இறால் திதிப்பு தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1/4 மூடி
சோம்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 கீறியது
இறால் - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 1/4 கிலோ (நறுக்கியது)
நாட்டுத்தக்காளி - 1/4 கிலோ நறுக்கியது
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
இஞ்சி, பூண்டு - சிறிதளவு தட்டவும்
உப்பு - தேவைக்கேற்ப
சோம்பு, கறிவேப்பிலை - சிறிதளவு (தாளிக்க)
இறால் திதிப்பு செய்முறை
இறாலைச் சுத்தம் செய்யவும். இஞ்சி பூண்டு தாளித்துக் கொள்ளவும். தேங்காய் சோம்பு அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.
அரைத்து வைத்த மசாலாவைச் சேர்க்கவும். மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
மசாலா திக்காக வரும்வரை சிறிது நீர் ஊற்றி கொதிக்க விடவும். குருமா பதத்தில் வந்ததும் இறாலைப் போடவும்.
இறால் வெந்த பிறகு பச்சைக்கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சிறிது கிள்ளிப்போட்டு இறக்கவும்.
குறிப்பு
இறால் திதிப்பு முறைப்படி நெத்திலி திதிப்பும் செய்யலாம்.
No comments :
Post a Comment