உங்கள் மனதின் நேர்மையைத் தவிர புனிதமானது வேறில்லை. நேர்மையும், நேர்மையோடு கூடிய தைரியத்தையும் தவிர உலகில் உயர்ந்தது வேறென்ன இருக்கப்போகிறது.
நாம் உண்மையாக வாழ்ந்தால் உண்மையாக பார்க்கலாம்.. உங்களை வலியுறுத்துங்கள், ஒருபோதும் பிரதி எடுக்காதீர்கள்.
உங்களைத்தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தரமுடியாது. கொள்கைகளின் வெற்றி தவிர வேறு எதுவும் உங்களுக்கு திருப்திதர முடியாது.
தன் சொந்த இயல்போடு ஒத்திசைந்து வாழும் வாழ்வே சந்தோஷமானது. அப்போதுதான் நீங்கள் யாரென்பதை உங்களாலேயே அறிய முடியும். மற்றவரை அறிந்தவன் புத்திசாலி, தன்னை அறிந்தவன் ஞானி.
மனிதன் செல்லக்கூடிய எல்லாப் பாதைகளிலும் ஒரு சமயத்தில் ஒரு பாதை மிகவும் சிறந்ததாக இருக்கிறது.
இயல்பாக எப்பொழுதெல்லாம் இருக்கிறீர்களோ, அப்படியே தொடர்ந்து இருங்கள். உங்கள் திறமையை விட்டுவிடாதீர்கள். இயற்கை உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறதோ அப்படியே இருங்கள், வெற்றி பெறுவீர்கள்.
தன்னை ஒரு மனிதன் உண்மையாக கையாள முடியாவிட்டால் அவனால் ஒருபோதும் உயர்ந்த விஷயங்களை கையாள முடியாது.
ஒரு மனிதன் தன் கூட்டாளிகளுடன் கூடவே ஒத்திசைந்து செல்லாவிட்டால் ஒருவேளை அவன் வேறு தாளத்தைக் கேட்டுக் கொண்டிருக்கலாம். எனினும் அவன் கேட்கும் இசைக்கேற்ப அவன் நடக்கட்டும். எவ்வளவு கச்சிதமாக இருந்தாலும், விலகி இருந்தாலும் சரி. அவன் அவனாகவே இருப்பதே நல்லது.
உங்களை உருவாக்கியதற்காக இந்த சமுதாயத்திற்கு பட்ட கடனை உங்கள் திறமைகளைப் பயன்படுத்துவதில் தீர்க்கலாம். அதற்கு முதலில் உங்களுக்கு நீங்களே தந்த நல்ல உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள்.
நேர்மையான ஒரு மனிதனே கடவுளின் உன்னதப்படைப்பு.
நற்பெயர் கொண்டவர்கள், பொய் பேசாதவர்கள், தந்திரமான வார்த்தைகளுக்கு எடுபடாமல் இருப்பவர்கள், மக்களுக்கான கடமையிலும், தனிமனித சிந்தனையிலும் உயர்வாக உள்ளவர்கள் பனியை விலத்தும் சூரியனாக பிரகாசிக்கும் சமுதாயப் பகலவன்கள்.
இந்த அமெரிக்க அதிபர் பதவியை நான் எப்படி நடாத்த விரும்புகிறேன் என்றால், இந்தப் பதவியை விட்டு விலகும் சமயத்தில், உலகில் உள்ள எல்லா நண்பர்களையும் இழந்துவிட்டாலும், ஒரேயொரு நண்பனாவது இருப்பான் அவன் என்னுள்ளேயே இருப்பான். – ஆபிராகம் இலிங்கன்.
அன்பு, சுயநலமற்ற தன்மை, அடுத்தவர் நலன் பேணுதல் போன்றவை எப்போதுமே முக்கியமான குணங்களாக மதிக்கப்படுகின்றன. ஒரு மனிதன் அவனுடைய ஒட்டு மொத்தமான குணங்களோடு சேர்த்தே மதிக்கப்படுகிறான். இதை மிகவும் அவதானமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
மற்றவர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை நீயே அவர்களுக்கு முதலில் செய். ஒரு நண்பனைப் பெற ஒரே வழி நீயும் நண்பனாக இருப்பதுதான்.
அன்பு, தருமம், மற்றவர்களுக்கு சேவை செய்தல் இவைகள்தாம் மனிதனின் அடிப்படைக் குணங்கள். அன்பு எப்போதும் தோற்பதில்லை. நம்பிக்கை, விசுவாசம், அன்பு ஆகிய மூன்றில் உயர்ந்தது அன்புதான்.
அன்பு இல்லாதவர்கள் வானத்தில் உள்ள தேவர்களின் மொழியில் பேசினாலும் அந்தப் பேச்சு உயிரற்ற ஜால்ராவாகத்தான் இருக்கும்.
நாம் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், வல்லமை உள்ளவராக இருந்தாலும் அன்பு,நேர்மை இல்லை என்றால் ஒன்றுமே இல்லை.
தீர்க்கதரிசனங்கள் பொய்யாகலாம் : மொழிகள் அழியலாம் : அறிவு மறைந்து போகலாம் ஆனால் அன்பு எப்போதுமே அழிவதில்லை.
அன்பு தகாதசெயலில் ஈடுபடாது, தனக்காக எதையும் செய்யாது, எளிதில் உணர்ச்சிவசப்படாது, தீயதை எண்ணாது. அநீதி செய்துவிட்டு சந்தோஷப்படுவது குற்றம், உண்மையைப் பார்த்து, சந்தோஷப்படுவதே மேன்மையானது.
உன் உடலைத் தானம் செய்ய விரும்புகிறாயா.. அப்படியானால் உன்னிடம் அன்பு இருக்கிறதா என்று உன்னை நீயே கேட்டுப்பார். அன்பில்லாத உன் உடல் உறுப்புகள் இன்னொரு மனிதனில் பொருத்தப்பட்டால் அவனும் அன்பற்ற இயந்திரமாகிவிடுவான்.
தீர்க்க தரிசனம் என்பது கடவுளால் கிடைப்பதல்ல, தேடிக் கொண்டு சென்று பாதி விடயங்களை அறிந்தால் மீதி தீர்க்கதரிசனமாகவே தெரியும். மேலும் முழுமையானது வந்துவிட்டால் பாதி மறைந்துவிடும்.
இறக்கவோ கொல்லப்படவோ முன்னர் உன்னால் முடிந்ததை ( நல்லதை ) எல்லாம் செய்துவிட்டு உன் கையில் உள்ள விளக்கை மற்றவரிடம் ஒப்படைத்துவிடு.
தன் சக மனிதனை நேசிக்காதவர்கள் உபயோகமற்ற வாழ்வை வாழ்கிறார்கள்.
தரும்போதுதான் நாம் பெறுகிறோம் : மன்னிப்பதால்தான் மன்னிக்கப்படுகிறோம் : இறப்பதனால்தான் எல்லையற்ற வாழ்வை பெறுகிறோம்.
தன் சக மனிதர்களை நேசிக்காதவர்கள் உபயோகமற்ற வாழ்வை வாழ்கிறார்கள்.
வெறுப்பு இருக்கும் இடத்தில் அன்பு செலுத்துங்கள் : சந்தேகம் உள்ள இடத்தில் நம்பிக்கை கொடுங்கள் : மனச்சோர்வு உள்ள இடத்தில் விசுவாசம் கொடுங்கள் : இருள் உள்ள இடத்தில் வெளிச்சம் கொடுங்கள் : துக்கம் உள்ள இடத்தில் சந்தோசம் கொடுங்கள்.
Home
»
Posts filed under
Tamil Articles
Vaalkkai Enbathu Enna | வாழ்க்கையும் எரும்பும்
Labels:
Life Style
,
Tamil Articles
,
Tamil Articles About Life
,
Vaalkkai Vaalvatharke
,
வாழ்க்கை
0
comments
ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.
எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.
கோடை காலத்தில் தனக்கு வேண்டிய உணவை சேகரித்து வைத்துவிட்டு குளிர் காலத்தில் கோடைக்காக பொறுமையுடன் காத்திருக்கிறது எறும்பு உழைப்பாளி மட்டுமல்ல சிறந்த பொறுமைசாலியும் கூட.
எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.
கோடை காலத்தில் தனக்கு வேண்டிய உணவை சேகரித்து வைத்துவிட்டு குளிர் காலத்தில் கோடைக்காக பொறுமையுடன் காத்திருக்கிறது எறும்பு உழைப்பாளி மட்டுமல்ல சிறந்த பொறுமைசாலியும் கூட.
Vaazkkai Vaalvatharke | வாழ்க்கை வாழ்வதற்கே |
வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.
வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.
வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்
வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.
வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்
வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.
வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.
வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்
வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்
வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.
வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.
வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.
வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.
வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்
வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.
வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்
வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.
வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.
வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்
வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்
வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.
வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.
வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.
Tamil movie songs
எங்கள் G+
விளம்பரதாரர்
வலைப்பூ பெட்டகம்
-
▼
2014
(
109
)
-
▼
August
(
12
)
- Venture Capital in tamil :- வென்ச்சர் கேபிட்டல்
- Poultry Farming:- கோடிகளில் பணம் சம்பாதிக்க கோழி ப...
- TN TET 2014 results
- Business'es That you can do from home:- சிறந்த 10 ...
- Hand Gloves Making:- கையுறை தயாரிப்பு தொழில்
- Microsoft Office 2013:- எம்.எஸ்.ஆபீஸ் 2013
- டெஸ்க்டாப் பகுதியில் சேவ் செய்வதில் உள்ள பிரச்னைக...
- Get 100 GB Storage by Using Bing |
- Heart proplems and T.M.T: இதய ரத்தக்குழாயில் அடைப்...
- கெடுவான், கேடு நினைப்பான் - ஜெயதேவர்
- Chrome browser tips in tamil :- குரோம் பிரவுசர் டி...
- Facebook beats Microsoft and Google: முதல் இடத்தி...
-
▼
August
(
12
)

