Peas Masala: பீஸ் மசாலா

பீஸ் மசாலா

வழக்கமாக செய்யும் சைடுடிஷ்சை விட சப்பாத்தி, பூரி, பிரைடு ரைஸ் போன்றவைகளுக்கு பீஸ் மசாலா சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.பீஸ் மசாலா உலர்பட்டாணியை ஊறவைத்து செய்வதை விட, பச்சைப்பட்டாணியை புதிதாக வாங்கி உரித்து செய்வதே சுவையூட்டும். பீஸ் மசாலா செய்முறை இதோ:

பீஸ் மசாலா தேவையானவை:

பச்சைப்பட்டாணி -2 கப்
பெரிய வெங்காயம் -2
சின்ன வெங்காயம் -10
தக்காளி -3
மிளகாய்த்தூள் - 11/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்-சிறிதளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

பீஸ் மசாலா செய்முறை:

பச்சைப்பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு, விழுது, தேங்காய், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணைய் விட்டுக் காய்ந்ததும், சிறிது பட்டையை தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி, அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி அத்துடன் வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும்.

5 நிமிடங்கள் நன்கு கிளறி இறக்கி வைக்கவும். சுவையான பீஸ் மசாலா ரெடி.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf