என்சிசி சிறப்பு நுழைவு திட்டத்தின் மூலம் ஏப்ரல் 2013 ஷார்ட் சர்வீஸ் கமிஷனின் 33வது கோர்ஸில் சேர (எஸ்எஸ்சி- நான்டெக்னிக்கல்), என்சிசி சி சான்றிதழ் பெற்ற தகுதி யானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த இடங்கள்: 58 (ஆண்-50, பெண்-8). 10 சதவீத காலியிடங்கள் போர்க்களத்தில் காய மடைந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. வயது: 19 லிருந்து 25க்குள்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். என்சிசி சீனியர் டிவிஷனில் குறைந்த பட்சம் 2 வருடங்கள் சேவையாற்றி என்சிசி 'சி' சான்றிதழுக் கான தேர்வில் 'பி' கிரேடு அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, குழுத் தேர்வு, உளவியல் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அவர்களுக்கு சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகடமியில் 11 மாதங்கள் பயிற்சியளிக்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடித்தவர்கள் ராணுவத்தில் லெப்டினன்ட் அந்தஸ்தில் அமர்த்தப்படு வார்கள். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகிலுள்ள OC, NCC Unitக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.1.
No comments :
Post a Comment