''அடுத்த மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பயணிகள் ரயில் கட்டண உயர்வு தவிர்க்க இயலாதது,'' என, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா D. V. Sadananda Gowda தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சராக பதவியேற்ற பின், மங்களூருவுக்கு வருகை தந்த அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்தனர்.
பின், சதானந்த கவுடா, கூறியதாவது:முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே, இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், சரக்கு கட்டணம், 5 சதவீதம், பயணிகள் கட்டணம், 10 சதவீதம் உயர்த்தப்பட்டன.
ஆனால், அதை அமல்படுத்தவில்லை. ரயில்வே துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியினர் செய்த தவறால், நான் பழி ஏற்க வேண்டிய நிலையில் உள்ளேன். 10 முதல், 15 சதவீதம் வரை உயர்த்தலாமா என, கருத்து கேட்டுள்ளேன். மக்களுக்கு, சுமை இல்லாத பட்ஜெட்டை கொடுக்க முயற்சித்து வருகிறேன். இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.
Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=988145
Please Subscripe to http://enntamilnadu.blogspot.com/ Tamil Blog to read more details about Why we have voted for BJP -1
No comments :
Post a Comment