பக்கோடா குழம்பு தேவையானவை:
கடலைப்பருப்பு - 2 கப்
பொட்டுக்கடலை - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 4
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 10
தக்காளி - 3
தேங்காய் - 1
எலுமிச்சம் பழம் - 1
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
பட்டை கிராம்பு, சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பக்கோடா குழம்பு செய்முறை:
வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். 4 பல் பூண்டு, சிறு துண்டு இஞ்சி இவற்றைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவி நைசாக அரைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்புத்தூள் போட்டு சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு சிவக்க வதக்கவும்.
தொடர்ந்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு கொதிக்க விடவும்.
பச்சை வாசனை போனதும், அரைத்து வைத்த தேங்காயை விட்டு கொதிக்க விடவும். சிறிது கெட்டியான பதம் வந்ததும் ஒரு மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து இறக்கி வைக்கவும்.
கடலைப் பருப்பை ஊற வைத்து பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, மாவை சிறிது சிறிதாக உதிர்த்து போட்டு, வெந்ததும் எடுத்து குழம்பில் போட்டு ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்.
சூடான சாதத்துடன் பரிமாற, பக்கோடா குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
கீதா தெய்வசிகாமணி
No comments :
Post a Comment