சில்லறை வர்த்தக்கத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்த விவகாரத்தால் நாடாளுமன்றம் இன்றும் முடக்கம்

சில்லறை வர்த்தக்கத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்த விவகாரத்தால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கையும் இன்று முடங்கியது.மக்களவை இன்று காலை தொடங்கியவுடன், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என பிஜேபியினர் கோரிக்கை விடுத்தனர்.

இதேபிரச்னையில் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சியினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால், மக்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. இதே நிலைதான் மாநிலங்களவையிலும் நீடித்தது.பின்னர், நாடாளுமன்றக் கூட்டம் பிற்பகலில் மீண்டும் தொடங்கியதும் இதே பிரச்னையால் அமளி துமளிகள் அதிகரிக்கவே, இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.இதனால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் முற்றிலும் முடங்கியது.

விலைவாசி உயர்வு, தெலுங்கானா, கறுப்பு பணம் போன்ற விவகாரங்களால் கடந்த வாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. இந்த வாரத்தின் தொடக்கத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு வகை செய்யும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் அளித்தது புயலைக் கிளப்பியுள்ளது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf