் கட்சிக்காரர்கள் சுட்டிக்காட்டும் நபர்களுக்குத்தான் வேலை கிடைக்கும் என்பது நடைமுறை. அதனால் ஆளும் கட்சியினர்,  ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வசூல் வேட்டையில் இறங்கினர்.
இது, பாலாஜி காதுக்குப் போனதுமே, விருதுநகர் மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் கடிதம் எழுதினார். அதில், 'சத்து​ணவுப் பணியாளர்கள் நியமனம் முறையாக நடத்தப்பட்டு, தகுதி​யானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்​படுவார்கள். ஏழைகள் தேர்வு செய்யப்பட்டால்தான், ஒழுங்காக வேலை பார்ப்பார்கள். குழந்தைகளுக்கும் சத்தான உணவு கிடைக்கும். எனவே, இந்த நியமனத்தில் நீங்கள் அரசுக்கு முழுஆதரவு அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தார்.
அதோடு நிற்காமல், சத்துணவுப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், 'யாராவது அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் சிபாரிசோடு வந்தால், மூன்று ஆண்டு காலம் எந்த அரசுப்பணிக்கும் செல்ல முடியாதபடி அவர்கள் பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்’ என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு 10-ம் வகுப்பும், சமையலருக்கு எட்டாம் வகுப்புத் தேர்ச்சியும், சமையல் உதவியாள ருக்கு 5-ம் வகுப்பும் கல்வித்தகுதி ஆகும். ஆனால், இந்த வேலையில் சேருவதற்கு டிகிரி படித்தவர்களும் விண்ணப் பித்தனர். அதனால் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய முதலில் மூன்று பேர் அடங்கிய 41 குழுக்கள் அமைக்கப்பட்டன. 'விண்ணப்பதாரர் உண்மையிலே ஏழையா அல்லது நடிக்கிறாரா? கணவர் எங்கே வேலை செய்கிறார்? குடும்பத்தின் மொத்த சம்பளம் எவ்வளவு? சொந்த வீட்டில் வசிக்கிறாரா? என்று பல கேள்விகளுக்கு விடை தெரியவேண்டும் என்று உத்தரவு போட்டார். அதன் அடிப்படையில்தான் இன்டர்வியூக்கு வரும் பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
வயதுக்கு 12 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு 3, வேலை வாய்ப்பு சீனியாரிட்டிக்கு 19, விதவை, கணவனால் கைவிடப்பட்ட நிலையில் இருப்பவர்​களுக்கு 20, வறுமை நிலைக்கு 15, குடும்ப நிலைக்கு 10, நேர்முகத் தேர்வு செயல்பாட்டுக்கு 6 என்று மொத்தம் 85 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. அதன்படி ஜூன் 23 முதல் 26 வரை இன்டர்வியூ நடத்தப்பட்டு, அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இந்தத் தகவல் தெரிந்ததும், தாங்கள் கொடுக்கும் லிஸ்ட்டும் இடம் பெறவேண்டும் என்று ஆளும் கட்சியினர் கடும் நெருக்கடி கொடுத்தனர். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல், ஜூன்  27 அன்று காலை 7 மணிக்கு அலுவலகம் வந்த பாலாஜி, மெரிட் அடிப்படையில் தேர்வான 1,006 பேருக்கும் ஒரே நேரத்தில் கையெழுத்துப் போடத் தொடங்கினார். அத்தனை கடிதங்களையும் ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பிவிட்டுத்தான் கிளம்பினார்.
கலெக்டர் கையெழுத்துப் போட்டுக்கொண்டு இருந்த நேரத்​தில், அந்தத் தகவல் அறிந்து தலைமைச் செயலகத்தில் இருந்து முக்கிய அதிகாரி போன் செய்தாராம். சத்துணவு நியமனம் தொடர்பான விஷயம் என்பதைப் புரிந்து கொண்டதால் பாலாஜி போனை எடுக்கவில்லை என்கிறார்கள். செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோதும் பேசவில்லை. முழுமையாக கையெழுத்துப் போட்டு, கடிதங்களை அனுப்பிய பிறகுதான் தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிக்கு  போன் செய்தாராம் பாலாஜி. அப்போது எதிர்முனையில் போன் எடுக்கப்படவில்லை.  அந்தக் கோபத்தில்தான், டிரான்ஸ்ஃபர் உத்தரவு உடனே தயாரானது என்கிறார்கள்.
இதுகுறித்துப் பேசும் உயர் அதிகாரிகள், ''ஆளும் கட்சி அமைச்சர் முதல் அரசுத் துறை செயலாளர் வரை பலரும், 'ஆளும் கட்சி லிஸ்ட்டில் இருந்தும் சிலருக்கு நியமனம் போட வேண்டும்’ என்று கேட்​டார்கள். ஆனால், 'அரசுக்கு கெட்டபெயர் வந்துவிடும்’ என்று எல்லாரையும் நிராகரித்து​விட்டார் கலெக்டர். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, பாலாஜியின் வீட்டுக்கே சென்று சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். பாலாஜி அதைக் கையில்கூட வாங்கவில்லை. பாலாஜியை வேறு இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்திருந்தாலும் பரவாயில்லை. கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கின்றனர். மீண்டும் போஸ்டிங் வாங்குவதற்கு அவர் பெரும்பாடு பட வேண்டும். நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி பழிவாங்கப்பட்டு இருக்கிறார். அதனால் நேர்மையான அதிகாரிகள் இனி, ஆளும் கட்சிக்காரர்களைக் கண்டு பயப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது'' என்று வருத்தப்பட்டனர்.
எந்த ஒரு காரியத்துக்காக கலெக்டர் பாலாஜி முழு மூச்சுடன் செயல்பட்டாரோ, அது நிறைவேறவில்லை என்பதுதான் வேதனை. ஆம், சத்துணவு அமைப்பாளர்களால் வேலைக்குச் சேர முடியவில்லை. 'இவர்கள் தரும் நியமன உத்தரவு களை வாங்க வேண்டாம்’ என்று, மேலிடத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு போயிருக்கிறதாம். 'சென்னை கவுன்சிலர்களிடம் சீறிய முதலமைச்​சருக்கு, விருதுநகரில் மட்டும் அல்ல.. மாநிலம் முழுவதுமே சத்துணவு அமைப்பாளர் நியமனத்தில் நடக்கும் நெறிமுறை மீறல் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. 'வாய்மையே வெல்லும்’ என்பது விளம்பரத்துக்கு மட்டும்தானா?
எம்.கார்த்தி
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

Thanks to Vikatan

Source: http://www.vikatan.com/article.php?page=2&mid=2&sid=577&aid=21254&type=all#cmt140200

Please join and support the cause in our facebook page, let this initative be the first in terms of opposing the politicians.

திகைக்க வைக்கும் செக்ஸ் கொடுமைகள்

0 comments
அதிர்ச்சியானது.. கவலைக்குரியது.. அனைவரும் அறிந்துகொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டியது.. என்ன விஷயம் தெரியுமா?

- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்ற கொடுமை!

* 53 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

* பாதிக்கப்படுபவைகளில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளின் சதவீதம் அதிகம்.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப குழந்தைகளைவிட மேல்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம்.

* ஒன்று முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இந்த பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள்.

* 5 முதல் 12 வயது வரை பாதிப்பின் உச்சம். பாதிக்கப்பட்டவைகளில் 40 சதவீதம் இந்த வயதுதான். 30 சதவீதம் பேர் 13-14 வயதினர்.

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்கிற வர்கள், பீடோபீலியா (Peadophilea) என்ற வக்கிர புத்தி கொண்டவர்கள். இது ஒரு மனநோயாகவும் கருதப்படுகிறது. சிறுவர்- சிறுமியர்கள் மூலம் இன்பமடையும் வக்கிரவாதிகள் மேலைநாடுகளில் அதிகம். `சைல்டு செக்ஸ் டூரிசம்' என்ற பெயரில் அவர்களை சில சமூக விரோத அமைப்புகள் ஆசிய நாடுகளுக்கு அழைத்து வருகின்றன. முன்பு தாய்லாந்து போன்ற நாடுகளில் கால்பாதித்த இந்த பாதகர்கள் இப்போது இந்தியாவில் ஒடிசா, கோவா, மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு ரகசி யமாக வந்து `ஆசைகளை' தீர்த்துவிட்டு போகி றார்கள்.

இது தொடர்பான சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்களில் 15 சதவீதத்தினர் 15 வயதிற்கும் குறைவானவர்களாக இருக்கி றார்கள். 25 சதவீதத்தினர் 16 முதல் 18 வயதிற்கு உள்பட்டவர்கள். 2005-ம் ஆண்டு இந்தியாவில் 44,476 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார் கள். அவைகளில் 11,008 குழந்தைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவர்கள் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

- குழந்தைகளை எளிதாக ஏமாற்ற முடியும்.
- குழந்தைகள் காட்டிக்கொடுக்காது.
- குழந்தைகளுக்கு விளைவுகளை புரியத்தெரியாது. எதிர்ப்பு தெரிவிக்காது.
- தனக்கு ஏற்பட்ட பாதிப்பை குழந்தைகளுக்கு விளக்கத் தெரியாது. விளக்கினாலும் பெற்றோர் அதை நம்பமாட்டார்கள்.
- வயதானவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சும் பாவனையில் வக்கிர செயலில் ஈடுபடும் போது, பெற்றோருக்கு சந்தேகம் வராது.
- ஆண்மை அதிகரிக்கும், ஆயுள் நீடிக்கும் போன்ற மூட நம்பிக்கைகள்.

இப்படிப்பட்ட பல காரணங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித் துக்கொண்டே போகிறது. கற்பனைக்கு எட்டாதவிதத்தில்கூட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள் அல்லது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், வேலைக்காரர்கள், அம்மாவின்- அப்பாவின் நண்பர்களாக வந்து போகிறவர்கள்.... போன்றவர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். புதிய நபர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு.

பயணங்கள், திருவிழா, திருமணவிழாக்களில் உருவாகும் மக்கள் நெருக்கடியை பயன் படுத்தி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தருபவர்கள் உண்டு. குழந்தை தொழி லாளர்கள், தெருவோரக் குழந்தைகள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவது சாதாரண விஷய மாக மாறிக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள், ஒருசில பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பாலியல் பலாத்காரத்தால் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலா வதாக அவர்களுக்கு பால்வினை நோய்கள் உண்டாவதை குறிப்பிடலாம். குழந்தைகளின் `உறுப்பு' பகுதியில் புண்களோ, கட்டிகளோ, சீழ் வடிதலோ இருந்தாலும் குழந்தையின் தாய்க்கு அது பால்வினை நோயின் அடையாளம் என்ற சந்தேகம் வருவதில்லை. ஒருசில மருத்துவர்களும் அது பால்வினை நோயின் அறிகுறி என்பதை உணராமல், வேறு விதமான சிகிச்சைகள் கொடுத்துவிடுவதும் உண்டு.

நன்றாக தெரிந்தவர்களால் குழந்தைகளுக்கு பாலியல் பாதிப்பு ஏற்படும்போது, அவை களின் உடலில் காயங்களோ, சிராய்ப்புகளோ இருப்பதில்லை. அதனால் பெற்றோரோ, மருத் துவர் றகளோ குழந்தை பலாத்காரத்திற்கு உட்பட்டிருக்கிறது என்று முதலில் நினைப்ப தில்லை. அப்படியே நினைத்து விசாரித்தாலும் குழந்தையால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறமுடியாது.

வெளிநபர்களால் பாதிப்பு ஏற்படும்போது காயம், சிராய்ப்பு, உறுப்பு பகுதியில் ரத்தம் வடிதல் போன்றவை காணப்படும். அவசரத்திலும், பயத்துடனும் அந்த பாதகர்கள் செயல்படுவதால் குழந்தைகள் காயம் அடைந்துவிடுகின்றன.

பலாத்காரத்திற்கு உள்பட்ட குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றன. பால்வினை நோய் மற்றும் காயங்களை சிகிச்சையால் குணப்படுத்திவிடலாம். ஆனால் மனநிலை பாதிப்பால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். வயதுக்கு மீறிய பாலியல் மாற்றங்கள், மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, எதைக் கண்டாலும்- யாரைக் கண்டாலும் பயம், தனிமை மீது விருப்பம், உணவில் நாட்டமின்மை, போதை மருந்துகளுக்கு அடிமையாகுதல், வீட்டை விட்டு ஓடுதல், படிப்பில் ஆர்வமின்மை, பாலியல் தொழில் ஆர்வம் போன்றவை முக்கியமான எதிர்கால பாதிப்புகளாகும்.

மக்கள் விழிப்புணர்வு கொண்டால் மட்டுமே இந்த பாதகத்தை தடுக்கவோ, குறைக்கவோ முடியும். சமூகத்தின் அடிப்படையில் இருந்து இந்த பணியை தொடங்கவேண்டும். பள்ளி கள், கல்லூரிகள், மருத்துவ துறை, தன்னார்வ அமைப்புகள், அரசு அமைப்புகள் ஆகிய அனைத்தும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும். தங்கள் தம்பி, தங்கை களை காத்து கண்காணிக்க மூத்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். குழந்தைகளின் உடலில் எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது நல்ல தொடுதல் என்றும்- எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது தவறான அணுகுமுறை என்றும் சொல்லித்தர வேண்டும். இதை சரியாக சொல்லித்தர அம்மாக்களாலே முடியும்.

மற்றவர்களின் பிரச்சினைக்குரிய செயல்கள் பற்றியோ, பிரச்சினைக்குரிய நபர்கள் பற்றியோ குழந்தைகள் கூறினால் அதை அலட்சியப்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். யாரையும் நம்பி குழந்தைகளை விட்டுச்செல்லக்கூடாது. பொது இடங்களில் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த பாதகத்தில் ஈடுபடு கிறவர்கள் நீதியின் முன்னே நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஒரு தனிநபர் பிரச்சினையோ, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்து பிரச்சினையோ இல்லை. இது சமூக பிரச்சினை. அதனால் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒத்துழைத்து இதை தடுக்கவேண்டும்.

கட்டுரை: டாக்டர் என்.உஸ்மான் M.D., D.V., Ph.D., 
(பாலியல் நோய் நிபுணர் மற்றும்
உலக சுகாதார நிறுவன ஆலோசகர்) சென்னை.

ரத்தக் கசிவை நிறுத்தும் செயற்கை ரத்த அணுக்கள்!

0 comments
விபத்துகளால் பாதிக்கப்படுபவர்கள் சந்திக்கும் முதல் மற்றும் மிகவும் ஆபத்தான பிரச்சினை வேகமான ரத்தக் கசிவுதான். இந்த ரத்தக் கசிவை உடனே நிறுத்தாவிட்டால், அதிகமான ரத்த இழப்பு ஏற்பட்டு அது உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விடும்.

இதேபோன்ற ஒரு சூழலைத்தான் காயம் அடையும் ராணுவ வீரர்களும், அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளும் சந்திக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வு என்றால் அது ரத்தக் கசிவை உடனே நிறுத்துவதுதான்.

ரத்தக் கசிவை உடனே நிறுத்த வேண்டுமானால் ரத்தம் கட்டியாக வேண்டும். அதற்கு `ப்ளேட்லெட்' எனப்படும் ஒரு வகை ரத்த அணுக்கள் அவசியம். தற்போதுள்ள மருத்துவ முறையில், இயற்கையான ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ப்ளேட்லெட் அணுக்களைக் கொண்டு ரத்தத்தை கட்டியாக்கி ரத்தக்கசிவை நிறுத்துகிறார்கள்.

ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ப்ளேட் லெட்களின் வாழும் காலம் (ஷெல்ப் லைப்) மிகமிக குறைவு. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒரே வழிதான் இருக்கிறது. அது, செயற்கை ப்ளேட் லெட் அணுக்களை உருவாக்குவது.

கடந்த 100 வருடங் களாக, உலகின் பல சோதனைக்கூடங்கள் இயற்கையான ப்ளேட்லெட் அணுக் களின் அளவு, வடிவம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றை கொண்டிருக்கும் செயற்கை ப்ளேட்லெட்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரையில் யாரும் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை.

உலகில் முதல் முறையாக, இயற்கையான ப்ளேட்லெட்களை போன்ற அளவு, வடிவம் மற்றும் செயல்பாடு கொண்ட செயற்கை ப்ளேட்லெட்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள். ரத்தத்தை கட்டியாக்கி ரத்தக் கசிவை தடுக்கும் திறனுள்ள இந்த செயற்கை ப்ளேட் லெட்கள், மேலும் பல விந்தைகளையும் செய்கின்றன என்கிறார் வேதி யியல் பொறியாளர் நிஷித் தோஷி.

உதாரணமாக, உடலில் சேதமடைந்த ரத்த நாளங்களை இனம்கண்டு சொல்வது அல்லது ரத்த நாளங்களில் ஏற்படும் ரத்த கட்டுகளை உடைக்கும் திறனுள்ள மருந்துகளை தாங்கிச் சென்று, ரத்தக் கட்டுகளை உடைத்து ரத்த ஓட்டத்தை சீராக்குவது போன்றவை.

அது சரி, கடந்த நூறு வருடங்களாக சாத்தியப்படாத செயற்கை ப்ளேட்லெட் உற்பத்தி இப்போது எப்படி சாத்தியமானது?

ப்ளேட்லெட்கள் 2 முதல் 4 மைக்ரோ மீட்டர் அளவுடையவை. அதாவது, மனித மயிரிழையை விட சுமார் 50 தடவை சிறியவை. செயற்கை ப்ளேட்லெட் உருவாக்கும் முயற்சி 100 வருடங்களாக தோல்வி அடைந்ததற்கு ஒரு முக்கியமான காரணம், அவை இயற்கையான ப்ளேட்லெட்களை விட மிகவும் உறுதியானவையாக அல்லது கடினமாக இருந்தன என்பதுதான்.

இந்த நடைமுறை பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு தந்திரத்தை கையாண்டது நிஷித் தோஷியின் ஆய்வுக்குழு. அதாவது, செயற்கை ப்ளேட்லெட்கள் உற்பத்திக்குத் தேவையான புரதங்கள் மற்றும் இதர பகுதிகளை உருவாக்க பாலிமர் எனும் உறுதியான வேதியியல் பொருளை அடித்தளமாக பயன்படுத்தினர்.

செயற்கை ப்ளேட்லெட்கள் முழுவடிவம் பெற்ற பின்னர், அந்த உறுதியான பாலிமர் அடித்தளத்தை கரைத்து விட்டார்கள். இதன்மூலம் இயற்கை ப்ளேட்லெட்களைப் போன்ற மிருதுவான செயற்கை ப்ளேட்லெட்கள் உருவாயின.

மனித நோயாளிகளின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டு, மேலும் பல பரிசோதனைகளையும் தாண்டிய பின்னரே, இந்த செயற்கை ப்ளேட்லெட்கள் மனித பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்கை ப்ளேட்லெட்கள் மனித பயன்பாட்டுக்கு வந்த பின்னர், ரத்தக்கசிவு பிரச்சினைகளால் பாதிக்கப்படும் ராணுவ வீரர்கள், அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகள் மற்றும் ரத்தத்தில் குறைந்த எண்ணிக்கையிலான ப்ளேட்லெட்களைக் கொண்ட நோயாளிகள் என பலர் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

முனைவர் பத்மஹரி

ப்ரான் மேங்கோ கறி

0 comments
தேவையான பொருட்கள்

இறால்-400 கிராம்
தேங்காய் எண்ணெய்- 4 டீஸ்பூன்
அரை மூடி தேங்காய்- திருவி பால் எடுக்கவும்.
வெங்காயம்-3 (நறுக்கவும்)
மாங்காய்-1
காய்ந்த மிளகாய்-2
பச்சை மிளகாய்-2
தனியா-1 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
(தனியா, சீரகம் இரண்டையும் வறுத்து அரைக்கவும்)
மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
பூண்டு-4 பல்
இஞ்சி-சிறுதுண்டு
(பூண்டு, இஞ்சி இரண்டையும் விழுதாக்கவும்)
உப்பு-தேவைக்கேற்ப

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து லேசாக உப்பு தடவி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து, காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கவும். அரைத்த மசாலாவை சேர்த்து பிரவுன் நிறத்தில் வரும் வரை வதக்கவும். அதில் சுத்தம் செய்து துண்டுகளாக்கிய மாங்காயை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விடவும். ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.

இப்போது இறாலை சேர்க்கவும். தேங்காய்ப்பால் சேர்க்கவும். மசாலாவுடன் சேர்ந்து இறாலும் வெந்து திக்கான பதத்தில் வந்ததும் இறக்கி வைக்கவும்.

இது சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

மட்டன் வெள்ளை குருமா

0 comments
தேவையான பொருட்கள்:

மட்டன் -1/4 கிலோ
தக்காளி -1/4 கிலோ
பச்சை மிளகாய் -4 (கீறியது)
தேங்காய் -1/2 முடி
கசகசா -2 டீஸ்பூன்
தயிர் -1/2 கப்
சோம்பு -1 டீஸ்பூன்
பட்டை -2
ஏலக்காய் -2
லவங்கம் -2
வெங்காயம் -1 கப்(நறுக்கியது)
இஞ்சி -சிறு துண்டு
பூண்டு - 5 பல்
முந்திரிப்பருப்பு -4
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப

செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய், கசகசா, இஞ்சி, பூண்டு, முந்திரியை அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கவும். மட்டனை சேர்க்கவும்.

அரைத்த தேங்காயை ஊற்றி போதுமான உப்பு சேர்க்கவும். தயிரையும் சேர்த்து நன்கு கலக்கி குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். கொத்தமல்லி இலையை சிறிது கிள்ளிப் போடவும்.

இப்போது மட்டன் வெள்ளை குருமா ரெடி.

இதே முறைப்படி மட்டனுக்குப் பதிலாக காய்கறி சேர்த்து குருமா, உருளைக்கிழங்கு குருமா ஆகியவையும் தயாரிக்கலாம்.

கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?

0 comments
 
தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றன அரசு அமைப்புகள். தேவையும் தகுதியும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வி உதவித் தொகை பெறலாம். இந்த உதவித் தொகைகள் பற்றிய தகவல்கள் இதோ...


முதல் தலைமுறை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை

அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகளில் ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை மூலம் அட்மிஷன் பெறும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே வழங்கி வருகிறது. இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழில் கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் சாதி வேறுபாடின்றி, பெற்றோரின் வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமலும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தையும் பல்கலைக்கழகங்கள் நடத்தும் படிப்புகளுக்கு பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் தனியார் தொழிற் கல்லூரிகளில் கட்டண நிர்ணயம் செய்வதற்காக நிபுணர் குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தையும் அரசு வழங்கும். இச்சலுகை பெற தங்களது குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் மாணவர் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறையின் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்குக் குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போதே, குடும்பத்தில் முதன் முதலாக பட்டப் படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும் அதற்கான உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும்.


ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை...

கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகிறது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம். இந்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். கல்வி நிலையத்துடன் இணைந்த விடுதிகளில் தங்கி பட்ட மேற்படிப்பு, மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு உயர் கல்வித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் மூலமாக அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னையிலுள்ள ஆதிதிராவிடர் நல ஆணைய அலுவலத்தை அணுகலாம்.


தொலைபேசி எண்: 044-28594780


சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ, ஐடிஐ, பாலிடெக்னிக்,. நர்சிங் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, இளநிலைப் பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு, எம்பில், பிஎச்டி படிக்கும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு (முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள்) மத்திய அரசின் சிறுபான்மையின அமைச்சகம் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த படிப்பின் இறுதித் தேர்வில் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஏற்கெனவே பெற்று வரும் கல்வி உதவித் தொகையை தொடர்ந்து பெறுவதற்கு தேர்வில் எந்தப் பாடத்திலும் தேர்ச்சி பெறாமல் (அரியர்ஸ் கூடாது) இருக்கக் கூடாது. அத்துடன், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். ஒரு குடும்பத்தில் இரண்டு பேருக்கு மேல் இந்த உதவித் தொகை வழங்கப்படமாட்டாது. பள்ளி, கல்லூரிக்கு முறையாகத் தொடர்ந்து செல்ல வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெறும் மாணவர்கள், வேறு திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற முடியாது.


இந்த உதவித் தொகை கோரி பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31-7-2012


விவரங்களுக்கு: www.tn.gov.in/bcmw/welfschemes_minorities.htm


இந்த உதவித் தொகை கோரி கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30-09-2012


விவரங்களுக்கு: www.momascholarship.gov.in


சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நன்கு படிக்கக் கூடிய ஏழை மாணவர்களுக்கு மத்திய சிறுபான்மை அமைச்சகம் தனியே சிறப்புக் கல்வி உதவித் தொகையை (Merit cum means based scholarship) வழங்குகிறது.


அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் இளநிலை, முதுநிலை தொழில் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தொழில் அல்லது தொழில் நுட்பப் படிப்புகளில் போட்டித் தேர்வு மூலம் தேர்வு பெற்றவர்கள் மட்டுமே புதிதாக இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியும். போட்டித் தேர்வுகள் மூலம் இல்லாமல் நேரடியாக அட்மிஷன் பெற்றவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால், அந்த மாணவர்கள் பிளஸ் டூ மற்றும் பட்டப் படிப்பில் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வேறு எந்த கல்வி உதவித் தொகையும் பெறக்கூடாது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும். படிப்புக் கட்டணமாக அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டில் பத்து மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க கடைசி தேதி 30-09-2012


உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தின் அச்சு நகலை நிறுவனத்தில் சமர்பிப்பதற்குக் கடைசி தேதி: 5-10-2012


மேலும் விவரங்களுக்கு: www.minorityaffairs.gov.in



மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை

மாற்றுத் திறனாளி மாணவர்கள் படிப்பதற்கு மத்திய சமூக நீதி அமைச்சகம் கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கார்ப்பரேஷன் மூலம் இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தொழில் படிப்புகளைப் படிக்கும் பட்ட மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு டிரஸ்ட் ஃபண்ட் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உள்ள கல்விக் கட்டணம் மாணவர்களுக்கு வழங்கப்படும். அத்துடன் இளநிலை தொழில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களின் பாரமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ.2,500 வீதம் 10 மாதங்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷ்னரி செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். முதுநிலை தொழில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களின் பராமரிப்புச் செலவுக்காக ரூ.3 ஆயிரம் வீதமும் வழங்கப்படும். அத்துடன், அந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷ்னரி செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.


பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும் நிதியுதவி செய்யப்படும். இந்தக் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு மேற்படக்கூடாது என்பது விதி. இந்தக் கல்வி உதவித்தொகை கோரி, கல்வியாண்டில் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.


விவரங்களுக்கு: www.nhfdc.nci.in



அறிவியல் படிப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

பிளஸ் டூ வகுப்பில் படித்த திறமையான மாணவர்களை அறிவியல் படிப்புகளின் பக்கம் ஈர்க்கும் வகையில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research - INSPIRE)  என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இயற்கை மற்றும் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், எர்த் சயின்சஸ் போன்ற அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி., பி.எஸ்சி., ஆனர்ஸ், ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.எஸ். படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், அக்ரிக்கல்ச்சுரல் சயின்சஸ், எலெக்ட்ரானிக் சயின்சஸ், மெடிக்கல் அண்ட் பயோ மெடிக்கல் சயின்சஸ் பாடப்பிரிவு மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது.


இந்த உதவித் தொகை பெறத் தேர்வு செய்யப்படும் அறிவியல் பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் கோடை காலத்தில் ஆய்வு மையங்களில் திட்டங்களை மேற்கொண்டால் அந்தக் காலத்திற்குத் தனியே ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும். அதேசமயம், மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் தொடர்ந்து கவனத்தில் கொள்ளப்படும். அதன் அடிப்படையிலேயே இந்த உதவித் தொகை தொடர்ந்து கிடைக்கும்.


மத்திய அல்லது மாநில 12ம் வகுப்புக்கான போர்டு தேர்வுகளில் முதல் ஒரு சதவீத இடங்களுக்குள் வரும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இதேபோல, ஐஐடி நுழைவுத் தேர்வு, ஏஐஇஇஇ., அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் முதல் பத்தாயிரம் இடங்களுக்குள் வந்து தற்போது அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். நேஷனல் டேலன்ட் எக்ஸாம், கேவிபிஒய்., ஜகதீஷ் போஸ் நேஷனல் சயின்ஸ் டேலன்ட் சர்ச் ஸ்காலர்ஸ், சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் வென்றவர்களும் ஐஐஎஸ்இஆர்., என்ஐஎஸ்இஆர்., அணுசக்தித் துறை ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த எம்.எஸ்., படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 17 வயதிலிருந்து 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.


இன்ஸ்பயர் ஸ்காலர்ஷிப்புக்காக அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இணையதளத்தில் விண்ணப்ப மாதிரியை டவுன்லோடு செய்துகொள்ளலாம். உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களைத் தபால் மூலம் அனுப்பலாம் அல்லது ஆன்லைன் மூலமும் அனுப்பலாம். அறிவியல் படிப்புகளைப் படிக்கும் தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளளாம்.


விவரங்களுக்கு: www.inspire-dst.gov.in



புத்தக வங்கிகள்

கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்கி வரும் புத்தக வங்கிகள் விவரம்:


ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் புக் பேங்க்
4, அட்கின்ஷன் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007
தொலைபேசி எண்கள்: 044-25610369, 25610978

ராமகிருஷ்ண மடம் புத்தக வங்கி
மயிலாப்பூர், சென்னை - 600 004
தொலைபேசி எண்: 044-24621110

ஜெய்கோபால் கரோடியா புத்தக வங்கி
6,7வது தெரு யு பிளாக், அண்ணா நகர், சென்னை - 600 040
தொலைபேசி எண்: 044-26206261

Chettinadu Fish Curry: செட்டி நாட்டு மீன் குழம்பு

1 comments
செட்டி நாட்டு மீன் குழம்பு தேவையான பொருட்கள்:

மீன்-1/2 கிலோ
வெங்காயம்-200 கிராம்
தக்காளி-200 கிராம்
பூண்டு (உரித்தது)-ஒரு கைப்பிடியளவு
மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன்
தனியாத்தூள்-2 டீஸ்பூன்
புளி-எலுமிச்சம்பழஅளவு
உப்பு, எண்ணெய்-தேவைக்கேற்ப

செட்டி நாட்டு மீன் குழம்பு தாளிக்க: 

கடுகு , கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்

செட்டி நாட்டு மீன் குழம்பு அரைக்க: 

தேங்காய்த்துருவல்-1/2 மூடி

செட்டி நாட்டு மீன் குழம்பு செய்முறை:

மீனை சுத்தம் செய்து கொள்ளவும். புளியை கரைத்து அதிலேயே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். அரைத்த தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும். குழம்பு கொதிக்கும்போது மீனைப் போட்டு இறக்கவும். இப்போது மணக்கும் செட்டிநாட்டு மீன் குழம்பு ரெடி. இந்த செட்டி நாட்டு மீன்குழம்பு இன்றளவும் மவுசு அதிகம்.

பெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா’!

0 comments
அது என்ன ஹெர்னியா? குடலிறக்கம் தான் அவ்வாறு அழைக்கப்படுகிறது. ஆண்களைவிட பெண்களே இதனால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து காணப்படும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்று அழைக்கப்படுகிறது.

பெண்களுக்கு, வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது குடலிறக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, `சிசேரியன்' எனப்படும் மகப்பேறு கால அறுவைச் சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

அடுத்ததாக, பெண்களுக்கு வயது ஏற ஏற, எடை கூடுவது இயற்கையான ஒன்று. இப்படி எடை கூடுவது அவர்களது வயிற்றுப் பகுதியை பலவீனமாக்குகிறது. ஒரு பெண் கருவுற்றிருக்கும் காலத்தில், மாதம் ஆகஆக அவளது வயிறு விரிவடைகிறது. இதுவும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி வலுவிழக்கச் செய்கிறது.

இப்படித்தான் பெண்களுக்கு பெரும்பாலும் குடலிறக்கப் பாதிப்பு ஏற்படுகிறது.

ஆண்களுக்கு வருமா?

இதேபோல், ஆண்களுக்கும் சில காரணங்களால் குடலிறக்கம் ஏற்படலாம். அவர்களது இடுப்புக்கு கீழ், சிறுநீர் வெளியேறும் பகுதியை அடுத்து, விரைக்காய்கள் இருக்கும். அவை வயிற்றின் உட்பகுதியில் தொடங்கி, வெளியே நீண்டு தொங்குகின்றன. அந்த பகுதி வலுவிழக்க நேரிடும்போது அவர்களுக்கு அந்த பாதையில் குடல் இறங்கலாம். இதுதவிர, தொப்புள் பகுதியும் வலுவிழக்கும் வாய்ப்புகள் இருப்பதால் அவற்றின் வழியாகவும் குடலிறக்கம் ஏற்படலாம்.

மேலும், ஆண்கள் முதுமையடையும் காலத்தில், `புரோஸ்டேட்' சுரப்பிகள் வீங்கிப் பெரிதாகும். சிறுநீர் கழிப்பதில் அது சிரமத்தை ஏற்படுத்த... நாளடைவில் அந்த சிரமமே அவருக்கு குடலிறக்கம் ஏற்பட வழிவகுத்து விடுகிறது.

இந்த காரணங்கள் தவிர, ஆண், பெண்களுக்கு குடலிறக்கம் ஏற்பட சில பொதுவான காரணங்களும் உள்ளன.

இயற்கை கடன்களைக் கழிக்கும்போது, ஒருவர் எந்த வகையில் சிரமப்பட்டாலும் அதன் காரணமாகவும் ஒருவருக்கு குடலிறக்கம் ஏற்படும்.

ஒருவர் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து இருமினாலும் கூட குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருமல் ஏற்படும்போது, வயிற்றுக்குள் ஏற்படும் அழுத்தத்தின் அளவு அதிகரிப்பதுதான் அதற்கு காரணம்.

தடுப்பு முறைகள்

பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்படும்போது இறங்கிய குடலைத் தூக்கிப் பிடித்துத் தாங்கிக் கொள்வதற்காக சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை பயன்படுத்துகிறார்கள். இந்த வலை திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்த பகுதிக்கு வலுவூட்டுகிறது.

இயற்கைக் கடன்களை கழிக்கும்போது தேவையில்லாமல் சிரமப்படுவதை (முக்குவது) தவிர்த்தாலும் குடலிறக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

Re: [New post] டீன் ஏஜில் அழகை பாதுகாப்பது எப்படி?

0 comments
டீன் ஏஜ் பெண்கள், உணவில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. பழம், சாலட், ஏடு நீக்கிய பால் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

சாக்லேட், கேக், பொரித்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்க்கக் கூடாது.  சருமம் பளபளப்பாக இருக்க, கிரீம் பயன்படுத்த தேவையில்லை. குளிர்ந்த நீரும், சோப்பும் போதும்.

முகப்பருவை ஒரு போதும் உடைத்து விடக் கூடாது. அப்படி உடைத்தால், அது கரும்புள்ளியாக மாறி, அழகை கெடுக்கும். 

கஸ்தூரி மஞ்சளையும், சந்தனத்தையும் அரைத்து, முகத்தில் பூசினால் முகப்பரு நீங்கும். 

வறண்ட சருமத்தை கொண்ட பெண்கள், வாரத்திற்கு ஒரு முறை ஆலிவ் எண்ணெயை முகத்தில் தேய்த்து, இளம் சுடு நீரில் சோப்பு உபயோகித்து கழுவலாம்.

டீன் ஏஜ் பெண்கள், பேபி சோப் அல்லது கிளிசரின் சோப் பயன்படுத்துவது நல்லது. டூ டீன்-ஏஜ் பெண்கள், பற்களை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சீரற்ற பற்களின் வரிசையை சரி செய்யவும், உயர்ந்து நிற்கும் பற்களை சமன்படுத்தவும் பல் மருத்துவரை அணுகவும்.
டூ அளவுக்கு அதிகமாக மேக் - அப் போட்டுக் கொள்ளக் கூடாது.

அழகாக இருக்க வேண்டுமானால், உடற்பயிற்சியோ, நடை பயிற்சியோ அவசியம் செய்ய வேண்டும்.

Breast Feeding and Importance to Mom's: தாய்ப்பால் தாய்க்குப் புதிய நன்மை

0 comments
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கும் நன்மை நேர்கிறது என்று ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில், புதிய நன்மையாக, குறைந்தபட்சம் ஆறு மாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் களுக்கு தங்கள் வாழ்நாளின் பின்னாளில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறது ஒரு புதிய ஆய்வு.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் கூறும்போது, மூன்று மாத காலத்துக்கும் குறைவாகத் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் களுக்கு ரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்படுவதற் கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

இந்த ஆய்வுக்காக, ஒரு குழந்தையாவது உள்ள 56 ஆயிரம் இளந்தாய்மார்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அதன் முடிவில், தங்கள் குழந்தைக்குப் பாட்டில் பால் கொடுக்கும் தாய்மார்களை விட, ஆறுமாத காலத்துக்காவது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அடுத்த 14 ஆண்டு காலத்துக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கண்டறியப்பட்டது.

அமெரிக்க நோய்ப் பரவல் மற்றும் கட்டுப்பாடு இதழில் பிரசுரிக்கப்பட்ட இந்தக் கட்டுரையில், உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களில் 12 சதவீதம் பேர், தங்கள் குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்காதவர்கள் என்று தெரியவந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்குப் பின்னணியில் இருப்பது, தாய்ப்பால் கொடுப்பதே என்று இந்த ஆய்வில் எடுத்துக்காட்டப்படவில்லை என்றபோதும், தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், சேய்க்கும் நன்மை சேர்க்கும் என்பதை சான்றுடன் நிரூபித்திருக்கிறது.

When Filling up the Insurance Paper: காப்பீட்டுப் படிவத்தை நிரப்பும்போது

0 comments
இன்று காப்பீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. ஒவ்வொருவரும் காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக் கிறார்கள். அதனால், ஒவ்வொரு வீட்டிலும், ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு என்று பல்வேறு காப்பீடுகளை எடுத்திருக்கிறார்கள்.

அதெல்லாம் சரி, காப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதில் நாம் போதுமான அக் கறை எடுத்துக்கொள்கிறோமா? இனிமேல் காப்பீட்டுப் படிவங்களை நிரப்பும்போது இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்...

1. படிவத்தை நீங்களே நேரடியாக நிரப்புங்கள். ஒரு குறிப்பிட்ட காலியிடத்துக்கான பதிலை எப்படி நிரப்புவது என்று தெரியாவிட்டால் ஏஜெண்டின் உதவியை நாடுவதில் தவறில்லை. ஆனால் படிவம் உங்களாலேயே முழுமையாக நிரப்பப்பட வேண்டும். வேறு வழியே இல்லாமல் ஏஜெண்டை படிவத்தை நிரப்பச் சொன்னாலும், கையெழுத்து இடுவதற்கு முன் ஒருமுறை முழுமையாக, நிதானமாகப் படித்துவிடுங்கள். படிவத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா? என்று கவனிப்பது மிக அவசியம். எந்த தவறான தகவலும் பின்னாளில் உங்களுக்கு தொல்லை தருவதாக அமைந்துவிடும்.

2. நிரப்பப்படாத படிவத்தில் கையெழுத்திட்டு, ஏஜெண்ட் பூர்த்தி செய்துகொள்வார் என்று விடவே விடாதீர்கள்.

3. தேவையான எல்லா தகவல்களும் அளிக்கப்பட்டிருக்கின்றனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள். எந்த உண்மையையும் மறைக்க முயலாதீர்கள். அது தேவையற்ற ஒன்றாக உங்களுக்குத் தோன்றினாலும்.

4. சில நேரங்களில், `பிரீமியம்' தொகையைக் குறைக்கச் சில உண்மைகளை `அடக்கி வாசிக்கும்படி' சில ஏஜெண்டுகள் சொல்லக்கூடும். அப்படிச் செய்யாதீர்கள். ஏஜெண்டுக்கு பாலிசிக்கு உரிய கமிஷன் கிடைத்துவிடும். இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது கஷ்டப்படப் போவது நீங்கள்தான். மருத்துவக் காப்பீட்டுப் படிவங்களுக்கு இது மிகவும் பொருந்தும்.

5. சில இடங்களில் கேட்டிருக்கும் தகவல் தேவையற்றதாக, பொருந்தாததாக இருந்தால், அங்கு கோடிட்ட இடத்தை வெற்றிடமாக விடாமல் குறுக்குக் கோடிடுங்கள் அல்லது `பொருந்தாது' என்று குறிப்பிடுங்கள்.

6. பாலிசியை பெற்ற பின்னரும், நீங்கள் கொடுத்திருக்கும் விண்ணப்பத்தில் ஏதேனும் ஒரு தகவல் தவறு என்று உணர்ந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரிவித்துவிடுங்கள்.

புதிதாக ஒரு காப்பீட்டைப் பெற முயலும்போதெல்லாம் இந்த விஷயங்களை எல்லாம் மறக்காமல் இருப்பதும், இவற்றைச் சரியாகப் பின்பற்றி இருக்கிறோமா என்று பார்ப்பதும் ரொம்பவே முக்கியம். அந்த முன்னெச்சரிக்கைச் செயல்பாடு, இழப்பீடு பெற முயலும்போது உங்களின் அவதிகளையும், மன உளைச்சலையும் வெகுவாகக் குறைக்கும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின்னர் அதன் நகல் ஒன்றை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

Amla can Cure Heart Disease: இதய நோய் தீர்க்கும் நெல்லிக்கனி

0 comments
சிறியதாக இருந்தாலும் இதயத்துக்கு நன்மை பயக்கக்கூடியது நெல்லிக்கனி. அதியமான் இதை உணர்ந்தே நீண்டநாள் வாழத் தனக்கு அற்புதமான நெல்லிக்கனி கிடைத்தும், பெருந்தன்மையோடு அதை அவ்வைப் பிராட்டிக்கு அளித்து அவரை உண்ணச் செய்தான். இதயத்துக்கு இனிய அமுதமாக விளங்கும் நெல்லிக்கனியைப் பற்றி பல உண்மைகள் மறைந்துள்ளன.

நெல்லிக்கனியை இந்தியில் `ஆம்லா' என்கிறார்கள். இதன் தாவரவியல் பெயர் `எம்பிலிகா அபிசினாலிஸ்'.

முதிர்ந்த நெல்லிக்கனி பச்சை, மஞ்சள் கலந்த நிறத்தில் பளபளப்போடு ஆறு அழகிய துண்டுகள் அடங்கிய உருண்டைக் கனியாகக் காட்சியளிக்கும். சற்றுத் துவர்ப்பாக இருந்தாலும் இதன் சதைப்பற்றைச் சுவைத்துச் சாப்பிட்டதும் ஒரு குவளை தண்ணீர் அருந்தினால் இதன் இன்சுவையை உணரலாம்.

இதயக் கோளாறு உள்ளவர்கள் அலோபதி இதயநோய் நிபுணர்கள் கூறும் அறிவுரைகளைக் கவனிக்க வேண்டும். நெல்லிக்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் கூறும் உண்மைகள் நமக்கு வியப்பை அளிக்கும்.

நெல்லிக்கனிச் சாற்றில் `வைட்டமின் சி' சத்து அதிகம். அதாவது, ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட 20 மடங்கு. ஒரு சிறு நெல்லிக்கனியை உண்பது இரண்டு ஆரஞ்சுப் பழங்களைச் சாப்பிடுவதற்குச் சமம். தொற்றுநோய் தடுப்புச் சக்தியைப் பெற நெல்லிக்கனிச் சாற்றைப் பருகலாம். கொழுப்புப் பொருளைக் கரைக்கும் தனித்தன்மையும் இதற்கு உண்டு என்று தெரிவிக்கப்படுகிறது. ரத்தம் சீராகப் பாய்வதைத் தடுக்கும் கொழுப்புப் பொருளை நெல்லிக்கனிச் சாறு கரைத்துவிடுவதால் இதயத்துக்குப் பலம் சேர்ப்பதாக இது அமைகிறது.

ரத்த சோகையைக் குணப்படுத்தும் அருங்கனியான நெல்லி, ஆறாத ரணத்தை ஆற்றுவதுடன், எலும்பு முறிவைச் சீராக்கி, குடல் ரணத்தையும் குணப்படுத்தும்.

தாய்ப்பால் சுரக்க நெல்லிக்கனி வகை செய்கிறது. அதன் அமிலச்சத்து மலச்சிக்கலை நீக்கும். `ஹெமரேஜ்' என்ற ரத்தப் போக்குக்கும், அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்குக்கும் ஏற்ற கனி இது.

ரத்த சோகை, மஞ்சள் காமாலை, உணவில் வெறுப்பு நிலை, தீராத இருமல் ஆகியவற்றுக்கு நெல்லிக்கனி விடை கொடுக்கும்.

திரிபலா சூரணத்துக்கு நெல்லிக்கனியை அவசியம் உபயோகிக்க வேண்டும். கல்லீரலைப் பலப்படுத்திச் சரிவர இயங்கச் செய்யும் சக்தி பெற்றது நெல்லி.

ஆசியாவில் அதிகம் விளையும் நெல்லிக்கனியின் மகத்துவத்தை மேலை நாட்டினரும் உணர்ந்து மருத்துவத் துறையில் பயன்படுத்துகிறார்கள்.

இளநரையைக் குணப்படுத்தும் அற்புத சக்தி நெல்லிக்கனிக்கு இருக்கிறது. கூந்தல் தைலம், ஷாம்பூ ஆகியவற்றைத் தயாரிப்பதற்கும் இது பயன்படுகிறது. அச்சுத் துறைக்கான மை வகைகள் தயாரிக்கவும், `ஹேர் டை' தயாரிக்கவும் நெல்லி ஏற்றது.

மருத்துவர்கள் ஆஸ்துமா நோயைக் குணப்படுத்த இதன் விதைகளைப் பொடி செய்து உண்ணச் சொல்கிறார்கள்.

நெல்லியின் கனியும், கொட்டையும் பயன்படுவதோடு, பட்டையையும், இலையையும் தோலைப் பதனிடும் தொழிற்சாலைகளும் அதிகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

நெல்லிக்கனியை இந்து மதத்தினர் மிகவும் போற்றுகிறார்கள். நெல்லி மரத்தை வழிபடுவதும் உண்டு. அக்சய நவமி அன்று வன போஜனம் செய்பவர்கள் நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து கூட்டமாக உணவு உண்பதைப் புனிதமாகக் கருதுகிறார்கள். இதற்கும் மேலாக, முதல்நாள் உண்ணா நோன்பு இருந்தவர்கள், மறுநாள் விரதம் முடித்து உணவு உண்ணத் தொடங்கும்போது முதலாவதாக நெல்லிக்கனியையோ அல்லது உலர்ந்த நெல்லிக்கனியையோ அரைத்து மோரில் சேர்த்துப் பருகிய பின்பே சாப்பிடத் தொடங்குகிறார்கள். நெல்லிக்கனி உடல் ஆரோக்கியம் தரும் ஊறுகாயாகவும், உலர்த்தி வைத்தும் பயன்படுத்த ஏற்றது.

Billa 2: Mp3 Songs, Lyrics, Download Links

0 comments

Billa 2 Song Details

Gangster - Yuvan Shankar Raja and Stefny
Idhayam - Shweta Pandit
Yedho Mayakkam - Yuvan Shankar Raja, Tanvi Shah and Suvi Suresh
Madurai Ponnu - Andrea Jeremiah
Unakkulle Mirugam - Ranjith
Theme Music

Billa 2 Track Details



MovieBilla 2
Release Dare1 May 2012
GenreTamil film soundtrack
LanguageTamil
Released BySony Music Entertainment
ComposerYuvan Shankar Raja

The Links for Downloading the song's will be ubdated soon with the Billa 2 Lyrics in our blog page.

Indonesian Mutual Funds: Positive Sentiment Spurs on 2012

0 comments
Indonesian total assets under management in the Indonesian Mutual Funds industry rose 28 percent to Rp 193.1 trillion ($21 billion) in the January-March period from a year earlier, according to data from Indonesia Mutual Fund Managers Association (APRDI). 

The economy last year grew 6.5 percent, the fastest pace since 1996, and that helped to lift average per capita income to $3,500 from $3,000 in 2010 — elevating many of the country's 240 million people into the middle class. 

"Per capita income has increased to more than $3,000 now, so there are more people wanting to invest," Abiprayadi Riyanto, the APRDI chairman, said on Tuesday. Investments in Indonesian Mutual Funds start as low as Rp 100,000, he added. 

Assets in the Indonesian Mutual Funds industry may rise by 10 percent to 15 percent this year, "as long as the conditions in Europe are improving," Abipriyadi said.

Read more about this Indonesian Mutual Funds here.

Orkut Proxies for 25.04.2012

0 comments

Facebook Proxies for 25.04.2012

0 comments

மனைவிக்கு, கணவர் கொடுக்கும் பரிசு

0 comments
மனைவிக்கு, கணவர் பரிசுகள் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மனைவிக்கு மனப்பூர்வமாக தரும் பரிசுகள் மரியாதைக்குரியதாகவும், நேசிப்பின் சின்னமாகவும் என்றும் அவள் நினைவில் நிறைந்திருக்கும்.

அந்த பரிசு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்?

- உபயோகப்படுத்தக்கூடிய பொருளாக இருக்கலாம்.

- நேரடியாக உபயோகம் இல்லாவிட்டாலும், அழகான பொருளாகவும் இருக்கலாம்.

மனைவிக்கு தேவையான உபயோகப் பொருளை வாங்கிக்கொடுத்தால், அதை உபயோகப் படுத்தும்போதும் கணவரின் நினைவுவரும். அதனால் மனைவி எப்போதும் தன்னை நினைவில் வைத்திருக்கவேண்டும் என்று விரும்பும் கணவர்கள், அவள் அடிக்கடி பயன்படுத்தும் செல்போனை பரிசாக வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். ஆனால் அடிக்கடி உபயோகப் படுத்தும் பொருட்கள் சீக்கிரமே பழையதாகி, நாளடைவில் செயலற்றதாக ஆகி விடும். அதனால் தான் வாங்கிக்கொடுக் கும் பரிசு, செயலற்றதாகவே ஆகக்கூடாது என்று கருதும் கணவர்கள், கலைப் பொருட்களை வாங்கி பரிசாக வழங்கி விடுகிறார்கள். அழகான அந்த பொருட்கள் எப்போதும் கணவரை பளிச்சென நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.

மனைவியை மகிழ்வித்துப் பார்ப்பதுதான் தங் கள் கொள்கை என்று நினைக்கும் கணவர் கள் அழகிய புடவையோ, நகையோ பரிச ளித்து நல்ல பெயர் வாங்கி விடுகிறார்கள்.

பரிசுகள், திருமண பந்தத்தை கவுரவித்து மரி யாதை செலுத்துவதாக இருக்கிறது. மனை விக்கு முதன் முதலாக கொடுக்கப்படும் பரிசு கள் இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து, நீண்ட நாட்கள் மகிழ்விக்கும் தன்மை கொண்டது. இந்த பரிசுகளை சம்பிரதாயமானது, சராசரி யானது என்று இரண்டு வகையாகப் பிரிக் கலாம்.

சம்பிரதாய ரீதியாக தரப்படும் பரிசுகள் விலை உயர்ந்ததாகவும், குடும்ப கவுரவத்தை வெளிப் படுத்தும் அம்சமாகவும் இருக்கும். அந்த பரிசுகள் தொடக்கத்தில் அதிக ஆச்சரியத் தையும், மகிழ்ச்சியையும் தந்தாலும், அந்த பரம்பரை பரிசுகளை பாதுகாக்கும் பெட்டகம் மாதிரியே அந்த பெண் ஆகிப்போவாள். அந்த பரிசுகளும் பெரும்பாலும் அந்த பெண்ணால் தனிப்பட்ட முறையில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்காது. சம்பிர தாய பரிசுகள் பெரும்பாலும் பெட்டகத்தில் வைத்து பூட்டக் கூடியதாகத்தான் இருக்கும். சம்பிரதாயம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் தரப்படும் பரிசுகள், பயன்பாட்டு அடிப் படையில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சம்பிரதாய பரிசு எப்போதாவது ஒருசில முறை தான் கிடைக்கும். தனிப்பட்ட பரிசுகள் அடிக்கடி கிடைக்கும். அதனால் இந்த தனிப்பட்ட பரிசுகள் மீது பெண்களுக்கு ஆர்வம் அதிகம். அடிக்கடி அவர்களை சிரிக்கவைக்க இந்த பரிசுகள் உதவும்.

வாழ்க்கையின் வெகுதூரத்தை கடந்த பிறகும் மலரும் நினைவுகளாக, பல பரிசு பொருட்கள் நிலைத்து நிற்கின்றன. பெரும்பாலான நேரங்களில் சாதாரண பரிசு பொருட்கள் கூட, காலங்கடந்து நின்று பெண்களை மகிழ்ச்சியடையச் செய்யும். மிகப்பெரிய பரிசுகள் கிடைத்தபின்பும், அந்த சாதாரண பரிசுகள் பெண்கள் மனதில் நிலைத்து நிற்பதும் உண்டு.

சில பரிசுகள் என்ன பரிசு என்பதைவிட, யார் கொடுத்தது என்பதைவைத்து சிறப்பு பெறும். பிற்காலத்தில் ஏற்படும் சில கசப்பான நினைவுகளை மாற்றியமைக்கும் ஆற்றல்கூட அந்த பரிசுகளுக்கு உண்டு.

முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே பெண்களுக்கு பரிசுகளை கொடுத்துக்கொண்டிருந் தார்கள். பெண்கள் உழைப்பதில்லை என்பதால் அந்த நிலை. இப்போது பெண்கள், ஆண்களைவிட அதிகம் சம்பாதிக்கும் நிலை இருந்துகொண்டிருக்கிறது. அதனால் ஆண் களுக்கு நிகராக பெண்களும் அன்புப் பரிசுகளை அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பழைய காலத்தில் பெரிய பெரிய சமஸ்தானங்களில்கூட மனைவிக்கு பரிசு கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. மன்னர் ஒருவர் தன் மனைவிக்கு அன்னப்பறவையின் இறகை பரிசாக கொடுத்தார். வியந்து போன அரசி, அவரை ஆச்சர்யத்துடன் பார்க்கையில், "இதை நீ எத்தனை காலம் பத்திரமாக வைத்திருக்கிறாய் என்பதைப் பொறுத்துத்தான் என் மீது நீ வைத்திருக்கும் அன்பை நான் புரிந்து கொள்வேன்'' என்றார். அரசி அதனை வாழ்நாள் முழுவதும் தங்கப் பேழையில் வைத்துப் பாதுகாத்தார். அன்னப் பறவையின் இறகு என்பது அந்த காலத்தில் பெரிய விஷயம் இல்லை. ஆனால் அந்த மெல்லிய இறகில் அந்த மன்னர் தன் அன்பையும் கலந்துவிட்டதால் அது தங்க பேழைக்கு செல்லும் உயர்ந்த பரிசாகிவிட்டது. நீங்கள் உங்கள் மனைவிக்கு வழங்கும் பரிசும் அன்பு கலந்ததாக இருக்கட்டும். அவள் அதை தங்க பேழை போன்ற தன் மனதுக்குள் வைத்து பாது காப்பாள். அதன் மூலம் உங்கள் ஆத்மார்த்த உறவு மேம்படும்.

வங்காளதேசத்து மீனவர் ஒருவர் தன் மனைவிக்கு வெண் சங்கு ஒன்றை அன்பு பரிசாக அளித்தார். அதை பத்திரமாக வெகுகாலம் பாதுகாத்து வந்தாள் மனைவி. மனைவி இறக்கும் தருவாயில் மீனவர் அந்த வெண் சங்கை வீடு முழுவதும் தேடினார். எங்கும் கிடைக்காமல் போகவே, மனைவியிடம் வந்து நான் கொடுத்த அன்பு பரிசை தொலைத்து விட்டாயா என்று கேட்டார். அவளோ தொலைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அதில் வளையல் செய்து கைகளில் அணிந்திருக்கிறேன் இதோ பாருங்கள் என்றாள்.

அன்றிலிருந்து வங்காளதேசத்தில் மணமகளுக்கு மணமகன் வெண் சங்கு வளையல் அணிவிக்கும் வழக்கம் உருவானது. இன்றும் அது தொடர்கிறது!

Balance Transfer on Credit Card's: கிரெடிட் கார்டு `நிலுவை மாற்றம்’ பற்றித் தெரியுமா?

0 comments
`கிரெடிட் கார்டு' பயன்படுத்தும் பலருக்கே அதன் அனைத்து வசதிகளும் தெரிவதில்லை. அந்தவகையில், `நிலுவை மாற்றம்' (`பாலன்ஸ் டிரான்ஸ்பர்') குறித்து அறிந்தவர்கள் வெகு சிலராகத்தான் இருப்பார்கள்.

அதென்ன நிலுவை மாற்றம்?

கிரெடிட் கார்டு நிறுவனங்களால் கிரெடிட் கார்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வசதியாகும் இது. இதன்படி, ஒரு கார்டில் உள்ள நிலுவைத் தொகையை, அதிகம் பயன்படுத்தாத இன்னொரு கார்டு அல்லது ஒரு புதிய கார்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

நிலுவை மாற்ற வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறைந்த வட்டி அல்லது வட்டியில்லாத காலம் போன்ற சலுகைகளை அளிக்கின்றன.

அதிகம் பயன்படுத்தாத அல்லது புதிய கார்டுக்கு ஒருவர் நிலுவை மாற்ற வசதியில் தொகையை மாற்றும்போது, அந்த கார்டின் `கிரெடிட் லிமிட் அளவு', மாற்றும் தொகைக்கு ஏற்பக் குறையும்.

உதாரணமாக, உங்களின் `கிரெடிட் அளவு' 1 லட்ச ரூபாய் என்ற நிலையில் நீங்கள் ரூ. 40 ஆயிரம் அளவுக்கு நிலுவை மாற்றம் செய்ய நினைக்கிறீர்கள் என்றால், உங்களின் கிரெடிட் அளவு 60 ஆயிரமாகக் குறையும். அத்துடன், கிரெடிட் அளவில் 80 சதவீதத் தொகைக்கு மேல் நிலுவை மாற்றம் செய்ய முடியாது.

நிலுவை மாற்ற வசதி, எப்போது பயனுள்ளதாக இருக்கும்?

அதிக வட்டி விதிக்கப்படும்போது: உங்களின் நடப்பு கிரெடிட் கார்டு தொகைக்கு விதிக்கப்படும் வட்டி, புதிய கார்டு ஒன்றுக்கு விதிக்கப்படும் வட்டியை விட அதிகமாக இருக்கும்போது, நிலுவைத் தொகையை புதிய கார்டுக்கு மாற்றிக்கொள்வதன் மூலம் வட்டியைக் குறைத்துக்கொள்ளலாம்.

சேவை சரியில்லாதபோது: நடப்பு கிரெடிட் கார்டு நிறுவனத்தின் சேவை, குறிப்பாக சரியாக `பில்' அனுப்பாமல் இருப்பது, பில் தொகைக்கு ரசீது அனுப்பாதது போன்றவற்றின்போது நிலுவை மாற்ற வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்போது, நடப்பு கார்டில் இருந்து புதிய கார்டுக்கு தொகையை மாற்றம் செய்து, நடப்பு கார்டு சுமையில் இருந்து விடுதலை பெறலாம்.

நிலுவைத் தொகையைச் செலுத்த முடியாதபோது: ஒருவருக்குத் தனது கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகை அதிகமாகி, பண நெருக்கடி காரணமாக அதை உடனடியாகச் சரிசெய்ய முடியாதபோது, நிலுவை மாற்றம் ஒரு தற்காலிகமான நிவாரணமாக அமையும். ஆம், நீங்கள் `மூச்சு விட்டுக்கொள்ள' ஒரு வாய்ப்புதான் இது.

Post Delivery: பிரசவத்திற்குப் பிறகும் அக்கறை தேவை!

0 comments
குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார். அவர்கள் உணவு விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தினால், உடல் தொடர்பாக ஏற்படும் பல பிரச்சினைகளை தவிர்த்து விடலாம்.

அதற்கு என்ன செய்யலாம்?

* சாதாரணமாக தேவைப்படும் கலோரிகளை விட அதிகமாக 500 கலோரிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த அளவு, ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப மாறுபடும். வேலை செய்யாதவர்களுக்கு தினசரி கலோரி 1800 என்றால், வேலை செய்பவர்களுக்கு 2 ஆயிரம் கலோரிகள் தேவையாக இருக்கும். பொதுவாக சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ, ரத்த இழப்பு அதிகமாக இருக்கும். அதை அவர்கள் கண்டிப்பாக ஈடுசெய்ய வேண்டும். அதற்கு கீரைகள், பேரிச்சம்பழம், கேழ்வரகு, கம்பு, கறிவேப்பிலை பொடி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது தினமும் ஒரு கீரை அவசியம்.

* பிரசவத்திற்கு பிறகான உடல் பராமரிப்பில் பிறந்த குழந்தையின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும். அந்தக் காலக்கட்டத்தில் குழந்தையின் உணவு தாய்ப்பால்தான் என்பதால், தாய்மார்கள் தங்கள் உணவு விஷயத்தில் தனிக் கவனத்துடன் இருக்க வேண்டும். கிடைத்த உணவுகளை எல்லாம் சாப்பிடக் கூடாது. கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்த்து புரத, நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் இதர சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு பால் புகட்டுவதால், கால்சியம் மற்றும் புரதச் சத்து அவர்களுக்கு அதிகமாக தேவைப்படும். அதனால், பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், நண்டு, இறால், சோளம் ஆகிய அதிக கால்சிய சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது.

* தினமும் குறைந்தபட்சம் 2 டம்ளர் பால் குடிப்பது அவசியம். புரதச் சத்துக்கள் அதிகம் கொண்ட பாதாம், பிஸ்தா, அக்ரூட், பச்சை வேர்க்கடலை, மீன், முட்டை ஆகியவற்றை உணவாக எடுத்துக்கொண்டு வந்தால், அவை சீராக பால் சுரக்க உதவும்.

* தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இது மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் முன் முடிந்தவரை நிறைய தண்ணீர் குடித்துவிட்டு பால் புகட்டலாம். இதனால் பால் நன்றாக சுரக்கும்.

* கர்ப்ப காலத்தில் கருவில் குழந்தை இருப்பதால், வயிறு நன்றாக விரிந்திருக்கும். குழந்தை பிறந்த பிறகு அவை மெதுவாக சுருங்கும். இந்த சமயத்தில் அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள், கிழங்கு வகைகள் மற்றும் தேங்காய் போன்ற உணவுகளை சாப்பிட்டால் வாயு, மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். எனவே பிரசவத்துக்கு பிறகு ஒரு மாத காலம் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அஜீரணத்தை தவிர்க்க இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடலாம்.

* சில பெண்கள் தாய்ப்பால் சுரப்பு அதிகம் இல்லாமல் அவதிப்படுவார்கள். அவர்கள் சுறாபுட்டுடன் சோம்பு கீரை சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

For a nice Body கட்டுடலுக்கு…

0 comments
திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் ஆணுக்குள்ளும், பெண்ணுக் குள்ளும் தங்கள் உடலைப் பற்றிய ஆவேசம் எட்டிப்பார்க்கிறது. அதுவரை கண்டதையும் தின்று உடல் பெருத்துப் போயிருந்தால் ரொம்பவே கவலைப் படுகிறார்கள். ஜிம் எங்கே இருக்கிறது என்று தேடிப்போகிறார்கள். உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசகர்களை நாடிச் செல்கிறார்கள். நேரத்திற்கு தூங்கவும் முயற்சி செய்கிறார்கள்.

திருமணத்திற்கு தயாராக இருக்கும் அனைவரும் தங்கள் உடலில் அக்கறை கொள்வது மிக அவசியம். திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து அவர்கள் கவனம் செலுத்தினால், தங்கள் உடலை கட்டுடல் ஆக்கிவிடலாம். அதற்கு என்ன செய்யவேண்டும் தெரியுமா?

உணவில் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினி கிடந்துவிடக்கூடாது. உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்று பட்டினி இருந்தால், அது மோசமான பின்விளைவுகளை உருவாக்கிவிடும். உடல் சோர்ந்து, சுறு சுறுப்பு நீங்கி, இருக்கிற அழகும்போய் வருந்தும் நிலை உருவாகிவிடும். தசை நெகிழ்ந்து, சருமமும் சுருங்கிவிடும். அதனால் முறையான உணவுக்கட்டுப்பாட்டோடு உடலுக்கு தேவை யான உடற்பயிற்சியையும் செய்யவேண்டும்.

உடற்பயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

உடற்பயிற்சியில் இரண்டு வகை உண்டு. ஒன்று: ஸ்டென்ர்த்தனிங் டிரைனிங். இரண்டு: கார்டியோ எக்சசைஸ். தசைகளை வலுப்படுத்துவதற்கானது முதல் வகை உடற்பயிற்சி. உடலில் இருக்கும் கொழுப்பை அகற்றுவதற்காக செய்யும் பயிற்சிகள் இரண்டாவது வகை யாகும். ட்ரெட் மில், சைக்கிளிங், ஓடுதல், நடனமாடுதல், ஏரோபிக்ஸ் செய்தல் போன்றவை கார்டியோ பயிற்சியாகும். இவைகளை தினமும் செய்தால் உடலில் இருக்கும் கொழுப்பு குறையும். கட்டுடல் கிடைக்கும். தசையும் பலமாகும். இரண்டு வகை உடற் பயிற்சி களையும் அவரவருக்கு தேவையான அளவில் தொடர்ந்து செய்துவர வேண்டும்.

உடல் குண்டாக இருப்பவர்கள், `பரவாயில்லை. என் உடல் எடையும் குறைந்துவிட்டது' என்று சொல்லும் நிலையை அடையவேண்டும் என்றால் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். காலை எழுந்தவுடன் சோம்பேறித்தனத்துடன், `நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்று நினைக்காமல், தினமும் உடற்பயிற்சிக்கு செல்லவேண்டும். திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது என்ற நிலையில் இருப்பவர்களும், உடற்பயிற்சி மேற்கொண்டால் அந்த அளவிற்கு அவர்கள் உடலில் நல்ல மாற்றம் ஏற்படத்தான் செய்யும்.

சிலர் ஒல்லியான உடல்வாகுடன் காணப்படுவார்கள். அவர்களுக்கு தங்கள் உடல் எடையை சற்று அதிகரித்தால் நல்லது என்ற எண்ணம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் `வெயிட் டிரைனிங்' போன்ற கண்டிசனிங் பயிற்சிகளை பெறவேண்டும். நிபுணரின் ஆலோ சனையை பெற்று அதற்கு தகுந்தபடி உணவையும் உண்டால், சில மாதங்களில் அவர்கள் உடல் பூசி மெழுகினாற்போல் ஆகி விடும்.

குண்டான உடல் எடையை குறைக்க பயிற்சி பெறும்போது சிலருக்கு இரண்டு மாதத்திலே நல்ல மாற்றங்கள் தெரிந்துவிடும். அதனால் தானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜிம்முக்கு போனால் போதும் என்று நினைத்து விடக்கூடாது. ஒவ்வொருவர் உடலுக்கு தக்கபடி பயிற்சி பெறவேண்டும். அவரவர் உடல்வாகுக்கு தகுந்தபடியே, உடலில் மாற்றங்கள் ஏற்படும்.

புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள், சுய பயிற்சிகளை தவிர்த்து ஜிம்முக்கு சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும். அதுதான் சரியான வழிமுறையாக இருக்கும்.

ஜிம்முக்கு போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ட்ரெட் மில், சைக்கிளிங் போன்ற பயிற்சி கருவிகளை வாங்கி வீட்டிலே வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்வது போன்றவைகளும் நல்ல உடற்பயிற்சிகளே. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களில் இரண்டு வாங்கி, இரண்டு கைகளிலுமாக பிடித்துக்கொண்டு ஸ்டென்ர்த் எக்சசைஸ் செய்வதும் நல்ல பலன்தரும்.

ஜிம் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. நல்ல பயிற்சியாளர், தரமான பயிற்சி கருவி கள் இருக்கவேண்டும். தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது. மன துக்கு உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும் விதத்தில் ஜிம் அமைந்திருக்க வேண்டும்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பு மணமகனும், மணமகளும் பிசியாகிவிடுவார்கள். அதனால் அவர்கள், `காலை முழுவதும் வேலை இருக்கிறது. மாலை நேரத்தில் வந்து பயிற்சி பெறுகிறோம்' என்று தள்ளிப்போடக்கூடாது. அதிகாலையில் பயிற்சி பெறுவதே சிறந்தது. உடற்பயிற்சிக்கு பிறகுதான் மற்ற வேலைகள் என்று, அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். காலையில் பயிற்சி செய்தால் அன்று முழுவதும் உடல் உற்சாகமாக இருக்கும்.

பத்து நிமிடம் முதல் நாள் பயிற்சி பெற்று விட்டு, பின்பு நாளுக்கு நாள் நேரத்தை அதிகரிக்கவேண்டும். வாரத்தில் ஐந்து, ஆறு நாட்கள் ஒரு மணி நேரத்திற்கு குறையாத அளவிற்கு பயிற்சி பெற வேண்டும். கார்டியோ பயிற்சி பெறும்போது முதல் ஐந்து நிமிடங் கள் உடலில் உள்ள சக்தி வெளியேறும். அதன் பிறகுதான் உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பின் சக்தி செலவாகத் தொடங்கும். அவர்கள் தினமும் ஒன்றேகால் மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

Be Cool in Summer: கோடையில் `கூல்’ ஆகலாம்!

0 comments
கோடை காலம் வந்தாலும்தான் வந்தது, எல்லா இடங்களிலும் அக்னி நட்சத்திர தகிப்பு மக்களை பாடாய்படுத்துகிறது. அதில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்படியென்றால், தர்ப்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். கோடையை கூல் ஆக்கிவிடலாம்.

தர்பூசணி : தாகத்தைத் தணிக்கும் தர்ப்பூசணிக்கு பசியை போக்கும் சக்தியும் உண்டு. வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும்.

ஆரஞ்சு : பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும், பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் உதவுவது இது. ஒருவர் தொடர்ந்து ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் அவரது வாய் சுத்தமாகிறது. காய்ச்சலுக்கும் இது அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும்.

காய்ச்சலின்போது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் உடலுக்குத் தெம்பு அதிகரிக்கும். அதோடு, செரிமானத்தைச் சரியாக்கி, பசியைத் தூண்டும். குடல்களின் பாதையில் தொற்று நேராமல் பராமரிக்கும். குடல்களின் இயக்கத்திற்கு வலுச் சேர்க்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் குமட்டலுக்கு ஆரஞ்சு சிறந்த மருந்து. செரிக்காத உணவால், வயிற்றில் பொருமலுடன் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறை குடிக்க உடனடி நிவாரணம் கிடைக்கும். ஜலதோஷம் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிப்பது நல்லது.

சாத்துக்குடி : குளிர்ச்சியான இனிப்பு சுவை கொண்ட சாத்துக்குடி தாகத்தைத் தணிக்கக் கூடியது. வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப்பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு இது உதவுகிறது. வயிற்றில் அமிலத்தன்மை சேர்வதை இதில் உள்ள காரத்தன்மை குறைத்து, வயிறு எரிச்சலைக் கட்டுப் படுத்துகிறது. நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஆற்றல் இதில் நிறைய உள்ளது.

சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடி பழச்சாற்றை வெந்நீரில் கலந்து அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்லது.

வெள்ளரிக்காய் : வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகை உண்டு. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியை தருகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது. வெள்ளரியில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்கள் இதை சாப்பிடுவது நல்லது. வெள்ளரிச்சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் அதிகப் பலன்கள் கிட்டும். நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களும் இதை சாப்பிடுவது நல்லது

Spicy Vegetable: ஸ்பைசி வெஜிடபிள்

0 comments
பிரைட் ரைஸ், நூடுல்ஸ், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றுக்கு சுவையான சைடு டிஷ் தேவை. அதற்கு ஸ்பைசி வெஜிடபிள் தயாரித்துக் கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

ஸ்பைசி வெஜிடபிள் தேவையானவை:

காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர் சேர்த்து-1/4 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள்- 1 டேபிள் ஸ்பூன்
சோளமாவு-ஒரு டேபிள் ஸ்பூன்
மைதா மாவு-ஒரு டேபிள் ஸ்பூன்
வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்
அஜினோமோட்டோ- 1 சிட்டிகை
தக்காளி கெச்சப்- 1 டீஸ்பூன்
லெமன் ஜூஸ்- 1/4 டீஸ்பூன்
எண்ணைய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
உப்பு-தேவைக்கேற்ப

ஸ்பைசி வெஜிடபிள் செய்முறை:

காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி தேவையான உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதா மாவு தூவிப் பிசிறி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், அஜினோமோட்டா, தக்காளி கெச்சப் சேர்த்து கிளறவும். தேவையான உப்பு சேர்த்து கிளறி அத்துடன் வெண்ணைய் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் பொரித்த காய்கறிகளைச் சேர்த்து புரட்டி கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி விடவும். மொறுமொறுவென நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த ஸ்பைசி வெஜிடபிள் சைடு டிஷ்சை மாலை நேர சிற்றுண்டியாகக் கூட செய்து சாப்பிடலாம்

Summer Vacation Tips: கோடை விடுமுறையில் ஊருக்குப் போகிறீர்களா?

0 comments
கோடை விடுமுறைக்காலம் வந்தாயிற்று. படிப்பு படிப்பு என்று எந்நேரமும் அறைக்குள் அடைபட்டுக் கிடந்த இளந்தளிர்கள் இப்போது கொஞ்சம் காற்றாட ஹாயாக எங்காவது சுற்றுலா போய் வர விரும்புவார்கள். பெற்றோர்கள் மட்டுமென்ன, இந்த கோடை விடுமுறை நேரத்திலும் அவர்கள் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்பது கட்டாயமா? அவர்களும் பிள்ளைகளை முந்திக் கொண்டு சுற்றுலாத் திட்டம் போட்டு வைத்திருப்பார்கள்.

இதுவரை சரிதான். எத்தனை நாள் வீட்டை விட்டுப் போகிறீர்களோ, அத்தனை நாட்களுக்கும் வீட்டு பாதுகாப்புக்கு என்ன செய்யலாம் என்பதை திட்டமிட்டீர்களா?

அது தான் பெரிய பூட்டாகப் போட்டு பூட்டி விட்டுத் தானே போவோம் என்பீர்கள். அது மட்டும் போதுமா? இன்னும் சில ஜாக்கிரதைகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த திருட்டும் திட்டமிடாமல் நடத்தப்படுவதில்லை. வீடு கட்டுபவர்கள் பந்தாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதுகாப்புக்கு கொடுப்பதில்லை. ஐம்பது லட்ச ரூபாயை கொட்டி தாம்தூம் என்று பகட்டாக வீடு கட்டுபவர்கள், பெரிய ஜன்னல், பெரிய கதவு, வென்டிலேட்டர், ஏ.சி..க்காக பெயர்த்தெடுத்த ஜன்னல் என்று ஆரம்பத்திலேயே திருடர்கள் விசிட்டுக்கு வசதி பண்ணிக் கொடுத்து விடுகிறார்கள். அதோடு வீட்டு பாதுகாப்புக்கு காயலான் கடையில் கால்வாசி விலைக்கு வாங்கிய பூட்டு வாசலில் தொங்கும். இம்மாதிரி பூட்டுக்கள் திருடர்களை பார்த்த மாத்திரத்தில் அதுவாகவே திறந்து கொள்ளும்.

வெளியூர் போவதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் தம்பட்டம் அடித்து விட்டுப் போவது நல்லதல்ல. அதுமாதிரி பயண தினத்தில் ஆட்டோ, அல்லது டாக்சியை வீட்டுக்கு வரவழைத்து ஒட்டுமொத்த குடும்பமும் ஏறிச்செல்வதும் சரியல்ல. ஆளில்லா வீடு என்பது அப்போதே உறுதிப்படுத்தப் பட, திருடர்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது. குறைந்த பட்சம் தெருமுனை வரை வந்தாவது ஆட்டோ பிடிக்கலாம்.

நீங்கள் வெளியூரில் எத்தனை நாட்கள் தங்கப் போகிறீர்கள் என்பதையும் அதுவரை பாதுகாப்பு அவசியம் என்பதையும் ஒரு மனுவாக குறிப்பிட்டு அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொடுக்கலாம். நள்ளிரவு ரவுண்ட்ஸ் வரும் நேரங்களில் உங்கள் வீட்டீன் மீது போலீசாரின் விசேஷப் பார்வை படும். இதுவே வசதியானவர்கள் என்றால் தனியார் செக்யூரிட்டி உதவியையும் நாடலாம்.

ஊருக்குப் போகும்போது நகைகளையோ பெரிய தொகையையோ வீட்டில் வைத்து விட்டுப் போவது சரியல்ல. ஊரில் இருந்தாலும் உங்கள் கவனம் முழுக்க அவற்றின் மீதே இருக்கும். அதிக நகைகள் இருந்தால் வங்கியில் உங்கள் பெயரில் ஒரு சேப்டி லாக்கர் வாங்கி அதில் வைக்கலாம்.

நீங்கள் பிளாட்டுகளில் வசிப்பவர்களாக இருந்தால், ஒன்று அல்லது இரண்டு செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஆனால் அது போதாது. உங்கள் அருகாமை வீடுகளில் உள்ள பிளாட்டில் இருப்பவர்களிடம் அவர்கள் போன் நம்பரை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஊருக்குப் போனதும் நட்பு ரீதியில் தினமும் ஒருமுறையாவது அவர்களுடன் பேசி விடுங்கள். அப்போது வீட்டுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என்பதை அவர்கள் இயல்பாக பேசுவதில் இருந்தே உணர்ந்து கொள்வீர்கள்.

சிலர் வீடுகளுக்கு பேப்பர் பையன்கள் பால் போடுபவர்கள் அனுதினமும் வருவார்கள். இவர்களிடம் ஊருக்குப் போகும் ஒரு வாரத்துக்கு முன்பே இத்தனை நாட்களுக்கு பால், பேப்பர் வேண்டாம் என்பதை தெளிவுபடுத்தி விடுங்கள். இவர்களில் யார் ஒருவரிடம் சொல்ல மறந்தாலும் வீட்டுவாசலில் நீங்கள் கட்டி வைத்திருக்கிற பை நிரம்பி நீங்கள் வீட்டில் இல்லை ஊருக்கே உரக்கச் சொல்லி விடும்.

இதையெல்லாம் சரியாக செய்து விட்டீர்களானால் உங்கள் டூர் நிச்சயம் கொண்டாட்டம் நிறைந்ததாய் அமையும்.

Are you a Sentiment Women: `சென்டிமென்ட்’ பெண்ணா நீங்கள்?

0 comments
பெண்கள் எப்போதுமே சென்சிடிவ் டைப் ஆனவர்கள். மனம் கஷ்டப்படும்படியாக யாரேனும் ஏதாவது சொல்லிவிட்டால் பொசுக்கென்று கண்ணீர் விட்டு விடுவார்கள்.

நீங்களும் அதுபோன்று அடிக்கடி கண்ணீர் விட்டு அழும் சென்டிமென்ட் பெண்ணா? அப்படியென்றால், உங்கள் கணவர் அல்லது காதலர் விலகி செல்வதுடன் உங்களது முகத்தின் அழகும் குறைந்து போகலாம் என்று எச்சரிக்கிறது ஓர் ஆய்வு.

இஸ்ரேலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டார்கள். ஆண்கள், பெண்கள் 60 பேர் இதில் பங்கேற்றனர். அவர்களில் பெண்களை மாத்திரம் ஒரு குழுவாக பிரித்து பரிசோதனையைத் துவங்கினர்.

சோகமான அழுகைக் காட்சிகள் கொண்ட படத்தை தனியறையில் அவர்கள் முன்பு சுமார் அரை மணி நேரம் ஓடவிட்டனர். பெண்கள்தான் சென்டிமென்ட் ஆசாமிகள் ஆயிற்றே... வழக்கம்போல் அவர்களது கண்களில் கண்ணீர் பெருக ஆரம்பித்து விட்டது.

அப்போது அறைக்குள் நுழைந்த ஆராய்ச்சியாளர்கள், படம் பார்த்தே கண்ணீர் வடித்த பெண்களின் கண்ணீரை ஒரு சோதனைக் குழாயில் சேகரித்தனர். இன்னொரு சோதனைக் குழாயில் உப்பு கலந்த நீரை தயார் செய்தனர்.

உண்மையான கண்ணீரை சில பெண்களின் முகத்திலும், உப்பு நீரை மற்ற பெண்கள் முகத்திலும் பேஷியல் போன்று அப்ளை செய்தனர். யாருக்கு கண்ணீர், யாருக்கு உப்பு நீர் அப்ளை செய்யப்பட்டது என தெரியாத நிலையில், ஆண்கள் சிலரை அந்தப் பெண்கள் அருகே வரவழைத்தனர். அவர்களை, அந்தப் பெண்களின் முகம் அருகே நின்று பேசச் செய்தனர்.

அப்போது ஆண்களின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்த ஆய்வாளர்கள், அடுத்த நிமிடம் அவர்களது ரொமான்ஸ் `மூடு'க்கு அவசியமான டெஸ்ட்ரோஸ்டிரான் ஹார்மோன் அவர்களது உடலில் எந்த அளவுக்கு சுரந்துள்ளது என்பதை ஆய்வு செய்தனர். அப்போது, உண்மையான கண்ணீர் பூசப்பட்ட பெண்களின் முகத்துக்கு நேர் எதிராக நின்று பேசிய ஆண்களிடம் டெஸ்ட்ரோஸ்டிரான் சுரப்பு மிகக்குறைவாகவும், உப்புநீர் அப்ளை செய்யப்பட்ட பெண்களுக்கு நேர் எதிராக நின்று பேசிய ஆண்களிடம் அந்த ஹார்மோன் சுரப்பு நார்மலாகவும் இருந்தது.

இதில் இருந்து ஒரு முடிவுக்கு வந்த ஆராய்ச்சியாளர்கள், தாரை தாரையாக கண்ணீர் விடும் பெண்ணால் ஆணின் தாம்பத்ய ஆசை குறையும் என்று தெரிவித்தனர். அத்துடன், முகத்தில் கண்ணீர், உப்பு நீருடன் இருந்த பெண்களை போட்டோ எடுத்து ஆராய்ந்ததில் கண்ணீர் விட்ட பெண்களின் அழகு குறைந்திருந்ததாகவும் கூறினர்.

ஸோ... நீங்களும் சென்டிமென்ட் பெண் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள்!
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf