Tips for Small Scale Industry Startup's: சிறு தொழில் தொடங்குவோருக்கு ஆலோசனைகள்.

Tips for Small Scale Industry Startup's: சிறு தொழில் தொடங்குவோருக்கு ஆலோசனைகள்.

நம்மில் பலர், படித்துவிட்டு சுயதொழில் தொடங்க ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்தவித தொழிலை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதில் ஒருவித குழப்ப நிலை இருக்கும்.


அப்படிப்பட்டவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் சிறந்த வழிகாட் டியாக இருந்து தொழிலை தொட ங்க உதவுகிறது. தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பவர்க ளுக்காக, U.Y.E.G.P. திட்டத்திலி ருந்து சில ஆலோசனைகளை கேள்வி பதில் வடிவில் பார்ப் போம் .


கேள்வி: லோடு ஆட்டோ வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா?

 

பதில்: சிறு வாகன கடன் என்பது சேவைப்பிரிவைச் சார்ந்தது. இதில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட முதலீடு ரூ.3 இலட்சம். மீதமுள் ள தொகையை பயனாளிகள் சொந்த முதலீடாக செய்வதாக இருப்பின், இந்த திட்டத்தில் பயன்பெற அடிப்படையான நலிவுற்றோர் என்ற தகுதி இல்லாமல் போய்விடும். மேலும் வாகன கடன் கேட்டு விண்ணப் பிப்பதற்கு செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம், வில்லை ஆகியன அவசியம்.


Tips for Small Scale Industry Startup's: சிறு தொழில் தொடங்குவோருக்கு ஆலோசனைகள்.

கேள்வி: U.Y.E.G.P. திட்டத்தில் கடன் பெற்றால் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படுமா?

 

பதில்: கண்டிப்பாக வேலை வாய்ப்பு பதிவு ரத்துசெய்யப்பட மாட்டாது.

கேள்வி: 36 வயது உள்ள ஒருவர் இந்தத் திட்டத்தில் விண்ணப் பிக்க முடியுமா?

பதில்: பொதுப்பிரிவினராக இருந்தால், விண்ணப்பிக்கும் தினத்தில் 35 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது. சிறப்பு பிரிவினராக இருந் தால் 45 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது.


கேள்வி: பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க லாமா?

பதில்: இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ட கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே. ஆகையால் தயக்கமின்றி விண்ணப்பிக்கலாம்.


கேள்வி: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வாரிசுகளுக்கு, முன்னாள் ராணுவத்தினருக்கான வயது வரம்பு சலுகை கிடைக்குமா?

பதில்: முன்னாள் ராணுவத்தினருக்கு என வழங்கப்படும் வயது வரம்பு சலுகை முன் னாள் ராணுவத்தினருக்கு மட்டுமே பொருந் தும். அவர்களின் குடும்பத்திற்கோ, பாதுகா வலில் உள்ளவர்களுக்கோ பொருந்தாது.


கேள்வி: பள்ளி மாற்றுச் சான்று பெறாதவர்கள் விண்ணப்பிக்க முடியுமா?

பதில்: பள்ளித்தலைமை ஆசிரியரிட ம் தொடர்புகொண்டு, மாற்றுச் சான்றித ழை பெற்றுவந்தால் விண்ணப்பதாரரி ன் கல்வித்தகுதி ஏற்றுக்கொள்ளப்படு ம்.


கேள்வி: திட்ட அறிக்கை தயாரிக்க எவ்வளவு செலவாகும்?

பதில்: விண்ணப்பதாரர்கள் உத்தேசித்துள் ள திட்டம் குறித்த உத்தேச வரவு-செலவு மற்றும் முதலீட்டு விபரங்களை நீங்களே தயாரிக்கலாம். மாவட்ட தொழில் மையங் களிலும், சிறு குறு நடுத்தர தொழில் நிறு வனங்களின் மேம்பாட்டு நிறுவனங்களிலு ம் கிடைக்கக் கூடிய மாதிரி திட்ட அறிக்கை களை பார்வையிட்டும் திட்ட அறிக்கைக ளை தயாரிக்கலாம்.


கேள்வி: பழைய இயந்திரங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் தொழிலுக்கு கடன் கிடைக்குமா?

பதில்: பழைய இயந்திரங்களை விலை நிர்ண யம் செய்து விற்பவர் மற்றும் வாங்குபவர் மட்டு மே தொடர்பானது. எனவே அந்த மதிப்பீடு அரசாங்கத்திலும், வங்கியிலும் ஏற்றுக்கொள் ளப்படுவதில்லை. மேலும் பழைய இயந்திரங் கள் தாம் முதலில் நிறுவப் பட்ட இடத்தில் ஏற் கனவே வேலைவாய்ப்பு உருவாக்குதல் என்ற கடமையை செய்து முடித்துவிட்டதாக கருதப்படுகிறது. எனவே பழைய இயந்திரங்க ள் கொள்முதலுக்கு கடன் கிடையாது.


கேள்வி: பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலு க்கு, கூடுதல் இயந்திரம் வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா?

பதில்: U.Y.G.E.P. திட்டம் புதிய தொழில் களுக்கு மட்டுமே. எனவே இதில் விரிவாக்க த்திற்கு கடனுதவி கிடையாது. நீங்கள் உங் கள் சேவைப்பகுதிக்கான வங்கி மேலாள ரை அணுகி சிறு தொழிலுக் கான கடனுத வியை கேட்டு பெற்றபின், மாவட்ட தொழி ல் மையத்தை அணுகி விரிவாக்கத்துக்கான மானியத்தை பெற்றுக் கொள்ளலாம்.


கேள்வி: U.Y.G.E.P. திட்டத்தில் கடன் பெற்றால் அந்த நிறுவனத் திற்கு தமிழக அரசின் சிறுதொழில் நிறுவனங்களுக்கான மானிய ங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்குமா?

பதில்: U.Y.G.E.P. திட்ட மானியமாக திட்ட முதலீட்டில் 15 சதவீதம் வழங்கப்படுகிறது. இது தவிர குறைந்த அழுத்த மானியம், வாட் மானியம், மின்னாக்கி மானியம் போன்ற சலுகைகள், விண்ணப்ப தாரர் நடத்திவரும் தொழில் மற்றும் நிறுவன அமைவிட அடிப் படையில் மானியம் வழங்கப்படும்.


கேள்வி: ஏற்கனவே வேறு ஒரு மானிய கடனுதவி திட்டத்தில் கடனுதவி பெற்று, கடனை முழுவதுமான திருப்பி செலுத்தியவர் கள், U.Y.G.E.P. திட்டத்தில் புதிதாக கடன் பெற முடியுமா?

பதில்: ஏற்கனவே மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றிருந்தா ல், இந்த திட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்பிக்க தகுதி இல்லை. நிதி நிறுவனங்களில் சிறுதொழில் கடனுதவியை பெற்று தகுதி அடிப்படையில் மானியம் பெற்று பயன் அடையவும்.


கேள்வி: ஹாலோ பிளாக் தொழிலுக்கு, சிறு கட்டிடடம் கட்டுவ தற்கான உத்தேச மதிப்பீட்டை திட்ட முதலீட்டில் சேர்த்துக் கொள் ளலாமா?

பதில்: தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் உத்தேசித் துள்ள உற்பத்தி தொழில் தொடங் குவற்கு தேவையான கட்டிடம், இயந்திர தளவாடம் மற்றும் நடை முறை மூலதனம் ஆகியவற்றின் மொத்த திட்ட மதிப்பு ரூ.5 லட்சத் துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


நன்றி: தினத்தந்தி


Subscribe to our news letter for more articles like Tips for Small Scale Industry Startup's: சிறு தொழில் தொடங்குவோருக்கு ஆலோசனைகள்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf