சில்லறை வர்த்தகம்: அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள்

1.ஸ்டார் பக்ஸ் என்னும் காபிக்கடை நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி கிடைக்க, 2 லட்சம் அமெரிக்க டாலர்களை 2011 முதல் அறையாண்டில்மட்டும் நீரா ராடியா போன்ற இடைத்தரகர்களுக்கு கொடுத்திருக்கிறது

2.சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்திய சட்டங்களை திருத்தியமைத்து இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்க , 4 மில்லியன் அமெரிக்க டாலர்களை இடைத்தரவுக்கு செலவு செய்திருக்கிறது.

3.இந்தியாவில் சந்தையைப் பெருக்கிக்கொள்ள டவ் கெமிக்கல்ஸ் நிறுவனமும், தொலைதொடர்பு துறை வர்த்தகத்தில் நுழைய AT & T நிறுவனமும், நிதி சேவைத்துறையில் நுழைய ப்ருடென்சியல் பைனான்சியல் நிறுவனமும், புதிய வங்கிகள் துவங்க மோர்கன் ஸ்டான்லி நிறுவனமும், காப்பீட்டு சட்டங்களையே மாற்றியமைக்க நியூயார்க் லைப் இன்சூரன்ஸ் நிறுவனமும் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி அமெரிக்க சட்ட இடைத்தரகர்கள்மூலம் காய்களை நகர்த்தி வருகின்றன…

4.இவை மட்டுமல்ல, போயிங், பைசர், இன்டெல், அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனம் என ஏராளாமான நிறுவனங்கள் அமெரிக்க இடைத்தரகர்கள் வழியாக, அமெரிக்க அரசின் மூலமாக இந்தியச் சட்டங்களை திருத்தியமைக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள்… அவற்றில் வெற்றியும் பெற்று வருகிறார்கள்…

இவற்றின்மூலமெல்லாம் இந்தியாவை ஆள்வது வெறும் ஜனநாயக(?) அரசல்ல, கார்பொரேட்டுகள் வழிநடத்துகிற ஒரு மக்கள்விரோத அரசுதான் என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf