புதிதாக பிறந்த கன்றை மிகவும் கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.
தொப்புள் கொடியை கூர்மையான கத்தி கொண்டு வெட்ட வேண்டும். அதே சமயத்தில் நோய் தொற்று தாக்காமல் இருக்க அயேடின் சாராயக் கரைசல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
கன்றிற்கு சீம்பாலை (சீம்பால்) கண்டிப்பாக தரவேண்டும்.
கன்று பிறந்த 30 நமிடத்தில் முலைப்பாலூட்ட வேண்டும். கன்று மிகவும் தளர்ந்த நிலையில் இருந்தால் பால் குடிக்க உதவ வேண்டும்.
கன்று பிறந்த உடனே முலைப்பால் குடிக்க மறுத்தால் பிறகு அதை குடிக்க வைப்பதற்காக முலைப்பாலை பக்கெட்டில் சேமிக்க வேண்டும்.
கன்று பிறந்த 2 மாதத்திற்கு அதை தனியாக வறண்ட சுத்தமான மற்றும் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதியில் பராமரிக்க வேண்டும்.
அதிகபடியான சீதோஷ்ண நிலையிலிருந்து கன்றை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். அதுவும் முதல் 2மாத கன்றை நன்கு பராமரிக்க வேண்டும்.
கன்றுகளை அதன் பரிமாண அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும்.
கன்றுகளுக்கு தடுப்பு மருந்துகளை தர வெண்டும்.
கன்று பிறந்த 4-5 நாட்களுக்குள் அதற்கு கொம்பு வெட்டி சீர் செய்ய வேண்டும். வளர வளர அதை கையாளுவது சுலபமாக இருக்கும்.
தேவைக்கு அதிகமாக வளர்க்க முடியாத கன்றுகளை அப்புறப்படுத்தி விட வேண்டும்.
குறிப்பாக காளை கன்றுகளை ஏதேனும் தனிப்பட்ட காரணத்திற்காக பராமரிக்க வேண்டியிருந்தால் பராமரிக்கவும்.
பசு கன்றுகளை தகுந்த முறையில் வளர்க்க வேண்டும்.
No comments :
Post a Comment