கருணைக் கிழங்கு மசியல் தேவையானவை
கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
புளி - நெல்லிக்காய் அளவு
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு, பெருங்காயம் - தாளிக்க
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கருணைக் கிழங்கு மசியல் செய்முறை:
புளியை ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். கருணைக் கிழங்கைக் கழுவி நன்றாக வேக வைத்து ஆறிய பிறகு தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
அவை வதங்கியதும், மசித்த கருணைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து புரட்டி புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் வற்றியதும் சுருள சுருள கிண்டி இறக்கவும்.
கருணைக் கிழங்கு மசியல் குறிப்பு:
எண்ணெய் மிதந்து வருமளவு கிண்ட வேண்டும்.
செரிமானக் கோளாறு, மூலம் நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது இந்த கருணைக் கிழங்கு மசியல்.
புளித்தண்ணீருக்கு பதில் புளித்த தயிர் சேர்த்தும் செய்யலாம். இந்த மசியல் புளி சேர்த்து தயாரிப்பதால் இரண்டு மூன்று நாட்களுக்குக் கூட நன்றாக இருக்கும்.
கீதா தெய்வசிகாமணி
No comments :
Post a Comment