ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்பது அந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிலர் `டயட்'டில் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு காலை டிபனை தவிர்ப்பார்கள். இப்படிச் செய்வது நல்லதல்ல என்று ஆய்வு செய்து நிரூபித்து இருக்கிறார்கள்.இங்கிலாந்தைச் சேர்ந்த சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வில், மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது என்பதும், பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவது உடலுக்கு நோய் இல்லாத பாதுகாப்பைத் தருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
19 முதல் 64 வயது வரையிலானவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில், பெரும்பாலானவர்கள் காலை உணவு (திட உணவுக்கு) முன்பாக காபி அல்லது டீ போன்றவற்றை அருந்த விரும்புவதும் தெரிய வந்தது.
ஆய்வு முடிவு குறித்து சிக்ரிட் கிப்சன் கூறும்போது, `பால் மற்றும் பருப்பு வகைகளை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான கால்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் கிடைக்கின்றன. அதனால், அவற்றை காலை உணவு எடுத்துக் கொள்வது நல்லது' என்றார்.
இந்த ஆய்வில், மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது என்பதும், பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவது உடலுக்கு நோய் இல்லாத பாதுகாப்பைத் தருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
19 முதல் 64 வயது வரையிலானவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில், பெரும்பாலானவர்கள் காலை உணவு (திட உணவுக்கு) முன்பாக காபி அல்லது டீ போன்றவற்றை அருந்த விரும்புவதும் தெரிய வந்தது.
ஆய்வு முடிவு குறித்து சிக்ரிட் கிப்சன் கூறும்போது, `பால் மற்றும் பருப்பு வகைகளை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான கால்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் கிடைக்கின்றன. அதனால், அவற்றை காலை உணவு எடுத்துக் கொள்வது நல்லது' என்றார்.
No comments :
Post a Comment