இந்த முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சகஜ வாழ்க்கையை பாதிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் கேரளாவின் செயலை தடுத்து நிறுத்தும்படி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் ஜெ.,வுக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் : முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான விஷயம் சுப்ரீம் கோர்ட் அதிகார குழு முன்பு நிலுவையில் இருந்து வருவதால் நாம் எவ்வித முடிவுக்கும் வரமுடியாது. என்றும் , பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கேரள அரசு செயல்படுவதாக கூறியதை என்னை சந்தித்த கேரள அமைச்சர் குழுவிடம் தெரிவித்துள்ளேன்.
இரு மாநில உயர் அதிகாரிகள் பங்கேற்று ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு நீர்வளத்துறை அமைச்சரிடம் அறிவுறுத்தியுள்ளேன். இந்த பேச்சு விரைந்து நடக்கும், அப்போது தமிழக முதல்வராகிய நீங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இதன் மூலம் நல்ல முடிவுகளை எட்ட முடியும் என தான் நம்புகிறேன். இது வரை தேவையற்ற பிரச்னைகளை எழுப்பி மக்களிடம் தவறான பீதியை ஏற்படுத்த வேண்டாம் இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
இன்று தமிழக எம்.பி.,க்கள் பிரதமரை சந்தித்தனர்: தமிழக அ.தி.மு.க., எம்.பி.,க்கள் அணை விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்து பேசினர். தம்பித்துரை, மைத்ரேயன் ஆகியோர் தலைமையின் கீழ் எம்.பி.,க்கள் குழுவினர் பிரதமரிடம் ஒரு மகஜர் ஒன்றையும் அளித்தனர். அணையின் நீர் மட்டத்தை 142 உயர்த்த வலியுறுத்த வேண்டும், கேரள அரசு தேவையில்லாத பிரச்னைகள் எழுப்புவதை தவிர்க்க வேண்டும். என கேட்டுக்கொண்டனர்.
கேரள முதல்வர் பிரதமருடன் சந்திப்பு : கேரள முதல்வர் உம்மன்சான்டி இன்று காலை பிரதமரை சந்தித்து பேசினார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள- தமிழக அரசு எடுக்க வேண்டிய விவகாரம் குறித்து பேசினர்.
No comments :
Post a Comment