முதல் உத்தரவில் முதல்வர் ஜெயலலிதா இன்று (16.05.2011) கையெழுத்திட்டார்.

ஏழை மணப்பெண்ணுக்கு திருமாங்கல்யம் செய்ய அரை சவரன் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்ற உத்தரவில் முதல்வர் ஜெயலலிதா இன்று கையெழுத்திட்டார்.

மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக இன்று காலை பதவியேற்ற ஜெயலலிதா மாலை 6.40 மணியளவில் சென்னை - புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு சென்றார்.

அங்கு முதல்வர் பொறுப்பேற்ற அவர், முதல் 7 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

பின்னர் தாம் கையெழுத்திட்ட உத்தரவுகள் குறித்து நிருபர்களிடம் முதல்வர் ஜெயலலிதா விவரித்தார். அதன் விவரம் வருமாறு:

தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (அரை சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி இலவசம். பரம ஏழைகளுக்கு மாதம் தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000 ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.

மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 500-ல் இருந்து 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf