வெளிநாடுகளில், இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஒரு விடிவு கிடைத்துள்ளது. கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணையை கண்காணிக்க, அதிக அதிகாரங்களுடன் கூடிய, சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான, சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி.,) நியமித்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கறுப்புப் பணத்தை மீட்பது தொடர்பான நடவடிக்கைகளில், மத்திய அரசின் செயல்பாடு மந்தமாக இருப்பதாகவும், சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில், இந்தியர்களால், பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை திரும்பவும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உள்ளிட்டோர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை நேற்று நடந்தது.
வெளிநாடுகளில், இந்தியர்களால், பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை திரும்பவும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உள்ளிட்டோர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை நேற்று நடந்தது.
No comments :
Post a Comment