கண்டுபிடித்துவிடலாம். பொய் சொல்லும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை.
பெண்களை கவர ஆண்கள் நிறைய பொய் சொல்வார்கள். ஆண்கள் பொய் சொல்வதை
அவர்களின் முகத்தை வைத்தே பெண்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.
பொய் சொல்பவர் தனது முகத்தைத் தொடுவார். ரத்தம் மூக்கை நோக்கிப் பாயும்
என்பதால், மூக்கு பெரிதாகும். அதை அடிக்கடி தொட ஆரம்பிப்பார். `உண்மையைச்
சொல்லணும்னா…' என்று ஒருவர் ஆரம்பித்தால், பொய் சொல்லப் போகிறார் என்று
அர்த்தம்.
ஆண்களுடன் ஒப்பிடும்போது பொய்யைக் கண்டுபிடிப்பதில் பெண்கள் கில்லாடிகள்.
(பெண்கள்தானே தமது குழந்தைகளின் சமிக்ஞைகளை சரியாக அறிகிறார்கள்? எனவே
தம் மனைவியிடம் பொய் சொல்ல முனையும் ஆண்கள், அந்த வேலையை போனில்
வைத்துக்கொள்வது நல்லது!) புதியவர் ஒருவரைப் பற்றிய `பர்ஸ்ட் இம்ப்ரஷன்'
4 நிமிடங்களில் உருவாகிவிடுகிறது.
பல வேளைகளில், பத்தே நொடிகளில் அந்த முடிவுக்கு வந்துவிட முடியும். எனவே
அதற்குள் மற்றவர்களைக் கவர்ந்துவிட வேண்டும். பொய் சொல்வதால் பல
பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. அதிக பொய் சொல்வதில் ஆண்கள் முதலிடத்தில்
உள்ளனர். பொய் சொல்லி பல பிரச்சனை ஏற்படுவதை விட உண்மையை சொல்லி பிரச்சனை
வராமல் காப்பதே நல்லது.
No comments :
Post a Comment