Add caption |
தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 6 மாத வயதுடைய 4 ஆடுகள் (3 பெட்டை 1 ஆண்) வழங்கப்படுகிறது.மேலும் ஆடுகளுக்கு தீவனம் வாங்கவும், இருப்பிடக் கொட்டகை அமைக்கவும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. வாங்கும் இடத்தில் இருந்து கொண்டு செல்ல 150–ம், நோய் தாக்கி இறந்தால் இழப்பீடு பெறும் வகையில காப்பீடும் செய்யப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் விலையில்லா வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள 237 கிராம ஊராட்சிகளில் ரூ.19 கோடி மதிப்பில் 14,991 பயனாளிகளுக்கு 59,964 விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளாடுகள் 57,459 குட்டிகளை ஈன்றுள்ளன.
உப்பிலியபுரம் ஒன்றியம், நாகநல்லூர் ஊராட்சியில் 71 குடும்பங்களுக்கு விலை யில்லா வெள்ளாடுகள் கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டுள்ளன.
நாகநல்லூர் பயனாளி கலைச்செல்வி சுந்தர்ராஜன் கூறியதாவது:
நாங்கள் இந்த கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு எந்தவித வருமானமும் கிடையாது. எங்களுக்கு மொத்தம் 5 பெண் பிள்ளைகள் உள்ளன. நான்கு பெண்களுக்கு திருமணம் செய்து விட்டோம். மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை மட்டும் எங்களுடன் வசித்து வருகிறார். இந்த பெண்ணை வைத்து சிரமப்பட்டு வந்தோம். முதல்வர் எங்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கி உள்ளார்.
எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு ஆடு நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த நான்கு ஆடுகளும் நன்றாக வளர்ந்து உள்ளன. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் எங்கள் வருமானமும் இரட்டிப்பாகி உள்ளது. இன்னும் இரண்டு வருடத்தில் எங்களுக்கு 20 குட்டிகளுக்கு மேல் ஈனும் என்று எதிர்பார்க்கிறோம். ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கி பொருளாதாரம் மேம்பட வழிவகுத்துள்ளார். அதற்கு முதல்வருக்கு நன்றி.
No comments :
Post a Comment