முடியாது என்று தோன்றும் அபிப்பிராயத்திற்கு அடி பணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள்

முன்னொரு காலத்தில் சீனா வில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர் மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதி க அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன்தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவி த்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபார மா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒ ரு சீப்பைக் கூட விற்க முடியா தே என்று நினைத்தனர். ஆனா ல் பின் மூவரும் முயற்சி எடுப் பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியா பாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான். “நான் இரண்டு சீப்புகள் புத்த மடால யத்திற்கு விற்றேன்” வியாபாரி கேட்டான். “எப்படி?” “புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோ கிக்கலாம் என்று சொ ல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குக ளுக்கு அது சரியென் றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வா ங்கினார்கள்:”

இன்னொரு மகன் சொன்னான். “நான் பத்து சீப்புகள் விற் பனை செய்தேன்” வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான். “எப்படி?” “வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடால யத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெ ரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்ப டிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்த ருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத் தில் சொன்னேன். ஒரு பெரிய க ண்ணாடியும் சில சீப்புகளும் வை த்தால்அவர்கள் தங்கள் தலை முடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது நன் றாக இருக்கும் என்ற ஆலோச னையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கி னார்கள்” வியாபாரி அந்த மகனைப் பாராட் டினான்.

மூன்றாம் மகன் சொன்னான். “நான் ஆயிரம் சீப்புகள் விற்ப னை செய்தேன்” வியாபாரி ஆச்சரியத்தின் எல் லைக்கே சென்றான். “எப்படி?” “அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொரு ளுதவி செய்கிறார்கள். அவர்க ள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத் தும் வண்ணம் அவர்களுக்கு ஏ தாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பல ரும் புத்த மடாலயத்திற்கு உத வி செய்யத்தூண்ட உதவும் என் றேன். அந்த மடாலயத் தலைவ ர் என்ன நினைவுப் பரிசு தரலா என்று மடாலயத் தலைவர் கேட்டார்.

நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப் புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உப யோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தி னமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும், அந்த உபதேச ங்கள் அவர்களைத் தின மும் வழிநடத்துபவையாக வும் இருக்கும் என்று தெரி வித்தேன். அது நல்ல யோ சனை என்று நினைத்த மடாலயத் தலைவர் உடனடி யா க அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்” அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என் று சொல்ல வேண்டியதில்லை.

மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வே லை என்று நினைப்பது தான் பொது வாக நாம் காணக்கூடிய மனோபா வம். விதி சில சமயங்களில் நம்மை க் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும். அதிலிருந்து மீள் வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோ ல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.

அந்த வியாபாரியின் மகன்கள் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது புத்திசாலித்தனமான செயல். நாமும் நாம் இருக்கும் அந்த மோசமான சூழ்நி லைக்குத்தீர்வே இல்லை என்று ஆரம்பத்தில் தோ ன்றினாலும் ஏதாவது செய்து நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று தீர்மானிப்பதுவே அறிவு.

முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரி யின் மூன்று மகன்கள் முயற்சிகளே உதாரணம். ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படாவிட் டால் வேறெதற்காவது பயன் படுமா என்று யோசித்ததன் ப லனாக இரண்டு சீப்புகள் அவ னால் விற்க முடிந்தது.

புத்த பிக் குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார் ந்தவர்களுக்கு சீப்புபயன்படுமா என்று இன்னொரு மகன் யோசி த்ததால் அந்த புத்த மடாலயத் தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத் து சீப்புகள் விற்க முடிந் தது. ஆனால் இந்த இரண்டு மகன்களுடைய முயற்சி யாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப் பு விற்க வழியில்லை. அ வர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.

மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்கு களுக்குப் பயனில்லா விட்டா லும் அவர்களுடன் சம்பந்தப் படும் மற்றவர்களுக்குப் பயன் படுமல்லவா என்கிற சிந்தனை யைத் தான் செய்தான். அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதே சங்களைச் செதுக்கி அதை அவ ர்கள் விரும்பும் வண்ணம் உயர் த்தி அதை நன்கொடை வழங்கு ம் பக்தர்களுக்கு புத்தரின் ஆசி யாக மாற்றி விற்பனை செய்தா ன். அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக்கொண்ட உழைப்பு எல் லாம் மற்றவர்களை மிஞ்சும் வ ண்ணம் வெற்றி பெற்றது.

மேலு ம் மற்ற இருவரைப் போல் இவ னுடைய விற்பனை ஒருமுறை யோடு முடிகிற விற்பனை அல்ல . புத்த மடாலயத்திற்கு நன்கொ டைகள் தருகிறவர்கள்அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும். ஒரு சூழ்நிலையை ஒரே நேர் கோணத்தில் பார்ப்பது இரண்டு சீப்பு விற்ற மகனைப் போல அற்ப விளைவுகளையே ஏற்படுத்தும். பார்வையை சற்று வி ரிவுபடுத்தி வேறு கோணங் களிலும் சிந்தித்து செயல்ப டுவது பத்து சீப்பு விற்றவன் முயற்சி போல நல்ல வி ளைவுகளை அதிகரிக்கும்.

மேலும் பல கோணங்களி லும் சிந்தித்து, தன் திறமை யையும் உழைப்பையும் சே ர்த்து முயற்சி செய்பவன் அடையும் நன்மைகள் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தவன் முயற்சியைப் போல பல மட ங்கு அதிகரிக்கும். ஆரம்பத் தில் வழியே இல்லை என் று தோன்றியது போய்புதிய பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாய் ப்பாக அமையும்.

எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் ம னம் துவண்டு விடாதீர்கள். முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார் வையை விரிவுபடுத்துங்க ள்.

புதிய புதிய கோணங் களில் சிந்தி யுங்கள். சில சிறிய மாற்றங்க ளால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். பொறுமை யுடனும், நம்பிக்கையுடனு ம், துடிப்புடனும் முயன் றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போ கும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக் கூடும்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf