செட்டி நாட்டு மீன் குழம்பு தேவையான பொருட்கள்:
மீன்-1/2 கிலோ
வெங்காயம்-200 கிராம்
தக்காளி-200 கிராம்
பூண்டு (உரித்தது)-ஒரு கைப்பிடியளவு
மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன்
தனியாத்தூள்-2 டீஸ்பூன்
புளி-எலுமிச்சம்பழஅளவு
உப்பு, எண்ணெய்-தேவைக்கேற்ப
செட்டி நாட்டு மீன் குழம்பு தாளிக்க:
கடுகு , கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்
செட்டி நாட்டு மீன் குழம்பு அரைக்க:
தேங்காய்த்துருவல்-1/2 மூடி
செட்டி நாட்டு மீன் குழம்பு செய்முறை:
மீனை சுத்தம் செய்து கொள்ளவும். புளியை கரைத்து அதிலேயே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். அரைத்த தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும். குழம்பு கொதிக்கும்போது மீனைப் போட்டு இறக்கவும். இப்போது மணக்கும் செட்டிநாட்டு மீன் குழம்பு ரெடி. இந்த செட்டி நாட்டு மீன்குழம்பு இன்றளவும் மவுசு அதிகம்.
தக்காளி வெங்காயத்த வச்சு பூசை செய்யனுமா. எழுதுனா முழுசா எழுதுங்கப்பா.
ReplyDelete