Seeman Warns Kerala: கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது நீடித்தால், எதிர்விளைவுகள் ஏற்படும்: சீமான்

Seeman Warns Kerala
கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது நீடித்தால், எதிர்விளைவுகள் ஏற்படும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழன் இல்லாத நாடில்லை என்பது மட்டு மல்ல. அவன் இழக்காத உரிமையும் இல்லை. பாலக்காடு, தேவிகுளம், திருவனந்தபுரம், இடுக்கி, பீர்மேடு, வெங்காலூரு, காவிரி என நீண்ட பட்டியலில் முக்கியமானது முல்லை பெரியாறு. தமிழனுக்கு சொந்தமான நிலத்தில், அவனுடைய பணத்தில் அவனது உழைப்பில் கட்டப்பட்ட அணை இன்று மலையாளிகளின் ஆதிக்கத்தில் சிக்கி தவிக்கிறது.

கேரளத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்தத் தீர்வும் கிட்டவில்லை என்று தான் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. உச்ச நீதிமன்றமும் 7 பேர் கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து அவர்களது அறிக்கையின் அடிப்படையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணிரைத் தேக்கலாம் என்று தீர்ப்பளித்து விட்டது.

ஆனால், கேரள அரசு அணை உடையப்போவதாக திட்டமிட்டு பீதியை ஏற்படுத்தி வருகிறது. தமிழர்கள் அங்கு தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்துதான் விளை பொருட்களும் மின்சாரமும் கேரளாவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழர்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால் எதிர்விளைவுகள் ஏற்படும். தமிழகத்தில் வாழும் 40 லட்சம் மலையாளிகள் பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதே சகிப்பு தன்மை தொடரும் என எதிர்பார்க்க முடியாது.

முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை நிலை நாட்ட வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நடை பயணம் மேற்கொள்ள உள்ளோம். 17-ம் தேதி பங்களாமேடுவில் தொடங்கும் நடை பயணம் சின்னமனூரில் முடிகிறது. 18-ம் தேதி சின்னமனூரில் தொடங்கும் நடை பயணம் கூடலூரில் முடிகிறது. 2 இடங்களிலும் நடைபெறுகிறது. 17-ம் தேதி நடைபயணத்தை பழ.நெடுமாறன் தொடங்கி வைக்கிறார்," என்று சீமான் கூறியுள்ளார்.

Thanks: Vikatan

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf