Can we postpone the Periods: மாதவிலக்கை தள்ளிப்போடலாமா?

பெண்களின் `அந்த மூன்று நாள்' பிரச்சினைகளை, அவர்கள் சிலநேரங்களில் செயற்கையாக தள்ளிப்போட நேரிடுகிறது. அதாவது, திருமணம், திருவிழா போன்ற சுபநிகழ்ச்சிகளுக்காக அவ்வாறு செய்கிறார்கள்.

இது சரியா, தவறா என்றால், அடிக்கடி அதற்காக மாத்திரை பயன்படுத்துவது தவறுதான் என்கிறார்கள் மருத்துவர்கள். மாதவிலக்கு என்கிற பீரியட்ஸ் மாதம்தோறும் நிகழும் இயற்கையான நிகழ்வு. அதை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஆபத்துதான் என்கிறார்கள் அவர்கள்.

இப்போதெல்லாம் மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கி உட்கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல, எந்த நோய் பாதிப்பிற்காக மாத்திரை எடுத்துக்கொள்ள நேரிட்டாலும் டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்.

மாதவிலக்கை தள்ளிப் போடுவதற்காக மருந்து கடைகளில், `புரஜெஸ்ட்டரோன்' கலந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை அதனை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்கவிளைவும் இருக்காது. ஆனாலும், ஒவ்வொருவரின் உடலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக மாத்திரைகளின் செயல்பாடு அமைவது இல்லை.

இதனால், மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுப்பவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டியது அவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு... என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம். அதுகுறித்து தெரியாமல் மாத்திரைகள�¯ ˆ சாப்பிட்டால், அந்த பாதிப்புகள் இன்னும் அதிகமாகிவிடும்.

மேலும், டாக்டரின் அறிவுரை இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகளும் ஏற்படலாம். சிலருக்கு `மைக்ரேன்` எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

அதோடு, இப்படி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டு மாதவிலக்கை தள்ளிப் போடும்போது அதன் மாதாந்திர சுழற்சியும் மாறுபடும். ஒருமுறை தள்ளிப் போனால், அடுத்த முறை சரியாகிவிடும் என்று நினைக்கக் கூடாது. அவ்வாறு மாதவிலக்கு முறை தவறி தள்ளிப்போகும்போது, அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம். அப்போது ரத்தப்போக்கு அதிகரிக்கும். உடலின் உஷ்ணமும் அதிகமாகும்.

இந்தியாவில் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்தே மாத்திரைகளைத் தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. அதனால் தங்கள் இஷ்டப்படி மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது அல்ல.

பொதுவாக மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை இல்லை என்றாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நன்றி-முத்துசரம்

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf