Jayalalithaa to meet Narendra Modi: ஜெயலலிதா, வரும், 3ம் தேதி, டில்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்

0 comments

J Jayalalithaa 2014
Jayalalithaa

முதல்வர் ஜெயலலிதா, வரும், 3ம் தேதி, டில்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது, தமிழக திட்டங்களுக்கு, சிறப்பு முன்னுரிமை அளிக்கும்படி, கோரிக்கை மனு கொடுக்க உள்ளார். எனவே, தமிழக திட்டங்களுக்கு சிறப்பு முன்னுரிமை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் ஜெயலலிதா, நெருங்கிய நண்பர்கள். பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஏற்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.

தனித்து போட்டி:

ஆனால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடும் என, ஜெயலலிதா அறிவித்தார். எனவே, பா.ஜ., பிற கட்சிகளுடன் இணைந்து, தனி அணியாக களம் இறங்கியது.தனித்து போட்டியிட்டாலும், தேர்தல் பிரசாரத்தின் துவக்கத்தில், முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., மற்றும் காங்கிரசை மட்டும் சாடினார். பா.ஜ., மற்றும் அதன் 
கூட்டணி கட்சிகள் குறித்து விமர்சிக்கவில்லை.

இதனால், தேர்தலுக்கு பிறகு, பா.ஜ., கூட்டணிக்கு, அ.தி.மு.க., ஆதரவு அளிக்கும் என்ற எண்ணம் மக்களிடம் பரவியது. தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தில், தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்ட நரேந்திர மோடி, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., மாறி மாறி ஆட்சிக்கு வந்தும், தமிழகத்திற்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என, விமர்சித்தார்.இதற்கு பதிலடி கொடுத்த ஜெயலலிதா, நிர்வாகத்தில், மோடியை விட, இந்த லேடி தான் சிறந்தவர் என முழங்கினார். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே, இடைவெளி அதிகரித்தது.

ஜெயலலிதா அதிர்ச்சி:

தேர்தல் முடிவில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது. மாநில கட்சிகள் உதவியுடன் பிரதமராகலாம் என, ஜெயலலிதா திட்டமிட்டார். அந்த வாய்ப்பு வராவிட்டால், பா.ஜ.,விற்கு ஆதரவு அளித்து, மத்திய அரசில் அங்கம் வகிக்கலாம் என, முடிவு செய்தார். இதனால், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டவர்கள், அமைச்சர் கனவில் மிதந்தனர். ஆனால், தேர்தல் முடிவு வேறு விதமாக அமைந்தது. பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன், ஆட்சியைப் பிடித்தது.

தமிழகத்தில், 37 இடங்களை கைப்பற்றியும், மத்திய அமைச்சரவையில், இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டதும், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர்; முதல்வர், அப்செட்டானார். அ.தி.மு.க.,வினரின் மத்திய அமைச்சர் கனவு தகர்ந்தது.அதன் பிறகு, பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு, முதல்வர் வாழ்த்து செய்தி அனுப்பினார். 

அதில், மத்திய அரசு, தமிழக அரசுடன் நல்லுறவு பேண வேண்டும் என்றார். அதற்கு நன்றி தெரிவித்த நரேந்திர மோடி, மத்திய அரசு, மாநில அரசுடன் நல்லுறவு பேணும் என, உறுதி அளித்தார். இதனால், மத்திய அரசுடன் இணக்கமான சூழல் ஏற்படும் என, அ.தி.மு.க.,வினர் நம்பினர்; அதிகாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மோதல்:

கடந்த முறை, மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசுடன், ஜெயலலிதா மோதல் போக்கை கடைபிடித்தார். இதனால், தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் பாதிப்படைந்தன; நிதி ஒதுக்கீடு குறைந்தது.இந்நிலை மாற, மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் என, அதிகாரிகள் விரும்பினர். 

அதற்கேற்ப பா.ஜ., ஆட்சி அமைந்ததும், மகிழ்ச்சி அடைந்தனர்.மத்திய அரசுடனான உறவை பலப்படுத்தும் வகையில், நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில், ஜெயலலிதா பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்ப்பு:

ஆனால், நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்கு, சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். அதை ஏற்று, இலங்கை அதிபர் ராஜபக்?ஷே உட்பட பலநாட்டு தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.ராஜபக்?ஷே வருகைக்கு, தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்து, காட்டமாக அறிக்கை விடுத்தார்.அதைத் தொடர்ந்து, அவர், பதவியேற்பு விழாவிற்குசெல்லவில்லை; அ.தி.மு.க., சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால், மீண்டும் இடைவெளி உருவானது.இதை குறைக்கும் வகையில், அடுத்த மாதம், 3ம் தேதி, டில்லி சென்று பிரதமரை சந்திக்க, முதல்வர் முடிவு செய்துள்ளார். 

டில்லியில், பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளை செய்யும்படி, கோரிக்கை மனு கொடுக்க உள்ளார் ஜெயலலிதா

மத்திய அரசு உதவி இல்லாததால், தமிழகத்தில் முடங்கியுள்ள திட்டங்கள் குறித்தும் விளக்க உள்ளார்.பிரதமரை சந்திக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருப்பது, அ.தி.மு.க., வினரிடம் மட்டுமின்றி, அதிகாரிகளிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு, நரேந்திர மோடி உதவுவார் என்று நம்புகின்றனர்.

முதல்வர் Narendra Modi முன்வைக்கும் கோரிக்கைகள்:

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திக் கொள்ள, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதை கண்காணிக்க, மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், மத்திய அரசின் பிரதிநிதி நியமிக்கப்படவில்லை; அவரை விரைவில் நியமிக்க வேண்டும்.

தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடை, அதிகரிக்க வேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

ரயில்வே திட்டங்களுக்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்த உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Jayalalitha Calls for calm among Keralites in Mulla Periyar Issue | அற்ப நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு, அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது - முதல்வர் ஜெயலலிதா

0 comments
Jayalalitha Calls for calm among Keralites
கேரளாவில் தமிழர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அதை விட அதிகமான, மலையாளிகள் தமிழகத்தில் இருக்கின்றனர். அற்ப நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு, அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா அறிக்கை:

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்கள், அவர்களது கேரள சகோதரர்களால் தாக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்படுகின்றன. அங்குள்ள தமிழ் நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் கூட அச்சுறுத்தலில் உள்ளனர். முல்லைப் பெரியாறு விவகாரம் தான் இத்தனைக்கும் காரணம் என தெரியவருகிறது. குறுகிய மனப்பான்மை கொண்ட, சமூக விரோத கும்பல்களின் சூழ்ச்சிக்கு இரையாகி விட வேண்டாம் என, கடவுளின் சொந்த தேசத்தின் படித்த, புத்திசாலி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்னை, அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தூண்டிவிடப்பட்ட அச்சத்தின் காரணமாக எழுந்துள்ளது. சிக்கலான தருணங்களில், மக்களின் உணர்ச்சிகள் உச்சத்தை அடைவது இயல்பே. அதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்களுக்கு உண்மையை உணர்த்தி, அவர்களை அமைதிப்படுத்துவது, பொறுப்புள்ளவர்களின் கடமை. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்று, உடைந்து, இடுக்கி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என சந்தேகிப்பதற்கு, எந்த முகாந்திரமும் இல்லை. அணை மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு, அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. அணையின் பாதுகாப்பு, சுப்ரீம் கோர்ட் நியமித்த நிபுணர் குழு உள்ளிட்ட அத்தனை தொழில்நுட்ப வல்லுனர்களாலும், மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

Jaya Tells Keralites/a>

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு, 116 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காகவே, அதன் பாதுகாப்பை சந்தேகிக்க வேண்டியதில்லை. காவிரியில், கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, 1900 ஆண்டுகளாக திடமாக உள்ளது. அதே சுண்ணாம்புச் சாந்து மூலம் தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கேரளாவும், நிலநடுக்க மண்டலத்தின் மூன்றாவது பிரிவில் தான் இருக்கிறது என்பதால், நிலநடுக்கத்தால் அணை பாதிக்கப்படும் என்பதற்கும், எந்தவிதமான அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை. இந்த விவரங்கள் எல்லாம், கேரளாவில் உள்ள, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். இருந்தும், சில அற்ப காரணங்களுக்காக, பெரியாறு அணை தொடர்பான பீதியைக் கிளப்பத் துணிந்துள்ளனர்.

கேரளா, தமிழகத்தின் அண்டை மாநிலம். இன்னும் சொல்லப் போனால், 1950 வரை இரண்டும் ஒரே மாநிலமாக இருந்தவை. மலையாளிகளும், தமிழர்களும் பொதுவான மொழி, கலாசாரப் பின்னணியைக் கொண்டவர்கள். கேரளாவில் ஏராளமான தமிழர்கள் இருக்கின்றனர். அதை விட அதிகமான எண்ணிக்கையில், தமிழகத்தில் மலையாளிகள் இருக்கின்றனர். இதுவரை இவர்கள் அனைவரும், மெச்சத்தகுந்த சகோதரத்துவத்தோடும், ஒத்துழைப்போடும் தான் வாழ்ந்திருக்கின்றனர். கேரள சகோதர, சகோதரிகளின் அழிவை தமிழக அரசோ, மக்களோ ஒருபோதும் விரும்ப மாட்டர். நூறு சதவீதம் உறுதியாகத் தெரிவதால் தான், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக சொல்லி வருகிறோம். பல நூறாண்டுகளாக, இரு மாநில மக்களுக்கு இடையில் நிலவி வரும் பரஸ்பர நம்பிக்கை, மதிப்பு, நல்லெண்ணத்தைச் சீர்குலைத்துவிடாதீர்கள் என, கேரள மக்களை வேண்டிக் கொள்கிறேன். எந்த மக்களின் கூர்மை, கல்வி, பகுத்தறிவு மற்றும் கடும் உழைப்பின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேனோ, அந்த கேரள மக்களுக்கு என்னுடைய வேண்டுகோள் இது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சில்லரை வர்த்தக விஷயத்தில் மத்திய அரசுஆணவம்: ஜெயலலிதா

0 comments
"சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்த முடிவை எடுப்பதற்கு முன், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்கவில்லை. இது, மத்திய அரசின் ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் இதை அனுமதிக்க முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இந்த முடிவை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என, மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சிகளும், காங்கிரஸ் அல்லாத மாநிலங்களின் முதல்வர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் ஆணவப் போக்கை கண்டித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது குமுறலை அறிக்கையாக நேற்று வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று, மத்திய அமைச்சரவை அவசரமாக முடிவு செய்துள்ளது. இந்த முடிவால், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பாரம்பரிய சில்லரை வியாபாரிகளை பாதிக்க வைக்கும். மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் முன், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். பார்லிமென்ட் கூட்டம் நடக்கும் போது அங்கு முடிவு எடுக்கவில்லை. ஆனால், அதைச் செய்யாமல் தன்னிச்சையான முடிவு எடுப்பதன் மூலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆணவப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

4 கோடி பேர் வேலைக்கு அபாயம்: நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் பலர் தவிக்கின்றனர். மேலும் 4 கோடி பேர், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இவர்கள் தங்களது தொழிலில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும். சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள் அல்ல. எனவே, அவர்கள் மாற்றுத் தொழிலுக்கு செல்ல முடியாது. வேலைவாய்ப்பு பறிபோகும்.நாட்டில் நிலவும் இரட்டை இலக்க பணவீக்க வீதத்தை கட்டுப்படுத்தவே, அன்னிய முதலீடுகள் நாட்டில் அனுமதிக்கப்படுவதாக காரணம் கற்பிக்கப்படுகிறது. சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இது உதவும் என்றும் சொல்லப்படுகிறது.

ஏன் பணவீக்கத்தையும், சந்தைப் பொருளாதாரத்தின் மற்ற பிரச்னைகளையும் கையாள, நம்மிடம் போதிய தொழில் நுட்பமும் திறமையும் கிடையாதா? எனவே, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து மத்திய அரசு கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆணவப் போக்கை காட்டுகிறது. சில்லரை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் சில பெரிய வர்த்தக அமைப்புகள், தங்கள் எதிர்கால பணப்புழக்கத்திற்கு வழி தேட கண்டுபிடித்த செயலாகக் கருதலாம்.சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை, தமிழகத்தில் அனுமதிக்க முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது. மத்திய அரசு உடனடியாக இம்முடிவை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மாயாவதி காட்டம் : லக்னோ: "சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவால், உ.பி., மாநிலத்தில் உள்ள சிறு வியாபாரிகள் எல்லாம், கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்படுவர். இதன் மூலம் உ.பி., மாநிலமே திவாலாகும் சூழ்நிலை உருவாகும். இத்திட்டத்தின் மூலம், ராகுலின் வெளிநாட்டு நண்பர்கள் தான் பலன் அடைவர்' என்று உ.பி., மாநில முதல்வர் மாயாவதி காட்டமாகக் கூறியுள்ளார்.

முதல் உத்தரவில் முதல்வர் ஜெயலலிதா இன்று (16.05.2011) கையெழுத்திட்டார்.

0 comments
ஏழை மணப்பெண்ணுக்கு திருமாங்கல்யம் செய்ய அரை சவரன் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்ற உத்தரவில் முதல்வர் ஜெயலலிதா இன்று கையெழுத்திட்டார்.

மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக இன்று காலை பதவியேற்ற ஜெயலலிதா மாலை 6.40 மணியளவில் சென்னை - புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு சென்றார்.

அங்கு முதல்வர் பொறுப்பேற்ற அவர், முதல் 7 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

பின்னர் தாம் கையெழுத்திட்ட உத்தரவுகள் குறித்து நிருபர்களிடம் முதல்வர் ஜெயலலிதா விவரித்தார். அதன் விவரம் வருமாறு:

தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (அரை சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி இலவசம். பரம ஏழைகளுக்கு மாதம் தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000 ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.

மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 500-ல் இருந்து 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf